பெபிலியான "பேஷன் பாக்" நிறுவனம் மீதான தாக்குதல் நடத்தியவர்களையும் தாக்கப்பட்டவர்களையும் சந்தித்து கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல தடைகளை தாண்டி சென்று அவர்களை சந்தித்தமை பல உண்மைகளை வெளிப்பட செய்தது.
பிரதானமாக இரண்டு விகாரைகளின் விகாராபதிகள் தாக்குதலை வழிநடத்தியுள்ளனர். அதில் பிரதானமானவர் தாக்குதல் நடத்த முன் விகாரை மூலம் பிரதேசவாசிகள் பலர் விகாரைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் . குறித்த நிறுவனத்தில் வேலை செய்யும் இஸ்லாமியர் ஒருவர், ஓர் சிங்கள பெண்ணை துஸ்பிரயோகம் செய்ததாகவும் இதனை இத்துடன் விடக்கூடாது என்றும் குறிப்பிட்ட பௌத்த பிக்கு, எனவே அவ் நிறுவனத்தை தாக்க வேண்டும் என்றும் குறித்த பிரதேசத்தில் விடுதிகளில் தங்கி இருக்கும் இஸ்லாமியர்களை வெளியேற அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.