Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மாவீரர் நாளுக்கு தீபம் ஏற்றியதற்காக படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு  வந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தினை வளர்த்தெடுப்பதும் ஒரு போராட்டம் தான். வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் சமூகத்தில் ஆழவூடுவி இருக்கின்றது. கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி இனத்துவ சிந்தனையை முன்வைத்தே தேர்தல் அரசியல் நடத்தப்படுகின்றது. ஜனநாயக மறுப்பை திசைதிருப்புவதற்கு இனவாதத்தினை பயன்படுத்தும் இனவெறி அரசாங்கமும், இராணுவ பிரசன்னதைக் கொண்ட பிரதேசத்தில் சிறு எதிர்ப்பபையும் காட்டாது வாழு என்று அறிவுறுத்தும் தரகுவர்க்கமும் இலங்கையில் இருக்கின்றது.

altலலித் குமார்வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரச பாதுகாப்புப் பிரிவினராலேயே  கடத்தப்பட்டுள்ளனர் என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தெரிவித்தார்.

காணாமல் போனதாக கூறப்பட்டுள்ள லலித் குமார்வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கின் சாட்சியப்பதிவுகள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் முன்னெடுப்பில் மகிந்த அரசுக்கெதிரான ஜக்கிய கூட்டு முன்னணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டு முன்னணியில் தற்சமயம் பத்து கட்சிகள் அங்கம் வகிப்பதுடன் அதன் தலைவர்கள் இன்று கூட்டு முன்னணிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். கட்சிகளின் பெயர்கள் பின்வருமாறு:

சம உரிமை இயக்கதினால் நாடு பூராகவும் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களுல் ஒரு நிகழ்வாக நேற்று ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள என்.எம். பெரேரா ஞாபகார்த மண்டபத்தில் ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு  ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர்  ரவீந்ர முதலிகே...

இலங்கையிலிருந்து சௌவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காரியாகத் தொழில் பெற்றுச் சென்ற றிசானா நபீக் எனும் மூதூரைச் சேர்ந்த இளம் பெண் மீது கொலைக்குற்றம் சுமத்தி அப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை உலகறிந்த விடயம். இந்த இளம் பெண்ணின் மரண தண்டனை குறித்து இன, மத பேதமற்ற மனிதாபிமான எதிர்க் குரல்கள் பரவலாக எங்கும் எழுப்பப்படுகின்றது. அவளது குடும்பத்திற்கான நிவர்த்தித் திட்டங்கள் பல பக்கத்தாலும் அறிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சமவுரிமைக்கான அறிமுகக் கூட்டம் 10.02.2013 நடைபெற்றது. அண்ணளவாக 125இற்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மொழி பேசுகின்றவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தினை தொடர்ந்து கலந்துரையாடல் ஆரோக்கியமாக நடைபெற்றது. முரண்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்ட பலர் மத்தியில் இணைந்து செயற்படும ஆர்வம் காணப்பட்டது. விரைவில் வீடியோ வெளியிடப்படும்.

altவடக்கில் 2005ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 112பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 350அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.

இதில் 50விழுக்காடு வடக்கில்தான்.

2009 இல் மூடப்பட்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளே அதிகமாகும்.என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் தலைநகர் தில்லியில் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்திருந்த துணிகர துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தில் சதியில் உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குரு சனிக்கிழமை காலை தில்லி அருகேயுள்ள திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

2009 மே மாதத்தில் அரசாங்க ஆயுதப் படைகளினால் எல்.டீ.டீ.ஈ.யின் தலைமை, அதன் உறுப்பினர்கள் உட்பட பெருவாரியான சாதாரண தமிழ் மக்களின் மரண ஓலத்தோடும், படுகொலையோடும் பல தசாப்தங்களாக நீடித்த  வந்த யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்தகால கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தையும் ஒவ்வொரு இன மக்கள் மத்தியிலும் போர்க்குணத்தையும் புகுத்தி அதன் தீவிர யுத்தச் செயற்பாட்டின் மூலம் இந்த வெற்றி வெளியிடப்பட்டது. யுத்தத்தின் முடிவு வீரதீரமிக்க சிங்கள இனவாதத்தின் வெற்றியாக சிங்கள இனவாதிகளால் கொண்டாடப்பட்டது.   ராஜபக்ஷ அரசாங்கம் அந்த யுத்த வெற்றிக்கான உரிமையை தன் கையில் எடுத்து அதனை தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு போஷனை செய்து, தனது இருப்பிற்கான முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் நேற்று முன்தினம் அதிகாலையில் மூன்று முகமூடிக் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைக் கட்டுக்களும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. தாக்குதலில் படுகாயமடைந்த அப்பணிப்பாளர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மிருகத்தனமான இத்தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலை புதிய-ஜனநாயகமாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிகவன்மையாகக் கண்டிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று(07) அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது. தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு பத்திரிகைகள் அவரது மோட்டார் சைக்கிளோடு வைத்து நடுவீதியில் எரியூட்டப்பட்டிருக்கின்றது.

யாழ். பருத்தித்துறை விநியோக மார்க்கத்தில் புத்தூர் பகுதியில் இன்று அதிகாலை 4மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :

வழமைபோல குடாநாட்டிலுள்ள பத்திரிகைகள் விநியோகப் பணிகளுக்கான பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கோப்பாய்க்கும் நீர்வேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரை தாக்கும் நோக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை வழி  மறித்த போதும்  நிற்காமல் ஓடிச் சென்ற வேளையில் தினக்குரல் பத்திரிகையின் பணியாளர் புத்தூர் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகள் தீயிடப்பட்டிருக்கின்றது.

குறித்த நபர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

 

சமவுரிமை இயக்கத்தையும் அதன் போராட்டங்களையும் முடக்க அரசு இன்று "சமவுரிமை"யை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் சமவுரிமை இயக்கம் முன்வைத்துள்ள சமவுரிமைக்கான திட்டம் தான் அரசின் திட்டம் என்பது போல அரசுக்கு ஆதரவான வகையில் சிலர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். அரசின் "சமவுரிமை" தான், ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டம் என்று கூறுகின்ற இவர்கள் அரசு உச்சரிக்கும் சமவுரிமைக்கும்; ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாட்டை அரசியல் நீக்கம் செய்துவிடுகின்றனர். அரசியல் உள்ளடக்கமற்ற சொற்களைக் கொண்டு, மக்களை மந்தையாக மேய்க்கின்ற அரசியல் எல்லைக்குள், இதை குறுக்கிக் காட்டி விடுகின்றனர்.

இலங்கையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் "சமவுரிமை" இருக்கின்றது என்று ஆளும் வர்க்கமும் அரசும் கூறுகின்ற கூற்றுக்கும், சமவுரிமையைக் கோரி போராடும் எமது போராட்டமும் ஒன்றா!? இரண்டும் "ஒன்று" என்கின்றனர். ஒரே "நேர்கோட்டில்" இருப்பதாக கூறுகின்றனர். இப்படி அரசின் செயற்பாட்டுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்தையும்  திரித்தும் புரட்டி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். புரட்சிகர அரசியலை அரசியல் நீக்கம் செய்வதன் மூலம், மலிவான இழிவான அரசியலை செய்ய முனைகின்றனர். இதை நம்புகின்றவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பு அரசியலை விளங்கிக் கொள்ளாமல் இன்னமும் அரசியல் கற்றுக்குட்டியாகவே இருக்கின்றனர்.புலிகள் இருந்த காலத்தில் ஜனநாயகத்தை நாங்கள்; கோரிய போது, அரசும் கூட புலிகள் மறுத்த ஜனநாயகத்தை பற்றிப் பேசியது. புலிகள் நாங்கள் கோரிய ஜனநாயகத்தையும், அரசும் பேசிய ஜனநாயகத்தையும் ஒன்று என்று கூறி பாசிசத்தை மக்கள் மேல் ஏவியது. இதைபோல் தான் அரசு சொல்கின்ற "சமவுரிமை" யும் சமவுரிமை இயக்கத்தினது சமவுரிமைக்கான கோசங்களும் இரண்டும் ஒன்று என்று கூறி சமவுரிமை போராட்டத்தை காட்ட முனைகின்றனர்.

 

 

சமவுரிமை இயக்கத்தையும் அதன் போராட்டங்களையும் முடக்க அரசு இன்று "சமவுரிமை"யை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் சமவுரிமை இயக்கம் முன்வைத்துள்ள சமவுரிமைக்கான திட்டம் தான் அரசின் திட்டம் என்பது போல அரசுக்கு ஆதரவான வகையில் சிலர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். அரசின் "சமவுரிமை" தான், ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டம் என்று கூறுகின்ற இவர்கள் அரசு உச்சரிக்கும் சமவுரிமைக்கும்; ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாட்டை அரசியல் நீக்கம் செய்துவிடுகின்றனர். அரசியல் உள்ளடக்கமற்ற சொற்களைக் கொண்டு, மக்களை மந்தையாக மேய்க்கின்ற அரசியல் எல்லைக்குள், இதை குறுக்கிக் காட்டி விடுகின்றனர். 

ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? ஏமாறுவது மக்கள். இதற்கு இனம், மொழி, மதம், சாதி.. எதுவும் பிரிப்பதில்லை. மக்களை ஏமாற்றுவதில் கூட இனம், மொழி, மதம், சாதி பிரித்து இருப்பதில்லை. சுரண்டும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. அந்த வர்க்கம் சார்ந்த ஆளும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. "தமிழன் இன்னுமொரு முறை ஏமாறக் கூடாது" என்பது கூட, தமிழனை தமிழன் ஏமாற்றுகின்றான் என்பதை மறைப்பதற்கு "தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும் மறுப்பதற்குமான தர்க்கமாகும். இதுதான் 60 வருட தமிழனின் வரலாறு.

இந்தவகையில் இன்று யாரெல்லாம் மக்களுடன் இணைந்து போராடுவதை நடைமுறையில் ஒரு வாழ்வாக, உணர்வாக கொள்ளவில்லையோ, அவர்கள் மறுதளத்தில் நின்று கேள்வி கேட்கின்றார்கள். போராடாமல் இருப்பதற்காக, தாங்கள் இருப்பதை நியாயப்படுத்த கேள்வி கேட்கின்றனர். போராட்டத்தைச் சிதைப்பதற்காக கேட்கின்றனர். தங்கள் அறிவைக் காட்டிக் கொள்ள, பிரமுகராக இருக்க கேள்வி கேட்கின்றனர். போராடியபடி கேட்கவும், கேட்கப்படவும் வேண்டிய கேள்வியில் இருந்து இவை வேறுபட்டவை. எந்தக் கேள்வியையும் மக்களுக்காக போராடியபடி கேட்பதே உண்மையான ஒரு அரசியல் வேலைமுறை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE