Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கடந்த 7ம் - 8ம் திகதிகளில் தலைநகர் கொழும்பில் உள்ள சினமன் கிரான்ட் விடுதியில் “இலங்கை பொருளாதார மன்றம் 2016” என்னும் தலைப்பில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. உள்நாட்டு ஊடகங்கள் இதற்கு பெரிய முக்கியத்துவம் அளித்திருக்கவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் இந்நிகழ்விற்கு அதிமுக்கித்துவம் அளித்திருந்தன. இந்நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பன்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்கள், 600 வரையான உள்நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சர்வதேச முதலீட்டாளர், திறந்த சமுதாயம் அமைப்பின் தலைவர் ஜார்ஜ் சோரஸ், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டீகிளிட்ஸ் மற்றும் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரும் பிரித்தானிய அரசியல்வாதியுமான நிர்ஜ் தேவா போன்றவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வினை வழிநடத்திய முக்கிமானவர்கள் ஆவார்.

கடந்த 30 வருடங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டு யுத்தத்தில் சந்தேகத்தின் பேரிலும், குற்றச்சாட்டுக்களின் பேரிலும் கைது செய்யப்பட்டு 10 வருடங்களிற்கு மேலாக விசாரணைகள் இன்றியும், குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைகள் நீண்ட காலத்திற்கு தள்ளிப் போடப்பட்டும் ஏறத்தாள 300 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் பகுதிகளில் மைத்திரி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தருவதாகவும் மேலும் பல வாக்குறுதிகளையும் கூறி மைத்திரி தரப்பினர் வாக்கு கேட்டனர். அதில் ஒன்று தான் அரசியல் கைதிகள் விடுதலை. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றி அக்கறையற்ற நிலையே நீடித்தது.

ஊரிலே வசைச்சொற்களை பேசுகிறவர்களை செந்தமிழில் பேசுகிறான் என்பார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள் தான் சுயநினைவு இல்லாமல் வசைச் சொற்களைப் பேசுவார்கள். குடித்திருப்பவன் மப்பிலே அப்படித் தான் பேசுவான் என்று ஊர்ச்சனமும் அதைப் பெரிதாக எடுக்காது. ஆனால் இன்றைக்கு அண்ணன் சீமான் தொடக்கம் முகப்புத்தக மத வெறியர்கள், சாதிவெறி பிடித்த மண்டை கழண்ட மடையர்கள், ஆணாதிக்கப் பன்றிகள் வரை சர்வ சாதாரணமாக பாலியல் வசைச்சொற்களை பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலும் பெண்கள் ஒரு கருத்து சொன்னால் இந்த மறவர்களிற்கு வீரம் பொங்கி வழிந்து தூசணத்தில் மறுமொழி சொல்கிறார்கள்.

இன்று கோகாலை நீதிமன்றில்; குடியியல் சட்டத்தினை மீறியதான, குமாரின் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச தரப்பு சட்டத்தரணி சமூகமளித்திருக்காததன் காரணத்தால் வழக்கினை விசாரணைக்கு உட்படுத்த முடியாததன் காரணமாக வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். குமாரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜனவரி 21ம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்படுள்ளது.

குமார் குணரத்தினத்தின் குடியியல் உரிமைகளுக்கான போராட்டம் இன்று பல இடங்களில் இடம்பெற்றது. கண்டி, அநுராதபுர, பாணந்துர, காலி மற்றும் பல நகரங்களில் சத்தியாகக்கிரகம் மற்றும் துண்டுப்பிரசுர விநியோகம், வீதிமுனை கூட்டங்கள் என பல நிகழ்ந்தன. நாளை கோகாலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள தினத்தில் மேலும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதற்க்கான ஒழுங்குகள் மேற்கொள்ளபட்டுள்ளன.

ஜனாதிபதி அவர்கள் அரசியல் கைதிகள் என எவரும் சிறைச்சாலைகளில் இல்லை, அங்கு உள்ள 215 கைதிகளும் தண்டனைக்குள்ளானவர்களே. எனவே அரசியல் கைதிகள் விடுதலை பற்றி எவரும் கதைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனும் தொனிப்பட் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் சிறைச்சாலை பதிவுகளின் படி இந்த கைதிகள் சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்கு காரணமான யுத்தத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதே உண்மை.

முன்னைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மஹிந்தாநந்த அளுத்கமகே, 2011ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதியன்று காணாமல் போன இந்த இருவரும் கொலை செய்யப்பட்டதாக கடந்த 2ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்டசியில் நடைபெற்ற சடன விவாத நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்த விவாத நிகழ்வில்  முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலளர் புபுது ஜெயக்கொட அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வார விடுமுறை நாள் நல்ல வெயிலாய் இருந்ததால், எங்கேயாவது வெளியில் போவோமா என்று யோசிச்ச போது பஜார் நினைவு தான் முதலில் வந்தது. மனைவியையும் கூட்டிக் கொண்டு பஜாருக்கு வந்து சேர்ந்தேன்.

வெளிநாட்டவர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்,  வெளிநாட்டவர்களால் நடக்கிற குற்றச்செயல்களை ஒரளவு குறைக்கலாம் என்ற நம்பிக்கையிலும் உருவாக்கப்பட்டது தான் இந்த பஜார். அரபு, ஆபிரிக்கா, ஆசிய எனப் பல நாட்டவர்களின் ஊரிப்பட்ட கடைகள். இறைச்சி முதல்  மரக்கறி மளிகைச் சாமனகள் என வீட்டுக்குத் தேவையான தடி தண்டு தளபாடங்களிலிருந்து சகலதும் வாங்கலாம்.

காரை விட்டு இறங்கி நடந்தோம். வழமையாக பக்கத்திலே சேர்ந்து வராத  மனைவி, வேகமாக நடந்து வந்து ஒட்டிக் கொண்டாள். திருப்பி என்ன என்று ஒருமாதிரிப் பார்க்க, "என்னப்பா இஞ்சை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய்.... பார் இவங்களை..... பார்க்கவே... பயமாயிருக்கு. அவங்கடை தொப்பியும்  தாடியும்....  வாப்பா வேறு எங்காவது போவோம்" என்றாள்.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் கைது செய்யப்பட்டு கடந்த 5ம் திகதியுடன் இரு மாதங்கள் நிறைவடைந்து விட்டன. மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் குமாரின் குடியியல் உரிமை குறித்தான தனது நிலைப்பாட்டினை அறிவிக்காது தொடர்ந்து மௌனம் காக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி புலம்பெயர்ந்தவர்களை திரும்ப வருமாறு மைத்திரி – ரணில் கூட்டு பகிரங்க அழைப்பினை விடுத்ததன் பேரிலேயே குமார் குணரத்தினம் அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாடு திரும்பி இருந்தார்.

ஜனநாயகம் சம்பந்தமாக ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. முந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களால் துன்பப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுத் தருவதாக இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் மேடைகள் தோறும் வாக்குறுதியளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இன்று மீறப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்ப்புகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் சிறைக்கைதிகள், காணாமல்போனவர்கள், அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளானவர்கள், அடக்குமுறைக்கு ஆளானவர்கள் போன்ற யாருக்குமே நீதி கிடைக்கவில்லை. தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சம்பந்தமாக விசாரணை கேட்டு ரத்துபஸ்வல மக்கள் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். பிரகீத் எக்னலிகொட, லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை சம்பந்தமாகவும் இந்த அரசாங்கம் ஊமையாகவே உள்ளது. லலித் மற்றும் குகன் காணாமல்போனது குறித்து எவ்வித விசாரணையுமில்லை. அதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்படாமல் தவிர்க்கப்படுகின்றார்கள். இதற்கிடையில் தற்போதைய அரசாங்கம் தமது படுமோசமான கொள்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு என அனைவருக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றது. தம்புள்ளயில், கொடகத்தனயில், யாழ்ப்பாணத்தில் மற்றும் பந்தகிரியாவிலும் சமீபத்தில் கொலன்னாவையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டேவிற் ஐயாவை கொல்வதற்காக 1986 ஆம் ஆண்டு புளட் இயக்கம் கடத்திச் சென்றது. அன்று டேவிற் ஐயா தப்பியோடாது மரணித்து இருந்தால், அவர் குறித்த மதிப்பீடுகள் அன்றும் - இன்றும், என்னவாக இருந்து இருக்கும்.

1986 இல் டேவிற் ஐயாவை கொல்ல முனைந்தவர்கள், அதற்கு துணை நின்றவர்கள், அதற்கு எதிராகப் போராடாதவர்கள், இன்று அதை மூடிமறைத்து செய்யும் அஞ்சலிகள் குறித்து எமது மதிப்பீடுகள் என்ன?

1983 இல் வெலிக்கடை படுகொலையில் இருந்து தப்பித்த டேவிற் ஐயா, 1986 இல் புளட்டின் படுகொலையில் இருந்து தப்பி தலைமறைவாகினார். 1986 இல் அவர் கொல்லப்பட்டு இருந்தால், இன்று அஞ்சலி செலுத்துகின்ற எந்தனை பேர், அன்று தங்கள் அஞ்சலியை செலுத்தி இருப்பார்கள்?

மக்களை நேசிப்பது குற்றம் - கொள்ளை அடிப்பது ஜனநாயகம். இலங்கை ஜனநாயகத்தின் வெட்டுமுகம் இதுதான்.

தனது பிறப்புரிமையான பிரஜாவுரிமையைக் கோரிய குமாரை சிறையில் அடைத்து வைத்து இருக்கின்றது நல்லாட்சி அரசு. முகமாற்ற ஆட்சி குமாரை கைது செய்து இன்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. நாட்டின் கேகாலை மற்றும் பல நகரங்களில் தெடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் என்பன முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பு நகரத்தில் கோட்டை மத்திய புகையிரத நிலையத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இப் போராட்டங்கள் 50 நாட்களை தாண்டியும் அரசு ஒவ்வொரு தடவையும் விளக்கமறியல் என்று திகதியை தள்ளிப்போட்டு சிறையிலடைக்கின்றது. எந்த விசாரணையையோ குற்றச்சாட்டினையோ நீதி விசாரணைக்கு எடுக்க முடியாமல் வெறுமனே நாட்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கின்றது. இது எதனைக் காட்டுகின்றது எனில் இந்தச் சிறைத் தண்டனைக்கு அவர்களிடம் எந்த சட்ட நியாய விளக்கமும் இல்லை என்பது தான். இந்தச் சிறையடைப்புக்கு காரணம் குமார் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சி முன்னெடுக்கும் அரசியலே ஒழிய வேறு எதுவுமல்ல.

அண்ணன் சீமானிடம் பேசுபவர்கள் அருகே குழந்தைகள், பெண்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்தி விட்டு பேசவும். பலவீனமான இதயம் உள்ளவர்கள் அவரது படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பது போல அவரிடம் கேள்வி கேட்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவர் அரசியலில் இருக்கிறார். தமிழ்நாட்டின் எல்லாச் சினிமாக்காரர்களின் இலட்சியமான தமிழ் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகும் தணியாத தாகம் அவருக்குள்ளும் இருக்கிறது. கருணாநிதி, வாத்தியார், ஜானகி, ஜெயலலிதா வரிசையில் அவரும் முதலைமைச்சர் ஆகும் அபாயம் தமிழ்மக்களின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம், அவர் முதலமைச்சராக வந்த பின் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளிற்கு அவர் ...த்தா என்று பொங்கியெழுவதை நினைத்துப் பார்க்கவே கதிகலங்குகிறது.

இந்தியாவில் பீப்பாடல் மூலம் பெண்களை பாலியல் பண்டமாக்கி குதறுவது ஏகாதிபத்திய நுகர்வு பண்பாடாகவும், இலங்கையில் கலாச்சாரக் கண்ணாடி மூலம் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நுகர்வது நிலப்பிரபுத்துவ பண்பாடாகவும் வெளிப்பட்டது. இவ்விரண்டும் பெண்ணை மனிதனாக அங்கீகரிக்காத, பெண்ணை நுகர்வுக்குரிய பாலியல் பொருளாக அணுகுகின்ற இரு வேறு உதாரணங்களாகும். இரண்டுக்கும் ஆணாதிக்க நுகர்வே அச்சாணியாக இருக்கின்றது.

வடகிழக்கில் கடத்தப்பட்டவருக்காக போராடிக் காணமல் போன லலித் குமார் வீரராஜ்யின் பாட்டியின் (தாயாக இருந்தவர் பாட்டி - தாய் சிறுவயதிலேயே இறந்து விட்டார்) மரணச் செய்தி - பெண்ணியத்தின் வரலாறாகும்.

2009 பின் காணமல் போனவர்களுக்காக - காணமல் போனவர்கள் குடும்பங்களை அணிதிரட்டி போராடிய லலித், குகன், - இதனால் அவர்கள் காணமல் போன வரலாறும் - அவர்களுக்காக சேர்த்து போராடுவதுமே இன்றைய வரலாறாகி இருக்கின்றது.

இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நாற்பத்தி ஆறாவது நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சத்தியாக்கிரக போராட்டத்தில் இத்தாலி தோழர்கள் பங்கு கொண்டு அரசியல் கைதிகள் மற்றும் குமாரின் விடுதலைக்காக ஒரு நாள் அடையாள உண்ணா விரதத்தை மேற்கொண்டனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE