Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

altதமிழ் நாட்டின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாக கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கம் கூறுகிறது. மேற்படி இயக்கத்தின் அறிமுக நிகழ்வு நிகழ்வுக்காக நேற்று (20) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது இந்த விடயம் தெரிய வந்தது.


தென்னிந்தியாவில் இலங்கைக்கு  மிக அருகில் கூடங்குளம்  பிரதேசத்தில்  நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  அணுவுலைகள் இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இரு நாட்டின் சூழலுக்கும் பெரும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது. அணு உலை விபத்துக்கள்  ஏற்படுத்திய அழிவுகள் நினைவுகளை கடந்து பரம்பரை பரம்பரையாக தாக்கங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான அழிவுகளில் இருந்து எம் எதிர்கால பரம்பரையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். ஏழை விவசாயிகளின், மீனவர்களின், தொழிலாளர்களின் நலன்களிற்கெதிராக செயற்பாடுகள் மனிதாபிமானத்தை கொண்டிருப்பதில்லை. மில்லியன் கணக்கான பிராந்திய மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் அபாயகரமான மனிதாபிமானமற்ற மிலேச்ச தனமான கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக போராட்டம் முன்னெடுக்ப்பட வேண்டியது அவசியமானதாகும்.


நீண்ட கொடூரயுத்தமானது பல பேரழிவுகளை விளைவித்திருக்கிறது. குறிப்பாக மக்களின் பொருளாதார வாழ்வின் அடிப்படையைச் சிதைத்து விட்டுள்ளது. அதன் நெருக்கடியில், அச் சுமையில் வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு நிவாரணப் பணியென்பது சற்று ஆறுதல் அளிக்கும் ஒரு விடயமாகும்.

இவற்றுக்கான நிவாரண வழங்கிகளாக புலம்பெயர்ந்தோர் மத்தியில் காளாண்கள் போல் பல தொண்டர் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. பல்வேறு வட்டங்களைச் சார்ந்த  தரப்பினர் இதன் ஏற்பாட்டாளர்களாக உள்ளனர். இவர்களில்  விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியவர்களாக காணப்படுபவர்கள். எவரெனில் தம்மை மாக்சியர்களாகவும், ஜனநாயக சக்திகளாகவும், முற்போக்காளர்களாகவும், அரசியல் அடையாளம் கொண்டவர்களாகவும், பெருமை பேசுபவர்களேயாகும்.

முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தன்னார்வத்  தொண்டர் நிறுவனங்களை தமது ஆட்சியின் பொருளாதார நெருக்கடிகளைத் தணித்து வைப்பதற்காக கையால்வதும். அத்துடன் தாமும் பல்வேறு பெயர்களில்  இது போன்ற நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டும் மொத்தத்தில் எல்லாவற்றையும் ஒன்று திரள ஓடவிட்டுச் சிறப்பாகவே  பயன்படுத்துகின்றனர்.

இஸ்ரேலிய சியோனிச அரசால் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் காசாவில் வாழும் பலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்  கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, உலக நாடுகள் எங்கும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றார்கள். குறிப்பாக இஸ்ரேலின் வீதிகளில் இறங்கி யூத இன மக்கள் தாக்குதலைக் கண்டித்து தமது அரசுக்கு எதிராக போராடுகின்றனர்.


இதனை விடவும் படுமோசமான தாக்குதலை இலங்கை அரசு வல்லரசுக்களின் ஆசீர்வாதத்துடன் மேற்க்கொண்டு இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நடத்தியது. அந்த வேளையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை தவிர வேறு எந்த நாட்டு மக்களும் பெரிதாக வீதிகளில் இறங்கிப் போராட முன்வரவில்லை.

altசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை பார்க்கும்போது, தனியார் துறையில் மட்டுமல்லாது அரசாங்கத் துறையிலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது, என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மக்களிற்காக போராடி மடிந்தவர்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்வார்கள். அவர்களின் போராட்டங்களை தொடர்வதும், அவர்களின் செய்திகளை அடுத்த கட்டங்களிற்கு, அடுத்த தலைமுறைகளிற்கு எடுத்துச் செல்லுவதுமே அவர்களிற்கான அஞ்சலியாக அமையும். அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் வெறும் சடங்காக செய்யப்படுபவை எந்த விதமான அர்த்தமும் இல்லாதவை. இளையராஜா கனடாவிற்கு இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக கார்த்திகை மாதம் வருகிறார் என்றதும் புலம்பெயர் புண்ணக்குகளின் தேசபக்தி உச்சத்திற்கு போய்விட்டது.

இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை  நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர்ந்த புத்திஜீவிகளின் விவாதத்திற்கான சுவாரசிய கருப்பொருளா...?

சுரண்டல், ஒடுக்குமுறை, ஏமாத்து, சுத்துமாத்து, ஸ்பெசலாக ஏகாதிபத்தியம் மற்றும் உலக மயமாக்கல் போன்றவற்றை புரிந்து கொள்ள நாங்கள் பேராசிரியர்களாகவோ இல்லை பல்கலைகழகம் சென்றவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. நாம் சராசரி மனித வாழ்க்கையிலேயே இவற்றை அனுபவித்து வருகின்றோம். உதாரணமாக சிலர் தமது வாழ்வு முறையில் ஒரு முழுமையான பிற்போக்குவாதியாக வாழ்ந்தாலும் தமது அறிவு நிமித்தம் ஒரு கலந்துரையாடலில் தான் ஒரு பரிபூரணமான முற்போக்குவாதியாக காட்டிக்கொள்ள முடியும். அதே நேரம் ஒரு பாமரன் அல்லது ஒரு அப்புராணி தன் நிஜ வாழ்வில் முற்போக்காக வாழ்ந்தாலும் தனக்கு முற்போக்காக வெளிப்படுத்தத் தெரியாத காரணத்தால் பிற்போக்கு வாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றான்.

altபுதன்கிழமை லட்சக்கணக்கான ஐரோப்பிய மக்கள், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டும் அரசாங்கங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தெற்கு ஐரோப்பிய நாடுகளின் அனைத்து நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணிகளை நடத்தினார்கள். நூற்றுக் கணக்கான பேர் போலீசுடன் மோதி கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும் குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

கடந்த பத்தாண்டுகளில் அரசு, புலிகளும் இது போன்ற படுகொலைகள் மூலம், பல நூறு கொலைகளை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இது போன்று பல்வேறு இயக்கங்களும் கூட செய்திருக்கின்றன. இது தான் முரண்பாடுகளை தீர்க்கும் அரசியல் வழிமுறையாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையைக் கூட யார் கொலையாளி என்று தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்ற, மூடிமறைத்த அரசியல் பின்புலத்தில் தான் இவை நடந்து வந்திருக்கின்றது. இதை யார் செய்து இருப்பார்கள் என்பதை காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தி தெரிந்துகொள்ள வேண்டியளவுக்கு வரைமுறையின்றி நடந்து வந்திருக்கின்றது. துயரம் என்னவென்றால், இந்த வழிமுறையை எதிரி பயன்படுத்தி விடுவதுதான். இந்த அரசியல் பின்புலத்தில் இது போன்ற கொலைகள், யார் செய்தது என்ற விடை காண முடியாத சந்தேகங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.

ஆட்சியில் முழு அதிகாரத்தினையும் தமது கைகளில் வைத்துள்ள ராஜபக்ச சகோதரர்கள்; தாம் மக்களில் இருந்து அன்னியப்படுகின்ற போது மக்களை தூண்டி விடுவதன் மூலம் அரசியல் லாபம் பெறுகின்றனர். இதனால் பெருதேசிய சிந்தனைகளை முன்னோக்கி நகர்த்தும் நிகழ்வுகள் பல்வேறு முனைகளில் நடந்தேறுகின்றன. இதன்விளைவாக இனங்களுக்கிடையாயேன முரண்பாடுகளையும், சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு ஆளும் கட்சி தொடர்ச்சியாக செயற்படுகின்றது. இதனை புரிந்து கொள்வதன் மூலம் தொடர்ச்சியான பல நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தில் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு இன்று சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக சுலோகங்களை தாங்கியவாறு வருகை தந்த ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய மதுபான சாலை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும்; குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

அரசு எதிர்காலத்தில் மகிந்த சிந்தனையை மீறி செயற்படின் அரசுடனான உறவு முடிவுக்கு வருமென அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிகெல உறுமய மகிந்தாவிற்கு எச்சரிக்கை செய்கின்றது.

கசாப்புக்கடை நடாத்தும் இரு நண்பர்களுக்கிடையில் கொள்கை முரண்பாடு வந்தால் எது நடக்குமோ எவ்வெச்சரிக்கை கொண்ட சமிக்கையைக் காட்டுமோ, அதுபோன்றதொரு எச்சரிக்கையைத்தான் ஜாதிகெல உறுமயவின் உறுமலுக்கூடாக காணமுடிகிறது.

சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இனவெறி கொண்ட ஆகப் படுமோசமான, படுபிற்போக்கு அரசியல் செயற்பாட்டகத்தின் மொத்த உருவகம்தான் ஜாதிகெல உறுமய. அதை அரவணைத்த அரசியல்தான் மகிந்த சிந்தனை.!

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறதுஇலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது.

1983 யூலை 25 அன்று 53 போராளிகளை இனவாத காவலாளிகளும், கைதிகளும்  இனவாதத்தினால் உந்தப்பட்டு தாக்கி கொலை செய்தனர்.  இது அரசியல் ரீதியான கிளர்ச்சியினால் ஏற்பட்ட இன முரண்பாடுகளை முன்வைத்து நடத்தப்பட்ட தாக்குதல். இவ்வாறே இந்த வருடம் வவுனியாவில் சிறைக்கைதிகளை கண்மூடித்தனமாக தாக்கியது இந்த இனவாதம். வவுனியாவில் மேற்கொண்ட தாக்குதலால் கைதிகளால் நடத்தப்பட்ட அரசியல் கோரிக்கை கொண்ட போராட்டம் முடக்கப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE