Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மூத்த மகனை போன்று இரண்டாவது மகனான குமார் குணரட்ணத்தையும் தாம் இழக்க விரும்பவில்லை என அவரின் தாயார் ராஜமணி குணரட்ணம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேகாலையில் பிறந்து அங்கு கல்வி கற்ற பின்னர் பேராதனை பல்கலைகழகத்தில் கல்விகற்ற தனது மகனிற்கு ஏன் பிரஜாவுரிமையை வழங்க முடியாது எனவும் அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னே அக்கொடியைப் பிடித்தவர்கள் இறந்து விட்டார்கள்

கடலின் அடியில் மடிந்தார்கள்

கழனி கங்கையின் கரையில் எரிந்தார்கள்

வன்னிக் காட்டில் கரைந்து போனார்கள்

தூரத்து வெளிகளில் சிலர் மூச்சடங்கிப் போனார்கள்

எனினும் இன்னும் கைகள் பிடித்திருக்கின்றன

செங்கொடியை வர்ணத்தில் வரையவில்லை

வழிந்தோடிய குருதியில் வரைந்தார்கள்

"குமார் குணரத்தினத்தினம் குடிவரவு சட்டத்தை மீறியதற்கான சட்ட ரீதியான தண்டனை இது" - இப்படித் தான் சுரண்டும் வர்க்க கருத்தியல் முன்வைக்கப்படுகின்றது. குமாரின் வர்க்க அரசியலைக் கண்டு அஞ்சும் இடதுசாரிய பிழைப்புவாதிகளின் தர்க்கமும் இது தான்.

இது சட்டத்தை புனிதமாக முன்னிறுத்தி - முதலாளித்துவ நீதியை துதிபாடும், சுரண்டும் வர்க்கச் சிந்தனை முறை இது.

அரசியல் காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் மீள நாட்டிற்கு வருவதை தங்கள் "நல்லாட்சியில்" உறுதி செய்வோம் என்று கூறியவர்கள் - தேர்தலை வென்றபின் நாடு திரும்புமாறு சட்டரீதியான அரசியல் உத்தரவாதமின்றி சடங்குக்காக கூறியவர்கள் - நாடு திரும்பியவர்களை சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டனர் என கூறி சிறையில் தள்ளி இருக்கின்றது. தேர்தலை வெல்வதற்காக மேற்குறித்த கோசம் பயன்படுத்தபட்டது என்பதே உண்மையாகி இருக்கின்றது.

குமார் குணரட்னத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பிரச்சினையில்லை என முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னிலை சோசலிசக் கட்சித் தோழர் குமார் குணரத்தினத்திற்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சோசலிசத்தை தனது பெயரில் வைத்திருக்கும் நாடு, சரி நிகர் சமானமாக இலங்கை மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கை முழுக்க போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு போராளிக்கு சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. கொலைகாரர்களும், நாட்டைக்கொள்ளை அடிப்பவர்களும், இனவெறி பேசி இரத்தம் சிந்த வைப்பவர்களும் இலங்கைத் திருநாட்டில் சுதந்திரமாக திரிய முடியும். ஆனால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று எட்டு முழத்திற்கு பெயர் வைத்திருக்கும் நாட்டில் சோசலிச சமுதாயம் அமைக்க குரல் கொடுப்போர் சிறை செல்ல வேண்டும்.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் பிரஜா உரிமையினை மீள வழங்கக்கோரி பாரிய போராட்டம் ஒன்று இன்று பொரளையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை முற்றுகையிட்டு இடம்பெற்றது.

குமார் குணரத்தினம் புதிய அரசின் தேர்தல் கால உறுதிமொழிக்கமைய தனது இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்த போதும் அதனை அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக பரிசீலனைக்கு எடுக்காது தூசிய படிய விட்டிருந்தது.

தனது பிரஜா உரிமையினை மீள கோரியதற்க்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்க்காகவும் இலங்கை பிரஜை குமார் குணரத்தினத்திற்கு; ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதி மன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.

இலங்கையில் இன்று தினமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒன்று கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் - கவனயீர்ப்புப் போராட்டம் - மனுக் கொடுக்கும் ஊர்வலம் - மறியல் போராட்டம் - உண்ணாவிரப் போராட்டம் என்ற வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர்.

2009ல் யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவியிருந்தது. தோற்கடிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பரிகாசம் செய்யப்பட்டு பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.

முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த தோழர் குமார் குணரத்தினம் இலங்கை அரசினால் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரது குடியியல் உரிமைகள், அரசியல் உரிமைகள் சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளின் கூட்டான இலங்கையின் மக்கள் விரோத அரசினால் மறுக்கப்பட்டு அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக் கோரியும் அவருக்கும், அவரைப் போன்று அரசியற் காரணங்களிற்காக நாட்டை விட்டு வெளியேறி மறுபடியும் நாடு திரும்பும் எவருக்கும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போராடுகிறது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறும், இலங்கை அரசின் ஜனநாயக மறுப்பிற்கு எதிராகக் குரல் கொடுக்குமாறும் முன்னிலை சோசலிசக் கட்சி இலங்கையின் சகல கட்சிகளிற்கும், முற்போக்கு ஜனநாயக சக்திகளிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறது.

கௌரவ நீதிபதி அவர்களே!

கேகாலை நகரில் பிறந்து வளர்ந்த என்னை விசா காலம் முடிந்தும் இங்கு வசித்த வெளிநாட்டவன் என்ற காரணத்தைக் காட்டி கைது செய்து வைத்துள்ளனர்.

எனது வீட்டின் முன்வாசலுக்கு வந்தால் என்னால் பொது மயானத்தைக் காணமுடியும். எனது தந்தை உட்பட எனது சொந்தங்கள் அடக்கம் செய்த, தகனம் செய்த மயானம் அதுவாகும். நான் வீட்டில் இருந்து கொழும்பு-கண்டி வீதிக்கு வந்தால் றோமன் கத்தோலிக்க மயானத்தைக் காண முடியும். அங்கு எனது தாயின் சொந்தங்கள் எனது தந்தைவழி பாட்டனார் ஆகியோர் அடக்கம் செய்யப்ட்டுள்ள புதைகுழிகள் இன்றும் இருக்கின்றன.

நான் கேகாலை நகரை நோக்கி கொழும்பு-கண்டி வீதியில் நடந்து செல்லும்போது நானும் எனது சகோதரனும் எனது தாய் மாமன்மார்கள் கல்வி பயின்ற சென் மேரிஸ் வித்தியாலயத்தையும், வலது பக்கம் எனது தாய் எனது சகோதரிகள், கல்வி கற்ற சென் யோசப் கல்லூரியைக் காணலாம்.

நான் பிறந்து வளர்ந்த சொந்த இடமான கேகாலை நகரில் வைத்து என்னை ஒரு வெளிநாட்டவரென கருதி, வதிவிட விசா இல்லை என்ற காரணத்தைக் காட்டி கைது செய்தனர்.

குமார் குணரட்ணத்தின் வழக்கு இன்று கேகாலை நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சில வாரங்களாக நடந்து வந்த வழக்கு விசாரணையில், இன்று தோழர் குமார் குணரத்தினம் சாட்சியம் அளித்தார். அவர் தமது சாட்சியத்தில், தனது குடும்பப் பின்னணியில் ஆரம்பித்து; தற்போது தான் அரசியற் கைதியாக உள்ள சூழ் நிலை பற்றிய வரலாற்றை அரசியல் உரையாக நிகழ்த்தினார்.

தன் பாட்டில் நிற்கும் மாட்டை இழுத்து வந்து ஓட விட்டு துன்பப்படுத்தி தேவர்சாதிக்குஞ்சுகள் தங்களது வீரத்தை மாட்டிடம் காட்டுவார்கள், எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் இரு தரப்பினரின் ஒப்புதலுடனேயே நடக்க வேண்டும். இந்த தேவர்சாதி வீரமறவர்களிடம் எந்த மாடு வந்து நாங்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவோம், "ஒண்டிக்கு ஒண்டி வாறியா" என்று சவால் விட்டது? எந்த ஒரு மிருகமும் உணவிற்காக அன்றி வேறொரு மிருகத்தை கொல்வதில்லை. தமக்கு உயிராபத்து வந்தாலும் இயலுமான அளவு தவிர்த்து தம் வழி போகும். இனி பொறுப்பதில்லை எனும் போதே அவை தம்மிடையே மோதும்.

1948ல் ஆங்கிலேயர் இலங்கையின் மீதான தமது நேரடி ஆட்சி அதிகாரங்களை "சுதந்திரம்" என்கிற பெயரில் மாற்றியமைத்த போது இலங்கையின் "அரச கட்டமைப்பை" (State structure) கட்டுப்படுத்தி செயற்படுத்திக் கொண்டிருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடித் தமிழர்களே. முப்படைத் தளபதிகள் - அரச செயலாளர்கள் - திணைக்கள அதிகாரிகள் - புகையிரத நிலைய அதிகாரிகள் - நில அளவையாளர்கள் - பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரில் 75 விகிதாசாரத்தினர் யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களே.

ஆங்கிலேயர் சிறுபான்மை தமிழ் (மேட்டுக்குடி) மக்களைப் (ஆங்கிலம்) படிப்பித்துப் பதவியில் வைத்து பெரும்பான்மை சிங்கள மக்களைக் கட்டி ஆண்டு வந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நிலைமைகள் மாறும் என்பதனை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட அன்றைய யாழ்ப்பாணத் தமிழ்த் தமிழர் தலைமைகள் 1944ல் உருவாக்கியதுதான் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகும். 1949ல் அது உடைந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உருவாக்கப்பட்டதற்கு மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமையே காரணம் என்று காட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழர் அரசியலில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் யாவும் இந்த மேட்டுக்குத் தமிழர்களுக்கிடையிலான போட்டியும் பொறாமையுமே அன்றைய உடைவுக்கான உண்மையான காரணங்கள் என்பதனை உணர்த்தி நிற்கின்றன.

இனம், மதம், தேசம், குறிப்பிட்ட சமுதாயப்பிரிவு, அரசியல் கருத்து என்பவற்றிற்காக துன்புறுத்தப்படுவர் அல்லது துன்புறுத்தப்படலாம் என்ற பயம் கொண்டவர் அகதி என்று 1951 ஆம் ஆண்டின் ஜெனீவா பிரகடனம் வரையறுக்கிறது. மேற்கூறப்பட்டவற்றுடன் தமிழ்நாட்டு அரசினதும், அதன் அதிகார வர்க்க அடிமை நாய்களினதும் கொடுமைகளையும் சேர்க்க வேண்டும். ஆதரவற்று அகதியாக சென்ற மனிதர்களையே கொடுமைப்படுத்திக் கொல்லும் இரத்தக் காட்டேரிகள் தான் இந்த நாய்கள்.

இலங்கைத் தமிழ்மக்களிற்கு மொழி, இனம், பண்பாடு என்ற எந்த அடிப்படையிலும் தொடர்பில்லாத எத்தனையோ நாடுகளில் ஜெனீவா பிரகடனத்தின் அடிப்படையில் அகதிகளாக, சக மனிதர்களாக நடத்தப்படுகையில் தமிழ்நாட்டு அரசும், அதன் அடிமை நாய்களான அதிகார வர்க்கமும் இலங்கைத் தமிழ்மக்களை குற்றவாளிகளைப் போல் சிறப்புமுகாம்களில் அடைத்து வைத்து கொலை செய்கிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள். இலங்கைத்தமிழ் அகதிமுகாம்களை தமிழ்நாட்டு காவல்துறையின் மிக மோசமான பயங்கரவாதிகளான கியூ பிரிவு தான் கண்காணிக்கிறது.

ஜனநாயகத்தின் பெயரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் நடக்கின்ற தேர்தலாகவும், அதற்கு பழக்கப்பட்டு வாக்களிக்கும் மக்களுமாக இருப்பது என்பது தேர்தல் முறையாகிவிட்டது. தேர்தல்முறை மூலமும், வாக்களிப்பதன் ஊடாகவும் தெரிவுசெய்யப்படும் 'மக்கள் பிரதிநிதிகள்" சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களிக்கின்றனர். ஆனால் தேர்தலில் வென்றவர்கள் தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதற்கும், அதற்காக பதவிகளையும் அதிகாரங்களையும் பெறுவதும் இதன் மூலம் நாட்டையும் மக்களையும் விற்பதுமாக பாராளுமன்றம் இன்று இயங்குகின்றது. தேர்தல் முடிந்தவுடன் தங்கள் பிரச்சனைகளை பாராளுமன்றமும், தாங்கள் தெரிவு செய்த "மக்கள் பிரதிநிதிகளும்" தீர்க்க மாட்டார்கள் என்ற பகுத்தறிவும், அனுபவமும் கிடைக்கின்றது. தேர்தல்முறை மூலம் மாறி வரும் ஆட்சிமாற்றங்கள், இதைத்தான் பறைசாற்றுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE