யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அடிதடி காரணமாக, பல்வேறு தரப்பினர் இனவாதத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவின் கையொப்பத்திலான அவ் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"சிங்கள-தமிழ் மாணவர் தொடர்பிலான முதலாம் வருட வரவேற்பு விருந்துபசாரத்தின் போது, கலாசார நிகழ்வு பயன்படுத்தியமைக்காக இரு சாராரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கலாசார நிகழ்வு ஒன்றுக்காக இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு கொள்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.