Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

எல்லா உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் கீழிலிருந்து மேலாக அடங்கும். ஒளிர்ந்து எரியும் சூரியனிடம் இருந்து பசும் தாவரங்கள் பச்சையம் பெற்று பசியாறும். பாய்ந்து துள்ளும் மான் அம்மரத்தின் பசுந்துளிர் கடித்து உயிர் வாழும். கானகத்து பெரும்புலி அம்மானை வேட்டையாடி அடித்து உண்ணும். எல்லா உயிரினங்களும் இரைகளே. வேட்டையாடும் மிருகம் இன்னொரு விலங்கினால் வேட்டையாடப்படும். இது தான் இயற்கை. பல்லுயிரும் பெருகி வாழும் காடு கனமழை பொழிய செய்யும். மாமழை போற்ற நாடு செழிக்கும். மனிதர் பசியின்றி வாழ்வார். இது தான் இயற்கையின் விதி, இயற்கை அன்னையின் கொடை.

சமூக வலைத்தளங்கள் தொடங்கி உலகெங்கும் உள்ள பிரபலமான அடையாளங்கள் மீது பிரஞ்சுக் கொடியைக் கொண்டு அடையாளப்படுத்தியன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சிந்தனைமுறையை உருவாக்கியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு யுத்தத்தை பிரகடனம் செய்துள்ள பிரஞ்சு ஏகாதிபத்தியம், பிரஞ்சுக் கொடியை பறக்க விடக் கோரியதுடன், தங்கள் யுத்தத்தில் பிற நாடுகளையும் பங்குகொள்ளுமாறு அழைக்கின்றது. பிரிட்டன் யுத்தத்தில் பங்குகொள்ளவுள்ள நிலையில், அதற்கு எதிராக பிரிட்டிஸ் மக்களின் போராட்டமும் நடக்கின்றது. ஆப்கானிஸ்தானையம், ஈராக்கையும் அமெரிக்கா ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிரஞ்சு மக்கள், இன்று பிரஞ்சு கொடிக்குப் பின்னால் மந்தையாக்கப்பட்டு இருக்கின்றனர். இவை பயங்கரவாதத்தை ஒழிக்குமா? பிரஞ்சு முதல் ருசியா வரை முன்னெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம், உண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரானதா? இந்தக் கேள்விகள் மூலம் - யுத்தத்தை ஆராய்வோம்.

நேற்றைய தினம் 03.12.15 அன்று ”சம உாிமை இயக்கத்தின்” நோா்வே கிளையினரால்; இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி நோர்வே பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருந்தது.

2016க்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஏற்கனவே பாரிய மக்கள் எதிர்ப்பு எழுந்து கொண்டிருக்கின்றது. கண்ட கனவுகளெல்லாம் கானல் நீராகி விட்டன. அரச ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் ரூபா. 10000 சேர்ப்பதாக சொன்னார்கள். தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 1500 ரூபாவால் அதிகரிப்பதாகச் சொன்னார்கள். சட்டைப்பையை நிரப்புவதாகச் சொன்னார்கள். நடந்து செல்பவர்கள் வாகனத்தில் செல்ல முடியும் என்றார்கள். கடைசியாக, "பிச்சை எடுத்ததாம் பெருமாளு அதை பறித்து தின்னுதாம் அனுமாரு" என்ற கதையாகிவிட்டது. கூட்டரசாங்கம் பருப்பு, கருவாடு ஆகியவற்றின் விலைகளை குறைத்துவிட்டு, வரலாறு பூராகவும் இந்நாட்டு உழைக்கும் மக்கள் அநுபவித்த உரிமைகளை கொள்ளையடிக்க முயல்கின்றது. அரச ஊழியர்களின் ஓய்வூதியம், தனியார்துறை ஊழியர்களின் சேமலாப நிதி, விவசாயிகளின் உர மானியம், பாடசாலைச் சிறார்;களின் சீருடை உட்பட மேலும் பலவற்றிற்கு 'ஆழ்ந்த அநுதாபம்" என்று கூறுமளவிற்கு இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உள்ளன.

மக்களின் வாழ்விற்கு வரவு செலவுத் திட்டத்தில் நல்ல செய்திகளை தருவதாக கூறிய மைத்திரி - ரணில் அரசு, அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மக்களின்  எதிர்பார்ப்புகளிற்கு வேட்டு வைத்துள்ளது. அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு சம்பள அதிகரிப்பை வழங்கி அவர்களின் சட்டை பைகளை நிரப்பி விடுவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். கூட்டரசாங்கம் சில உணவுப் பொருட்களின் விலையை குறத்து விட்டு, இந்நாட்டு அரச ஊழியர்கள் தனியர்துறை ஊழியர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.

ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் எதிர் கொண்டுள்ள குறிப்பான பிரச்சினைகள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை பதுளை மற்றும் அப்புத்தளை பிரதேச ஆசிரிய உதவியாளர்கள் முறையே இம்மாதம் 25 மற்றும் 29ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்களுக்கு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்துரை வழங்க வரவழைக்கப்பட்டிருந்தார்.

மற்றொரு நாட்டின் பிரஜாவுரிமையைக் காரணம் காட்டி, இலங்கையில் பிறந்த ஒருவரின் பிரஜாவுரிமையை மறுக்கின்றதான மனிதவுரிமை மீறலில் அரசு ஈடுபடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான பிரஜாவுரிமையை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீதான மீறலாகும். இதற்கு எதிரான போராட்டமே தோழர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டமாகும். இது புலம்பெயர்ந்ததனால் இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்படும் அனைவருக்குமான போராட்டமும் கூட. இலங்கை அரசின் தொடர்ச்சியான பல்வேறு மனிதவுரிமை மீறல்களில் இதுவுமொன்று. 1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து, இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு துரத்திய வரலாற்றில் மற்றொரு அத்தியாயம். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்ட போது, பிறந்த மண்ணின் மீதான பிறப்புரிமையை மறுப்பதாக நீடிக்கின்றது. சர்வதேச மனிதவுரிமை கொள்கைகளுக்கும், அதன் பொதுநடைமுறைக்கும் விரோதமானதே இலங்கையின் பிரஜாவுரிமைச் சட்டம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மறக்கப்பட்டுக் கவனிக்கப்படாமலும், கண்டு கொள்ளப்படாமலும், அனாதரவாக சிறையில் வாடி வதங்கிய இளைஞர்களின் "சாகும் வரையிலான உண்ணாவிரதம்" இலங்கையின் அரசியல் களத்தில் பலவிதமான நாடகங்களையும் - உணர்ச்சி வசப்படும் வசனங்களையும் - வாக்குறுதிகளையும், வீரப்பிரதாபப் பிரகடனங்களையும் எம் முன்னே தாராளமாக வழங்கி விட்டுச் சென்றுள்ளது. எனினும் அரசியல் கைதிகளின் ஒரேயொரு கோரிக்கையான பூரண விடுதலை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றிய போது சர்வாதிகாரத்திற்கு எதிரான பொது வேட்பாளராக நிற்பதற்குத் தானாகவே முன்வந்தவர் அண்மையில் மறைந்த வணக்கத்ததுக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் ஆகும். "சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் அவர். "ஆறு மாதங்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது" என்பது அவரது முதலாவது வாக்குறுதியாக இருந்தது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு என்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமானதாக அமைந்திருந்தது. ஊழல்கள்-மோசடிகள் களையப்படல் வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாகவே இருந்தார்.

டேய் தம்பி நீ எங்கேடா போனாய்

ராத்திரியல்லோ வாறனெண்டனி அட

ராத்திரியல்லோ வாறனெண்டனி...

 

மீனில் ஓரு குழம்பும் இறாலில் ஒரு சொதியும்

ஆக்கி வைச்சுக் காத்திருந்தேன்... உனக்காக

இரவு காத்திருந்து விழித்திருந்தேன்

இரவு பகலாக....

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி புகையிரதத்தில் தன் இன்னுயிரை இழந்திருக்கிறான் செந்தூரன். தன் சக மனிதர்கள் கொடுஞ்சிறையில் வாடுவது பொறுக்க முடியாமல் அவனது இளைய மனது, இளகிய மனது இந்த துயர முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அவனது மரணம் அவனது அன்புப் பெற்றோருக்கும், ஆசைச் சகோதரங்களிற்கும் ஆறிட முடியா துயரினைக் கொடுத்ததே தவிர கடும் இருள் சூழ்ந்த கொடுஞ்சிறைகளில் வாடும் கதியற்றவர்களின் விடுதலைக்கு எந்த விதத்தில் உதவுகிறது என்பது கேள்விக்குறியாக எழுகிறது. தானும், தன் குடும்பமும் என்று அற்பவாழ்வு வாழும் மனிதர்களிடையே தன் சக மனிதர்களிற்காக தன் உயிர் துறந்தவன் வாழ்ந்து போராடி இருப்பானே என்றால் அது எவ்வளவு மாற்றங்களை தந்திருக்கும் என்பது ஏக்கமாக எழுகிறது.

இலங்கை கொடுஞ்சிறைகளில் பல வருடக்கணக்காக எந்த நீதி விசாரணைகளுமற்று சர்வதேச மனித உரிமைகளிற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கைதிகளையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நோர்வேயில் இடம்பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட கண்டன போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் நோர்வே கிளை ஒழுங்கு செய்திருக்கின்றது.

காணாமல் போனவர்களின்  தகவல்களை  உடன்  வெளியிடுமாறு கோரி சம உரிமை  இயக்கத்தின்  ஏற்பாட்டில் இன்று  யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில்   காலை 9.30 மணியளவில்   கொட்டும்  மழைக்கும் மத்தியில்  ஆர்ப்பாட்ட போராட்டம் ஆரம்பமானது.

கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு  அரசாங்கத்திடம் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்திம் அவர்கள் இலங்கையில் சட்டத்திற்கு முரணாக நீண்ட காலம் தங்கி இருந்தமை காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 4ம் திகதி  நோயுற்றிருந்த தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வீடு வந்திருந்த வேளையில் கேகாலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றில் குடிவரவு விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 18ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்தார். 18ம் திகதி குடிவரவு திணைக்களத்தில் இருந்து எவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்து  இருக்கவில்லை என்பதால் விளக்கமறியல் இன்றைய தினமான 27ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இன்று மேலும் இடுத்த மாதம் மார்கழி 11ம் திகதி வரை மேலும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைகளுக்கு எதிராக, சட்டம் பற்றி சிங்கள-தமிழ் இனவாத ஆட்சியாளர்களும், எதிர்கட்சித் தலைவர்களும் பேசுவதன் மூலம், தொடர்ந்து மக்களை ஒடுக்குவது நடந்தேறுகின்றது.

இதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அரசும், அரசியல்வாதிகளும் முன்னெடுப்பதான பிரமையை ஊட்டி; மக்களுக்கு எதிரான ஆட்சியையே "நல்லாட்சி" என்கின்றனர். அண்மையில் மக்கள் சார்ந்த இரண்டு விடையங்கள் மீது, சட்டத்தையும் பேசும் பொருளாக்கி இருக்கின்றனர்.

போராட்டம் என்பது அப்பாவி மக்களின் மேலான சகல ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுவது. அரசு தனதும், தன் சார்ந்த அரசியல்வாதிகள், பெருமுதலாளிகளின் நன்மை கருதியே மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளையும், அழுத்தத்தையும் பிரயோகித்து வருகின்றது. ஒரு தனிமனிதனுடைய இழப்பையோ, துன்பத்தையோ, சாவையோ பற்றி எந்த அதிகாரவர்க்கமோ, அரசியல்வாதிகளோ அக்கறை கொள்ளப் போவதில்லை. ஆனால் அக்கறை கொள்வது போல், கண்ணீர் விடுவது போல் நடிப்பார்கள். ஊடகங்களிலே அனுதாப செய்திகளையும், கண்டனங்களையும் வெளியிட்டு அனுதாபப்படுவது போல் நடிப்பார்கள். அடுத்த தேர்தலுக்கு அரசியல்வாதிகளுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பே இப்படிப்பட்ட நிகழ்வுகள். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது தனிபட்ட முறையில் எமது குடும்பமும், பிள்ளைகளும், பெற்றோரும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE