Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி


இன்றைய பொருளாதார அமைப்பில் சமூகத்தைப் பற்றிய ஆய்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலக அரசியலை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் உருவாக்கும் நிறுவனங்கள் ஊடாக ஆய்வினை செய்கின்றனர். நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்கள் களஆய்வு என்ற பெயரில் பற்பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்கின்றனர்.

சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களுடன் ஒரேயொரு அடிப்படையான நிபந்தனையுடன் இணைந்து போராட முடியும். இனவொடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுபவர்களாக இருந்தால், அவர்கள் அப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பவர்களாக இருந்தால், முதலில் நாம் ஆதரிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அவர்கள் முன்வைத்து செயல்படுத்துபவர்களாயின், இணைந்து போராடமுடியும். இதை நிராகரிப்பதற்கு என முன்வைக்கப்படும் எந்த அரசியல் தர்க்கமும் அடிப்படையற்றவை.

கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.


முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த வேளையில் உலக நாடுகளின் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினர்களும் தமிழர்கள் பக்கமாக தாம் இருப்பதாக பாங்கு செய்தனர். மக்களும் தமக்கு ஆதரவாக இந்த மேற்குலக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் குரல் கொடுக்கின்றார்கள், யுத்த நிறுத்தம் வரும், ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்பியிருந்தனர். ஆனால் கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவிக்க விட்டு விட்டு, வெறும் அறிக்கைகளையும் பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளையும் கொடுத்து, தாம் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதாக பாசாங்கு பண்ணிய படி, இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.

தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான கொடூரச் சுரண்டலுக்கும் ஏதேச்சதிகார அடக்கு முறைகளுக்கும் மட்டுமன்றி  தேசிய இனங்ககளின் சிறைச்சாலையாக விளங்கிய ரசியப் பேரினவாத ஒடுக்குமுறைக்கும் எதிராக வெடித்தெழுந்து வெற்றி பெற்றதே மாமேதை லெனின் தலைமையிலான 1917 ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியாகும் அதிலிருந்து எழுந்த அதிர்வலைகள் இன்றுவரை உலகம் பூராவும் எதிரொலித்தபடியே இருந்து வருகின்றன.

13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.

அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓய சிங்க கனுவ பள்ளிவாசலும், மதரஸா மதக்கல்வி நிறுவனமும் 26.10.2012 இரவு 10 மணியளவில் இன-மதவாத வெறிக்கும்பலால் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மீது வன்முறை சார்ந்த பேரினவாதிகளின் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் மகிந்த பாசிச அரசின் ஆசியுடன் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் மூலம் இனங்களிற்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும், அரசினது தொடர்ச்சியான செயற்பாடாகவே இது உள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓய சிங்க கனுவ பள்ளிவாசலும், மதரஸா மதக்கல்வி நிறுவனமும் 26.10.2012 இரவு 10 மணியளவில் இன-மதவாத வெறிக்கும்பலால் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மீது வன்முறை சார்ந்த பேரினவாதிகளின் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் மகிந்த பாசிச அரசின் ஆசியுடன் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் மூலம் இனங்களிற்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும், அரசினது தொடர்ச்சியான செயற்பாடாகவே இது உள்ளது.

அந்த நாளைய இயக்குனர் கோபாலகிருஸ்ணன் தனது படங்களிற்கு "உயிரா மானமா", "குலமா குணமா", "பணமா பாசமா" என்று பெயர் வைப்பார். மானம், குணம், பாசம் தான் படத்தின் இறுதியில் வெல்லும் என்பதை படம் பார்க்கப் போகும் சிறுவர்களும் அறிவார்கள். ஆனால் முஸ்லீம் மக்களிற்காகவே தமது  உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்திருப்பதாக கூறும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள் மகிந்துவா, மக்களா என்ற கேள்விக்கு மகிந்து தான் எமது இறைவன் என்று மறுமொழி சொல்லியிருக்கிறார்கள். எல்லா வெற்றியும் மகிந்துவிற்கே என்று அடிமைசாசனம் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள்.

இலங்கையில் காணாமல்போனவர்களின் 22 வது- தேசிய ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கொழும்பின் புறநகர்ப்பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்தது.

ஒடுக்கபட்ட மக்களின் 66- அக்டோபர் 21 எழுச்சி…..
 
தமிழ் மக்களின் ஆண்டாண்டுகால சமூக வாழ்வியலில் "இரண்டு விதமான தமிழர்கள்" வாழ்ந்து வந்தார்கள் என்பதே வரலாறு. இதை ஒடுக்கும் தமிழ் சமூகமாகவும், ஒடுக்கப்படும் தமிழ் சமூகமாகவும் வகுக்கமுடியும்.  இதை வர்க்கத்திற்கு ஊடாகவும், சாதியத்திற்கு ஊடாகவும் காணமுடியும். தமிழ் மக்கள் மத்தியிலான அடக்குமுறை கொண்ட சாதியத்தின் வீரியத்தை ஆண்ட பரம்பரையின் பிதாமகன் நாவலருக்கு ஊடாக காணமுடியும்.

1917 ஒக்டோபர் புரட்சியும், 1966 ஒக்டோபர் 21 எழுச்சியும்

பகிரங்க  கருத்துரையும்

திறந்த கலந்துரையாடலும்

28-10-2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு

 கட்சி பணிமனை

405 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பை இந்திய அரசு பொருட்படுத்தாதபடியால் நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்'

தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் இலங்கையின் வடக்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன.

இந்தியாவில் கூடங்குளம் பிரேதசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்ட இயக்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் துண்டுப் பிரசுரங்கைள, இலங்கை பொலீசாரின் பலத்த கண்காணிப்பு மற்றும்  நெருக்கடிகளிற்கு மத்தியில் விநியோகித்தனர்.

"ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே" என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துகின்றது இந்தச் செய்தி.

இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பாம்புகள், வெடிப்பொருட்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருதாகக் கூறுகின்றார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE