Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பங்கள் தமது உறவுகளைத் தேடி தொடர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்றன

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தமது உறவுகளைத் தேடி தொடர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

alt"கைது செய்யப்பட்ட நான்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலையானால் தான் யாழ்.பல்கலைக்கழகம் மீள இயங்கும் என்றால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.''

இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்றுத் தெரிவித்தார். இராணுவ அதிகாரி ஒருவரின் இத்தகைய கருத்தால் பல்கலைக்கழக சமூகம் அதிர்ந்து போயுள்ளது. எதிர்ப்பதற்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையையும் மிரட்டி பணியவைக்கும் இராணுவ நடவடிக்கை இது என்று பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

ஒரு பேப்பர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் "நீங்களுமா நுஃமான்" என்ற கட்டுரையை காலச்சுவட்டிலும், "அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர்" என்ற கட்டுரையை தனது ஒரு பேப்பர் பத்திரிகையிலும் எழுதுகிறார். இரண்டுமே பேராசிரியர் நுஃமான், காலச்சுவட்டிற்கு எழுதிய புலிகள் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக்கடலில் குதித்து விட்டனர் என்ற கட்டுரை குறித்த எதிர்வினைகள் தான். காலச்சுவட்டில் அவர் புலிகளைப் பற்றி பின்வரும் விமர்சனங்களை வைக்கிறார்.

படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியது.

அதேவேளை, அந்த மாணவர்கள் புனர்வாழ்வுப் பயிற்சி முடிந்தபின்பே விடுதலை செய்யப்படுவார்கள் என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறியிருக்கின்றார்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 27

ஸ்டாலினை நிராகரிக்கும் கோட்பாடு, மார்க்சிய உள்ளடக்கம் எதுவுமற்ற வெற்றுப் பிதற்றலே.

ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து பல வண்ணக் கோட்பாடுகளை இடதுசாரி பெயரில், மார்க்சியம் என்ற பெயரில், மார்க்ஸ்சுக்கு விளக்கம் கொடுத்து வந்த பலவற்றையும், கோட்பாட்டு ரீதியாகவும், நாம் கேள்விகளை உள்ளடக்கி விடுவதன் மூலம் இது சுயமான தேடுதலை இதன் மேல் ஏற்படுத்தும். இதை அடிப்படையாக கொண்டு அனைவரின் சிந்தனைக்கும் உள்ளாக வேண்டிய, யாரும் கருத்தின்றி தப்பிச் செல்ல முடியாத சில முக்கியமான பிரச்சனைகளை எழுப்புவது அவசியமாகின்றது.

'பொது" என்று சொல்லிக் கொள்ளும் ஏதோ ஒரு'சேனா" சுற்றித் திரிவதாக நாங்கள் சொன்னோம். அது மட்டுமல்ல பைத்திய நாய்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் நாங்கள் சொன்னோம். அப்படி சொன்ன பிறகு, 'ஜனரல" அலுவலகத்துக்கு ஓய்வே இல்லை.

'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அந்த பிக்குவுக்கு ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அது பௌத்த விரோத பத்திரிகையா?" என்றெல்லாம் கேள்விக் கணைகள் அலுவலகத்துக்கு வந்தன. நாங்கள் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். நாங்கள் எந்தவொரு மதத்தையும் தூக்கிப் பிடிக்கும் பத்திரிகையல்ல. அதேபோன்று மிதிக்கும் பத்திரிகையுமல்ல. ஆனால், இனவாத மதவாத நச்சுப் பாம்புக்கு எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதற்கு எதிரிகள்தான். இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டுக்கு இழைத்த தீங்குகளை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 'ஜனரல" நினைக்கிறது. அதற்காகத்தான் 'ஜனரல" எழுதுகிறது. எந்தவொரு சேனாவாலும் அதனை நிறுத்த முடியாது. ஏற்கனவே கூறிய தொலைபேசி அழைப்புகளுக்கிடையில், "பதுளைக்கு வந்து முடியுமானால் உண்மையை எழுதுங்கள்" என்று வித்தியாசமான அழைப்பொன்று வந்தது. ஆமாம்! அது நல்லது! இதோ நாங்கள் பதுளைக்கு வந்து விட்டோம். அந்தப் பயணத்தின்போது நாங்கள் அறிந்துக் கொண்ட உண்மைகளை எழுதுவதற்கு இதோ தயாராகிவிட்டோம்!

பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வுமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படாதவரை அனைத்து பீடமாணவர்களும் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என மாணவர்கள் எடுத்துள்ள முடிவு முற்றிலும் நியாயமானதாகும். அம்முடிவுக்கு பலபல்கலைக்கழக சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் பலவகைப்பாதிப்புகளை பெற்றுநிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முடிவை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி வரவேற்கிறது.

உண்ட பின் ஆயாசத்தில் உப்பாயோ,

உறக்கமத்தின் கிறக்கத்தில் உவப்பாயோ,

'உங்களது' பகடைக்கு உருட்டாயோ

தவறி ஒருக்கால் உம் மென் கனவில் இனிப்பாயோ ,

வந்து போம் கணங்கள் பல வரும் போதும்

வந்தடையா என வீசியே எறிந்த மாந்தர் உள்ளம்

வருவதற்கினி மார்க்கமில்லை !

தமிழ் மக்களின் உரிமைகாக போராடப் புறப்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கும், மேற்கு தேசங்களுக்கும், இந்தியாவிற்கும், புலம்பெயர் சொத்துப்புலிகளின் சமிக்கைக்காக காத்துக் கிடக்கின்றனர். இந்த வேளையில் தமிழ் மக்களின் உரிமைக்காக தெற்கில் இருந்து யாழ் சென்று போராடிய 09.12.11 அன்று மாலை 05 மணியளவில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்காக மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண அமைப்பாளர் லலித் குமார் வீரரராஜூ மற்றும் குகன் முருகன் ஆகியோர் ஆவரங்கால் பிரதேசத்தில் உள்ள குகன் முருகனின் வீட்டிலிருந்து NP GT 7852 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போது கடத்தப்பட்டனர்.

altபயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 14 ஆம், 15 ஆம் திகதிகளிலும் யாழ். குடாநாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக இவர்களின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம உரிமை இயக்கத்தின் போராட்டக்குழுவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது இன்று கொழும்பில் புறக்கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னராக முதன் முதலில் சிங்கள உழைக்கும் வர்க்கத் தோழர்களினால் சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்கான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் பின்னால் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் செயல்பாட்டின் ஊடாக காணமுடிகின்றது.

குறிப்பு:

இலங்கை வெலிக்கடை மற்றும் ஏனைய சிறைச்சாலைகளில் மிக நீண்ட காலமாக விசாரணைகள் ஏதுமின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த ஒருவர் எழுதும் சிறைச்சாலைக் குறிப்புக்கள் இது தொடராக எமது இணையத்தளங்களில் வெளிவருகின்றது.

பொலீசாரின் விசாரணைப் பிரிவிலிருந்து கொழும்பு நீதவான் நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றேன். இவ்வளவு காலமும் விசாரணை கைதியாக இருந்த நான் அந்த நிமிடத்திலிருந்து நீதி மன்ற பொறுப்புக்கு மாற்றப்படுகின்றேன். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை நிருவாகம் என்னை பொறுபெடுக்கும் வரை நீதிமன்ற வளாகத்திலுள்ள செல்லில் அடைத்து வைக்கப்படுகின்றேன்.

அறுவைதாசனிற்கு இரவில் கால்கள் குறண்டி இழுத்து வலிக்கும். ஒரு அரைமணி நேரத்திற்கு உயிர் போகுற மாதிரி இருக்கும். புரண்டு,புரண்டு படுத்து கால்களை தடவி விட்டால் கொஞ்சம் குறையும். மனிசியை காலை பிடித்து விட சொல்லுவோம் என்று மெதுவாக சுரண்டி கூப்பிட்டான். முழிச்சிருக்கிற நேரம் முழுக்க ஸ்கைப்பிலே அலட்டிக் கொண்டு இருந்து விட்டு நித்திரை கொள்ளுற போது தான் என்ரை நினைப்பு வந்ததாக்கும், பேசாமல் படும் என்று யாழினி எரிந்து விழுந்தாள். அறுவைதாசனும் கூட்டாளிகளும் முன்பு தொலைபேசியில் அரசியல் கதைப்பார்கள். இப்ப விஞ்ஞான வளர்ச்சியில் ஸ்கைப்பில் ஒவ்வொரு இரவும் ஏழு, எட்டு பேர் கூடி உலகத்து பிரச்சனைகள் முழுக்க அலசி, ஆராய்ந்து கலைவார்கள். நாங்கள் செய்யிற ஆய்வுகள் எதுவும் இவளுக்கு விளங்குதில்லையே, எப்பவும் மண்டை கழண்டவங்கள் மாதிரியே நினைச்சுக் கதைக்கிறாள். அதுவும் நான் கால்வலியிலே காலை பிடிச்சு விட கூப்பிட்டால் இவள் என்னத்தை நினைச்சு கோபப்படுகிறாள் என்று கவலைப்பட்டான்.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்து, தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாக, பல்கலைகக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் இடையில் வெள்ளியன்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

புலம்பெயர் ஊடகங்களின் ஆணாதிக்க வக்கிரம்

புலம்பெயர் ஊடக வட்டாரத்தில், BBC தமிழ்சேவை தொடக்கம், தமிழினவாத புலிகளின் ஊடகங்கள் ஈறாக, அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" இணயங்கள் வரை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண் பிள்ளைகள், இலங்கை ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. அச் செய்தியை தமக்கு நம்பிக்கையான தகவலாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதாக மேற்படி ஊடகங்கள் கூறின. எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், மற்ற ஊடகங்களுக்கு ஒருபடி மேலே போய், ஐரோப்பாவில் அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" தமிழ் இணயமொன்று, "16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" எனச் செய்தி வெளியிட்டது. அத்துடன் "மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" என்ற தகவல், இலங்கையிலிருந்து சிங்களம் பேசும் தகவலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் எனக் கூறியது.

சமூகத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றார்கள். புத்திஜீவிகளின் வர்க்க நிலைப்பற்றிய பார்வையை கொடுக்கும் முகமாக மேற்கொண்ட தலைப்பின் கீழ் ஆராயப்படுகின்றது. அறிவுஜீவிகளின் வர்க்கப் பின்புலமும் அவர்கள் எவ்வாறு புதிய வர்க்கமாகவும் மாற்றம் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம். அறிவாளிகளின் பின்னால் இருக்கும் வர்க்கத்தின் சிந்தனையை பகுத்தறிவதும் முக்கியமானதாகும். சமூகத்தின் பொருளாதார அமைப்பு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறே சமூகத்தின் சிந்தனைகள் இருக்கின்றது. இதிலிருந்து தான் மனிதர்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE