Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று திரைப்படம், வீடியோ படம் முதல் ஆவணப்படங்கள் வரை ஆளும் வர்க்க கருத்துகளை பாதுகாக்கும் வரையறைக்குள் இயங்குகின்றன. இந்த ஒரு நிலையில் இதை மறுத்து உலகளவில் சமுதாயத்தின் விடுதலையை நோக்கிய வெளியீடுகள் அற்ற நிலையில்,

 தீக் கொழுந்து போன்றன ஒரு மகத்தான ஒரு முன்முயற்ச்சியாக எம்முன் நிற்கின்றது.

 

ஒரு சமுதாய பிரச்சனை எப்படி அனைத்தும் தழுவியதாக உள்ளது என்பதை தொகுப்பதிலான உங்கள் பரிச்சார்த்த முன்முயற்;சி, எதிர் காலத்தில் மேலும் முன்னேறி ஒரு புரட்சிகர ஊடாகமாக மாறும், மாற்றி அமைக்க முடியும். இந்த நிலையில் உங்கள் கைகளை இறுகப்பற்ற வேண்டிய வரலாற்று காலகட்டத்தில் நிற்கின்றோம். இந்த முயற்சியில் உங்கள் முதல் அனுபவத்தை வாழ்த்தும் அதே நேரம், மேலும் முன்னேறிய வகையில் வளர்த்தெடுப்பதில் சில அபிராயங்களை தெரிவிப்பது அவசியமானது.

 

இந்த திரைமுழக்கம் ஒரு புதிய கலாச்சார இதழ் போன்றோ, ஒரு புதிய கலச்சார பாடல் பேழை போன்று தரமிக்கதாக இன்னமும் மாறிவிடவில்லை. மக்களின் விடுதலை வென்று எடுக்கும் போராட்டத்தில், பாட்டாளி வர்க்கத்துக்கு கிடைக்கின்ற குறைந்த தொழில் நுட்பத்துடன், உயர்ந்த கலையை பாட்டாளி வர்க்கத்தால் படைக்க முடியும். அதை படைத்துக் காட்ட வேண்டும். அதை எதிர்காலத்தில் நாம் செய்யமுடியும். அந்த வகையில் சில அபிரயங்கள் தெரிவிக்க விழைகின்றேன்.

 

1.இந்த படத்தை ஒரு திரைக் கதையாக நினைப்பது தவறானது. மாறாக இது ஒரு ஆவணத் தொகுப்பும் (டொக்கிமென்றி) அல்ல. இதை சரியாக உள்ளடக்கம் கொண்டிருக்கவில்லை. மனித வாழ்வின் யதார்த்தத்தை அடிப்படையாக கொண்டு தொகுத்த அதே நேரம் அதைத் தாண்டி காட்சிகள் உணர்வை துண்டிவிடவில்லை. அதாவது இந்த மனித அவலம் மீத கோபம், உணர்ச்சி, அணுதபம் துயரத்தை துயரத்தை காட்சிகள் உந்தி தள்ளியிருப்பின்   நோக்கம் அதிகமான செய்தியைத் தந்திருக்கும்;. இங்கு இது ஒரு திரை கதையாக அல்லத ஆவணமாக மாறிவிட்ட நிலைதான் இதன் முழுப்பலனை பெற்று தந்து விடவில்லை. இதை தொகுக்கும் போது யதார்த்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணோட்டம் இதன் அடிப்படையாக இருந்திருக்கலாம்;. யதார்த்தம் அதன் உணர்ச்சியுடன் நாம் மீள சொல்வது என்பது, மக்களின் பின் இழுபடுவதே.  உங்கள் பாடல் பேழைகள் சொல்லும் செய்தி அதில் கொப்பழித்து எழவைக்கும் உணர்ச்சிகரமான கோபம், இந்த திரை முழகத்தில் இருக்கவில்லை. இதை பற்றி கவனம் எடுக்க வேண்டும்.

 

2.காட்சி  அடிக்கடி புதிய விடையத்துக்கள் முறிந்து செல்லுகின்றது. இது தவிர்த்திருக்க வேண்டும்;. கேள்விகள் பலவற்றை கேட்பது வேறு. ஆனால் தொகுப்பில் குறித்த எல்லைக்குள் கேள்வியை கட்டுப்படுத்திருக்க வேண்டும்.

 

3.மக்களிடம் இருந்து செய்தியை கோரும் தன்மைக்குள், கேள்வி கேட்டவருக்கும் இடையில் இடைவெளியிருந்துள்ளது. மக்களின் வாழ்வை அவர்களின் சொற்கள் அதன் உள்ளர்ந்த யதார்த்த தன்மையுடன் இனைந்த வெளிவரவில்லை. (விதிவிலக்கா, உதாரணமாக முந்தி ரேசன் அரிசியை நீங்கள் உண்டது இல்லையா? அந்த அரிசி பற்றி முந்தி என்ன நினைத்தீர்கள்? இன்று என்ன நினைக்கின்றிர்கள்? என்ற பகுதியில் வரும் பெண் தனது சோகத்தை கலங்கிய கண்ணுடன் கூறும் போது, அங்கு காட்சியின் இனைவு சமூக இனைவாகின்றது. இத போன்று வாழ்வு முழுக்க கல் சுமக்கும் வயதான தொழிலாளியின் அப்முக்கற்ற கதை, சினிமா பாடல் பின் இழையோடும் சோகம் இந்த சமூகத்தையிட்டு கோபம் கொள்வைக்கின்றது.) இது பொதுவாக பல தளத்தில் கையாண்டிருக்க வேண்டும். அதாவது பிரச்iனையை சரியாக அடையாளம் கண்டு அவர்களுடன் நெருங்கிச் சென்று கேள்வி எழுப்பப்பட வேண்டும். அதாவது கேள்வி கேட்டவருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்தது இதில் தெளிவாகின்றது. கேள்விக்கும் பதிலுக்கும் இடையில் இடைவெளி, முரண்பாடு இருக்க கூடாது. கேட்க்க நினைப்பதும் சொல்ல வரும் ஒரு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் விதிவிலக்காக முதல் இரண்டு பாடல் கட்சியில் படத்துக்கும் காட்சிக்கும் இடையில் இருந்த நெருக்கமான உள்ளடக்க பிணைப்பு, மற்றையவற்றில் விதிவிலக்காக சிலதை தவிர்த்து இருக்கவில்லை. இதை கவனத்தில் எடுப்பது அவசியம்.

 

இந்த விடையத்தில் மத்தியதரவர்க்க அறிவிஐPகளுக்கு (நடைமுறையில் பங்கு கொள்ளாத) பாடல் அவசிமற்றதாக இருக்கும் அதேநேரம், அந்த மக்களுக்கு நெருக்கமான அவர்களின் வாழ்வியல் மொழியாக, அவர்களின் சொந்த பாடலாக காட்சியாக வெளிப்படுகின்றது. இங்கு ஒரு மக்களுக்கு முன் தலைமை தாங்கிச் செல்லும் வகையில் பாடல் சமற்றும் காட்சி உந்தி தள்ளுகின்றது. மக்கள் அல்லாத அறிவத்துறையினருக்கு பாடல் அவசிமற்றதாக, ஒரு தகவல் மட்டமே அவர்களுக்கு தேவையானதாக இருக்கின்றது.

 

4.மூலதனத்தின் சுரண்டலை அனுபவிக்கும் வர்க்கத்தின் நுகர்வுக் காட்சிகளை இனைக்க தவறியது என்பது, உழைத்து வறுமையில் வாழும் வர்க்கத்துக்கு இன்னமும் தெரியாத விடையமாகின்றது. அதாவது அவர்களின் எல்லைக்குள், அவர்களின் பங்களவுக்குள் கால் வைக்க முடியாத நிலையில், அங்கு என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு காட்டியிருப்பின், சுரண்டி கொழுத்து வாழும் எதிரியை தெளிவாக இனம் கண்டிருப்பார்கள்;. இங்கு இதை வெற்றிடமாக்கி விட்டமை என்பது, தலைமை தாங்கி செல்லும் பாத்திரத்தை அணிதிரட்டலை பின்தள்ள வைத்துள்ளது. அத்து மீறலுடன் அவர்களின் வக்கிர முகங்களை காட்சி படுத்தியிருப்பின் அவை முன்னெறிய நிலைதான்  இந்த கட்சிகளை அவர்களின் பல்வேறு ஆடம்பர டாக்கமென்றிகள், தேயிலை தோட்டம் சார்ந்த சினிமாவில் இருந்து எடுத்தே நேரடியாக காட்டியிருக்கலாம். உதாரணமாக ஜெயலளிதாவின் காட்சியை வீடியோவில் இருந்தே எடுத்தே இனைத்து இருக்கலாம். வெறும் படமாக அல்ல. அந்த படத்தின் மேல் அதில் உங்கள் பழை பாடல் நாலு வரியை இனைத்திருக்கலாம்;. இது போன்று ஊட்டியின் மேட்டுக் குடியின் வக்கிரத்தை சுற்றுலத்துறை விளம்பரத்தில் இருந்து எடுத்து ஒப்பிட்டு காட்டியிருக்க வேண்டும்.

 

5.இடையிடையோன விளக்க குறிப்புகளின் துல்லியமான கருத்தை, மேலும் அதிகரித்திருக்கலாம்.

 

6.உலகமயமாதல் விளைவுகள் சார்ந்தே இந்த நிலை என்பதை எடுத்துக் காட்டும் காட்சி ஆதாரங்கள் தெளிவாக்கப்படதமையால், மக்களுக்கும் இடையில் இந்த படம் இடைவெளியை விட்டே செல்லுகின்றது. உதாரணமாக தேயிலைக்கு கட்டுபாடற்ற ஏற்றுமதி இறக்குமதியை நீக்கிய போதே ஏற்பட்ட மாறமே இது, என்பதை துல்லியமாக ஆதாரத்துடன் செய்தியாக்கியிருக்க வேண்டும்;. ஏன் எனின் காட்சியில் வந்த மக்கள் யாருக்குமே இந்த காரணம் தெளிவாக தெரிந்திருக்கவில்லை. அது மீண்டும் தெளிவுபடுத்தப்பட வில்லை. அறிவுஐPவிகளுக்கு தெளிவாக்க உதவுகின்றதே ஒழிய மக்களுக்கு அல்ல. மக்கள் இதை புரிந்த கொள்ள வைப்பதே இதன் பிரதான நோக்கமாக இருந்திருக்க வேண்டும்; தேசிய உற்பத்தி பாதுகாக்கவும், தேசிய உணர்வுகளையும் வர்க்க உணர்வகளை தெளிவாகும் வகையில் வளர்ச்சி பெறவில்லை.

 

7.அந்த மக்களின் இயல்பான கலகலப்பான வாழ்வில் எப்படி இந்த இடி வந்தது என்பதை காட்சியாகியிருக்க வேண்டும். உதாரணமாக ஒரு சிறு பெண் குழந்தை ஒன்றை துக்கியோடும் குறுக்கான சில வினாடி கட்சியில், அந்த சிறவர்களின் கலகலப்பான வாழ்க்கையில் இந்த அவலம் நேர்ந்தை ஒப்பிடும் போது, காட்சியில் இனிமையான மனித இயற்கையின் வஞ்சகமற்ற இயல்பு அழிக்கப்படுவதை அவன் முன் கொண்டுவருவது சொல்ல வரும் விடையத்துடன் நேரடியாக தொடர்புடையது. அந்த இயற்கை அந்த மக்களையே மீளவும் உணர்வுட்டும். கிளர்ந்த எழச் செய்யும்;. சொந்த கலகலப்பான வாழ்க்கை எப்படி யாரால் நாசமாகிப் போனது என்பதை, ஒப்பிட்டுத் தன்மைக்குள் கொண்டு வரவேண்டும்;. இது சிறுவர்களின் சிரிப்பு, அவர்களின் கலகலப்பான வாழ்கை, வஞ்சகம் சூதற்ற வெகுளித் தனம் மற்றும் மக்களின் உழைப்பின் ஆர்வத்தை  எடுத்து அதில் இந்த அவலத்தை ஒப்பிட வேண்டும். இது அந்த மக்களையே திரும்பி தனது சொந்த அவலத்தை பார்க்க வைக்கும். அவாகள் தமது யதார்த்தில் காணமுடியாத நுட்பமான விடையங்களை, அவர்கள் முன் திறந்து காட்டியிருக்க வேண்டும்;.  இது மக்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்களிக்கும்.

பி.இரயாகரன்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது