Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்கா அவர்கள் இலங்கை ஜனாதிபதியால் நீக்கப்பட்டதாக் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவருக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டத்தை இலங்கை சட்டத்தரணிகள் தொடருவார்கள் என்று அவர்களுக்கான அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி K.S. ரட்ணவேல் கூறியுள்ளார்.

மரோக்கோ நாட்டை சேர்ந்த இணையப் பதிவாளர் காசிம்-எல்-காச்சாலி தனது நாட்டில் கொலை பயமுறுத்தலுக்குள்ளானார். ஏனென்றால் இஸ்லாமை விமர்சனம் செய்தார். அத்தோடு கடவுள் நம்பிக்கை அற்றவராகவும் அறியப்பட்டிருக்கிறார். தற்போது சுவிஸ்சில் அரசியல் தஞ்சம் கிடைக்குமென்று நம்புகிறார். இங்கும் (சுவிஸ்) அவர் பயமுறுத்தலுக்கு உள்ளானார்.

நீங்கள் ஒரு பிரபலமான பெயரைப் பெற்றிருக்கின்றீர்கள். அவர் கிறிஸ்துக்கு பின் 1111-ல் இறந்தது போன எல்-கச்ச்சாலி என்பவர். இஸ்லாமிய நம்ப்பிக்கையாளரும் ஒரு தத்துவவியலாளரும…!

பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.

உனதன்னையைத் தங்கையை

காமவெறியினில் குதறியும் புணர்வாயோ?

உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்

யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே!

நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்

உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்!

யாரோ யாரெவரோ?

 

எங்கெங்கு திரும்பினும் பெண்களுக்கெதிராய்

நடக்கிற கொடுமைகளுக்களவிலையோ?

உனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின்

பிரசவ வேதனை புரிகுவையோ?

நீயுன் தாய்க்கொரு சேய் தானோ ?

கொடூரமாய் இரும்புக்குழலினை நுழைத்து

அவள் யோனியைச் சிதைப்பாயோ?

இலங்கை பணிப்பெண்களுக்கு சவுதியில் பாதுகாப்பு கிடையாது.  ஆகவே ஏற்கனவே சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்களையும் உடனடியாக இலங்கை அரசாங்கம் திரும்ப அழைக்க வேண்டுமென உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சரோஜா சாவித்ரி போல்ராஜ் கூறினார்.

ஒரு சிறு பெண்ணை, வறுமையினால் வாழ வழி தேடி சின்ன வயதில் தாயைப் பிரிந்து பாலைவனத்திற்கு போனவளை கொலை செய்து, இஸ்லாமிய ஷரியா சட்டம் நீதியை நிலை நாட்டி கொண்டதாம் சொல்கிறார்கள் மதவாதிகள். எல்லாம் வல்ல அருளாளர்களின் சட்டங்கள், கருணை மிகுந்தவர்களின் திருமறைகள் ஒரு குழந்தையை கொலை செய்திருக்கின்றன. சாதாரண சட்டங்களின் படி பதினெட்டு வயது வராதவர்கள் தனியான இளம் வயதினருக்கான சட்ட விதிகளின் படி விசாரிக்கப்படுவார்கள். சிறுவயதினரின் பெயர்கள் கூட பெரும்பாலும் வெளிவிடப்படுவதில்லை. ஆனால் இறைவனாலும், இறைத்தூதுவர்களாலும் தரப்பட்டது என்று சொல்லப்படும் இந்த மதச்சட்டங்களினால் ஒரு சிறு குழந்தையைக் கொல்லலாம். கையை வெட்டலாம்.கல்லால் அடித்து கதையை முடிக்கலாம்.

புலிப்பூச்சாண்டியை உருவாக்கிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிந்துள்ளது. தன்னால் அழிக்கப்பட்ட புலி இருப்பதாக காட்டிக் கொள்கின்றது. புலி பூச்சாண்டியை காட்டுவதும், பிரிவினைவாதம் இருப்பதாக பிரச்சாரம் செய்வதும், இனவாதத்தினை தளரவிடாது பாதுகாப்பதில் அரசு குறியாக இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளமையும், அந்தத் தடை இந்திய மத்திய அரசாங்கத்தினால் நீடிக்கப்படுவதும் சரியானது என இந்திய தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புலிகள் மீதான தடை சரியானதா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது விசாரணைகளை நடத்தி வந்தது. இந்நிலையிலேயே, தனது விசாரணைகளை முடித்துக்கொண்ட தீர்ப்பாயம், தனது தீர்ப்பினை இந்திய வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தநைகரான பாரிஸில் குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் (Pkk) மூன்று பெண் செயற்பாட்டாளர்கள் சகீன் கன்சீஸ், லைலா சொய்லமேஸ், பிடான் டோகன் ஆகியோர் நேற்று இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சகீன் கன்சீஸ் குர்தீஷ் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தவர்களில் ஒருவர், பிடான் டோகன் குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) செயற்பாட்டாளர், லைலா சொய்லமேஸ் பிரேசிலைத் தளமாகக் கொண்டியங்கும் குர்தீஷ் தேசிய காங்கிரசின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ்-பருத்தித்துறை வீதியின் கரவெட்டி மாலுசந்தி பகுதியில் நடைபெற்றுள்ளது.

மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற மனித நேயம் கொண்ட முழு உலகும் எதீர்ப்பு தெரிவித்தது. 

ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள், நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.


பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இவர்கள்தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசஆதரவுக்குழு  ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்!

சவூதியில் மனிதாபிமானமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்ட ரிசான நபீக்கிற்கு அனுதாபம் தெரிவித்து விடுதலைக்கான பெண்கள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது  அந்த அறிக் கை வருமாறு:

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன.

சவுதியில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

றிசானா நபீக்கிற்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் உறுதி செய்துள்ளன. வழமையாக ரிசானா நபீக்கை சந்திப்பதற்கு செல்லும் இலங்கையை சேர்ந்த மருத்துவர் இன்று அவரை சந்திப்பதற்காக ரியாத்தில் உள்ள சிறைக்கு சென்ற போது, அங்கு இயல்பற்ற சூழ்நிலை ஒன்று தென்பட்டுள்ளது.

ரிசானாக்களின் வியர்வையும்

இரத்தமும் தசைகளும் பிழியப்பட்டு

மன்னர்களும்,

ஆளும்அரசதிகாரமும் கொலுவீற்றிருக்கும்

யமன்களின் தர்ப்பாரில்

வறுமையின் கதறலுக்கு சிரச்சேதம் செய்து

தீர்ப்பெழுதியிருக்கிறார்கள

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE