Language Selection

உடல் கூறுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகிலேயே மிக பருமனான மனிதர் யார் தெரியுமா? மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 40 வயது மனுவேல் உரிபே கார்சா என்பவர்தான் உலகின் மிக அதிக பருமனான நபர் என்று கூறப்படுகிறார்.

 

50 கிலோ தாஜ் மகால் என்று ஒரு திரைப்பட பாடலில் நாயகியின் கட்டான அழகை வர்ணிக்கு வரிகள் வரும். அந்த பாடலில் வருவதைப் போல் நாம் இந்த நபரை வர்ணிக்கத் தொடங்கினால் 550 கிலோ ஆல்ப்ஸ் மலை என்று சொல்லவேண்டியிருக்கலாம்.

 

இதைக் கிண்டலாக சொல்லவில்லை நேயர்களே, இந்த மகா பருமனான நபருக்கு விரைவில் இத்தாலியில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பருமன் பிரச்சனையால் அவதியுற்ற 1000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு தேடித் தந்த மருத்துவர், முனைவர். ஜியான் கார்லோ டிபெர்னான்டினிஸ் என்பவர் அறுவை சிகிச்சை மூலம் மனுவேல் உரிபேவுக்கு இயல்பான வாழ்க்கைக்கு வழி காட்ட இருக்கிறார். இப்படி உலகில் பலர் உடல் பருமன் பிரச்சனையால் மருந்து மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு என்று பல வழிகளை முயன்றபின், வேறு வழியே இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் உடல் இளைக்க வழி செய்கின்றனர்.

 

அறுவை சிகிச்சையில் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் சொல்லப்போவதில்லை. ஆனால் இந்த உடல் பருமன் பிரச்சனை உலக அளவில் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது, செல்வந்த நாடுகள் உள்ளடக்கம் இந்த உடல் பருமன் பிரச்சனையால் பொருளாதார ரீதியிலான பெருமளவு இழப்பும் இன்னலும் ஏற்படும் என்ற அச்சுறுத்தலுக்கு தீர்வு தேடத் தொடங்கியுள்ளன என்ற உண்மைகளின் பின்னணியில், உடல் பருமன் பிரச்சனை எப்படி அடுத்த சில ஆண்டுகளில் நமது ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது, ஏற்கனவே எற்பட்ட பாதிப்புகள் என்னென்ன மற்றும் உடல் பருமனை தவிர்ப்பதற்கான சில ஆலோசனைகள் ஆகியவற்றை இன்றைய நிகழ்ச்சியில் வழங்க முயற்சிக்கிறோம்.

 

இன்றைக்கு ஆசிய நாடுகளில் உலகின் மூன்றிலொரு பகுதி நீர்ழிவு நோயாளிகள் உள்ளனர். எண்ணிக்கையில் சொன்னால் ஏறக்குறைய 90 மில்லியன். இது 2010ம் ஆண்டுக்குள், அதாவது இன்னும் நான்கே ஆண்டுகளில் 120 மில்லியனாக மாறும் என்பது வல்லுநர்களின் கணிப்பு. அதிக நீரிழிவு நோயாளிகள் கொண்ட மக்கள் தொகை கொண்ட நாடுகள் என்றால் அதிலும் முதல் 5 இடங்களில் நான்கு இடங்கள் ஆசியாவுக்கு. அவை, இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான். 2025ம் ஆண்டில் ஆசியாவில் 198 மில்லியன் நிரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் எனப்படுகிறது. சரி, உடல் பருமன் பிரச்சனை பொதுவாக வளர்ந்த, செழிப்பான நாடுகளில்தானே அதிகமாக இருக்கும் என்ற கருத்தில் உள்ள பலருக்கு அடுத்த செய்தி. ஆசியக் குழந்தைகளில் இந்த் ஔடல் பருமன் பிரச்சனை ஏற்படும் நிலை ஆண்டுக்கு ஒரு விழுக்காடு அதிகரித்து வருகிறது.

 

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய செழிப்பான நாடுகளிலும் இதே நிலைதான், ஆக இந்த உடல் பருமன் பிரச்சனை உலகளாவிய ஒன்றாக பரவிக்கொண்டிருக்கிறது. ஆசியாவின் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணம், பொருளாதார வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் எனப்படுகிறது.

 

வேளான், விவசாய பொருளாதரங்களாக இருந்த ஆசியா நாடுகள், இன்றைக்கு உயர் கொழுப்பு சத்து கொண்ட, அதிக கலோரிகள் கொண்ட உணவு வகைகளை, தங்களது உணவுக் கலாச்சாரத்தில் இருந்திராத புதிய உணவு வகைகளை இறக்குமதி செய்யவும், அவற்றை இயல்பாக பயன்படுத்த பழகிக்கொள்ளவும் முடிந்ததால், உடல் பருமன் பிரச்சனை இன்றைக்கு உலகளாஅவிய ரீதியில் எல்லா இடத்திலும் ஒன்றே போல காணப்படும் ஒன்றாகிவிட்டது. சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு அமைப்பு ஒன்றின் தலைவரான பால் சிம்மட் என்பவரும், இவ்வமைப்பின் ஆசிய பசிபிக பிரிவின் இயக்குநரான டிம் கில் என்பவரும் சொன்ன கருத்துக்கள் இவை. சீனாவில் நபர் ஒருவருக்கு, ஓர் ஆண்டுக்கு சராசரி ஒரு லிட்டர் எண்ணெய் பயன்பாடு என்ற நிலை இன்றைக்கு ஆண்டுக்கு 17 லிட்டர் என்று கடந்த இரு தசாப்த காலத்தில் உயர்ந்துள்ளது. இது எண்ணெய் பயன்பாட்டில் வியப்பான ஒரு அதிகரிப்பு என்பதோடு, இதில் கூடுதலான கலோரிகளும் உள்ளடங்கியது என்பதை மறக்ககூடாது என்று குறிப்பிடும் டிம் கில், சீனாவில் மட்டுமல்ல, தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதே போல் எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது என்கிறார்.

 

உடல் பருமன் பிரச்சனையின் காரணங்களை பொறுத்தவரை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா எதற்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆனால் வேகமான தொழில் வளர்ச்சியின் விளைவான நெருக்கமான, சுருங்கிப்போன வாழ்க்கை முறை, நேரத்தை விரட்டி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஆகியவை ஆசிய மக்களை உடல் பருமன் பிரச்சனைக்கு முகம் கொடுக்கவைத்துள்ளது என்கிறார் கில். நகர வாழ்க்கை, காலை எழுந்து அலுவலகம், பள்ளிக்குச் செல்ல ஓட்டம், மாலை வீடு திரும்பி சோர்வடைந்து, உறங்கி மீண்டும் அதேபோல் ஓட்டம் என்று மக்கள் சுழன்றுகொண்டே பருமனானிக்கொண்டுள்ளனர்.

 

உண்மைதானே நேயர்களே. முறையான, சீரான் மருத்துவ அமைப்பு முரைகளும், வசதிகளும் இல்லாத ஆசிய நாடுகளில் இன்றைக்கு பறவை காய்ச்சலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை மறக்கடிப்படும் நிலை உள்ளது என்கிறார் பால் சிம்மட். இதெல்லாம் எனக்கு பிரச்சனையில்லை, நான் அளவான உடல் வாகுடன் இருக்கிறேன் என்று சொல்பவர்களுக்கு முதலில் எம் வாழ்த்துக்கள்.

 

அதேவேளை நீங்கள் உடல் எடைகூடாமல் இருப்பது மிக அவசியம் என்பதை நினைவில் வைக்க மறக்கவேண்டாம். வருமுன் காப்பது நல்லது. உடல் பருமன் என்பது அதிக உணவு சாப்பிடுவதால் ஏற்படுவதல்ல, உட்கொள்ளும் உணவில் உள்ள பொருட்களின் கலோரி அளவு அதிகமானால், எடை கூடும், செல்லத் தொப்பை எட்டிப்பார்க்கும், நாளடைவில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என்று பல நோய்கள் அழையா விருந்தாளியாய் வந்து விரட்ட முடியா வேதனையாகி அலைகழிக்கும். சத்துள்ள உணவு, சீரான் உடற்பயிற்சி, அவ்வப்போது தியான முயற்சி, களங்கமில்லா சிரிப்பு, தன்னம்பிக்கை நிறைந்த உள்ளம் இவை இருந்தால் போதும், உடல் பருமன் என்ன எந்த நோயும் நம்மை நெருங்க அச்சம் கொள்ளும்.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது