Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

12_2006.jpg

பன்னாட்டு ஏகபோக மீன்பிடி முதலாளிகளுக்கு நமது கடல்வளங்களைத் தாரை வார்க்கும் தனியார்மய தாராளமயக் கொள்கைப்படி, சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியிலிருந்து மீனவர்கள் விரட்டப்பட்டார்கள்; இப்போது

 முத்துப்பேட்டை வட்டாரத்தில், மீனவர்கள் காட்டுப் பகுதி வழியே மீன்பிடிக்கச் செல்லத் தடைவிதித்து, கடலோர வனத்துறை அதிகாரிகள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறித்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தொடங்கி கோடியக்கரை வரை உள்ள கடல் பகுதியானது, சேற்றுக் கடல் என்றழைக்கப்படுகிறது. காவிரிகிளை ஆறுகளின் கழிமுகப் பகுதியான இக்கடற்கரை, ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்படும் வண்டல் மண் படிந்து சேறு நிறைந்த காட்டுப் பகுதியாகும். இங்கு அலையாத்தி, தில்லை, கன்னா, உமரி போன்ற மரங்களும் புதர்களும் செழித்து வளர்ந்து, கடலோர மக்களை புயல்சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளிலிருந்து காப்பாற்றும் அரணாக உள்ளது. இவ்வட்டாரத்திலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், சேறும் நீரும் சூழ்ந்த கடலோரக் காடுகளின் வழியே இடுப்பளவு சேற்றில் சிரமப்பட்டு நடந்து சென்று தலைமுறை தலைமுறையாக மீன் பிடித்து வருகிறார்கள்.

 

காடுகளின் அழிவுக்கு வழிகோலிய வனத்துறை அதிகாரிகள், இப்போது அலையாத்தி காடுகள் வளர்ப்புத்திட்டம் என்ற பெயரில் மீனவர்கள் கடலுக்குச் சென்று வரும் கடலோரப் பகுதியை ஆக்கிரமித்து, பத்தடிக்கு ஒரு வாய்க்கால் வீதம் குழியாக வெட்டி, இருபுறமும் கரை ஏற்படுத்தி, அலையாத்தி கன்றுகளைச் செயற்கையாக நட்டு வைத்துள்ளனர். மேற்கூறிய வாய்க்கால்களில் ஏறி இறங்கித்தான் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஊன்றப்பட்டுள்ள அலையாத்திக் கன்றுகள் மிதிபட்டு அழிவதாக பொய்க் காரணம் காட்டி, மீனவர்கள் இக்காட்டுப் பகுதி வழியே மீன்பிடிக்கச் செல்ல விடாமல் வனத்துறையினர் தடுத்து அடாவடி செய்கின்றனர். மீறிச் செல்லும் மீனவர்களைப் பிடித்துச் சென்று ஒருநாள் முழுவதும் உட்கார வைத்து பிழைப்பைக் கெடுத்து விரட்டுவது; அவர்களின் மீன்வலை, பானை முதலானவற்றையும் பிடித்து வைத்துள்ள மீன், கையிலிருக்கும் பணம் ஆகியவற்றையும் பிடுங்கிக் கொள்வது; வழக்குப் போடுவதாக மிரட்டி பணம் பறிப்பது என்பதாக வனத்துறையின் அட்டூழியம் கேள்வி முறையின்றித் தொடர்கிறது. இதனால் பரம்பரையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த இப்பகுதிவாழ் மீனவர்கள் வாழ்விழந்து போகும் நிலையில் தத்தளிக்கின்றனர்.

 

அதிகார வர்க்கத்துக்கு காடு வளர்ப்பில் உண்மையான அக்கறை இருந்தால், மீனவர்கள் கடலுக்குச் சென்றுவர வழியை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால், நமது கடல்வளங்களைப் பன்னாட்டு மீன்பிடி முதலாளிகளுக்குத் தாரை வார்த்து கடற்கரையிலிருந்து மீனவர்களை வெளியேற்றும் ஏகாதிபத்திய சதித் திட்டத்தின்படியே ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் செயல்படுகின்றனர் என்பதற்கு முத்துப்பேட்டை இன்னுமொரு சாட்சியமாக உள்ளது.

 

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்தனியார்மய தாராளமயச் சதியை எதிர்த்தும், வனத்துறை அதிகாரிகளின் காட்டுதர்பாரை முறியடிக்க புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள மீனவர்களை அறைகூவியும் இப்பகுதியெங்கும் பிரச்சாரம் செய்த வி.வி.மு., அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மீனவர்களைத் திரட்டி, 20.11.06 அன்று மாலை முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, வனச்சரக அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பட்டுக்கோட்டை வட்ட வி.வி.மு. செயலர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணித் தோழர்களும் ம.க.இ.க. இணைச் செயலர் தோழர் காளியப்பனும் கண்டன உரையாற்றினர். விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், மீனவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

 

விவசாயிகள் விடுதலை முன்னணி, பட்டுக்கோட்டை வட்டம்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது