சாதியம் பற்றிக் கதைக்க வேண்டாமெனக் கம்புசுத்தும் கனவான்களே!
முகப்புத்தகத்தில் சமூவியல் ஆய்வாளரும், பெண்ணிய மற்றும் சமூகப் விடுதலைக்கான செயற்பாட்டாளருமான அகல்யா, வடக்கில் இன்று தலைவிரித்தாடும் சாதி ஒடுக்குமுறைகள் பற்றி பின்வரும் பதிவை வெளியிட்டார்
"கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை" என்று கூறியவருக்கு
"காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கல் செய்வார்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கல் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான். அவர்களை அங்கு படைக்க விடமாட்டார்கள்.