Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சம உரிமை இயக்கத்தினால்15-01-2012 அன்று யாழ் நகரில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியும் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து போராட்டம் இராணுவ போலிஸ் மற்றும் ஒட்டு குழுக்களின் அராஜகத்துக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிவில் உடைகளில் நின்ற அரச படைகளை சேர்ந்த கட்டாகாலிகளின் கழிவு எண்ணை வீச்சு மற்றும் அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கையெழுத்திட்டமை இராணுவ ஆட்சியின் மீதான மக்கள் எதிர்ப்பை தெளிவாக வெளிக்காட்டியது.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் இன்று யாழ் நகரில் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது. அவ்வேளை சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பகல் 11.45 மணியளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த மகஜரில் பெருமளவான மக்கள் ஒப்பமிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வேளை கடற்படை சீருடையில் வந்த சில "அரசகழிவுகள்" ஒப்பமிட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது கழிவு எண்ணெயை வீசிவிட்டு சென்றனர். "அரசகழிவுகளின்" எண்ணெய் வீச்சிற்கு பொதுமக்களும், ஓரிரு பத்திரிகையாளரும் இலக்காகினானார்கள்.

அந்தக்கால மீட்பாளர்:

யுத்தம் நடந்த காலத்தில் இந்த அரசாங்கமும், இதற்கு முன்பிருந்த அரசாங்கமும் அனைத்து அழிவுகளுக்கும் காரணமென்று யுத்தத்தைக் காட்டின. யுத்தம் நடப்பதனால் பொருட்களின் விலையைக் குறைக்க முடியாது, யுத்தம் நடப்பதால் மக்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுக்க முடியாது, சமூக நலன்புரிகளைக் கொடுக்க முடியாது யுத்தம் நடப்பதால். இவர்கள் அப்படித்தான் கூறினார்கள். இப்போது யுத்தம் முடிந்து விட்டதால், தமது இயலாமைக்கும் மக்களை மிதிப்பதற்கும் காரணமாக யுத்தத்தைக் காட்ட முடியாது. எல்.டீ.டீ.ஈ.இன் மீளெழுச்சி குறித்து செய்திகளைத் தயாரிக்க முயற்சித்தாலும், அது வெற்றி பெறவில்லை. ஆதலால் அரசாங்கம் இப்போது புதிய எதிரியைத் தேடிக்கொண்டுள்ளது. அந்த எதிரிதான் முஸ்லிம் மக்கள்! இப்போது அரசாங்கமும், எதிர்க்கட்சியில் இருக்கும் முதலாளித்துவக் கட்சியும், அவர்களின் அனுக்கிரகத்தைப் பெற்றுள்ள இனவாத அமைப்பும் சேர்ந்து முஸ்லிம் விரோதத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன.

யுத்தம் முடிவடைந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் சிவில் நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையும், வடக்கில் நடக்கும் இராணுவ நிர்வாகமும். இந்த இராணுவ நிர்வாகத்தின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறன. கடத்தல், காணாமலாக்கள், கொலை செய்தல், பயமுறுத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்று உதாரணங்களை கூற முடியும். அவற்றிற்கு மத்தியில் தமிழ் மக்களின் கலாச்சார உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இராணுவ பலவந்தத்தை பயன்படுத்தி வடக்கு மக்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் வெளிப்படையாகும்.

சம உரிமை இயக்கதின் தலைவர்கள் மீது இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் மற்றும் கழிவு எண்ணெய் தாக்குதல் சம்பந்தமாக முறையிட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அதன் தலைவர் ரவீந்திர முதலிகேயின் தனித்துவ அடையாளம் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிய வருகிறது.

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ள யாழ் பல்கலைக் கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யுமாறும், இராணுவ ஆட்சியை விலக்கிக் கொண்டு சிவில் நிர்வாகத்தை அதமுல்படுத்துமாறும் அரசாங்கத்தை வற்புறுத்தும் எதிர்பு பதாகையில் ஒப்பமிடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஒப்பமிட வந்த மக்கள் தடுக்கப்பட்டனர்,  பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் தடைகளை மீறி மக்கள் ஒப்பமிட்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று யாழ் நகரில் காலை 09:30 மணிக்கு நடைபெற்றது. இவ்வேளை போராட்டம் பத்திரிகையும் விற்பனை செய்யப்பட்டது.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும், கடத்தல் மற்றும் கைதுகளை நிறுத்த கோரியும் சம உரிமை இயக்கத்தினரால் கையெழுத்து போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்த கையெழுத்து போராட்டம் இன்று (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்க உறுப்பினர்களது வாகனத்தின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தும் முகமாக கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையிலேயே இவர்களது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தினர்மீது சற்று முன்னர் ஒயில் வீசப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களும் ஒப்பமிட கலந்து கொண்ட மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் பொலிசார் பாதுகாப்பபு கடமையில் நின்றிருந்த போதும் சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்த சம உரிமை இயக்கத்தின் வாகனம் மீது இன்று காலை 8.45 மணியளவில் இனந்தெரியாத விசமிகள் கல் வீச்சு நடத்தியுள்ளனர்.

 

alt

alt

 

 முஸ்லிம் மக்களுக்கு எதிராக "பொதுபல", "சேனா" போன்ற மதவாத இனவாத அமைப்புகள் அரசாங்க ஆசீர்வாதத்தோடு செயற்படுத்திவரும் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 13-ம் திகதி கொழும்பு தேசிய நூலக மற்றும் சுவடுகள் சேவை சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

இக்கலந்துரையாடலை சமவுரிமை இயக்கம் முன்னின்று நடாத்தியுள்ளது. இதில் இன ஐக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கில் சிங்கள-தமிழ்-முஸ்லிம்- சமூகங்கங்களைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் இடதுசாரிச் சிந்தனைச் செயற்பாட்டாளர்கள், முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம்-புத்தசமயத் தலைவர்கள், பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!


வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!


கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!


அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

 

என்ற கோஷங்களுடன் இடம்பெறும் இவ் கவனஈர்ப்பு பதாகை கையெழுத்திடும் போராட்டத்தில் அனைவரையும் பங்குகொள்ளுமாறு சமவுரிமை இயக்கத்தினர் அழைக்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் பதாகை கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் 15-01-2012 அன்று யாழ் நகரில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்!

வடக்கு கிழக்கிலிருந்த ராணுவத்தை வாபஸ் வாங்கு!

வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து!

கைதுகளையும் கடத்தல்களையும் உடன் நிறுத்து!

அனைத்து அரசியல் சிறைக்கைதிகளையும் உடன் விடுதலை செய்!

ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க நீதிபதிக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடருமென்கின்றது சட்டத்தரணிகள் சங்கம்

பதினெட்டாவது திருத்தத்தால் பிரதம நீதியரசரை அப்பதவியிலிருந்து ஜனாதிபதியால் வெளியேற்ற முடியும். அதனை சட்டம் தடுக்க முடியாது. சட்டத்தின் ஆணைக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதி என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

சூரியதேவனெனப் பெயர்
பிரபாகரனிற்கிருக்கிறது
முற்றத்தில் பானையிட்டு
மூழும் நெருப்பில் பொங்கிவடியும் பால்
பொங்குதமிழாய் தெரியுமோ !
கோத்தபாய,
நாம் பொங்கலாமா..?

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE