Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பிரித்தானிய காலனித்துவம் 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி தனது நம்பிக்கைக்குரிய உள்நாட்டு ஆளும் வர்க்கம் மற்றும் தமது விசுவாசிகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு,  இலங்கை மக்களிற்கு சுதந்திரம் வழங்கி விட்டதாக அறிவித்தது. அன்று தொடக்கம் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் இன - மத ரீதியாக மக்களை பிரித்து மோத விட்டு - இரத்த ஆற்றை ஓட விட்டவாறு, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தப் போவதாக மக்களை ஏமாற்றி மாறி மாறி ஆட்சிக்கு வருவதும், நாட்டை கொள்ளை அடித்து தாம் செல்வத்தில் திளைப்பதுமாக கதை தொடர்கின்றது.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தினராகிய சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனத்தினரான தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சனை என்று கூறிக் கொண்டு இலங்கையின் அரசியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சித் தலைமைகளும் அவர்களது பின்னணி சக்திகளும் தங்களின் ஒரே நோக்கமான பொருளாதாரச் சுரண்டல்களை (பணம் குவிப்பதை) ஒழுங்காக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் அதனைத் தொடர்வதற்கான பாதையில்தான் இன்று நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் காணப்படுகின்றன.

இந்த உண்மைகளைச் சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டு இலங்கையில் ஒரு நீதி நியாயமுள்ள - சகலருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கும் ஒரு சமூக - அரசியல் ஒழுங்குக்கான போராட்ட நடவடிக்கைகளில் நாளும் பொழுதும் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டங்களை இன-மத-பால்-பிராந்திய பாகுபாடுகளைக் கடந்து "எல்லோரும் இந்நாட்டு மக்களே" என்ற உணர்வுடனும் - உறுதிப்பாடுடனும் - நம்பிக்கையுடனும் நாடு பூராவும் முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து பாசிச மகிந்த ஆட்சியினை மக்களின் பெரும் ஆதரவுடன் வீழ்த்தி மைத்திரி - ரணில் கூட்டு ஆட்சியை அமைத்தது. தற்போது இவர்களது ஆட்சி ஒரு வருடம் நிறைவுற்றும் விட்டது. இவர்கள் தருவதாக கூறிய ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் லட்சணத்தை நாம் ஏற்கனவே பல சந்தர்பங்களில் இனங்கண்டு விட்டோம். மக்கள் தமது ஜனநாயகத்திற்க்காக போராடிய வேளையில், அரச படைகளை அவர்கள் மீது ஏவி விட்டதனை கொட்டகேனா, மீதோட்டமுல்ல, பாண்டகிரிய, தம்புள்ள, யாழ்ப்பாணத்தில் அனுபவித்து விட்டோம்.

தவப்புதல்வன் கொடுஞ்சிறை போகிறான். தந்தையவன் கண்ணீர் சிந்துகிறான்.

"இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருப்ப, நாய் நரிகள் பேய் கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தான்"

என்று பட்டினத்தார் பாடியது போல வாழும் ஒரு தந்தை அழுதால் நாமும் சேர்ந்து அழுவோம். இங்கு அழுபவன் ஒரு தந்தை அல்ல, அவன் ஒரு மனிதனே அல்ல. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்படுகொலையாளி. பச்சைக் குழந்தைகள் மேல் எரிநெருப்புக் குண்டுகள் வீசிக் கொன்றவன். சுற்றிக் கொலைகாரர்கள் சூழ்ந்து நின்ற போதும் நடக்கப் போவது என்ன என்று தெரியாமல் கையில் இருந்த பிஸ்கட்டை கடித்து தின்ற குழந்தை பாலச்சந்திரனை கொல்லச் சொன்ன கொலைகாரன்.

நாட்டின் "இருண்ட காலம்" குறித்த புதிய விளக்கத்தை 2016 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைத்திருக்கின்றது. முன்பு இருண்டகாலமாக, மகிந்த அரசின் ஜனநாயக விரோத ஆட்சிக்காலத்தையும், அதன் ஊழல்களையும் காட்டியே முகமாற்ற ஆட்சியைக் கோரியது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு இருண்டகாலம் பற்றி காட்டியதற்கு முரணாக, நாட்டின் கடந்தகால பொருளாதாரக் கொள்கையை இருண்டகாலமாக இன்று அறிவித்திருக்கின்றது. அதே நாட்டின் பொருளாதாரத்தை தீவிரமான தூய தனியார்மயமாக்கல் மூலம் ஒளியேற்றப் போவதாக அறிவித்திருக்கின்றது.

தேர்தலை நடத்துவதும், வாக்குப்போட வைப்பதுவும், அமைதியான ஆட்சிமாற்றத்தை நடத்துவதும், சட்டத்தின் ஆட்சியை நடத்துவதும் இதைத்தான் "ஜனநாயகம்" என்கின்றனர். இதற்கு அமைவான முகமாற்றத்தையே நாட்டின் "நல்லாட்சி" என்று கூறியவர்கள் தொடங்கி முகமாற்றம் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தரும் என்று நம்பி வாக்களித்தவர்கள் வரை, காலாகாலமாக ஏமாற்றப்படுவதும் இறுதியில் மக்கள் தங்கள் உரிமைகளை இழப்பதும் தொடருகின்றது.

அரசு "நல்லாட்சி" என்று கருதுவது, தனியார் பொருளாதாரக் கொள்கையைத்தான். அதாவது சமூகம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையல்ல, மாறாக தனியார் பொருளாதாரக் கொள்கையை அரசு முன்வைக்கின்றது. செல்வத்தை குவித்து வைத்துள்ளவர்கள் தங்கள் செல்வத்தை பெருக்கும் வண்ணம், நாட்டின் சமூகப் பொருளாதாரத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும், அதைச் சட்டரீதியானதாக சட்டத்தின் ஆட்சியாக மாற்றுவதே, அரசின் கொள்கை மட்டுமல்ல நடைமுறையாகவும் இருக்கின்றது.

பட்டதாரிகளின் வேலை வாய்ப்பினை அரசிடம் கோரி நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அடையாள கவனயீர்ப்பின் ஓர் அங்கமாக வடக்கு மாகாணத்தில், வருகின்ற 01.02.2016 (திங்கட்கிழமை) அன்று காலை 09.00 மணிக்கு யாழ். மாவட்ட செயலக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைந்த தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க முனசிங்க உட்டபட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வதோடு பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பற்றிய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியும் கலந்துரையாடுவார்.

"பண்ணென்பார் பாவமென்பார் பண்பு மரபென்றிடுவார்

கண்ணைச் செருகிக் கவியென்பார் - அண்ணாந்து

கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே

முட்டாளே இன்னமுமா பாட்டு"

புதுமைப்பித்தனின் நக்கல் இது. வைரமுத்து அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் தமிழ் சினிமாப் பாட்டாச்சு. தமிழ்ச் சினிமா என்கின்ற மூன்றாந்தர கேலிக்கூத்தும் அதன் பாடல்களும் எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதில் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையின் வடமாகாணசபை வைரமுத்துவை பொங்கல் விழாவிற்கு எதற்காக கூப்பிட வேண்டும்?. வைரமுத்து உணர்ச்சிவசப்பட்டு "நான் ஈழ காவியம் பாடியே தீருவேன்" என்று ஒற்றைக்காலில் நிற்கிறாரே; இலங்கைத்தமிழர்கள் பட்ட கஸ்டம் எல்லாம் போதாதா? இவரின் காவியத்தையும் காது கிழியக் கேட்க வேண்டுமா? அவர் ஜிப்பாவில் கையைச் சொருகிக் கொண்டு, கண்ணைச் செருகிக் கொண்டு சொல்வதையெல்லாம் கவிதை என்று கேட்க வேண்டுமா?

"மனித குலத்தின் வரலாறு முழுவதுமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறே" என்றார் கார்ல்மார்க்ஸ். இதற்கு முரணாகவே சேனனின் "லண்டன்காரர்" நாவல், லண்டன் கலவரத்தை வர்க்கம் கடந்த கலகமாகக் காட்ட முற்படுகின்றது. "விளிம்புகளின்" கலகமாம்! இந்த நாவல் கலவரத்துக்கு காரணமான வர்க்க உறவுகளை காண மறுப்பதில் இருந்து பாத்திரங்களை இயங்கியலற்ற தனிமனித இயந்திரமாக காட்டுகின்றது. அதாவது கதையில் வரும் மனிதர்களை வர்க்கமற்றவராகவும், நிகழ்வுகளை வர்க்க அமைப்பிற்கு சம்மந்தமில்லாத மனித ("விளிம்புகளின்") நடத்தையாகவும் காட்டுகின்றதும், அதனையே லண்டன் கலவரமாக காட்டுகின்ற அரசியல் பின்னால் இருப்பது யாழ் மேலாதிக்க சிந்தனை முறைதான். யாழ் மேலாதிக்க சமூகம் எப்படி லண்டன் கலவரத்தை பார்க்கின்றதோ, அதை அப்படியே "லண்டன்காரன்" நாவல் மூலம் தரிசிக்க முடியும். கட்சியில் சேர்ந்தால் சரி என்று கருதும், யாழ் மேலாதிக்க வெள்ளாளத்தன "மார்க்சியம்", இப்படித்தான் சமூகத்தை பார்ப்பதுடன் காட்டவும் செய்கின்றதுக்கு "லண்டன்காரர்" நாவல் உதாரணமாக இருக்கின்றது.

இலங்கை ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் இருந்தபோது தமிழர்களாகிய நாம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டோம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் "சமஷ்டி" கேட்டோம். மாவட்ட சபையை வென்றெடுத்தோம். "தமிழீழம்" வேண்டி ஆயுதப் போராட்டம் நடாத்தினோம். மாகாண சபையை வென்றெடுத்தோம். இன்று இலங்கையில் ஒரு புதிய அரசியல் நிர்ணயச் சட்டம் வரைவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியதனைத் தொடர்ந்து "பழையபடி வேதாளம் முருங்க மரம்" ஏறின கதையாக "சமஷ்டி" சந்தைக்கு வந்துள்ளது.

இன்றைய இந்த நிலைமை, கடந்த 68 வருட தமிழ் அரசியலில் அணுவளவேனும் மாற்றம் ஏற்படவில்லை என்பதனையும் - பாமர பாட்டாளித் தமிழ்ப் பேசும் மக்களின் அபிலாசைகளை தமிழ் அரசியல் அணிகள் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை என்பதனையும் வெகு துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கிறது.

இது வெறும் கதையல்ல. என் வாழ்வின் நடந்த உண்மைச் சம்பவம்.

அந்த நாளை இப்ப நினைத்தாலும் என் இதயம் இப்போதும் இரத்தம் சொட்டுகிறது. வாழ்க்கையிலே மறக்க முடியாத ஒரு வரலாற்றுத் துரோகம் செய்து விட்டேன் என்ற குற்றவுணர்வு என்னை நெடுகலும் வாட்டி வதைக்கின்றது. மறக்க வேண்டும் மறக்க வேண்டும் என்ற போதெல்லாம் இந்த நினைவு ஏதோ ஒரு வடிவில் வந்து என்னைக் கட்டிப் போட்டுவிடுகின்றது.

குழந்தைத்தனமாகவும் ஒரு விளையாட்டுப் பிள்ளை போலும் இருந்து விட்டேனே என்றெண்ணி என்னை நானே நொந்து எனக்குள்ளே கூனிக்குறுகிப் போகிறேன்.

அன்று நட்சத்திரங்களும் கூட வேறு மாதிரியே இருந்தன என்று மறைந்த பாடகன் டேவிட் போவி பாடினான். எம் தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஒரு நாள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளுமே வேதனை தருவதாக, காணாமல் போன தம் உயிரின் உயிர்களை நினைத்து உள்ளம் சிதைய உருகும் நாட்களாகவே இருக்கின்றன. இரவுகளில் கேட்கும் சிறு சத்தங்கள் தம் மக்களின் காலடிச் சுவடுகளோ என்னும் நினைப்பில் அழுத களைத்த விழிகள் மூடினாலும் மனதுகள் விழித்திருக்க நித்திரையின்றி கழிகின்றன இராத்திரிகள்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்

என்று தன்னை சிறகிலிட்டு காப்பாற்றிய தாயை நினைத்து கண்ணீர் சிந்தி தீ இட்டான் பட்டினத்தான். ஆனால் நமது தாய்மார்கள் முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து பெற்ற குழந்தைகளை கடத்தி காணாமல் போகச் செய்து அவர்களின் தாய்மாரை உயிருடன் தீ மூட்டுகிறது இலங்கை அரசு.

இன்று காலை 10 மணிக்கு யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அரசியல் கைதிகளின் உறவினர்களும் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளிற்காக போராடுபவர்களும் சமவுரிமை இயக்கத்துடன் இணைந்து அரசிற்கு எதிரான தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொணடனர்.

பிராமண குலக்கொழுந்துகள் தவிர்ந்த மற்ற மனிதர்கள் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று மனு என்ற இந்துமதப் பயங்கரவாதி அந்த நாளில் மனுதர்ம சாஸ்திரம் என்னும் பயங்கரவாத அறிக்கையில் எழுதினான். இந்த பார்ப்பனப் பயங்கரவாதம் தான் இன்று வரையும் இந்தியாவின் கொள்கையாக இருக்கிறது. அதனால் தான் இன்றைய பார்ப்பன பண்டார பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த ஏழை மாணவர்களை பலி கொடுக்கிறார்கள். ரோகித் வெமுலாவை பலி எடுத்து விட்ட பிறகும் கூட எந்தவிதமான கூச்சமும் இன்றி அவனை தேசத்துரோகி, தீவிரவாதி என்று இந்த பார்ப்பன நாய்கள் இடும் ஊளைகள் மனித குலத்தையே வெட்கி தலை குனிய வைக்கிறது.

திங்கள் 25ம் திகதி காலை 10 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது. சமவுரிமை இயக்கம் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. இப்போராட்டமானது சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சகல காணாமல்லாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE