ராஜபக்ஷ சர்வாதிகாரத்திற்குப் பதிலாக இன்னொரு சர்வாதிகாரத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதெனவும் ஜனநாயகத்திற்கான போராட்டம் ஒரு கெட்டதுக்குப் பதிலாக இன்னொரு கெட்டதை தெரிவு செய்யாமலிருப்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி சுட்டிக் காட்டுகிறது. அந்தக் கட்சியின் பிரச்சரச் செயலாளர் புபுது ஜயகொட இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டடவாறு கூறினார். புபுது ஜயகொட அவர்கள் தொடர்ந்து விளக்கமளிக்கையில்,
தோழர் லலித் குமார் வீரராஜ் மற்றும் தோழர் குகன் முருகானந்தம் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னர் கடத்தப்பட்டார்கள். அது 2011செப்டம்பர் 9ம் திகதி. அவர்கள் இருவரையும் குறித்து அரசாங்கம் பல்வேறு சமிக்ஞைகளைக் காட்டியது. ஆனால், இது வரையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.