பத்துக்கு பத்து குடித்தனத்தில் பெத்தபிள்ளை அருகே வந்தாலும் ""ச்சே போ அந்தாண்ட கசகசங்குது நீ வேற'' என்று காயும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அண்ணா டவரின் உயரத்தில் இடைவிடாது வரும் காற்று, கொஞ்சலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
புதிய கலாச்சாரம்
பாட்டில் தண்ணீர் மகாத்மியம்!
பாட்டில் நீரும், கேன் தண்ணீரும் வாங்கிக் குடிக்கும் படித்த வர்க்கத்தினர், காசு கொடுத்து வாங்குவதன் காரணமாகவே அது தரமான நீர் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஐரோப்பாவில் குடிநீரின் தரநிர்ணயத்துக்கு 56 காரணிகளை வைத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூறுவது 40 காரணிகள். நம் நாட்டுக்கு பன்னாட்டு பாட்டில் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளவை வெறும் 16 காரணிகள். ""குடிக்கத்தக்க நீரெல்லாம் குடிநீரே'' என்கிறது நம் அரசு.
தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?
கொஞ்சம் நினைத்துப் பார்த்தால், அரசியல் பொருளாதார அறிவு பெரிதாக இல்லாத சாதாரண சாமானியர்களே வியக்கத்தக்க விசயம் இது. எந்தக் கட்சி ஆட்சியானாலும் (இந்தக் காலத்தில் ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத ஓட்டுக் கட்சிகளோ மிகவும் குறைவு!) தாலி வாங்கிய இந்து மனைவி கணவனுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போல தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். இது ஏன்? எப்படி? எதற்காக?
கோக்: அடிமைத்தனத்தின் சுவை
வெள்ளையனுக்குக் கப்பம் கட்ட மறுத்து தூக்கில் தொங்கினான் கட்டபொம்மன். சுதேசிக் கப்பல் கம்பெனியை இயக்கிக் காட்டினார் வ.உ. சிதம்பரம். சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்று ஒரு வீரம் செறிந்த மரபைக் கொண்ட நெல்லை மண்ணின் மக்களுக்கு ஒரு சோடா கலர் கம்பெனி இன்று சவால் விடுகிறது.
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!
ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்' (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு!
""கொக்கோ கோலாவிற்கு எதிராக நக்சலைட்டுகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களை எங்கே கண்டாலும் பிடித்துப் போலீசிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்'' ஆகஸ்டு 25ம் தேதியன்று காலை முதல் நெல்லை பேருந்து நிலைய வாயிலில் ஒலிபெருக்கியின் மூலம் நெல்லை நகரப் போலீசு வெளியிட்ட அறிவிப்பு இது. நெல்லை கங்கை கொண்டான் கோக் ஆலைக்கு எதிராக செப். 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் எமது போராட்டத்திற்கும்,
பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!
கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர் சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத
பொம்பளை
சுனாமி பேரழிவுக்குப் பிறகு பட்டினப்பாக்கம் பகுதியை அமைதி சூழ்ந்து கொண்டிருந்த ஒரு நாளின் மாலை; காற்றின் அசைவு கூட இன்றி அமைதியாக இருட்டிக் கொண்டு வரும் மாலை. ஏனோ வானம் கொஞ்சம் மூட்டம் போட்டிருந்தது. கரையோரங்களிலிருந்து வெளியேறிய மக்கள் சாலை ஓரங்களிலும், சர்ச்சுகளுக்குள்ளும், தேநீர்க் கடைகளுக்கு அருகாமையிலும் கூட்டம் கூட்டமாய் ஒதுங்கியிருக்கிறார்கள். நான் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். தற்செயலாகத் திரும்பினேன்.
போலீசு - மனித உரிமை - பார்ப்பனியம் - ரெட்டை நாக்கு அம்பிகள்!
இறுதித் தீர்ப்பு: குஜராத் படுகொலை: ஆவணப்படம்
இருள் மனிதர்கள்
நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.