Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

2009 இல் இறுதியுத்தம் நடந்த காலத்தில் சர்வதேசம் பற்றியும் - சர்வதேச தலையீட்டின் மூலமான மீட்சி பற்றியும் கூறி, புலிகளின் சுயமான சொந்த முயற்சியை முடக்கி முள்ளிவாய்க்காலில் புதைத்ததுதான், "தமிழ்த்தேசிய" வரலாறு. அன்று இந்த அரசியலை வழிகாட்டிவர்கள் தான், இன்று சர்வதேச - உள்ளக விசாரணை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர். 2009 இல் சர்வதேச தலையீட்டை முன்னிறுத்தி - அதற்காக மக்களை யுத்த கேடயமாக மாற்றிப் பலி கொடுத்தவர்கள் - இன்று சர்வதேச விசாரணையைக் காட்டி, மக்களை அதே அரசியல் வழியில் செயலற்றவராகவும் - மந்தைகளாகவும் மாற்றுகின்றனர்.

கூட்டமைப்பின் (பராளுமன்ற எதிர்கட்சிகளினதும் - அதன் தலைவரினதும்) ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு தேசிய அரசிடம் கோருகின்றார். அதேநாள் நாட்டின் பிரதமர் ரணில் முழுப் பாராளுமன்றமும் இன்று ஒரு அரசாங்கமாக மாறி வருவதால், நாட்டின் தேசிய பிரச்சினையை தீர்க்க ஒத்துழைக்குமாறு கோருகின்றார்.

12.09.2015 அன்று அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தின் போது, கைதிகளின் மனைவி ஒருவரின் இக் கூற்று - இரண்டு அடிப்படை விடையங்களை பறைசாற்றுகின்றது.

1. அரசியல் கைதிகள் என்று யாரும் இலங்கையில் கிடையாது என்ற முகமாற்ற "நல்லாட்சி" அரசாங்கத்தின் நிலையையும் - கைதிகளுக்காக தேர்தலுக்கு முன்பு சமவுரிமை இயக்கம் போராடிய போது - சுமத்திரன் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பபட்டு விடுவார்கள் என்று கூறி - போராட்டத்தை தேர்தல் காலத்தில் தொடர்ந்து முன்னெடுப்பதை முடக்கியதையும் - இன்றைய இந்தப் போராட்டத்துடன் இனம் கண்டு கொள்ளக் கோருகின்றது.

ஐரோப்பா நோக்கிய அலை அலையான அகதிகளின் வருகையும் - அதை தடுத்து நிறுத்த முன்னெடுத்த ஏகாதிபத்திய கெடுபிடிகளையும் தகர்த்தது எது? ஏகாதிபத்திய தலைவர்களும் - ஏகாதிபத்திய ஊடகங்களும் அகதிகளின் பரிதாப நிலை பற்றியும் - அவர்களின் அவலங்கள் பற்றியும், கதைகதையாக கூற வைத்தது எது?

போலி கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைக்கு என்று பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மோகன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கு வைத்து அக்காவல்நிலைய ஆய்வாளர் என்னும் மிருகத்தால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை இனவெறி அரசுகளின் கொலைக்கரங்களிற்கு அஞ்சி அகதியாக தமிழ்நாடு சென்ற ஒரு தமிழனை தமிழ்நாட்டில் வைத்து கொலை செய்திருக்கிறார்கள். மோகனைக் கொலை செய்த அந்த மிருகத்தைக் காப்பாற்ற தமிழ்நாட்டு காவல்துறை தமது வழக்கமான ஈனத்தனங்களை முயற்சி செய்தது. மோகனில் உடலை பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முயன்றது. நீதி விசாரணைக்கு நீதிபதியை அழைக்காமல் இருக்க முயன்றது. ஈழ மக்களின் தோழர்கள் போராடிய பின்பே உடற்பரிசோதனை நடந்தது.

கூட்டமைப்பு தன் கட்சிக்குள் தொடங்கி நாட்டின் பிரச்சனைகள் வரை, சதிக் கும்பலின் கூடாரமாக - அதையே அரசியல் நடத்தைகளாக அரங்கேற்றுவதைக் காணமுடியும். புலிகளின் 2009 முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றிய அதே அரசியல் சதிகள், இன்று பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு அரங்கேற்றுகின்றது. கூட்டமைப்பிடம் ஜனநாயகம் கிடையாது. மக்களுக்கு பதில் சொல்லும் தார்மீக பொறுப்பும் - நேர்மையும் கிடையாது. மேற்குநாடுகளின் கைக்கூலிகளாக மாரடிக்கின்ற அரசியலைத் தவிர, அதனிடம் வேறு எதுவும் கிடையாது.

சமூகம் குறித்து அக்கறையுடன் செயலாற்றுவதாக கூறும் பலர், அண்மையில் மரணித்த ஒருவரின் தன்னார்வ நிதி சார்ந்த ஏகாதிபத்திய செயற்பாடுகளையும் - ஏகாதிபத்திய நலன் சார்ந்த நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்த உண்மைகளை மறைத்து, அவருக்கு அஞ்சலிகள் செலுத்தினர். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் "அரசியல் - இலக்கியம் - கலைகளின்" பெயரில், நவதாராள - உலகமயமாதலை முன்னெடுத்த நபர்களுக்கு முண்டு கொடுத்து அதற்கு சாமரம் வீசினர். இந்த வகையில்

இலட்சக்கணக்கான அகதிகளும் - ஆயிரக்கணக்கான பிணங்களும் குவிய, அகதிகள் வரும் பாதைகளை குறிவைத்து பல கிலோமீற்றருக்கு முட்கம்பி வேலிகளை மேற்குநாடுகள் அமைக்கின்றது. மத்திய கிழக்கில் மரணத்தில் இருந்து தப்பியவர்கள் - ஐரோப்பாவில் அகதிப் பிணமாகி மிதக்கின்றனர்.

ஆசியப் பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட (1931ல்) முதலாவது நாடு இலங்கையாகும். 1960ல் உலகத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டு 5 ஆண்டுகள் பதவியில் இருந்தார். பின்னர் 1970ல் தெரிவு செய்யப்பட்டு 7 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது மகள் திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்கா 1994ல் பிரதமராகவும் பின்பு இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்புடன் (1994 - 2005) ஆட்சிக்கு வந்த போது சிறிமா அவர்கள் பிரதமராக 14 நவம்பர் 1994 முதல் 9 ஆகஸ்ட் 2000 வரை செயலாற்றினார். இவர்களது ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிராக எத்தனையோ கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தும்; இலங்கையில் பெண்களுடைய உரிமைகளுக்காக இவர்களால் எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் G.N.சாய்பாபா கடந்த ஆண்டு மகராஸ்டிரா காவல்துறையின் உளவுப்பிரிவினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு பின் பயங்கரவாத கருப்பு சட்டமான ருயுPயு UAPA (Unlawful Activities Prevention Act) கீழ் கைது செய்யப்பட்டதாக கூறி சிறையில் அடைத்தது. 90 சதவிகிதம் உடல் இயங்க மறுக்கும் மாற்றுதிரனாளியாகிய இவர் சக்கர நாற்காலியின் உதவியால் மட்டுமே இயங்கக் கூடிய நிலையில் உள்ளவர். கடந்த ஓராண்டுகளுக்கு மேல் நாக்பூர் மத்திய சிறையில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாத மின்சாரம் மறறும் யன்னல் வசதி அற்ற இருண்ட அதிக வெப்பமுள்ள "அண்டா செல்" (Anda Cell)) எனும் இடத்தில் "பாதுகாப்பு" கருதி அடைக்கப்பட்டுள்ளார்.

தொடரும் நூற்றுக்கணக்கான அகதிகளின் மரணமும் - பல்வேறு தேச மக்கள் பல முனைகளில் அகதிகளாக மேற்கு நோக்கிய படையெடுப்பும், ஐரோப்பாவையே குலுக்கி வருகின்றது. மேற்கின் ஜனநாயகமும் - மனிதாபிமானமும் காணாமல் போக - இன, நிறவாத அரசியல் முன்னுக்கு வருகின்றது. நாசிக் கட்சிகளின் செல்வாக்குகள் அதிகரிக்கின்றது. மேற்கில் மூலதனமும் - செல்வமும் சிலரிடம் குவிவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியானது, அகதிகளின் வருகையுடன் மேலும் தீவிரமாகி வருகின்றது. மேற்கில் அமைதி என்பதை- இந்த அமைப்பு முறை இனி சாத்தியமற்றதாகி இருக்கின்றது.

பணத்தால் எதையும் வாங்க முடியும் - பணத்தால் எதையும் மாற்ற முடியும் - பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற பொது சமூக உளவியலே, இன்று வடகிழக்கு மக்கள் சார்ந்த புலம்பெயர் உதவிகளாக மாறி இருக்கின்றது. உதவியை பெறுபவன் சமூக உணர்வுடன் பெறாத வரை - சமூக உணர்வை வளர்க்காத உதவிகள், தகுந்த சமூக பயன்பாட்டை பெறுவதில்லை. மறுபக்கத்தில் பணத்தைக் கொண்டு சமூக அந்தஸ்தை பெறும் சுயநலம் சார்ந்த கண்ணோட்டம், எந்த சமூக பிரயோசனமுமற்ற கோயில்களைக் கட்டும் அதேநேரம், ஊழலுக்குள் - மோசடிக்குள் சமூகத்தை மூழ்கடித்து விடுகின்றனர்.

1930ல் பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியாசனமுறை அமுல்படுத்தப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அதனை அமுல்படுத்திய பாடசாலைகளை உயர்சாதியினரும், அதனை அமுல்படுத்தாத பாடசாலைகளை பாதிக்கப்பட்ட சாதியினரும் தீ வைத்துக் கொழுத்தினர்.

வடகிழக்கில் பணம் சார்ந்த செயற்பாடுகளானது, ஊழலுக்கும் - மோசடிக்கும் உள்ளாகின்றது. பாராளுமன்ற அரசியல் என்பது பணம் சம்பாதிக்கவும் - பொறுக்கித்தனமாகத் தின்று குடிக்கும் தங்குமிடமாக எப்படி உணரப்படுகின்றதோ, அப்படி சமூகம் சார்ந்த பணச் செயற்பாடுகள், சுருட்டும் இடமாக மாறி இருக்கின்றது. பணரீதியாக சமூகத்துக்கு உதவுகின்றவர்கள் - இதை தடுக்க கண்காணிப்புகளையே மாறாக உருவாக்க முயலுகின்றனர். சமூக உணர்வற்ற சமூகத்தை தக்கவைத்துக் கொண்டு, சமூக உதவிகள் என்பது வெளிப்பூச்சாக மாறுகின்றது.

தமிழ் "தேசியம்" என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் அரசியல் பொருள் அற்றதாக மாறியிருக்கின்றது. "தேசியம்" இன்று தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளால் "திடீர் தேசியமாக" உச்சரிக்கப்பட்டு உசுப்பேற்றப்படும் - வாக்கு வங்கிக்கான உணர்ச்சிக் கோசமாக எஞ்சி இருக்கின்றது. தமிழன் தமிழனுக்கு வாக்களிக்க வேண்டும் - தமிழன் தான் தமிழனை அடக்கியாள வேண்டும் என்று இனவாதம் வக்கிரமாகி இருக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE