Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதோ, எந்த இனத்தவர் என்பதோ, எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதோ, எது பெரும்பான்மை சிறுபான்மை என்பதோ, ஜனநாயகத்தின் அடிப்படை பிரச்சனையல்ல. மாறாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமை என்பது, பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து என்னவிதமான முடிவையும், நடைமுறையையும் கொண்டிருக்கின்றது என்பதே, ஜனநாயகம் குறித்தான அடிப்படைக் கேள்வியாகும். எதிர்க்கட்சி தலைமை என்பது முழு இலங்கை மக்களின் குரலாக இருக்கவேண்டும் என்பது குறித்து, அக்கறைப்பட வேண்டும்.

சமவுரிமை இயக்கம் புரட்டாதி 14 அன்று, அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தையும் - அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்கும் வண்ணம் ஊர்வலத்தையும் கொழும்பில் நடத்தியது. இடதுசாரிக் கட்சிகள் உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும், சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் முதல் கைதிகளின் உறவினர்கள் வரை, பலதரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர்.

அதேநேரம் நாடுதழுவிய அளவில், அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும் - பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், சுவரொட்டிகள் சமவுரிமை இயக்கத்தால் ஒட்டப்பட்டது.
கைதிகளை விடுதலை செய்யக்கோரிய ஆர்ப்பாட்டமானது இவ்வருடத்தில் (2015) இது இரண்டாவது தடவையாகும்.

கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

முகர்ந்து பார்த்தால் அனிச்சம்பூ வாடிவிடும்; முகம் கோணி பார்த்தால் விருந்தினர்கள் வாடிவிடுவார்கள் என்கிறான் அய்யன் வள்ளுவன். பார்வைக் கோணலிற்கே மனிதர்கள் முகம் வாடி விடுவார்கள் என்னும் மரபில் வந்த மனிதர்கள் நாமா என்று வெட்கி தலை குனிய வைக்கிறார்கள் சாதிவெறியர்கள். வள்ளுவன் பறை இசைக்கும் சமுதாயத்தில் பிறந்தவன் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கே வள்ளுவன் பெயரையோ, அவனது குறள்மொழியையோ சொல்லவே பயமாக இருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகக்தில் இந்துத்துவம் ஆட்டம் போடுகின்றது என்று கருத்து ரீதியாக கூறியதை எதிர்த்து, போட்டுத் தள்ளும் புலிகள் பாணியில் இரா.துரைரட்டனம் "பற நாயே" என்று கூறினார். தமிழ் தேசியம், ஊடகவியல் இரு தூண்களில் புளுத்ததால் வாழ்நாள் விருதுக்குரிய மாமனிதனாக காட்சி அளித்தவர். இதனால் அவர் கூறியது சரி, பிழை இரண்டு அணியாக பிரிந்து மோதுகின்றனர். இந்த பின்னணியில் தமிழ்(புலித்) தேசியத்தின் முரண்பட்ட அணிகள் ஒருபுறம் இதற்குள் முட்டி மோதுவதும், மறுபக்கத்தில் போட்டியிடும் ஊடகவியலில் பிரமுகர்களும் தங்கள் இருப்புக்காக முட்டி மோதுவதும் நடக்கின்றது.

தமிழ்ப்பண்பாட்டில் தனித்துவமான ஆராய்ச்சிகள் செய்து வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இனி மேல் பேராசிரியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்று அறிவித்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் தன் தலையாய பணியை கருத்தில் கொண்டு பேராசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான கோவணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் வர வேண்டும் என்றும் வரும் காலங்களில் மற்ற நாட்களிலும் கோவணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு வர திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி போராடி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் போராடி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையே தமது முதற் செயற்பாடா இருக்கும் என வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு முதல் மைத்திரி - ரணில் கூட்டு வரை அது பற்றி இன்று வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையினை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாலும், விடுதலை செய்ய முடியாதவர்களாலும் எப்படி நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டடைய முடியும்?

அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் மாணவர்களின் உரிமைகளுக்காகவும், சமூகப் பிரச்சனைகளிற்க்காகவும் குரல் கொடுத்து போராடும் ஒரு பண்பு வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. மாணவர்கள் கல்வி தனியார் மயமாதனை கண்டித்தும், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு எதிராகவும், தமது கல்வி உரிமைகளுக்காகவும் நாடு தளுவிய பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர். இது தவிர வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றிணைந்து தமக்கு வேலை வழங்கக்கோரியும், பட்டதாரிகளுக்கு வேலை வழங்க ஒரு தேசிய கொள்கையினை வகுக்குமாறு கோரியும் போராடி வருகின்றனர்.

கன்னியரை கற்பழிக்க காமுகர்கள்

கண்டு பிடித்த கழிசடை தினம்

காதலின் பெயரால் கற்பை சூறையாட

ஒரு தினம் தேவையா?

சிந்திப்பீர்!

இது ஒரு மதவெறி அமைப்பு, காதலர் தினம் குறித்து தனது பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சுவரொட்டி வாசகங்கள். இதில் இருக்கும் கன்னியர்கள், கற்பழிப்பு, கற்பு போன்ற ஆணாதிக்க பன்றித்தனத்தை நீக்கி விட்டு

  • பெண்களை பாலியல் வன்முறை செய்யாதே!!;
  • வேலைக்கு வரும் ஏழைப்பெண்களை சித்திரவதை செய்யாதே!
  • மதத்தின் பெயரால் பெண்களை சூறையாடும் ஒரு காட்டுமிராண்டித்தனம் தேவையா?

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரத்தினம் இலங்கை குடிவரவு விதியினை மீறிய குற்றச்சாட்டில் நடந்த வருடம் கார்த்திகை மாதம் 4ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  பொதுமக்கள், மனித உரிமையாளர்கள், இடதுசாரி அமைப்புக்கள் அவருக்கு மீள குடியுரிமை வழங்கப்பட்டு; அவரின் அரசியல் செய்யும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் முதல் எம.பிக்கள் வரை அவருக்கு பிரஜாவுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறுவதுடன்; இது குடிவரவு திணைக்களம் சம்பந்தமான விடயம் என தமக்குள்ள பொறுப்பை திசை திரும்பி விடுகின்றனர். ஆனால் குடிவரவு அமைச்சு குமார் குணரத்தினம் பிரஜாவுரிமையினை மீளப் பெற விண்ணப்பித்த பத்திரத்திற்க்கான பதிலை வழங்காது மௌனமாகவுள்ளது. நீதிமன்றமோ இது நீதிமன்றத்தால் தீர்வு கூற முடியாத பிரச்சினை, இது அரசியல் பிரச்சினை இதற்கு அரசாங்கம் தான் தீர்வு கொடுக்க வேண்டும் என கூறி வந்தது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெளியிட்ட ஜீ (zee news) செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் ஊடகவியலாளர் விஷ்வா தீபக். அவருடைய ராஜினாமா கடிதம் தமிழில்,

ஊடகவியலாளர்களாகிய நாம் பிறரை கேள்வி கேட்கிறோமே அன்றி, நம்மை நாம் கேள்வி கேட்பதே இல்லை. பிறரின் கடமைகளை தீர்மானிக்கும் நாம் நம்முடைய கடமைகளை குறித்து கவலை கொள்வதில்லை. நாம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக அறியப்படுகிறோம். ஆனால், நம்முடைய நிறுவனங்களோ, சிந்தனையோ, நம் செயல்முறைகளோ ஜனநாயகப்பூர்வமாக இருக்கிறதா? இந்த கேள்வி என்னுடையது மட்டுமில்லை, இது அனைவராலும் கேட்கப்பட்டுவரும் கேள்விதான்.

(ஜே என் யு - JNU மாணவர் சங்கமான DSU தலைவரான உமர் காலித், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். தேசத்துரோக குற்றச் சாட்டுக்கும் உள்ளானவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், சரணடைவதற்கு முன்னால், JNU வில், ஜேஎன்யு மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.)

கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கும், ஆசிரிய தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டம் ஐந்தாறு மாணவர்களுக்கான போராட்டம் கிடையாது. இன்று இந்த போராட்டம் நம் அனைவருக்குமான போராட்டமாகும். இந்த போராட்டம் இந்த ஒற்றை பல்கலைக்கழகத்தின் போராட்டம் மட்டுமல்ல, நாடெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் போராட்டமாகும். இது சமூகத்திற்கான போராட்டம் ஆகும். வருங்காலத்தில் நாம் எப்படியான சமூகத்தை படைக்க விரும்புகிறோம் என்பதற்கான போராட்டமாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரி – ரணில் கூட்டணியினர் மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களினால் உயிராபத்து காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் திரும்ப வந்து செயற்படலாம் என உறுதி அளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, மகிந்த அரசால் அரசியல் காரணமாக உயிராபத்தை எதிர் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வசித்த குமார் குணரத்தினம் நாட்டிற்கு திரும்பி வந்திருந்தார். மேலும் தனது இலங்கை பிராஜாவுரிமையினை மீளப்பெற குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்பித்திருந்தார். குடிவரவு திணைக்களம் அவரின் விண்ணப்பத்திற்க்கான பதிலை வழங்காது மௌனத்தை கடைப்பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி அவரது நோயுற்றிருந்த தாயாரை பார்வையிட சென்றிருந்த வேளையில் கேகாலை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மைத்திரி  - ரணில் கூட்டாட்சி தேர்தல் கால வாக்குறுதிக்கு மாறாக இன்று அவரை ஒரு அரசியல் கைதியாக சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது.

கடந்த வாரம் 16-02-2016 அன்று கொழும்பில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலையற்ற அனைத்து பட்டதாரிகளும் ஒன்றிணைந்து, "வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை கொடு!", "பட்டதாரிகளிற்கு வேலை வழங்க ஒரு தேசிய கொள்கையினை வகு!" போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகளை மகஜராக சமர்ப்பிக்க பிரதமர் அலுவலகம் நோக்கி அணியாக சென்றனர். மகஜர் கொடுக்கப்போனவர்களை நல்லாட்சி அரசு வன்முறையினை பாவித்து வழியில் மறித்து கலகம் அடக்கும் படை கொண்டு தாக்கியதுடன் மற்றும் நீர்த்தாரகை பிரயோகம் செய்து அவர்களை கலைத்து வேலையற்ற பட்டதாரிகளின் மகஜர் பிரதமர் அலுவலகம் கொண்டு வராது தடுத்து நிறுத்தியது. இதில் பல வேலையற்ற பட்டதாரிகள் காயங்களிற்கு உள்ளானர்.

இந்த பத்திரிகை கீழ் வரும் ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

1. புதிய அரசியலமைப்பில் இனிப்பு தடவிய விஷம்

2. அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

3. ஐ.நா. சபையின் விசாரணை தமிழ்த் தேசியத்தின் ஒரு கானல்நீர்:

"இதற்கு நல்ல உதாரணம், மத்தியகிழக்கு நெருக்கடியாகும். 1948ல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல், பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதல் கடந்த 67 வருடங்களாக தொடருகிறது. இதுவரை ஐ.நா.பொதுச் சபையால் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் அமெரிக்காவின் “வீட்டோ” அதிகாரத்தினால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது. பல இலட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த 67 வருடங்களாக பிறந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் அகதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

கவிஞனாக, செயல் வீரனாக, மனித நலனை முன்னிறுத்தி மற்றவர்களுக்காக வாழ்ந்த எம்.சி லோகநாதன் இன்று எம்மைவிட்டு பிரிந்து ஒரு வருடங்கள் கடந்து விட்டது.

இனம் - மதம் - சாதி - பால் கடந்த வர்க்கமற்ற சமூகத்தை நோக்கிய எமது பயணத்தில், எம்முடன் தோழோடு தோழ் நின்று பயணித்தவன் எங்கள் தோழன் எம்.சி.

இனவாத சகதிகளையே நிரம்பிய அரசியலுக்கு சாவல் விடும் வண்ணம், சரியாக ஒரு ஆண்டுக்கு முன் யாழ்ப்பாணத்தில் "அரசியல் கைதிகளை விடுதலை செய்" எனக்கோரி சம உரிமை இயக்கம் நடத்திய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு போராடியது மட்டுமல்ல தென்பகுதியில் இருந்து வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான உணவு ஒழுங்குகளையும் செய்திருந்தான் எம.சி. இதற்கு அடுத்த நாளே நிகழ்ந்த அவனின் மரணம் என்பது அடக்கப்பட்ட சமூகத்தின் பொது இழப்புத் தான்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE