Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்றைய இலங்கை நிலைமைகள் தொடர்பான - அரசியல் ரீதியான மதிப்பீடுகளையும், வழிகாட்டுதலையும் கொண்டது. உடனடிக் கடமைகள் மற்றும் நீண்டகால அரசியற் கடமைகளை அடிப்படையாகக் கொண்ட, போராட்டக் கோசங்கள் மற்றும் அரசியல் ரீதியான செயல் தந்திரங்களை இது வகுதளிக்கின்றது.
 
இலங்கையின் ஆளும் வர்க்கங்களை  இனம் கண்டு கொள்வதும், போராடுவதும்
 
இலங்கை அரசு, நவகாலனிய தரகு முதலாளித்துவ வர்க்க நலன் பேணும் வர்க்க சர்வாதிகார அரசாகும். இந்த வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், அன்னிய மூலதனத்தின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றது. இந்த வகையில் இது தேசவிரோத அரசாகும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, தனக்கான ஓர் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்ட விரிவாக்க விளக்கமே, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் அறிக்கையாகும். அரசியல் அறிக்கை, போராட்டத் தந்திரம், செயல் தந்திரத்தை அடிப்படையாக் கொண்டு அமைப்பு இயங்கும்.

இது, புதிய ஜனநாயக (ஜனநாயக) புரட்சியை நிறைவு செய்வதாற்கான திட்டமாகவும். இது புரட்சிக்குப் பிந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுப்பதற்கான குறைந்த பட்சத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் அறிக்கை - போராட்ட தந்திரத்தை, தனது அரசியல் வழிகாட்டலாகக் கொண்டே முன்னணி இயங்கும். இது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒரு முன்னணியாக, இந்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இயங்கும்.

முனீஸ்வரத்தில் விலங்குகளை பலியிடுவதை தடுத்து ஆடுகளையும், கோழிகளையும் பாதுகாத்ததை நினைத்து, நினைத்து அதி உத்தம ஜனாதிபதி மகிந்து பெருமிதம் கொண்டார். அவருடைய அன்புத் தொண்டன் மெர்வின் சில்வா தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, இல்லாட்டி பத்து பேருக்கு மண்டையிலே போட்டாலும் பரவாயில்லை ஆடு மட்டும் அடிக்க விடமாட்டேன் என்று அகிம்சையின் மொத்த வடிவமாக குரல் கொடுத்ததை நினைத்து கட்சிக்கொள்கைகளை பயலுகள் என்னமா கடைப்பிடிக்கிறானுகள் என்று சந்தோசப்பட்டுக் கொண்டார். அவரது கண்களில் கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

altஅனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒண்றியத்தினால் கடந்த 24 ம் திகதி பேராதனையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் 05 வது நாளான இன்று நண்பகள் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தை வந்தடைந்தது.

 

alt

சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளார் ஜுட் பர்னாந்து புள்ளே தனது உரையில் இந்த நாட்டு குடிமக்களை சிங்களவர்தமிழர்முஸ்லீம்கள் என்று பிரித்து வைத்து ஆள்வதே இவ்வளவு காலமும் இந்த நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் அரசாங்கங்களின் நோக்கமாக இருக்கிறது. 

இந்தப் பகிரங்க அழைப்பு என்பது, மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுதல். பரஸ்பரம் எதிர்த்தரப்பு இனவாதத்தைக் காட்டி அரசியல் செய்வதற்கு முரணாக, சொந்த இனத்தின் இனவாதத்தை முறியடிக்கும் போராட்டம். 1948 க்குப் பின், முதன்முதலாக இனவாதத்தை முறியடிக்கும் அறைகூவல் விடப்பட்டு இருக்கின்றது. பிரதான முரண்பாடு சார்ந்து புரட்சிகரமான அரசியல் வரலாற்றுக்கு, முதல் காலடி எடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் இந்த முயற்சியுடன், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாமும் இந்த சவால்மிக்க பாதையில் இணைந்து கொண்டுள்ளோம். அரச இனவாதத்தை மட்டுமல்ல சிறுபான்மை இனம் சார்ந்த இனவாதத்தை முறியடிக்கும் இந்த சவால்மிக்க பணியில், அனைவரையும் ஒன்று திரளுமாறு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இதன் மூலம் பகிரங்க அழைப்பை விடுகின்றது.

இந்தப் பகிரங்க அழைப்பு என்பது, மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுதல். பரஸ்பரம் எதிர்த்தரப்பு இனவாதத்தைக் காட்டி அரசியல் செய்வதற்கு முரணாக, சொந்த இனத்தின் இனவாதத்தை முறியடிக்கும் போராட்டம். 1948 க்குப் பின், முதன்முதலாக இனவாதத்தை முறியடிக்கும் அறைகூவல் விடப்பட்டு இருக்கின்றது. பிரதான முரண்பாடு சார்ந்து புரட்சிகரமான அரசியல் வரலாற்றுக்கு, முதல் காலடி எடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் இந்த முயற்சியுடன், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாமும் இந்த சவால்மிக்க பாதையில் இணைந்து கொண்டுள்ளோம். அரச இனவாதத்தை மட்டுமல்ல சிறுபான்மை இனம் சார்ந்த இனவாதத்தை முறியடிக்கும் இந்த சவால்மிக்க பணியில், அனைவரையும் ஒன்று திரளுமாறு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இதன் மூலம் பகிரங்க அழைப்பை விடுகின்றது.

இன்று அதிகாலை அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியத்தின் செயற்பாட்டு உறுப்பிணர்களான ஜானக ஏக்க நாயக்க மற்றும் சிசித் பிரியங்கர ஆகிய இருவரும் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட வாகன விபத்து என தாம் சந்தேகிப்பதாக அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது தோழமை அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவை வளரக்க, பிளவுகளை நீக்கும் முகமாக, உழைக்கும் மக்களை இனப்பாகுபாட்டிற்கு எதிராக போராடும் முகமாக சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.

இனவாதிகள் எவரும் இனப்பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை.

எமது தோழமை அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி, உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவை வளரக்க, பிளவுகளை நீக்கும் முகமாக, உழைக்கும் மக்களை இனப் பாகுபாட்டிற்கு எதிராக போராடும் முகமாக சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.

இனவாதிகள் எவரும் இனப்பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை.

இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காண்பதென்பது சாத்தியமற்றது என்று கூறுகின்ற இனவாதமும், இனவாத சிந்தனையும் தான் இன்று சமூகத்தில் புரையோடி நிற்கின்றது. இனவாதிக்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தும், பரீட்சிக்கப்படாத நடைமுறை இன்னமும் எம்முன் இருக்கின்றது.

இனவொடுக்குமுறையும் பேரினவாதமும் தலைவிரித்தாடும் எம் தேசத்தில் இனவாதிகளையும் ஒடுக்குமுறையாளர்களையும் தோற்கடிக்க இன, மத பேதமின்றி மக்களை அணித்திரட்டி போராட புறப்பட்டிருக்கும் சமவுரிமை இயக்கத்தினருடன் கைகோர்த்து சமவுரிமையை வென்றெடுக்க போராடிட விடுக்கும் அறைகூவல் இது .

altகல்வித்துரையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு தருமாறு கூறி கன்டியிலிருந்தும் காலியிலிருந்தும் ஆரம்பமான நடைபயணம் இன்று மூண்றாவது நாளை எட்டியுள்ளது.சுதந்திரக் கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் கன்டியிலிருந்து கொழும்பிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யபட்டிருந்த நடைபயணம் மூண்றாவது நாளான இன்று அம்பேபுஸ்ஸவிலிருந்து ஆரம்பமாகிறது.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 25

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும், ஜனநாயகமும்

ஒரு நாட்டில் வர்க்கக் போராட்டத்தை தொடர மறுப்பதுதான், மார்க்சியத்தின் முதன்மையான அரசியல் விலகலாகும். இது புரட்சி நடக்காத நாட்டிலும் சரி, நடந்த நாட்டிலும் சரி இதுவே அடிப்படையான கோட்பாட்டு ரீதியான விலகலாகும். லெனின் “இடதுசாரி கம்யூனிசம் ஒரு குழந்தைப் பருவத்தின் கோளாறு” என்ற நூலில் “நடைமுறைகளால் எழுப்பபப்பட்ட பிரச்சனைகளுக்குத் தத்துவம் விடைகாண்டாக வேண்டும்” என்றார்.

 

altகடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டாரவை இன்று பினையில்  விடுதலை செய்யுமாறு  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றாம் உத்தரவிட்டது. அனைத்து பல்கலைக் கழக மானவர் ஒன்றியத்தினால்  எதிர்வரும் 28ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதாயிருந்தால் பிணை வழங்குவதை தாம் எதிர்க்கமாட்டோம் என போலிஸார் கூறிய போதிலும்  நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சீவ பண்டார கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்களது போராட்டங்களையும் அச்சுறுத்தி அடக்கியொடுக்கும் முயற்சியேயாகும். இத்தகைய பொலீஸ் அடக்குமுறையினை ஏவியுள்ள அரசாங்கத்தின் பாசிசப் போக்கினை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கல்விச் சமூகமும் பொது மக்களும் கண்டுகொள்ள வேண்டும். அதேவேளை பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதியான சஞ்சீவ பண்டார கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE