"அசையும் மலைகள், நகராத ஆறுகள், பூச்சொரியும் நறுமணமுள்ள முள்காடுகள்'' பூமியில் இப்படியும் இடம் உண்டோ? உண்டு. சென்னை ஐ.ஐ.டி.க்கு வந்தால் பார்க்கலாம்.
சாதித் திமிர் நிரம்பி வழிய அசையும் மலைகளாக இயக்குனரும், பார்ப்பனப் பேராசிரியர் குழுவும், மேல்சாதிக் கூஜாக்களும், எதிர்காலத்தில் வெளிநாடு செல்லும் கனவுகளுடன் மாணவ "அவாள்'களும்; அசையாத ஆறுகளாக காங்க்ரீட் கட்டிடங்கள் அவற்றுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என்றும் ஓடும் ஆறுகளின் நாமகரணங்கள் உண்டு;. மிச்சமீதி கண்ணுக்கெட்டிய தொலைவுவரை முள் கம்பி வேலிக்குள் முள்காடுகள் உண்டு.