Language Selection

புதிய கலாச்சாரம்

புரட்சிகர அமைப்புகளுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லையே! ஏன்? (உதாரணமாக மண்டல் கமிசன் மீதான பு.ஜ.வின் நிலைப்பாடு ஆந்திராவில் உள்ள மக்கள் யுத்தக் குழுவினுடையதை விட மாறுபட்டுள்ளது)
வசந்தன், கம்பம்

இ ந்திய அரசியல் அமைப்பில் நடப்பது அரசியல் ஆதிக்கமா?  சாதி ஆதிக்கமா? இந்தியாவிற்கு வர்க்கப் போராட்டத்து டன் சாதியப் போராட்டமும் தேவை என்று கருதுகிறேன். ஏனெனில், பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் பின்னணியாக, மறைமுக பயங்கரவாத ஆயுதமாக, ஆதிக்க அடையாளமாக சாதி இருப்பதாக உணர்கிறேன். ஆனால், சில கம்யூனிசக் கட்சிகளில் சாதியக் கண்ணோட்டமின்றி பிரச்சினைகளை நோக்குகின்றனர்.

பார்ப்பன, சத்திரிய, வைசிய வழிவந்த சாதிகளே இரு பிரிவாக நின்று இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் நடத்தும் இந்தச் சண்டையில் எதையும் ஆதரிக்க முடியாது; இதனால் சமூக நீதியும் கிட்டாது என்று தலையங்கத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தது. இவ்வாறு நாம் நடுநிலை வகிப்பது என்பது ஏற்கெனவே, மத்திய அரசு பணியில் மேலாதிக்கம் செலுத்திவரும் மேல்சாதியினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பது போலாகாதா?

மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கி விட்ட பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக தேசிய முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடு எதிர்ப்பு கிளர்ச்சிகள் வட மாநிலங்களில் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. அரசு கட்டிடங்கள், ரயில் நிலையங்கள், போக்குவரத்து வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன.

ம ண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்று, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியே பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக ஜனதாதள தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்துள்ளது. விதிவிலக்கின்றி எல்லா அரசியல் கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. அம்பேத்கார் நூற்றாண்டு கொண்டாடும் சமூக நீதி ஆண்டில் எடுக்கப்படும் பெருஞ்சிறப்பு வாய்ந்த முடிவெனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்,

என்ன சாதி என்றே தெரியாத பருவத்தில் பள்ளிக்குச் சென்றால் முதலில் சாதியைத்தான் கேட்கிறார்கள். சாதியைத் தூண்டுவது ஒரு வேடிக்கையாகிவிட்டது. மதம் பரப்புபவர்கள், புதுக்கட்சி ஆரம்பிப்பவர்கள், சாதிச் சங்கங்கள் அமைப்பவர் வரை இந்த ஆதிதிராவிடர்களை ஏன் முதன்மைப்படுத்துகிறார்கள்? இந்த நாட்டில் இவர்கள்தான் ஏழைகளா? ஏன் அனைத்து சாதியினருக்கும் சராசரியாக பொருளாதார அடிப்படையில் உதவலாமே? அதில் என்ன பிரச்சினை? ஏன் இந்த அரசாங்கம் முன் வருவதில்லை? இந்தச் சாதிப் பிரச்சினையில் என்ன அதிசயம் அடங்கியிருக்கிறது? ஒட்டுமொத்தமான உங்களின் கருத்தென்ன?
ஏ.எஸ். இராஜாமணி, தருமபுரி.

இ ட ஒதுக்கீடு பிரச்சினையை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கின்றன, சாதிச் சங்கங்களும் ஓட்டுக் கட்சிகளும். கடந்த மாதம் திருச்சியிலே கூடிய தமிழ்நாடு பிராமணர் சங்கம் "பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு' கோரியுள்ளது. பாசிச ஜெயலலிதா ராஜீவ் கும்பல்களின் ஆதரவு; ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா, சங்கராச்சாரிகள் போன்ற மதவெறி சக்திகளின் ஆதரவு; சமீபத்தில் வடமாநிலங்களில் வெடித்துப் பரவிய இட ஒதுக்கீடு எதிர்ப்புக் கலவரங்கள் ஆகியன அதற்குப் புது வீரியத்தைக் கொடுத்திருக்கின்றன. அவற்றோடு ஜனதாதள தலைவர் சந்திரசேகர் மற்றும் ஜனதா அரசின் துணைப்பிரதமர் தேவிலால் ஆகிய "எதிர்பாராத' தரப்பில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிட்டியிருக்கிறுது.

ஒ ரு கோட்பாடு என்கிற முறையில், இட ஒதுக்கீடு பிரச்சினை யில், தமிழினவாத குழுக்களிலேயே ஒருசில குழுக்கள் நம்முடைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் வாய்வழி பிரச்சாரத்தில், "புதிய ஜனநாயகத்தினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். பார்ப்பனியத்தை மறைமுகமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள். இட ஒதுக்கீட்டை எதிர்த்தால்தான் பார்ப்பனியர்கள் ஏற்கெனவே இருக்கிற ஆதிக்கத்தை, அரசு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்; கல்வி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கருதுபவர்கள். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு எதிரானவர்கள்; பார்ப்பன சாதிக்கு ஆதரவானவர்கள்'' என்று ஒரு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள்.

ம ண்டல் கமிசன் அறிக்கையை ஏற்று கல்வியிலும்  சமூகத்திலும் பின்தங்கிவிட்ட பிற்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்வதாக 1990இல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கேள்வி  பதில்கள் மற்றும் ஆசிரியர் குழு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கவுரை ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். வாசகத் தோழர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று தற்போது நூலாக வெளியிடுகிறோம்.

கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?


பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE