சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை
மனநோயாளியான அம்சிதான், ஆசிரியரை பாலியல்ரீதியாக வன்முறை செய்தாள். இதுதான் மனநோயென்று கூறுகின்றவர்களின் குற்றச்சாட்டு.
அரசாங்கமே பாராளுமன்றத்தில் அம்சிக்கு மனநோயாளி என்று கூறியதைக் கேட்டு, மீண்டும் தற்கொலை செய்ய அம்சி இன்று உயிருடன் இல்லை. நாட்டில் சட்டமும், நீதியும்.. இப்படித் தான் இயங்குகின்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், இந்த நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு குரல் கொடுத்து நீதி வழங்கும் இலட்சணம் இது. பாராளுமன்ற பன்றிகள் (ஒரு சிலர் தவிர), சலசலப்பின்றி அமர்ந்திருக்கும் காட்சிகள். இனவாத, மதவாத உடையணிந்து பாராளுமன்றம் வந்த எதிரக்கட்சிகள், பதவி விலகக் கோரி வெளிநடப்புச் செய்யவில்லை.
மறுபக்கம் மக்கள் நீதி கேட்ட போராடக் கூடாதாம்! போராடுவது என்பது சட்டம் ஓழுங்கை கையிலெடுப்பதாம்! சமூக வலைத்தளத்தில் குரல் கொடுப்பது வன்முறையாம்! பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் வரவேண்டுமாம்! அரசாங்கத்திடம் வராவிட்டால் நீதியைக் கேட்கும் உரிமையில்லையாம்!
இவைதான் ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாக, ஆட்சிமுறையாக இருக்கின்றது. முந்தைய அரசாங்கங்களுக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் என்ன வேறுபாடு? அதே அதிகாரிகள், அதே கெடுபிடிகள்,.. முகம் பார்த்து சலூட் அடிக்கும் சட்டமும் ஒழுங்குகளும். பெருச்சாளிகள் மாலையும் கையுமாக திரிய, புதிய அரசாங்கம் மாலைக்காக, புகழுக்காக தலைகுனிந்து மண்டியிட்டுத் திரிகின்றது. அரசு நாள்தோறும் மாலையும் கையுமாக திரிகின்றனர்.
