Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொடவை கைது செய்வதற்கு குடிபோதையில் பொலிஸ்குழுவொன்று இன்று முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுஜித் கரவிடகே என்பவரது வீடு ராஜகிரிய, கலபளுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வீட்டுக்கு மருதானை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று குடிபோதையில் சென்றுள்ளது.

தமிழினி தனது கூர்வாளில் "ஏன் இப்படி பூச்சியமானது?" என கேள்வி எழுப்பி, அவர் தனது அரசியல் நம்பிக்கைக்குள் அதற்கு விடை காணவும் பதிலிறுக்கவும் முனைகின்றார். புலிப்பாசிசம் தான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி, அதற்காகவே வாழ்ந்த தமிழினி, புலிகளை என்றும் யாராலும் தோற்கடிக்கவே முடியாது என்ற நம்பிக்கையில் தன் எண்ணங்களையும், செயற்பாடுகளையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட உணர்ச்சிகள் எல்லாம் சிதைந்த போது, ஏன் இப்படி நடந்தது என்ற சுய அனுபவவாதத்தை காரணமாகக் காட்டி எழுதியதே "கூர்வாள்".

இலக்கியப்போக்குக் குறித்த இந்த விவாதமானது, வணிக - வலதுசாரிய இலக்கியம் குறித்தல்ல. இலக்கிய உருவம் மூலம் சமூக வேசம் போடும் சமூக செயற்பாட்டை நடைமுறையாகக் கொண்டிருக்காத இயங்கியலற்ற இலக்கியங்கள் குறித்தானது.

கால நிலை அனர்தனத்தால் பாதிக்கப்பட்ட, நாட்டின் சில பகுதிகளிலும்- விசேடமாக மலையகத்திலும், பெண்கள், குழந்தைகளின் விசேட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக பெண்கள் விடுதலை இயக்கம் உதவிப் பணிகளின் ஈடுபட்டுள்ளது. பெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று நோர்வே, சுவிஸ், லண்டன்  மற்றும் பாரிஸ், கனடா  தோழர்களின் குடும்பங்கள் ஆரம்ப தேவைக்கான சிறு உதவியை செய்துள்ளனர். மற்ற தோழர்களும் கருணை கூர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று போராளிகளின் புத்தகங்களின் வெளியீடும், மதிப்புரையும் மே மாதம் 15ம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்றது. முன்னாள் போராளிகள் பொதுமக்கள் இலக்கிய ஆர்வாலர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்ட இந் நிகழ்வு மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி 6 மணிக்கு நிறைவு பெற்றது. புத்தக வெளியீட்டுடன் கூடிய மதிப்புரையும் நடைபெற்றது. நேசன் தலமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு எல்லாளனின் நன்றியுரையுடன் முடிவுற்றது.

வெள்ளம் மற்றும் மண் சரிவால் நாடே சிக்கித் திணறுகின்றது. பல பொதுமக்கள் உயிர் இழந்தும், காணமலும் போய்யுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் உணவு, உடை, தங்குமிடமின்றி தத்தளிக்கின்றனர். பொதுமக்களின் பல்வேறு உதவிகளுடன் சமூக தொண்டர்கள் களத்தில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் முழுமுச்சாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிற்கு உதவி வருகின்றது. உதவி தேவைப்படும் இடங்களை இனம் கண்டு, அதற்கு முன்னுரிமை அளித்து பணியாற்றுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்கள் மற்றும் வேறு இயக்கங்களில் இருந்த பிரமுகர்களை ஒன்றிணைத்து, புலிகள் உருவாக்கிய தமிழத் தேசிய கூட்டமைப்பானது புலிகளின் அரசியல் தேவைக்கு ஏற்ப இயங்கியது. புலிகள் அழிக்கப்பட்டதும், இந்திய ஆட்சியாளர்களின் கைம்பொம்மையாக மாறி இந்திய அரசின் பொருளாதார அரசியல் தேவைக்கேற்றவாறு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

தேயிலை உற்பத்தியானது இந்த நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது என்பதை எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இந்த தேயிலை உற்பத்தியின் பின்னணியில் இருப்பது யார்? அவர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கிறது? அவர்களின் சமூக, அரசியல் நிலவரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. என்பது பற்றி ஆட்சியாளர்களோ அல்லது தோட்டக்கம்பனிகளோ கண்டுகொள்ளாது இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

நேற்றைய தினம் கொழும்பு கரையோரம் உருவாக்கப்பட்டு வரும் போர்ட் சிற்றிக்கு எதிராக பல அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது. இந்த போராட்டத்தினை கடற்தொழில் சங்கங்களின் ஒத்துழைப்பு இயக்கம்,  மாணவர் அமைப்புக்கள்,  பல தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தன. சீன அரசின் மூலதனத்தில் அமைக்கப்படும் இப் போர்ட் சிட்டியால் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தப்பித் தவறி தமிழ்ப்படங்கள் பார்க்க நேரும் நேரங்களில், கதாநாயகர்கள் ஒரு பனை உயரத்திற்கு எழும்பிப் பாய்ந்து வில்லனின் மண்டையை உடைக்கும் காட்சிகளை பார்க்க வேண்டிய கொடுமையிலிருந்து தப்பிக்க முடியாது. தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப்பட முட்டாள்தனங்களிற்கு கொஞ்சமும் குறையாமல் தமது மக்கள் விரோத பிழைப்பு அரசியலை, பொய்யான வாக்குறுதிகளை, கண்டுபிடிப்புகளை, விஞ்ஞான விளக்கங்களை அள்ளி வீசுகிறார்கள்.

தமிழ் மக்களைக் கொன்ற இலங்கையரசின் கண்ணிலே அன்பை வர வைத்து அவர் தம் கல்நெஞ்சில் இருந்து தமிழ்மக்களிற்கு நீதியும், தீர்வும் பெற்றுத் தருவோம்; கொன்ற நாட்கள் மறைந்து விட்டன; இன்று அவர்கள் (இலங்கை அரசுகள்) ரொம்ப நல்லவர்கள் என்று தமிழ்க் கூட்டமைப்பு தமது வழக்கமான பொய்யரசியலை தொடர்வது இலங்கை உதாரணம். "மதுக்கடைகளை மூடு" என்று போராடும் மக்களை சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று கொஞ்சம் கூடத் தயங்காமல் அடித்து வன்முறை செய்யும் தமிழ்நாட்டு பிசாசு "தேர்தலில் வென்று வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவேன்" என்று கொஞ்சமும் கூசாமல் பொய் சொல்வது தமிழகத்து உதாரணம்.

லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உண்மை என்பதை கெஹலிய மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை குறித்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இன்று (13/05/2016) யாழ் நீதிமன்றத்தில் மக்கள் போராட்ட அமைப்பின் முன்னணி செயல்வீரர்கள் லலித் மற்றும் குகன் இருவரும் அரச கூலிப்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றது. இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சரவை பேச்சாளரான கெகலிய ரம்புக்கெல அவர்களை லலித் - குகன் சார்பில் அஜாரான சட்டத்தரணி நுவான் போபகே அவர்கள் குறுக்கு விசாரணை செய்திருந்தார்.

மனித வாழ்வின் தேவைகளே, உழைப்புக்கான அடிப்படை. மனித தேவைகள் மறுக்கப்படும் போது, உழைப்பு வாங்கப்படுகின்றது. மனித உழைப்பிலான பொருள், மனிதனுக்கு அன்னியமாகிவிடுகின்றது. இதனால் பொருள் முதன்மையாகி விட, பொருளுக்கு கீழ்ப்பட்டவனாக மனிதன் மாற்றப்பட்டு அடிமையாக்கப்படுகின்றான். இப்படி மனித உழைப்பும், உழைப்பின் நோக்கமும் தனிவுடமைச் சமூக அமைப்பில் திரிந்து காணப்படுகின்றது.

கடுமையான எதிர்ப்பிற்கும் குழப்பத்திற்கும் காரணமான சீபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட மாட்டாதெனவும், அதற்குப் பதிலாக இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் ‘இட்கா’ (ETCA) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய - இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அரசாங்கம் உத்தியோக ரீதியில் அறிவித்திருக்கின்றது.

2015 செப்டம்பர் 14ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. இந்தப் பயணத்தின் போது சீபா ஒப்பந்தத்தை வேறு பெயரில் ஒப்பமிட இந்தியாவுடன் இணங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ரணில் - மைத்திரி அரசால், பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய வரிச்சுமைக்கு (வற்) எதிராக முன்னிலை சோசலிசக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இன்று கொழும்பு புறக்க்கோட்டையில் நடந்த முதலாவது போராட்டப் படங்களை இங்கு காணலாம். மக்கள் ஏற்க்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திணறிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அரசால் ஒரு விடிவைக் காண முடியவில்லை. மேலும் 15% மேலதிக விலை அதிகரிப்பை வற் என்ற பெயரில் திணித்துள்ளனர். உழைக்கும் மக்களை ஒட்ட உறிஞ்சி நடுவீதியில் விடும் இந்த கொடுமைக்கு எதிராக திரண்டு போராட வருமாறு அறைகூவல் விடப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான போராட்டம் பத்திரிகை சித்திரை – வைகாசி பதிப்பு வெளிவந்து விட்டது.

இந்த இதழின் உள்ளே....

1. நான் முகம் கொடுக்கும் இப்பிரச்சனை இந்த நாட்டின் சமூக வாழ்வினதும் ஜனநாயகத்தினுடையதுமான பிரச்சனை - குமார் குணரத்தினத்தின் நீதிமன்ற உரை

2. அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம் - அய்யா சம்பந்தன்

3. தோழர்.குமாரை விடுவிக்கக் கோரும் சர்வதேச சகோதரக் கட்சிகள் (செய்தி)

4.  இலங்கைக் குடிமக்கள் இலவு காத்த கிளிகளா?

5. குடிமக்கள் சிந்தனையும், இலங்கையின் இனப் பிரச்சனையும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE