செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் – 10.05.2010
யாழ் சிறைச்சாலையில் மீண்டும் பஸ்தியாம்பிள்ளைகளோ?
யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது, சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும், இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார் 10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
அவர்களில் இருவரது கை மற்றும் கால்கள் உடைந்துள்ளன. அவர்களது அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவப்பட்டும் உள்ளன. சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்வது உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கத்தினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்