Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஜக்கிய நாடுகள் சபையின் 28வது கூட்டம் கியூபா நாட்டின் மீது உள்ள பொருளாதார அரசியல் தடைகளை தொடர்வது எனத் தீர்மானித்துள்ளது. கியூபா மீதான அமெரிக்க முன்னெடுப்பான இந்த தீர்மானத்தால் கியூப மக்கள் பொருளாதார நெருக்கடியிற்குள் தொடர்ந்தும் அல்லல்படுகின்றனர். மேலும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளின் பின்னணியில் இயங்கும் ஆயுத குழுக்களின் உள்நாட்டு யுத்தத்தினால் பல மில்லியன் கணக்கான சிரியா மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஜரோப்பா நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

"வெறுமனே மகிந்தவின் துணைப்படை போன்றதாக அல்லாமல் மகிந்தவுடன் ஆலோசனை நடத்தி கொலை செய்யும் அளவிற்கு பிள்ளையான் செயற்பட்டிருக்கிறார். பலம்மிக்க மாபியா பாணியிலான அமைப்புப் போன்று இயங்கி வந்த பிள்ளையான் குழுவிற்கு தென்னிந்திய பின்னவீனத்துவ அடையாள அரசியலின் ஆதரவும் இருந்து வந்திருக்கிறது. தவிர, பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுகளுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது".

அமெரிக்கா மகிந்த ராஜபக்சாவை இனப்படுகொலைக்காக தூக்கிலே போடும், செஞ்சோற்றுக்கடன் தீர்க்க நாங்கள் அமெரிக்க கொடியை தூக்குவோம் என்று ஜெனீவாவில் தமிழ் தேசிய அரசியல் விஞ்ஞானிகள் உலகம் எல்லாம் கொல்லும் அமெரிக்காவின் கொடியை கையிலே பிடித்துக் கொண்டு நின்றார்கள். இவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா வாழ்க என்று பஜனை பாடிக் கொண்டிருந்த இந்த ஐப்பசி மாதத் தொடக்கத்தில் தான் எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பு (Medecins Sans Frontiers) ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரத்தில் பொறுப்பேற்று நடத்தும் மருத்துவமனையின் மீது குண்டு வீசி இருபத்திரண்டு அப்பாவிகளைக் கொன்றது. அமெரிக்க இராணுவம் குண்டு வீசத் தொடங்கிய போதே எல்லைகள் அற்ற மருத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் காபுலில் இருக்கும் நேட்டோ தலைமையகத்திற்கும், வாசிங்டனிற்கும் தொலைபேசியில் அறிவித்திருந்த போதும் தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டன என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

இனவாதிகள் மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பும், சிறைக்கைதிகளின் போராட்டத்தை முடக்க முனைகின்றது. சிறைக்கைதிகளின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கம்; கைதிகள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையில் கரிசனையுடன் செயற்படும் அமைப்புக்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரு போராட்டத்தை கொழுப்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்பாக நடத்தியது. இதன் பின்னர் பலதரப்பினரது போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடக்கும் நிலையில், சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்டப் போராட்டங்களை முடக்க அரசும்-கூட்டமைப்பும் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

இலங்கையின் 1977 ஆவணி இனக் கலவரத்தைத் தொடர்ந்து நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. 1978 அக்டோபர் 5ம் நாள் ஐ.நா.சபைக் கூட்டத் தொடரின் போது அனுமதியின்றி உள்ளே நுழைந்து மேடை ஏறிய திரு வைகுந்தவாசன் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.

"பேரவைத் தலைவர் அவர்களே! உலகத் தலைவர்களே!! தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் நாடுகளைக் கொண்ட நாடுகள் உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது? அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்!

வீடுகளை எரித்த நெருப்பு அணைந்திடவில்லை

விம்மி அழுத குழந்தைகள் விழி மூட மறந்தன

தேடி வந்த கால்கள் தெருக்களில் அலைகின்றன

வெறும்கையினராய் நின்றவர் மேல் "போர் என்றால் போர் என்று"

கொடுங்குரல்கள் கொல்லச் சொல்லி ஆணையிடுகின்றன

மரத்தின் தொங்கும் கிளைகளின் கீழே நிழல் கவிவது போலே

மரணத்தின் இருள் பரவிய பாலைநிலத்தில்

தானைத் தலைவர்கள் தாமே என்றவர்கள் தலைகள் பதுங்கின

கரம்பன் கிராமத்தில் மண் குடிசையொன்றில் மூன்று ஆண், இரண்டு பெண் சகோதரங்களுடன் கூடப் பிறந்த ஒரு சிறுவனின் குடும்பம் வறுமையில் வாடியது. அவனுக்கு ஓவியக் கலை கை வந்த கலையாக அமைந்திருந்தது. ஆரம்பக் கல்வியைத் கரம்பன் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் பெற்றுக் கொண்ட அவனுக்கு ஆங்கிலக் கல்வியைத் தொடர வசதி இருக்கவில்லை. உறவினரான திருமறைச் சகோதரர் ஒருவருடைய ஆதரவுடன் அவன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லுரியில் எட்டாம் வகுப்பு வரை தனது ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொண்டான். பின்னர் ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையில் படிக்கும் போது 1942ல் அவனுக்கு வயது 18.

வன்னி யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் மற்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் ஏதுமின்றி குடும்பத்தினரும், உறவினரும் தகவல் அறிய முடியாமலும் அதற்க்காக போராட முடியாத நிலையிலும் இருந்த நிலையில் தெற்கிலிருந்து வந்த "மக்கள் போராட்ட இயக்கத்தின்" தோழர் லலித்துடன் இணைந்த குகன்- இருவரும் சேர்ந்தே முதன் முதலில் காணாமல் போனவர்களை தேடும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். காணாமல் போனவர்களின் உறவினர்களிற்கும், குடும்பத்தினருக்கும் காணாமல் போனவர்களின் விடுதலைக்காக போராட அன்று இருந்த அச்ச நிலையினை இவர்களின் போராட்டம் போக்கியது.

சமவுரிமை இயக்கம் இன்று (14.10.2015) கொழும்பு கோட்டையில் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் - பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தையும் - அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் வண்ணம் ஊர்வலத்தையும் நடத்தியது. சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் முதல், கைதிகளின் உறவினர்கள் வரை - பலதரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர். அதேநேரம் நாடு தழுவிய அளவில், கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் போஸ்டர்கள் சமவுரிமை இயக்கத்தால் ஒட்டப்பட்டன.

சமவுரிமை இயக்கம்  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! பயங்கரவாத தடைச் சட்டத்தை இனியாவது நீக்கு ! என்ற இரு கோரிக்கைகளை முன்னிறுத்தி  மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக  (இன்று) 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே

அனைவரும் கேளுங்கள்...

எல்லோருடைய உரிமைகளை

வென்றெடுக்கமுன்னே வாருங்கள்.....

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நாளை 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தலித் ஆண்-பெண்களை பொலிஸ் நிர்வாணப்படுத்தும் காட்சியாக - இல்லையில்லை அவர்களே தங்களைத் தாங்களே நிர்வாணப்படுத்தியதாக ஏகாதிபத்திய ஊடகமான பிபிசியின் செய்தியுமாக - சமூக வலைத்தளத்தையும், ஊடகங்களையும் இரண்டுபட வைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் புனித "ஜனநாயகத்தைப்" பாதுகாக்க முனையும் அதேநேரம் - சமூக அக்கறையுள்ளவர்கள் மக்கள் விரோத ஜனநாயகத்தை அம்பலப்படுத்திய போது - இந்திய அமைப்புக் குறித்தான பொது விவாதத்துக்கு இந்தக் காட்சி அடிகோலியது.

"டேவிட் ஐயா" என எல்லோராலும் அறியப்பட்ட மனிதன் மறைந்து விட்டார். 1976 களிலேயே இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை சாதி-மத-பால்-வர்க்க பாகுபாடுகளைக் கடந்து நின்று தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஊடாக நோக்கிய ஓரேயொரு கல்விமான் அவர் என்றால் அது மிகையாகாது. அவர் கல்வி கற்ற சூழலின் பின்னணி அவரைத் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்தது. இயல்பாகவே அமைந்திருந்த தன் திறமையை வளர்த்தெடுக்க அவர் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருந்த உறுதி அவரை ஒரு சிறந்த ஒரு கட்டிடக் கலை நிபுணராக பரிணாமிக்க வைத்தது.

"நாங்க ஊருல இருந்த எல்லாக்கோயிலையும் பள்ளிக்கூடமா மாத்திட்டோம்"

பொது வெளி என்பதே ஆண் வெளி யாகவும் அதை வெகு இயல்பான ஒன்றாக கட்டிக்காத்துக் கொண்டு, ஜம்பமடித்துக் கொள்ளும் இந்து ஜாதிய சமூகத்தில் பெண்ணாக பிறந்து, மக்கள் முன்பு வீதிக்கொட்டகைகளிலும், இயக்கப் பிரச்சார நாடகங்களிலும் நடிக்க துவங்கி ஆண்மைக் கொடிக் கட்டிப் பறக்கும் திரையுலகில் ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக காலூன்றி கதாநாயகன, காமெடியன் போன்ற ஆண்களுக்கு இணையாக தன் ஆளுமையை நிறுவியவர் மனோரமா அம்மா. அவரை ஒரு முறை' தினமணி' மார்ச் மகளிர் மலருக்கு பேட்டியெடுத்தார்கள்.

இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு யாப்பு எழுதுவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய யாப்பு ஏன்? எதற்காக? எப்படி? வரைய வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதும் யாருக்காக? யாரால்? அது எழுதப்படல் வேண்டும் என்பதும் ஒரு ஜனநாயக நடைமுறையின் கீழ் கேட்கப்பட வேண்டிய முக்கிய கேள்விகளாகும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE