Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

"எந்த வகை ரத்தமானாலும், மிதிபடுவது சேர்ந்தே நித்தம்" என்ற  இனவாதத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம் இன்று கொழும்பு நகரில் விநியோகிக்கப்பட்டது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே அவர்கள் தலைமையில் துண்டுப்பிரசுர விநியோகம் நிகழ்ந்ததுடன் மக்களுடனான இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடலும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.

இன்று கொழும்பில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் வேலை வழங்கும் தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கு மாறும், அனைத்து பட்டதாரிகளுக்கும் முறையாக வேலை வழங்குமாறும், ஓய்வூதிய பங்களிப்பை ஏமாற்ற வேண்டாம் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து வருகை தந்த வேலையற்ற பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐந்து நிமிடங்களை ஒதுக்கி இதனை முழுவதுமாக வாசியுங்கள்.

சமீபத்தில் அந்த இரத்தம், இந்த இரத்தம் என்று சொல்லி லேபல் ஒட்டிக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கையில் பல்வேறு இன மக்கள் இருப்பதை நாம் அறிவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே ஆகிய அனைவரும் இலங்கைக் குடிமக்கள். நாங்கள் அனைவரும் ஒரே கடைக்குத்தான் செல்கின்றோம். ஒரே ஆஸ்பத்திரிக்குத்தான் செல்கின்றோம். ஒரே பஸ்ஸில், ஒரே இரயிலில் செல்கின்றோம். எமது பிள்ளைகள் ஒரே பாடசாலையிலேயே கற்கின்றனர். ஒரே பாடநெறியையே படிக்கின்றாரகள். அரிசி, மா, சீனி, பால்மா போன்றவற்றின் விலைகள் உயரும்போது சிங்களவருக்கு ஒரு விலையிலும், தமிழருக்கு ஒரு விலையிலும், முஸ்லிம்களுக்கு ஒரு விலையிலும், பறங்கியருக்கு ஒரு விலையிலும் மலே இனத்தவருக்கு இன்னொரு விலையிலும் விற்கப்படுவதில்லை. ஆஸ்பத்திரி ஓ.பி.டீ.யில் அலையும்போதும், பாமஸியில் மருந்தை வாங்கும்போதும் அப்படித்தான். பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்தும்போதும், பஸ்ஸில் டிக்கட் வாங்கும்போதும், டிஸ்பென்சரியில் ஊசி போடும்போதும் - இந்த எல்லா இடங்களிலும் நாம் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும் கேட்பதில்லை. சற்று சிந்தியுங்கள்.

நாளை (16/02/2016) கொழும்பில், ஒன்றிணைந்த அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டன பேரணி இடம்பெறவிருக்கின்றது. இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வேலையற்ற பட்டதாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து, அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்ட இன-மத வேறுபாடுகளை கடந்து ஒன்றினைந்து கலந்து கொள்கின்றார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சியிலும் சரி பின்னர் வந்த சுதந்திர ஆட்சியிலும் சரி இலங்கை அரசியல் என்பது பணம்-பலம்-பொருள் கொண்ட மேற்தட்டு வர்க்க மேலாதிக்கவாத மேட்டுக்குடிகளின் போட்டியும் பங்குச் சண்டையுமாகும். அதன் ஆரம்பம் 1915ல் சிங்கள-முஸ்லீம் கலவரமாகத் தொடங்கி பின்னர் 1949ல் மலையத் தமிழர்களை கொத்தடிமைகளாக்கித் தொடர்ந்து 1956லிருந்து சிங்கள-தமிழ் இனக் கலவரமாக வளர்ச்சி பெற்று இறுதியில் 2009ல் ஒரு பேரழிவை நடாத்தி முடித்து விட்டு மறுபடி ஆரம்பத்திலிருந்து பழைய பாணியில் நடைபோடத் தொடங்கியுள்ளது.

முதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த நாளைய பெருந்தலைகளான பிரித்தானியாவும், பிரான்சும் முன்னுக்கு நின்று 10.01.1920 அன்று தொடங்கினார்கள். (League of Nations, Wikipedia). "ரம்பையின் காதல்" படத்தில் "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் சுடுகாட்டில் ஒலிப்பது போல தங்களால் கொல்லப்பட்டவர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு இந்த கொலனித்துவ கொலைகாரர்கள் "சமாதானம் உலவும் இடமே" என்று உலக நாடுகள் சங்கத்தில் நின்று பாடினார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு பெண்கள் போகக் கூடாது என்று பாரம்பரியம் இருக்கிறதாம். ஏனென்றால் ஐயப்பன் பிரமச்சாரியாம். அதனாலே அவனிற்கு பக்கத்திலே பெண்கள் போகக் கூடாதாம். இந்திய உச்சமன்றம் வரைக்கும் வழக்குப் போய் பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களும் போகலாம் என்று வழக்கம் போல் பெண்ணடிமைத்தனத்துடன் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மேன்மை தங்கிய நீதிபதிகள். ஏண்டா, ஐயப்பன் என்ன பெண்களிற்கு ஆரம்ப பாடசாலையும், முதியோர் பாடசாலையுமா நடத்துகிறார்?.

இன்று 07-02-2016 வடக்கிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் குசைய்ன்; “அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தவறு. அவர்களை வழக்கு விசாரணையின் பின்பே விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்க்காக மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாக "சர்வதேச சமுகம் இதனை ஏற்றுக்கொள்வதில்லை" என நியாயம் வேறு கூறிச் சென்றுள்ளார். அதனை ஆமோதித்து வடக்கு முதல்வர் துரிதமாக வழக்குகளை விசாரிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேசத்திற்கு தலையாட்டி சேவகம் செய்வதற்காக தான் முட்டாள் மக்கள், இவர்களை தங்கள் பிரதிநிதிகளாக தெரிந்துள்ளனர் என்பது சம்பந்தன் முதல் விக்கினேஸ்வரன் வரையான நினைப்பு.

இலங்கைத் தமிழ்மக்களின் மீதான இன ஒடுக்குமுறையை, தமிழ்மக்களை அழுத்துகின்ற பிரச்சனைகளை இன்று வரை தமிழ்மக்களை ஒடுக்கி வரும் இலங்கையின் இனவெறி அரசுகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று தமிழரின் தலைமைகள் என்று சொல்லிக் கொள்ளும் வலதுசாரி தமிழ்க் கட்சிகள் இன்னமும் இரத்தம் உறையாத ஈர மண்ணில் நின்று கொண்டு நமக்கு சொல்கிறார்கள். இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சிக்கு வருவதற்காக உண்மையான பிரச்சனையான வறுமையை மறைத்து தமிழ்மக்களிற்கு எதிராக இனவாதம் பேசி சிங்களமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகள் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமருவார்கள்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று மண்டையை மாற்றினாலும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கும் கொண்டையை மாற்றாத தமிழ்க் கட்சிகள், இலங்கையின் இந்த இனவாதக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்மக்களிற்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மைத்திரி- ரணில் அரசாங்கம், தாம் கடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் படிப்படியாக கைவிட்டு வருகிறது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகின்றது.

அன்றைய அரசாங்கத்தினால், இலங்கை மக்களுக்கு அப்பட்டமாகவே மறுக்கப்பட்டுவந்த நாட்டின் ஜனநாயகத்தினை மீள நிலைநாட்டுவோம் என்பதே ராஜபக்ச ஆட்சி மீது இவர்கள் முன்வைத்த பிரதான கோசமாகும். ஆனால் அரசியலில் பாதிக்கப்பட்டோருக்கு, காணாமலாக்கப்பட்டோருக்கு, அரசியற்கைதிகளுக்கு இவர்களால் எந்த நீதியும் நியாயமும் இன்றுவரை வழங்கப்படவில்லை.

இன்று 6-2-2016 சனிக்கிழமை லண்டனில் உள்ள மத்திய வெம்பிளி நகர சதுக்கத்தில் குமார் குணரத்தினம் மற்றும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் இடம்பெற்றது. அத்தோடு துண்டுப்பிரசுர விநியோக பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் அந்நகரில் பொருட்களை வாங்க வந்திருந்த அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது. பல வெளிநாட்டவர்கள் இலங்கை இன்றைய நிலவரங்களை கேட்டறிந்ததுடன் பதாகையில் கையெழுத்து இட்டும் சென்றனர்.

இம்முறை நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்களின் சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தினத்தை நினைவு கூறுவது ஒரு புறம் கேலிக்கூத்தாகும். ஆகவே போலி சுதந்திர தினம் தொடர்பில் கடுமையான விமர்சனம் எமக்கு உண்டு. மேலும் தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்திற்கு பின்பு சரிந்திருக்கும் வடக்கு மக்களின் வாழ்க்கையை மீளமைப்பதற்கும், அம்மக்கள் மத்தியில் உருவாகியுள்ள சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை களைவதற்கும் எடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. சகல அரசியல் கைதிகளினதும் விடுதலை, காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடுதல், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைத்தல் ஆகியன முக்கிய விடயங்களாக உள்ளன. என்றாலும் அந்த விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் ஊமையாகவே இருக்கின்றது.

இலங்கை பிரஜாவுரிமையினை மீள கோரியமைக்காக முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனை கண்டித்தும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்யுமாறு கோரியும் நாளை சனி 06-02-2016 லண்டனில் உள்ள வெம்பிளி நகர சதுக்கத்தில் பிற்பகல் 2 மணி முதல் பதாகையில் கையெழுத்துப் போராட்டமும் துண்டுப்பிரசுர பிரச்சாரமும் நடைபெறவுள்ளது.

சுதந்திரம் எங்கே? எனக் கேட்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிச இன்று (4/2/2016) புறக்கோட்டையில் ஒழுங்கு செய்திருந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு போலிச் சுதந்திரத்திற்கு எதிரான கோசங்களை முழங்கினர்.

சமவுரிமை இயக்கம் தனது பிரதான நோக்குகளில் ஒன்றான அனைத்து அரசியற்கைதிகளையும் விடுதலை செய் என்ற கோரிக்கையை முன்வைத்து தனது போராட்ட நடவடிக்கைகளை இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுத்து வருகின்றது. அதன் நீட்சியாய் அனைத்து அரசியற்கைதிகளுக்குமான விடுதலையைக் கோரி கனடிய சமவுரிமை இயக்கம் முன்னெடுக்க இருக்கும் போராட்ட நிகழ்வில் உங்களையும் கலந்து ஆதரவளிக்குமாறு கோருகின்றது.

30 வருடகாலமாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இக் கொடிய அழிவு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னரும் கூட, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற்செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கிய அரசியற்கைதிகள் கொடூரமான அவசரகால தடுப்புச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நீதிவிசாரணையும் இன்றி நீதிக்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களும், முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களுமான லலித் மற்றும் குகன் இருவரும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்குமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றிக்கான ஒழுங்கமைப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், மகிந்த கூலிக் கும்பலால் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இது குறித்த முறைப்பாடு ஒன்றினை யாழ் நீதிமன்றில் லலித் - குகன் குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர். குகனின் குடும்பத்தினரை இனந்தெரியாத நபர்கள் நீதி மன்றத்திற்கு சமூகமளித்தால் குகனின் மகளிற்கு அப்பா மட்டுமல்ல அம்மாவும் காணாமல் போய்விடுவா என மகிந்த ஆட்சியில் மிரட்டி, குகனின் குடும்பத்தினரை நீதி மன்றத்திற்கு போவதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE