ஜம்பதுக்கு ஜம்பது – தமிழரசு (சமஸ்டி) - மாவட்ட ஆட்சி - மாகாண ஆட்சி - சுயாட்சி – சமஸ்டி…… இப்படியே மாறி மாறி இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த 68 ஆண்டுகளாக தங்கள் தங்கள் பாரம்பரிய-பரம்பரை சுய லாப சிந்தனையுடன் அவரவர் கோரிக்கைகளின் பின்னால் அணி திரள்வதும் ஆட்சியாளர்களை தெரிவு செய்வதும் தெரிவு செய்தவர்களால் ஏமாற்றப்படுவதும் நாட்டில் ஒரு தொடர் நாடகமாக அரங்கேறியபடி உள்ளது.
இந்த நாடகம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் பாகுபாடுகளை-மனேபாவங்களை-ஆசை அபிலாசைகளை மிகவும் தெளிவாக பிரதிபலித்துக் காட்டுவதால் தொடர்ந்து வெற்றிகரமாக மறுபடி மறுபடி மேடையேறிக் கொண்டிருக்கிறது.