Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பெபிலியான "பேஷன் பாக்" நிறுவனம் மீதான தாக்குதல் நடத்தியவர்களையும் தாக்கப்பட்டவர்களையும் சந்தித்து கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல தடைகளை தாண்டி சென்று அவர்களை சந்தித்தமை பல உண்மைகளை வெளிப்பட செய்தது.

பிரதானமாக இரண்டு விகாரைகளின் விகாராபதிகள் தாக்குதலை வழிநடத்தியுள்ளனர். அதில் பிரதானமானவர் தாக்குதல் நடத்த முன் விகாரை மூலம் பிரதேசவாசிகள் பலர் விகாரைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் . குறித்த நிறுவனத்தில் வேலை செய்யும் இஸ்லாமியர் ஒருவர், ஓர் சிங்கள பெண்ணை துஸ்பிரயோகம் செய்ததாகவும் இதனை இத்துடன் விடக்கூடாது என்றும் குறிப்பிட்ட பௌத்த பிக்கு, எனவே அவ் நிறுவனத்தை தாக்க வேண்டும் என்றும் குறித்த பிரதேசத்தில் விடுதிகளில் தங்கி இருக்கும் இஸ்லாமியர்களை வெளியேற அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

'மீண்டும் 83 கறுப்பு ஜூலை கலவரத்தை தூண்ட இடமளிக்கக் கூடாது'

இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது.

நோர்வே சமவுரிமை இயக்க அங்குரார்பண மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம்  நேற்று வியாழக்கிழமை 28.03.13 அன்று ஒஸ்லோவில் நடைபெற்றது.  லோரன்ஸ்ஸ்கொக் பிரதேச மண்டபத்தில் நடைபெற்ற கூட்டடத்திற்கு தோழர் தங்கன் தலைமை தாங்கினார். தோழர்கள் சிறிகரன், ஜவன், குமார்  உரையாற்றினர்.

altபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பொதுபல சேனா அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கிறார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதன் ரமேஸ் பிரச்சினையும் என் நிலைப்பாடும்

எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக ரெலோவில் நடந்த பிரச்சினையும் அந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுமே இன்று வரையும் என்னை மனிதனாக வாழ வைக்கிறது.

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு சில பொறுப்பாளர்கள் எமது அறைக்கு வந்தனர். எமது தலைவரான சிறி சபாரெத்தினத்தை அடுத்த கட்டத்திலுள்ள உபதலைவர்களான அரசியல் பிரிவை சேர்ந்த சுதன் மற்றும் இராணுவபிரிவைச் சேர்ந்த, ரமேஸ் என்பவர்கள் புலிகளிடம் ஆயுதம் வாங்கிக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் தம்மிடம் தான் உள்ளனர் என்றும் சொன்னார்கள். அதனால் புலிகள் ஆத்திரப்பட்டு சிலவேளைகளில் எமது பாதுகாப்பிற்கே ஆபத்துக்கள் கொண்டு வரலாம், ஆகவே எவரும் வெளியே போக வேண்டாம் என்றும் கூறினார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம்

தொடர்புக்கு: மனுவேல், அமைப்பாளர்,

14, தேவாங்கபுரம், கோட்டுவீராம்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்

பேச: 94433 49800, 93645 11199, 91501 92047

----------------------------------------------------------------------------------------------------------

பத்திரிகை செய்தி

சத்தியமங்கலம் வனப்பகுதியை இந்திய அரசு, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘அழிந்துவரும் புலிகளைக் காப்பாற்ற’ என்ற பெயரில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. ஆனால், உண்மையில் இது பழங்குடி மற்றும் மலைவாழ்மக்களை காட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு ஒருசில பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் நலன்களுக்காகவே செயல்படுத்தப்படுகிறது.

ஒஸ்லோ, நோர்வே சமவுரிமை இயக்க அங்குரார்பண மற்றும் கொள்கை விளக்கக் கூட்டம்  நேற்று வியாழக்கிழமை 28.03.13 அன்று நடைபெற்றது. தோழர்கள்  ஐவன் மற்றும் கேதீஸ் ஏற்பாட்டில் லோரன்ஸ்ஸ்கொக் பிரதேச மண்டபத்தில் நடைபெற்ற கூட்டடத்திற்கு தோழர் தங்கன் தலைமை தாங்கினார். தோழர் சிறிகரன் நோர்வே சமவுரிமை இயக்கத்தின்  எதிர்கால வேலைகளை பற்றியும், இனவாதத்துக்கு எதிராக அனைவரும் இணைந்து செயற்படுவது பற்றியும் தனதுரையில் வலியுறித்தினார்.

பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் பரந்து வாழ்கின்ற இலங்கை மக்களின் மத்தியில், சம உரிமை இயக்கம் தனது கொள்கை பரப்புதலுக்கான அங்குரார்ப்பணக் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் தற்போது டென்மார்க் கொல்ஸ்ரப்புறோ நகரில் தோழர்கள் குமார் குணரட்னம், சிறி மற்றும் முன்னணித் தோழர்களுடன் இக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது 35இற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.

டென்மார்க் கோஸ்ரப்பரோவில் சம உரிமை இயக்க அங்குராப்பண கூட்டமும் கலந்துரையாடலும் (27/3/2013) இன்று நடைபெற்றது. தோழர்கள் ஸ்ரீஹரன், முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றியதுடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் காவாலிகள் மாணவர்களை தாக்குகிறார்கள். அகிம்சை மயிர் புடுங்கிறோம் சொல்லிக்கொண்டு அந்நிய முதலாளிகளின் கோவணத்தை கட்சிக்கொடியாக, தேசியக்கொடியாக பிடித்திருக்கும் இந்த நாய்கள் போராடும் மாணவர்களை தாக்குகிறார்கள். மன்மோகன் சிங்கும் சோனியாவும் இந்திய முதலாளிகளிற்காக இலங்கைத் தமிழ் மக்களை கொன்றதை மாணவர்கள் கேட்டதற்காக, இந்த தமிழ்நாட்டு காங்கிரஸ் அடிமைநாய்கள் ஊளை இடுகின்றன. எஜமானர்கள் வீசும் எலும்புத்துண்டுகளிற்காக இதுகள் கோரப்பற்களை காட்டி உறுமுகின்றன.

இத்தாலியின் வட பகுதியில் உள்ள வேறோனா நகரில் சமவுரிமை இயக்கத்தின் அங்குரார்பண நிகழ்வு  24.03.2013 அன்று நடைபெற்றது. அதில் தோழர்கள் ஸ்ரீஹரன், விஜித்த, றோகித்த ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றினார். மேலும்  இத்தாலிய இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அளவில் அனைத்து இன மக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று  வியாழன் நோர்வேயில் சம உரிமை இயக்க அங்குராபணக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டதுக்காக நிற்கிறோம். காரணம்அது நமது போராட்டத்திற்கு உதவியாக, கட்சிக்குள்ளும் புரட்சிகர அமைப்புகளுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கும் ஒரு ஆயுதமாக விளங்குகின்றது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தாராளவாதம் சித்தாந்தப் போராட்டத்தை நிராகரித்து கோட்பாடற்ற சமமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உளுத்துப் போன, பண்பற்ற கண்ணோட்டம் தோன்றி கட்சியிலும் புரட்சிகர அமைப்புகளிலுமுள்ள சில பிரிவுகளையும் தனிநபர்களையும் அரசியல்ரீதியாக சீர்குலைக்கின்றது.... மாவோ சேதுங்

இந்தியப் பயணமும் தொல்லைகளும்

இந்த நிலையில் அவரிடம் இந்தியா சென்று எப்போது வேறு நாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்வது என்று கேட்டேன். அவர் சொன்னார் இந்தியாவை விட வேறு நாடு இல்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பலர் எம்மைக் கேட்ட கேள்வி நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்பதே. இந்தியா ஒரு போதும் எமது பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. பிரச்சினையாகத் தான் இருக்கும் என்றும் சொன்னார்கள். அதற்கு நமது பொறுப்பாளர் சொன்னார். நாங்கள் சோசலிசத்தை அணுகிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் தான் பயிற்சி எடுக்கின்றோம். இந்தியாவைத் தளமாகத் தான் பயன்படுத்துகின்றோம் என்று. நான் எனக்குள் நினைத்தேன்.

யுத்தம் முடிவடைந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் அரசு வழங்கவில்லை இந்தக் காலப்பகுதில் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்ட அரசு தமிழர்களின் கலாச்சாரத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.செய்ய வேண்டியதை செய்யாது அரசு முற்றிலும் மாறான பாதையிலே பயணிக்கின்றது. குறிப்பாக ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேறியதால் பிரச்சினை தீர்ந்து விட்டதாக அர்த்தப்படாது. எனவே அரசு உள்நாட்டில் பொறிமுறையை வகுக்க வேண்டும் இனங்களுக்கிடையிலான தேசிய சமத்துவத்தை கட்டயெழுப்ப வேண்டும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE