Language Selection

புதிய கலாச்சாரம்

பெப்சி கோக்கு மிராண்ட
பெரியாஸ்பத்திரி வராண்டா
சொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)
..
கோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா
·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடா
பல்லு கரையை நீக்கலாம் கக்கூசு கரையை போக்கலாம்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
கோக்கு பெப்சியோட தாகம் ரொம்ப பெரிசுடா
அது உருஞ்சும் பானம் ஆறும் குளமடா
பெப்சி உறிஞ்சி வாழுறான்
மச்சி உறிஞ்சி சாகுறான்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)

..

பெப்சி மாதவனும் விக்கிரமும் யாருடா
ரசிகர் பாக்கெட்டுல மிளைடு போடும் கேடிடா
அவனுக்கு ஏழு கோடிடா
உனக்கு நாம் கோடிடா
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)

 

உலகத்தை விடிய வைத்தது நீதாண்டா
உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா
நீயின்றி உலகம் இல்லையே
வானமே உனது எல்லையே
உனக்கென்று ஏதும் இல்லையே....
(உலகத்தை)
..
இடி மின்னல் மழையானாலும்
தளறாது உந்தன் கைகள்
குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்
உனது வியர்வை அனையை மீறுமே
உயிர் பெறும் மின்சாரமே
நரம்பில் ஓடும் இரத்தம் போலவே
சிதறிபாயும் பூமியாவுமே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..

ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்
உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்
கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே
வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்
நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்
உனது உடல் இழையாய் வேகும்
உலகமே பகலாய் மாறும்
உனது விழி ஒரு நொடி மூடும்
உலகமே ஒளியைத் தேடும்
உனக்கென்று ஏதும் இல்லையே
(உலகத்தை)

கோடான கோடி மக்களுக்காக
குருதி சிந்திய தோழர்களே
வர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....
வீழந்து புதைந்திட்ட வித்துக்களே
வீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,
..
சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமை
தலைவிரித்து ஆடிடும்
தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே
அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்
ஆல மரங்கள் சாய்ந்தடா....ஆ.........
அழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)
..
இருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்
எங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்
எதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த
மலைபோன்ற தோழன் மாண்ட துயரம்
காடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்
தர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை
கொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)
..
துப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே
ஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்
எங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்
இழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்
மண்ணில் அவரது உடல் மறைந்தாலும்
மக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)
..
தெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்
அந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்
அவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்
போனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்
மக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்
மக்கள் இதயத்தில் கலந்தானே - (2)
(கோடான)

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !

கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !

குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே

சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !

ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !

தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !

துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
துரோகிகள் மதம்தான் உன் மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க
ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏ
மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு
தண்டல் எடுத்து வையுங்க
எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க
பப்பள பளபள பட்டு சலவ சட்டை
ஆகா பட்டு சலவ சட்டை
தொண்டையில் உத்திராட்ச கொட்ட
ஒரு உத்திராட்ச கொட்ட
அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம்
மல்ட்டிகலர் பட்டை
மயங்கி போகாதிங்க கிட்ட
தளபதி பாட்ஷா நாயகனெல்லாம்
அண்ணே வரலாறுதான்
ஹிரோ அண்ணனோட நிழல்தான்
அதில் டூயட் கனவு பாதி சீன தூக்கினா
பாதி கத நெசந்தான்
அத பாக்குறோம் தினம் தினம் தான்
கள்ளுமுள்ளுகூட பொதருகுள்ள ஓடிக்கிட்டிருந்தாரு
சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அண்ணன் ஓட்டிக்கிட்டிருந்தாரு சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அப்படி ஜில்லா ஊருகுள்ள கடைய தொறந்தாரு
பட்ட கரையில் நொழஞ்சாரு
கல்யாண காதுகுத்து கோயில் திருவிழா எதுவும் நடக்காது
அண்ணன் இல்லன்னா எதுவும் நடக்காது
ஒரு அடிதடி கலாட்டா வெட்டுகுத்து கலவரம் தொடங்காது
அண்ணன் இல்லாமா பொணமே விழுவாது
தரக்கடை, பழக்கடை தட்டுவண்டி சங்கம் அண்ணந்தான் தலைவரு
நம்ம அண்ணந்தான் தலைவரு
தண்டலுக்கும் அண்ணன் தான் டெண்டரு
சாதி சங்கத்தில் தலைவரு
ஆக்கப்பட்ட அனைத்துக்கும் தலைவரு
அட அப்புறந்தாண்டா அண்ணன் புதுசா காரு எறக்குனாரு
வெள்ளை கண்டஸா எறக்குனாரு
காரில் போகையில் கண்ணாடி வழியே
குடிசையே பாத்தாருஅண்ணன் குடிசைய பாத்தாரு
மனக்கணகொன்னு போட்டாரு
பிளாட்டு மனக்கணக் கொன்னு போட்டாரு
ஏ மலையப் பாத்தாரு கிரானையிட்டு விலைய நினைச்சாரு
காவேரி மணலப்பாத்தாரு கரையோர மரத்தையும் பாத்தாரு
அட இது தெரியலையே இத்தனை நாளுன்னு
முடிவொன்னு எடுத்தாரு, வேட்பு மனுவ கொடுத்தாரு
போட்டிக்கி நின்ன கட்சிகாரன்கிட்ட துண்டு வீசினாரு
எலும்பு துண்டு வீசினாரு, ரெண்டு குண்டும் வீசினாரு
அட அப்புறந்தாண்டா கட்சியில் அண்ணன் தளபதி ஆனாரு
ஊரல பாதிய தின்னாரு
சரக்கு ஓட்டுன காலத்தில்
அண்ணன் சாதாரண கேடி
இப்ப இருக்குது பல கோடி
கலக்டரு வாரார் வூடு தேடி
தண்ணி போட நிதிபதி ஜோடி
போலிசு அணைச்சி போட்ட பீடி
இந்த தீடீர் பணக்காரன் அரசியல் ரெளடி வாரான் நம்ம தேடி
தேர்தல் தேதி வருகுது கூடி
தேர்தல் தேதி வருகுது கூடி
....

 காலங்கள் மாறும் கரங்களொன்று சேரும் (2)

மழைக் காளான்கள் போல் தேர்தல் மாயங்கள் சாகும்
இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்


(காலங்கள் மாறும்)

கோரஸ்:
நாணல்கள் போலே வளைந்த நாட்கள் போதும்
ஓநாய்கள் பின்னே நடந்து என்ன இலாபம்
தேர்தல்கள் போகும் ஏமாற்றம் நெஞ்சில் தேங்கும்
வேறன்ன மார்க்கம் விளாக்கள் நெஞ்சை தாக்கும்
உடல் நோகாமல் சாகாமல் வராது மாற்றம்
இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்

(காலங்கள் மாறும்)


கோரஸ்:
அதிகாரம் இன்று இல்லை அடையாமல் வாழ்க்கை இல்லை
புது வாழ்க்கை நீதி பண்பாடு வாக்கு சீட்டாலே மாற்றம் வராது
மணல் கோபுரம் போல் பணநாயகம் வீழும்
இது போராட்ட காலம் புரட்சி வெற்றி கொள்ளும்

(காலங்கள் மாறும்)

நாடு முன்னேறுதுங்கிறான் - அட
மினு மினு மினுக்கா ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன் அமெரிக்கா
ஜப்பான் கணக்கா நாடு முன்னேறுதுங்கிறான்


(நாடு முன்னேறுதுங்கிறான்)



தாகம் தீர கொக்கோ கோலா
போதை ஏற ·பாரீன் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்கத் தண்ணியில்ல கொப்புளிக்க பன்னீரு
அட்ரா செருப்பால வீங்கிபுடும் செவிளு


(நாடு முன்னேறுதுங்கிறான்)


டிவியில் சிரிக்குது காம்பளான் கேலு - டாக்டர்
தெனந்தரச் சொல்லுறான் பழம் முட்ட பாலு
வகை தெரியாம தின்னு அவன் புள்ள வீங்குது - வெறும்
விளம்பரத்த பாத்தே நம்ப புள்ள ஏங்குது
சத்துணவு தீந்திடுன்னு தட்டோட ஓடுது - இவன்
தட்டுக்கெட்ட திட்டமெல்லாம் என்னா புடுங்குது


(நாடு முன்னேறுதுங்கிறான்)


காலைக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்கு போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம்
இதுக்கே போலிசு துணை ஒண்ணு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணும் - பெரிசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்


(நாடு முன்னேறுதுங்கிறான்)

பள்ளிக் கூடமுன்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சொவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்தில தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வெண்டு போகுது - நம்ப
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது


(நாடு முன்னேறுதுங்கிறான்)


அரசு மருத்துவ மனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேசனின்னு வச்சிருக்கான் பேரு
அறுத்து போட்டுபுட்டு இல்லேங்கிறான் நூலு
காசுக்காரக் கூட்டம் அப்போலோ போகுது - நமக்கு
கவருமெண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது


(நாடு முன்னேறுதுங்கிறான்)

ஏ.சி கூண்டுக்குள்ள மொம்மை வெரைக்குது - தங்க
ஊசிச் சேலை அதன் ஒடம்பில் மினுக்குது
நல்லி சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது - எங்க
பட்டினிச் சாவில் உன் பட்டு மினுக்குது


(நாடு முன்னேறுதுங்கிறான்)

காடும் மரமும் கடல் மீனும் தனியாரு
ரோடு கரண்டு டெலி போனும் தனியாரு - அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிப்புட்டான்கூறு - அத
ஏலம் மூணுதரன்னு கூவுறான் சர்க்காரு - நம்ம
நாடுன்னு சொல்லிக்கிட மிச்சமென்ன கூறு - இவன்
ஆடுகிறான் ஆட்டுறவன் காட்டு தர்பாரு


(நாடு முன்னேறுதுங்கிறான்)

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு - கழிவு.

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பாலியல் வக்கிரங்களையே பண்பாடாக்கும் ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகவும் இத்தகைய நேரடி நடவடிக்கை தேவைப்பட்டிருக்கிறது.

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்
ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்
நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

 

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE