தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.
புதிய கலாச்சாரம்
மகிழ்ச்சியின் தருணங்கள்
முகஸ்துதி, முதுகுசொறிதல், சாகித்ய அகாடமி.... அற்பத் தனங்களில் ஊறித் திளைப்பதையே தனது தனித்துவம் என்றும் மகிழ்ச்சி என்றும் பிரகடனம் செய்கிறான் அற்பவாதி. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டோ தனது அகங்காரமும் அற்பத்தனங்களும் செதுக்கி எறியப்படும் வலி நிறைந்த அந்தத் தருணங்களை மகிழ்ச்சியின் தருணங்களாக உணர்கிறான்.
ஜெயமோகனின் சிறுகதை மீதான விமர்சனம் : இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?
பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.
சுபமங்களா எனும் பத்திரிக்கையின் ஏப்ரல் 1991 இதழில் ஜெயமோகன் என்பவர் எழுதிய ஒரு சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:
தமிழ் இனி 2000 : இலக்கிய நீரோக்கள்
"விட்டு விடுதலையாகி நிற்பாய்'' என்ற பாரதியின் வரிகளை நெற்றியில் பொறித்துக் கொண்ட இவர்கள் சிட்டுக் குருவிகள் அல்ல; தாம் உண்டு, உறிஞ்சி, வாழும் சமூகத்தை விட்டு விலகி நிற்கும் ஒட்டுண்ணிகள்.
ஸ்டாலின் எதிர்ப்பில் ஒரு தமிழ்நாட்டு வானவில் கூட்டணி!
ஸ்டாலினுக்கு எதிரான அந்த மேலைநாட்டு அவதூறுகளை அப்படியே இறக்குமதி செய்து இங்கே பரப்புவதற்கென்று, ஒரு பெருங்கூட்டம் அல்லும் பகலும் அலைகிறது. தமது சித்தாந்தச் சாய்வுகள் காரணமாக எதிரெதிர் முகாம்களில் நின்று கடுமையாக மோதிக் கொள்பவர்களைப் போலத் தோன்றும் இந்தக் கூட்டத்தினர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பில் மட்டும் ஒரு வானவில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளனர். "உன்னதமான கலைஇலக்கியம்சினிமா அரசியல்'', "மனித நேயமிகு தரமான படைப்புகள்'' என்கிற பெயரில் இவர்கள் பதிப்பிக்கும் எல்லா நூல்களிலும் இழையோடுவது ஸ்டாலின் எதிர்ப்புதான்!
ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை
தன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும் "ஆதாரபூர்வமாக'ப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. கண்முன்னே ஈராக்கில் நடந்துவரும் ஆக்கிரமிப்பின் கதையை பாமரனும் புரிந்து கொண்டிருக்கிறான்.
கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் : அறிவாளிகளா, உளவாளிகளா?
சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்
சுந்தரராமசாமி அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத் துவத்தின் இலட்சிய உருவமாய், பாதைகள் மயங்கும் அந்தி யில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய், இறுதியில், காற்றில் கலந்த பேராசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி "சிற்றி லக்கிய உலகில் இங்கொருவன் இருக்கின்றேன்' என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில் கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.
முன்னுரை : நினைவின் குட்டை : கனவு நதி
சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னத மான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங்கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பதாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எவ்வித சித்தாந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கியத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள்.
"ரிலையன்ஸ் ஃபிரஷ்' முற்றுகை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
""தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு'' என்று வேகாத வெயிலில் கூவிச் செல்லும் கூடைக்காரப் பெண்கள், காய்கறிச் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டு நம்மைக் கூவி அழைக்கும் வியாபாரிகள், சிறுவயது முதலே நமக்கெல்லாம் அறிமுகமான மளிகைக் கடை அண்ணாச்சிகள், கண்முன்னே இறைச்சியை அறுத்து எடைபோட்டுத் தரும் கறிக்கடை பாய்கள்... இவர்கள் யாருமே இல்லாத நகரத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ""அத்தனைப் பேரையும் ஒழித்துக் கட்டிவிட்டு இவர்களுடைய வருமானம் மொத்தத்தையும் நாமே சுருட்டிக் கொண்டால் என்ன?'' என்று நினைக்கும் ஒரு கொடூரமான முதலாளியைக் கற்பனை செய்து பாருங்கள்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!