Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இந்திய ராணுவத்தால் படுகொலைக்குள்ளான யாழ் வைத்தியசாலை ஊழியர்கள்

ராஜிவ் காந்தி என்ற கொலைகாரன் அனுப்பிய இந்திய இராணுவம் ஆயிரக்கணக்கான எம்மக்களைக் கொன்றது. எமது மண்ணை எரித்துச் சாம்பலாக்கியது. இக்கயவர்களினால் அழிக்கப்பட்ட எமது பெண்களின் கண்ணீர் இன்று வரை நிற்கவில்லை. ஆசைப் பெற்றோரை எமது குழந்தைகள் இழந்தார்கள். இக்கொலையாளிகள் கொன்ற கணவன்மாரை நினைத்து கதறும் பெண்களின் விசும்பல்கள் காற்றில் இன்னும் கலந்திருக்கின்றன. காதல் மனைவியரை காவு கொடுத்த ஆண்களின் அடி மனதிலிருந்து எழும் ஓலங்கள் இன்னும் ஓய்ந்திடவில்லை.

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் செயற்குழு உறுப்பினர் குமார் குணரத்தினத்திற்கு இலங்கை குடியுரிமையை மீள வழங்க இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்குமாயின் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யவதில் தமக்கு பிரச்சினை கிடையாது என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஸ்தாபிக்கவிருக்கும் காரியாலயம் சம்பந்தமாக முன்னிலை சோஷலிச கட்சியினர் தமது கருத்தை தெரிவிப்பதற்காக ஊடக சந்திப்பு ஒன்றை கடந்த 17 ம் திகதி மாலை ராஜகிரிய எம் .டி.டி. ஆர் மண்டபத்தில் நடாத்தினர். இவ் ஊடக சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக மற்றும் அரசியல் குழு உறுப்பினர் சமீர கொஸ்வத்த ஆகியோர் பங்குபற்றினர்.

இங்கு சேனாதீர குணதிலக கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போது உருவாகி இருப்பது பிரச்சினையை விட்டு விலகி செல்லும் கருத்தாடலே. நாங்கள் நினைக்கிறோம் உண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கலந்துரையாடல் இந்த நாட்டு மக்களிடையே ஏற்பட வேண்டும்.

கூட்டமைப்பு தொடங்கி எல்லா தமிழ் தேசியக் கழிசடைகளும், ஒற்றுமையாக முத்தி பெறும் இடம் தான் அமெரிக்கக் காலடி. அமெரிக்க சார்பு நல்லாட்சியில் தீர்வு என்று கூறி வந்த கூட்டமைப்பின் இணக்க அரசியல், அமெரிக்காவே எமக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கூறி சரணடைந்து இருக்கின்றனர்.

விளக்குக் கம்பங்களைக் கண்டால் நாய்கள் காலைத் தூக்கும். தமிழ்ப் பிரதேசங்களில் எங்கு இடம் கிடைத்தாலும் இலங்கை அரசும், அதன் காவல் நாய்களான இராணுவமும் புத்தனைத் தூக்கி வந்து விகாரைகள் கட்டுகிறார்கள். கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோவிலிற்கு அருகில் இலங்கை இராணுவம் மிகப் பெரிய விகாரை ஒன்றை கட்ட முயற்சிகளை எடுத்துள்ளது. நயினாதீவில் இருக்கும் நாகவிகாரையில் நூறு அடி உயரத்திற்கு புத்தனின் சிலை ஒன்றை அமைக்க போகிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா மாத ஊதியம்,  காணி மற்றும் ஒரு வீட்டு உரிமைகளை வலியுறுத்தி, இன்று 14-08-2016 நுவரெலியா மாவட்டத்தில் மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முழு நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பிரச்சார நடவடிக்கை ஒன்றுபட்டுள்ள தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையின மேற்கொண்டன. ஐக்கிய தோட்ட தொழிலாளர் யுனியன், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், கிறிஸ்த்தவ தொழிலாளர் சகோரத்துவம், ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸ், பெருந்தோட்ட தொழிலாளர் சேவை நிலையம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, மலையக ஆய்வகம், தோட்ட சமூகத்தின் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், நவயுக சமூக  அபிவிருத்தி மன்றம், பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம், ஆட்ஸ் சமூக அமைப்பு ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த  நடவடிக்கையினை மேற்கொண்டன.

தனிவுடமைச் சமூக அமைப்பு உருவாக்கும் தனிநபர்வாதமே, "ஜனநாயகமாகத்" திரிந்திருக்கின்றது. அதாவது இது தனிநபரின் கருத்துரிமையாக "ஜனநாயகத்தைப்" புரிந்துகொள்ள வைக்கின்றது. இது இயல்பாகவே தனிநபர்வாதமல்லாத கருத்தை மறுப்பதுடன், சமூகத்தினது பொது ஜனநாயகத்தையே மறுக்கின்றது.

எமது மக்களின் நிலம் இலங்கை அரசினால் களவாடப்பட்டிருக்கிறது. எமது மக்களிடம் களவாடிய மண்ணில் இலங்கை அரசின் கொலைகார இராணுவம் முகாம்களை அமைத்திருக்கிறது. பக்த கோடிகளின் பாசையில் சொன்னால் தமிழ் மக்களின் புனித நிலத்தில் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. மீனை வெட்டினால் கீரிமலை சிவனின் புனிதம் கெட்டு விடுமாம். கீரிமலைச் சிவனிற்கு பக்கத்தில் மீன்பிடித் துறைமுகம் வரக் கூடாது என்கிறார்கள். ஆனால் எமது மக்களை துடிக்க துடிக்க கொன்ற இலங்கை அரசின் இராணுவத்தினரின் கொலைமுகாம்கள் எமது மண் எங்கும் இருப்பது இந்த பக்தகோடிகளிற்கு பிரச்சனை இல்லை.

ஏறுகிறது கோவில்களில் கொடி, இறங்குகிறது தமிழரின் மானமும் பகுத்தறிவும்!

பசியும், பயமும் பின் தொடரும் நிழல்களாக துரத்த அவர்கள் மரணத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். கனத்த மழை பெய்து கரிய இருள் போர்த்திய இரவு நேரத்திலும் அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், குருதிப்போக்கு குறையாமல் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தவர்கள் மனிதத்தின் எதிரிகளிடம் போய்க் கொண்டிருந்தார்கள். காத்திருப்பது மரணம், சித்திரவதை, பாலியல் வன்முறை, பரிகாசம் என்று தெரிந்தும் அவர்கள் பிணம் தின்னும் கழுகுகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

மீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் ஒன்றை கீரிமலையில் அமைக்க அரசு முனைந்து வருகின்றது. முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான சாதி இந்துக்கள் இதனை எதிர்த்து நிற்கின்றனர். கீரிமலை இந்துக்களின் "புனித" பிரதேசமாம்! மீனவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றினாலும், அவர்கள் (சாதி) இந்துகள் அல்ல என்பது தான், யாழ்ப்பாணிய சாதியக் கண்ணோட்டம். இந்த சாதி இந்துத்துவ கருத்தை பிரதிபலித்து அதன் பிரதிநிதியான முதலமைச்சர் கீரிமலையை இந்துக்களின் "புனித" பிரதேசம் என பிரகடனம் செய்திருக்கின்றார்.

கடந்த 25 முதல் 30 வருடங்களாக (புலிகள் இருந்த வரை) வடகிழக்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயகம் என்பது புலியெதிர்ப்பாகவே திரிபடைந்து காணப்பட்டது. புலியெதிர்ப்பும், புலியொழிப்பும் "ஜனநாயகமாக", ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்த அரசியலைக் கொண்டிராதா புலியல்லாத பெரும்பான்மையினரால் முன்வைக்கப்பட்டது. இதனால் புலி ஆதரவு கொண்ட பொது தளத்தில், புலியெதிர்ப்பாகவே ஜனநாயகம் பற்றிய புரிதல் காணப்பட்டது.

புலிகளைச் சார்ந்திருந்த பெரும்பான்மையினர் மத்தியில், ஜனநாயகம் என்பது தேர்தலில் வாக்குபோடுவதாகவே புரிந்து கொண்டதுடன், தொடர்ந்து அதையே "ஜனநாயமாக" கருதி வாக்கு போடுவதுடன் தங்கள் அரசியலை கடமையை நிறைவு செய்கின்றனர்.

இன்று 8ம் திகதி முற்பகல் 10 மணியளவில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் அனைத்து அரசியற் கைதிகளையும் விடுவிக்க கோரி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றன. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்க்கான தேசிய அமைப்பு இந்த போராட்டங்களை ஒழுங்கமைத்திருந்தது.

"அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக அரசியல் தீர்வு ஒன்றை எடுப்போம்!, போர் முடிந்து எழு வருடங்கள் கழிந்துவிட்டன! அரசியல் கைதிகளுக்கான விடுதலை எங்கே?" போன்ற கோசங்களை எழும்பிய வண்ணம் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

உலகு முழுவதும் மக்கள் கொடுங்கோலர்களை எதிர்த்து உரிமைகளிற்காக வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். தம்மைச் சுரண்டிக் கொழுக்கும் ஊழல் ஆட்சியாளர்களிற்கு எதிராக மக்களை வறுமையில் வாழ வைக்காதே என்று போராடுகிறார்கள். ஒடுக்கப்படும் மக்கள் இனவெறியர்களிற்கு எதிராக, மதவெறியர்களிற்கு எதிராக போராடுகிறார்கள். இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய கொலைகாரனும்; நாட்டையும், மக்களின் உழைப்பையும் சுரண்டிய மிகக் கேவலமான ஊழல் பெருச்சாளியுமான மகிந்த ராஜபக்சா கண்டிக்கு பாதயாத்திரை போய் "நானும் ஒரு போராட்டக்காரன் தான்" என்கிறான்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இனரீதியான வன்முறையை அடுத்து "மனித நாகரீகத்தையே இழந்து நிற்கும் யாழ் பல்கலைக்கழகம்" என்ற குறிப்பில் "இன நல்லிணக்கம் வந்து விடக் கூடாது என்று விரும்புகின்றவர்களின் இனவாத அரசியலுக்கு வெளியில், யாழ் பல்கலைக்கழக நிகழ்வை விளங்கிக் கொள்ள முடியாது. வன்முறையை தூண்டியவர்கள், அதில் ஈடுபட்டவர்கள், அதை ஆதரிப்பவர்கள் அனைவரும் மனித விரோதிகளாவார்கள். சக மனிதனின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிக்க மறுக்கின்றது யாழ் பல்கலைக்கழகம் என்பதே உண்மை. மனிதனை மனிதன் நேசிக்காத, தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகும். இந்த சிந்தனை முறையும், காட்டுமிராண்டித்தனமும், காலாகாலமாக தொடரும் சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறையின் வெளிப்பாடு. பெண்கள் மீதான ஆணாதிக்கத்தின் நீட்சி"யாகும். இப்படி நடந்த வன்முறை குறித்து, ஒரு குறிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தேன். இக் குறிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்து இருந்தது. நடந்த வன்முறையையும் சாதியத்தையும் எப்படி தொடர்புபடுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருந்தனர்.

இன்று (04/08/2016) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து பிக்குகள் மற்றும் மருத்துவ பீட மாணவர் நடவடிக்கை குழுவினர் நாடு பரவலாக மாலாபே போலி மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இலவசக் கல்விக்கு வேட்டு வைக்கும் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் குறித்து பொது மக்கள் மத்தியில் பொது விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னிலை சோசலிசக் கட்சியானது,   மனித உரிமை செயற்பாட்டாளர்கள் லலித் மற்றும் குகன் இருவரும் டிசம்பர் மாதம் 2011 இல் யாழ்ப்பாணத்தில் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது குறித்து  மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம்  திரும்ப முடிவு செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்யும் திணைக்களத்தால் கடத்தியவர்களை அடையாளம் காண முடியாது இருப்பதாக கூறுவதால், விசாரணை பல தடவைகள் தாமதம் ஆவதாக குற்றவியல் போலீஸார் தெரிவித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE