Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ராஜபக்ஷ சர்வாதிகாரத்திற்குப் பதிலாக இன்னொரு சர்வாதிகாரத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதெனவும் ஜனநாயகத்திற்கான போராட்டம் ஒரு கெட்டதுக்குப் பதிலாக இன்னொரு கெட்டதை தெரிவு செய்யாமலிருப்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி சுட்டிக் காட்டுகிறது. அந்தக் கட்சியின் பிரச்சரச் செயலாளர் புபுது ஜயகொட இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டடவாறு கூறினார். புபுது ஜயகொட அவர்கள் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,

தோழர் லலித் குமார் வீரராஜ் மற்றும் தோழர் குகன் முருகானந்தம் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னர் கடத்தப்பட்டார்கள். அது 2011செப்டம்பர் 9ம் திகதி. அவர்கள் இருவரையும் குறித்து அரசாங்கம் பல்வேறு சமிக்ஞைகளைக் காட்டியது. ஆனால், இது வரையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

காணாமல் போனோருக்காக போராடியதால் காணமல் போனவர்கள் தோழர்கள் லலித், மற்றும் குகன் !!!

தோழர்கள் லலித், மற்றும் குகன் காணமல் போய் இன்று ஒரு வருடமாகி விட்டது. எத்தனையோ கடத்தல்கள், காணமல் போதல்கள் நிறைந்த எம் மண்ணில் தான், இவர்களின் கடத்தலும் காணமற் போதலும் நடந்து இருக்கின்றது. ஆனால் இந்தக் கடத்தல் வித்தியசமானது. அந்த வகையில்

*கடத்தப்பட்டு காணமற் போன தமிழ் மக்களுக்காக போராடியதால், தோழர்கள் லலித்தும் குகனும் காணாமல் போனார்கள்.

யாழ்பாணத்தில் பல்கலைகழக மாணவர் ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவலொன்று, இன்று (08.12.2012) இலங்கை நேரம் பிற்பகல் 4 மணியிலிருந்து, தலைநகர் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியால் உள்ளதென தலைநகர ஊடக வட்டாரங்கள் தெரிவிகின்றன. அத்துடன் இத்தகவல் இலங்கை அரசின் பயங்கரவாத ஆய்வு நிறுவனமாக TID (Terrorism Investigation Department) யினாலேயே ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தியை நாம் இங்கு பதியும் வரை மேற்படி தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

வட இலங்கையில் இருந்து பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிசாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்து அப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியல் பிரச்சினைகளை வலுக்கரம் கொண்டு நசுக்க அதிகாரிகள் முனைகிறார்கள் என்றும், பொய்யான காரணங்களைக் காட்டி ஆட்களைக் கைதுசெய்கின்றனர் என்றும் ஆசிரியர்கள் இக்கடித்தத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.

தோழர்கள் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு ஒருவருடமாகிறது. இதை கண்டித்தும், அவர்களின் விடுதலை கோரியும், இன்று யாழில் நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பாரிய போராட்டம் திங்கட்கிழமை 10.12.2012, அன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பில் நடைபெறுகிறது. இதை மக்கள் போராட்ட இயக்கம் ஒழுங்கு செய்துள்ளது. அனைத்து மக்கள் நலம் சார்ந்த சக்திகள், இனஒடுக்கு முறைக்கு எதிரானோர், ஜனநாயகப் போராளிகள் என அனைவரையும் இந்த ஆர்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறு அழைக்கிறது, மக்கள் போராட்ட இயக்கம்.

யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் படுமோசமாக உள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. அங்கு நிலவிவரும் இனமறியா அச்சம் காரணமாக, யாழ் குடாநாட்டில் சமூகநிகழ்வுகள் அனைத்தும், மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைபெறுவதாக உணரமுடிகிறது. 2009  தை முதல்   இறுதி  யுத்த நாட்களில் இருத்தது போன்ற  இனம் புரியா அச்சமும், பயமும் சோகநிலையும் யாழ் குடாநாடு முழுவதும் பரவியிருப்பதாக உளவளத்துறையினர் தெரிவிக்கின்றனர். பணிகள் முடிந்த பின் விரைவாக யாழ் நகரை விட்டு வெளியேறித் தமது சொந்தஇடங்களுக்கு விரைந்து  செல்லும் பரபரப்பு யாழ் பஸ்நிலையங்களில் காணக் கூடியதாகவுள்ளது.   இதனால் பிற்பகல் 6 மணிக்கு முன்பே நகரம் வெறிச்சோடி விடுகிறது. மொத்தத்தில், யுத்தின் பின்னாக சிறுது சிறிதாக இயல்புநிலைக்குத்  திரும்பிய யாழ்பாணச் சமூகம்,  இன்று திரும்பவும் பாரிய சமூக மனஅழுத்தத்தை சந்தித்துள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினர் தமிழ் மக்களை  குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து  அவர்களின் வீட்டு சுவர்களில் தொங்க விட்டிருப்பதுடன் இன்னொரு பிரதியை தம்முடன் எடுத்துச் சென்றும் உள்ளனர்.

இந்த புகைப்படங்களுக்கு பாதுகாப்பு படையினரால் விசேட இலக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக GPRS தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று யாழ்ப்பாணத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் மக்கள் பீதியுடன் இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

மாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல.

altயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆறு பேர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் மற்றும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்களாக ஆறுபேர் இன்று (06) மாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனக் கூறி இலங்கையின் வடக்கே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் BBC இக்கு தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து "பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக" குற்றம்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் 10 பேர் புதனன்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.

மக்களுக்கான விடுதலை அரசியலுக்குத் தடை?

வடபகுதியில் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் மக்கள் போராட்ட அரசியலுக்குத் தடை. இது தான் இலங்கையின் நீண்டகாலச் சூழல். எனினும் இது இன்று இன்னும் இறுக்கமடைந்துள்ளது. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனரென உலகிற்கு பறையடிக்கின்றது இந்த அரசு.

சிங்கள - தமிழ் என்பதுடன், இதற்குள்ளே முஸ்லீம் மக்கள் என்பதான பிரித்தாளும் ஆட்சியை நடாத்தி வரும் இந்த இனவாத அரசு, இன ஐக்கியத்தை தனது வாய்ப் பேச்சாக்கி, தொடர்ந்தும் இனங்களைப் பிரித்தாள்கின்றது. இதற்காக சாதாரண மக்களுக்குப் புரியதாத புதிய தந்திரங்களை தனது அரசியலாக முன்வைக்கின்றது. இதற்குள்ளேதான் 13வது திருத்தச் சட்டத்தை முன்பு கொண்டு வந்ததும், தற்போது அதனை நீக்கப் போகிறோம் என்பதுமாகும்.

இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு "நிகழ்ச்சிநிரல்" செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.

ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் இணையங்களில் "பெரிதாக” அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், "நிர்வாக சீர்கேடு, தலையீடு" எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாணவர்களின் கைது, பெண் மாணவர்களின் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்தமை ஆகியவற்றை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 

இன்று  9பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தனர். 

altஎவ்வித காரணமும், அறிவித்தலும் இன்றி 9பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ், வன்னி, மட்டகளப்பு தாண்டி சிங்கள பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையினங்கள் சார்ந்து ஓரு போராட்டம் நடப்பது என்பது குறிப்பாக இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமான ஒரு வரலாற்றின் திருப்புமுனையாகும்!.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் அசாத்திய சாகசங்களில் மட்டும்தான் சிங்கள மக்கள் திழைத்திருப்பார்கள், இதனை மீறி இந்த தசாப்தத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணப்போக்கிற்கு அல்லது இந்த அபிப்பிராய சிகரத்தின் அத்திவாரத்தின் முதலாவது கல் அகற்றப்பட்டுவிட்டது.

இலங்கையில் இனவாதம், தேசியவாதம், மதவாதம் என்பன தாண்டி “மானிடம்” என்னும் பெருவிருட்சத்தின் முளை ஒன்று முகிழ்ந்திருக்கிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE