Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஆனந்தவிகடனில் அன்று பராசக்தி, இன்று பல்டியே சக்தி என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறது. கருணாநிதியை கைப்பிள்ளையாக்கி தரும அடி போடும் இது போன்ற கட்டுரைகள் இன்று பரவலாக எழுதப்படுகின்றன. இலங்கைத்தமிழ் மக்களின் இனப்படுகொலையை இணைந்து நடத்திய இந்திய மத்திய அரசை காப்பாற்றுவதற்காக ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன ஊடகங்கள் இந்த ஏமாற்று வேலையை செய்கின்றன. ஈழத்தமிழர்களின் கொலைகள், இழப்புகள் குறித்து தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளின் இதயங்களில் இருந்து எழுகின்ற கோபத்தை திராவிட முன்னேற்றக்கழகத்தின் மேல் திசை திருப்பி விடும் கள்ளத்தனம் இது.

இலங்கை மீதான பூரண ஆதிக்கத்துக்கான போட்டி யாருக்கிடையிலானது?

இன்று தென்னாசியாவின் மீது பூரண ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி வலுப்படுகிறது. அதில் பூகோள மற்றும் மூலோபாய ரீதயில் இலங்கை மீதான ப+ரண ஆதிக்கத்துக்கான போட்டி முக்கிய இடத்தில் உள்ளது. இப் பின்னணியில் ஒருபுறம் சீன மிரட்டல் பற்றிய எச்சரிக்கைகள் விடப்படுகிறன. மறுபுறம் அமெரிக்காவைத் தமிழருக்காகப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை நம்ப வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசப்படுகிறது. இன்று, இலங்கை மீதான பூரண கட்டுப்பாட்டுக்கான போட்டி அடிப்படையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானதே. சீன மிரட்டல் அதற்கு வசதியாகப் பாவிக்கப்படுகிறது.

புரட்சியின் காலகட்டங்கட்கான நியாயம்

இறுதியிற் கம்யூனிச உலகாக அமையவுள்ள சோஷலிச உலகு தவிர்ந்த இறுதி இலக்கெதுவும் மாக்ஸியர்கட்கு இருக்கவியலாது. மாக்ஸியர்கள் சோஷலிசமெனக் கருதுவதற்கும் சமூக ஜனநாயகவாதி களும் பிற சீர்திருத்தவாதிகளும் சோஷலிசமெனச் சொல்கிறவைக்கும் உள்ளடக்கத்திலும் அணுகுமுறையிலும் தெளிவான வேறுபாடு உண்டு. மாக்ஸியர்கள் வேண்டும் சோஷலிச சமுதாயம் முதலாளிய சமூக உருவாக்கங்களிலிருந்து தோன்றலாம். அரைப்-பிரபுத்துவ, அரைக்-கொலனிய சமூக உருவாக்கங்களிலிருந்தோ கொலனிய முதலாளியத் திணிப்பின் விளைவான பிற பலவீனமான முதலாளிய சமூக உருவாக்கங்களிலிருந்தோ கூட அது தோன்றலாம்.

 

இலங்கைக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. புதை குழிகள் காரணமாக அரசாங்கங்கள கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. புதைகுழிகளினாலேயே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் உண்டு. இந்த மண்ணில் இன்னும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமுள்ளன.

இன்முறை மாத்தளைப் பிரதேசத்தில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை புதைகுழி குறித்து தகவல் கிடைப்பதற்கு முன்னரேயே 71 கிளர்ச்சியோடு சம்பந்தபட்டவர்களுடையது என்று பொறுப்பு வாய்ந்தவர்களால் கூறப்பட்டது. ஆனால் அவை 71ஐ சேர்ந்தவர்களதல்ல, 89ஐ சேர்ந்தவர்களது என்று தெரிய வருகிறது. ஆம், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் ' பொறுப்புக் கூற வேண்டியவர்களேதான்" ' பலகடுவ நீரூற்றுக்கு பக்கத்தில் கை கால்களைக் கட்டி 22 பேரை உயிரோடு பெற்றோல் ஊற்றி கொளுத்தினார்கள்.

இண்டைக்கு வெளிநாட்டிலே இருக்கிற கனபேருக்கு இப்ப ஊரெல்லாம் எப்பிடி மாறியிருக்குது எண்ட விசயம் தெரியாது என்று நினைக்கிறேன். இப் கிட்டடியிலே ஊருக்குப் போய்வந்த எனக்கு ஏற்பட்ட சில விசித்திர வினோத அனுபவங்களை இங்கே வெளிநாட்டிலே வந்து சொன்ன போது கனபேரால் இதை நம்ப முடியாமல் இருந்தது. இதை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நிட்சயமாக இது அம்மா மகன் சென்டிமன் அல்ல. இது ஒரு சமூகம் சப்பந்தமான ஒரு சென்டிமன் தான். என்ரை அம்மா இறந்து போனா என்ற செய்தி கேட்டவுடனே அவசர அவசரமாய் வெளிக்கிட்டு அடுத்த நாளே கொழும்பிலே போய் இறங்கினேன். ஏற்கனவே இறந்து போன ஜயாவின் இறுதிக்கணங்களிலே கலந்து கொள்ள முடியாது போன வேதனையைப் போல் இதுவும் அமைந்து விடக்கூடாது என்பதால் எதையும் யோசியாமல் உடனே புறப்பட்டு விட்டேன்.

வந்தாரை வாழ வைக்கும் என்று சொல்லப்படும் தமிழகத்திற்கு பயணம் வந்த ஒரு மனிதன் தாக்கப்படுகின்றான். வெறிநாயை அடிப்பது போல ஒரு மனிதனை,வேறு நாட்டிற்கு வந்தவனை, ஆதரவற்றவனை, துரத்தி துரத்தி அடிப்பதை என்னவென்று சொல்வது. காட்டுமிராண்டித்தனம், கோழைத்தனம், தெருச்சண்டித்தனம், மனிதத்தை காலில் போட்டு மிதிக்கும் கொடூரம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. இதை இலங்கைத்தமிழ் மக்களிற்காக, இனப்படுகொலையின் போது மரணித்தவர்களிற்காக செய்கிறோம் என்பது இறந்தவர்களை அவமதிக்கும் செயல். இருப்பவர்களை இன்னொரு அழிவிற்கு தள்ளிவிடும் செயல்.

சீமானும், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினரும் செய்யும் தமிழ் இனவாத அரசியல் இலங்கைத் தமிழருக்கு எதிரானதும், ஆபத்தானதும் ஆகும். மிகவும் மெலிதாக முளை விட்டு எழும் தமிழ்-சிங்கள ஒற்றுமையை வேரோடு அழிக்கும் அரசியல் இது. தமிழ் குறுந்தேசிய அரசியலை தூக்கிப்பிடித்து, இலங்கையின் மற்றைய தேசிய இனங்களுடன் பகமை கொண்டு இலங்கைத்தமிழரது வாழ்வையும்,வளத்தையும் சிங்களபேரினவாதிகளிடம் பலி கொடுத்த தமிழீழ இயக்கங்களின் வலதுசாரி அரசியலை ஒத்தது இது. வெறியோடு காத்திருக்கும் சிங்கள பேரினவாத சக்திகளிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்து மறுபடி ஒரு இனக்கலவரத்தையோ, இனப்படுகொலையையோ தமிழ்மக்கள் மீது கட்டவித்து விடுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்கக் கூடிய முட்டாள்தனமான அரசியல் இது.

இலங்கைத்தமிழ் அகதிகளை குற்றவாளிகளைப் போல சிறப்புமுகாம்களில் அடைத்த எம்.ஜி.ஆர் தலைவன், போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதா ஈழத்தாய், இனப்படுகொலை செய்த மத்திய அரசுடன் பதவி சுகம் கண்ட கருணாநிதி தமிழினத்தலைவர். இவர்களை மாறி, மாறி ஆதரித்துக் கொண்டு இந்த கள்ளர்கள் ஈழமக்களிற்கு தீர்வை பெற்று தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து கொண்டிருக்கும் இந்த தமிழினவெறியர்கள் அப்பாவிமக்களிடம் தங்களது வீரத்தை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு தமிழர்களிற்கும், இலங்கை தமிழர்களிற்கும் எதிராக பேசும், செயற்படும் இளங்கோவன், இந்து ராம், சுப்பிரமணியசாமி, சோ ராமசாமி, அழித்தவளை அன்னை என்று சேலைக்குள் பதுங்கும் காங்கிசுக்கயவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரிகையில் இந்த அப்பாவிகளை அடிக்கிறீர்களே வெட்கமாயில்லை.

வந்தாரை வாழ வைக்கும் என்று சொல்லப்படும் தமிழகத்திற்கு பயணம் வந்த ஒரு மனிதன் தாக்கப்படுகின்றான். வெறிநாயை அடிப்பது போல ஒரு மனிதனை, வேறு நாட்டிற்கு வந்தவனை, ஆதரவற்றவனை, துரத்தி துரத்தி அடிப்பதை என்னவென்று சொல்வது. காட்டுமிராண்டித்தனம், கோழைத்தனம், தெருச்சண்டித்தனம், மனிதத்தை காலில் போட்டு மிதிக்கும் கொடூரம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. இதை இலங்கைத்தமிழ் மக்களிற்காக, இனப்படுகொலையின் போது மரணித்தவர்களிற்காக செய்கிறோம் என்பது இறந்தவர்களை அவமதிக்கும் செயல். இருப்பவர்களை இன்னொரு அழிவிற்கு தள்ளிவிடும் செயல்.

alt

மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் வைபவத்தில் சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத வழிபாடுகள் இடம்பெறவில்லை.

குண்டுவீச்சினால் இலைகள் உதிர்ந்து மொட்டையாகி, எரிந்து, கரிந்து போன மரங்களின் வேருக்கு மண்ணில் வீழ்ந்த மனிதர்களின் குருதி நீர் வார்க்கும். குவிந்து கிடக்கும் உடலங்களிற்குள்ளே சிறுகுஞ்சொன்று அம்மா என்று விம்மும். ஒரு மரணத்திற்கு ஊரே கூடி அழும், ஆனால் ஊரே மரணித்து விட்டபோது உலகமே ஊமையாக போனது. ஏனென்று கேட்க யாருமில்லை. ஆள், அம்பு, படை வைத்திருக்கும் அய்க்கிய நாடுகள் சபை, அகிம்சையின் மொத்தகுத்தகைகாரன் அகண்ட பாரதம், பினாச்செட் தொடங்கி பின்லாடன் வரையான அத்தனை "ஜனநாயக போராளிகளினதும்" வாழ்நாள் போசகர்கள், பெற்றோல் இருக்குமிடங்களில் எல்லாம் கேஸ் இல்லாமலே, அழைப்பில்லாமலே ஆஜராகும் உலகத்து பொலிஸ்காரர்கள் அமெரிக்கா என்று யாருமே கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார்கள் ஏனென்றால் கூட நின்று கொன்றவர்கள் அவர்கள் தானே. கொலையாளிகளில் சிறுகொலை செய்தவன், பெருங்கொலை செய்தவன் என்று உண்டோ?

சம உரிமை இயக்கத்தினால் நேற்று(16) கண்டியில் கையெழுத்து வேட்டை இடம் பெற்றது. பெரும் அச்சுறுத்தலுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் மக்கள் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய மாகாணசபை உறுப்பினர் துஷார குணரத்ன மற்றும் அவரது குழுவினர் சம உரிமை இயக்கத்திற்கும் கையெழுத்திட்ட மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

1983 இல் 13 இராணுவத்தினரின் கொலையும் மக்கள் போராட்டமும்

1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

தேசியவாதமும் இனவாதமும் மதவாதமும் பாசிசத்திற்கு என்றும் பயனுள்ள கருவிகளே. ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கச் சிந்தனையை பாசிசம் பயன்படுத்தினும், பாசிசம் என்பது, வெறுமனே அடையாளப் பகைமையைப் பற்றியதல்ல. அதனுட் சுரண்டும் அதிகார வர்க்க நலன்கள் பொதிந்துள்ளன. வலதுசாரிச் சிந்தனை, தேசியவாதம், அதிகார அடுக்குமுறை, சமத்துவப் பகை, முதலாளியச் சார்பு, போர் முனைப்பு, அகச்சார்புச் சித்தாந்தம், நவீனத்துவ எதிர்ப்பு என்பவற்றை பாசிசத்தின் தலையாய பண்புகளென ஐரோப்பிய மாக்சியர்கள் கொள்வர். அவற்றுள் முதலாளியச் சார்பு அடிப்படையானது.

"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"

கேள்வி:

யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?

ஜுட்: வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"

கேள்வி:

யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?

ஜுட்: வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

உண்ணாவிரதம் இருந்த லயோலா மாணவர்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் வகுப்புக்களைப் புறக்கணிப்பது, உண்ணாநோன்பு மேற்கொள்ளுவது, கொடும்பாவி எரிப்பது உள்ளிட்ட பல்வகை போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர்.

நான் தாகமாய் இருந்தேன், நீர் தண்ணீர் தந்தீர்

நான் பசியாய் இருந்தேன், நீர் உணவு தந்தீர்

நான் சிறையில் இருந்தேன், நீர் பார்க்க வந்தீர்

அருமைநாயகம் போதகர் பைபிள் வசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். குமாரிற்கு கொதி உச்சிக்கேறியது. கை தன்ரை பாட்டில் கன்னத்தை தடவிக் கொண்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை சேர்ச் முடிந்த பிறகு நடக்கும் பைபிள் வகுப்பில் அருமைநாயகம் போதகர் இப்படித்தான் ஒரு வசனத்தை எடுத்து விட்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அன்பே உருவானவர். பகைவனுக்கும் அருள்வாய் என்ற பண்பு கொண்டவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றதொரு அரிய தத்துவத்தை எங்களிற்கு தந்து விட்டு விண்ணுலகு சென்றவர். அவர் வழி நடக்கும் நாங்கள் அதை வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அது எம்.ஜி.ஆர் நம்பியாரிற்கு விட்ட அடி போல குமாரின் மனதிலே ஆழமாக பதிஞ்சு விட்டுது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE