ஜனநாயகத்தை மறுத்தவர்கள், "ஜனநாயக மறுப்பு" என்ற பெயரில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்.
ஜனநாயகம் மறுக்கப்பட்டவருக்கு எதிராக, மீண்டும் தேடகம் ஜனநாயக மறுப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
நேசனுக்கு கருத்து சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. மாறாக தங்கள் ஆட்கள் "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்ட ஒழுங்கை மீறியிருந்ததாக" கூறி, அதைத்தான் தவறு என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தம் ஜனநாயக மீறலை நியாயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.