Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

altவவுனியா பேயாடிகூழாங்குளத்தில் அமைந்துள்ள பொது மக்களின் காணி இராணுவ தேவைகருத்தி சுவீகரிப்பதாக வவுனியா, மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந.திருஞானசம்பந்தர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் பல முறைகேடான வகையில் அபகரிக்கப்படுவாகவும், அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடைய இடங்களில் வெளியாரைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அரசியல் கட்சிகள் உட்பட பலதரப்பினரும் கோரியுள்ளனர்.

மாகாண சபை முதல்வர்களின் முடிவுகளின்றி காணிகள் வழங்கப்படக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாக கிழக்கு மாகாண சபைத் தலைவர் ஏ.மஜீத் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஆணைக்குழுவொன்றை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜேவிபி கட்சியினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கிளீநொச்சி உதிரவேங்கை கோயில்

கிளீநொச்சி உதிரவேங்கை கோயில்

கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள உதிரவேங்கை ஞான வைரவர் கோவிலுக்குச் சொந்தமான காணி வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரினால் அபகரிக்கப்பட்டு, அங்கு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பௌத்த விகாரரைக்கு அருகில் உள்ள தனியார் ஒருவருடைய காணியொன்று விகாரையின் தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து ஆலயத்திற்குச் சொந்தமான காணியொன்று தனியாரினால் அபகரிக்க அனுமதிக்கப்பட்டிருப்பது அநீதியான செயல் என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறுகின்றார்.

இந்த காணி விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் உட்பட உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், நடவடிக்கைகள் எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை எனக் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன கூறினார்.

இது தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அரசாங்கத் தரப்பினருடைய கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.

சுதன், ரமேஸ் விடுதலையும் புலிகளின் ஆயுதங்களும்

சுமார் இரு நாட்களின் பின்னர் சுதன், ரமேஸ் போன்றவர்களை ரெலோவின் வீட்டிற்குள் புகுந்து கியு பிரான்ஞ் பொலிசார் மீட்டெடுத்தனர். இந்த நேரத்தில் தான் நாம் அடுத்த கட்டமாக என்ன செய்வது? எப்போ நாட்டுக்குப் போவது? எமக்குச் சாப்பிடுவதற்கே கஸ்ரமான நிலையில் பொருளாதார வசதிகளை எப்படி ஏற்படுத்துவது? என்றெல்லாம் பல பிரச்சினைகள் எமக்குள் இருந்தன. அதனால் அவற்றைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். அந்த நேரத்தில் சிலர் வெளியேறி ஒதுங்கப்போவதாகக் கூறினார்கள். விசேஷமாக வெளியேறி ஒதுங்கப்போவதாகக் கூறும் தோழர்களுக்கு உயிர் பாதுகாப்பு என்பது மிகவும் பிரச்சினைக்குரியதொன்று. என்றாலும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ரெலோ முக்கிய காரணமாகும்.

இன்று (13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும்.

இன்று (13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும். 

இலங்கை - மகிந்த பாசிச அரசின்  காடைத்தனமான தாக்குதல்கள், நாளாந்தம் நாட்டின் அனைத்துப் பக்கத்தில் வாழும் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இத்தாக்குதல்கள் இன மத பிரதேச வித்தியாசமின்றி மகிந்த அரசினால் இலங்கை மக்கள் அனைவர் மீதும் நிகழ்த்தப்படுகிறது.

யுத்தம் நடந்த காலத்தில் இனவாத அரச ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட போது, எந்தவித எதிர்ப்பும் காட்டாமலிருந்த ஏனைய சமூகங்கள் மீதும் இன்று  இனவாத, மதவாத, பொருளாதார ஒடுக்குமுறை திட்டமிட்ட முறையில்  மஹிந்த அரசால் முன்னெடுக்கப்படுகிறது.

 

ஏப்ரல் 13ம் திகதி உதயன் பத்திரிகை அச்சகத்திற்கு ஒரு குழு தீயிட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகம் தாக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின்பே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊடகத்தின் மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலை அருவெறுப்போடு வன்மையாக கண்டிக்கும் நாங்கள் பெருமளவில இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் நடக்கும் இவ்வாறான தாக்குதல்களின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றோம்.

இலங்கை - மகிந்த பாசிச அரசின்  காடைத்தனமான தாக்குதல்கள், நாளாந்தம் நாட்டின் அனைத்துப் பக்கத்தில் வாழும் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இத்தாக்குதல்கள் இன மத பிரதேச வித்தியாசமின்றி மகிந்த அரசினால் இலங்கை மக்கள் அனைவர் மீதும் நிகழ்த்தப்படுகிறது.


யுத்தம் நடந்த காலத்தில் இனவாத அரச ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட போது, எந்தவித எதிர்ப்பும் காட்டாமலிருந்த ஏனைய சமூகங்கள் மீதும் இன்று  இனவாத, மதவாத, பொருளாதார ஒடுக்குமுறை திட்டமிட்ட முறையில்  மஹிந்த அரசால் முன்னெடுக்கப்படுகிறது.

altயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது. யாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு இன்று அதிகாலை 5.00 மணியளவில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கிருந்த ஊழியர்களை விரட்டிவிட்டு அச்சகத்திற்குள் நுழைந்து பெற்றோல் ஊற்றி அச்சு இயந்திரத்தை கொளுத்தியதாகவும், இன்று விநியோகிக்கப்படவிருந்த பத்திரிகைகளையும் தீயில் போட்டு கொளுத்தியதாகவும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பீ. பிரேமானந்த் கூறினார்.

கொழும்பில் தும்முள்ள சந்தியில் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் தலைமை அலுபலகத்துக்கு முன்பாக, அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் ஃபேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள் அச்சுறுத்தியதாகவும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.

கொலான்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு அருகாமையில் சில நாட்களாக நடந்து வந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முறியடிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஆறுபேர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை, மத முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்ற கேள்விக்கு விடைகாணவேண்டும். நாங்களும் இனவாதியாக தொடர்வதா, மதவாதிகளாக இருப்பதா என்ற அடிப்படையான கேள்விக்கு, பகுத்தறிவுள்ள அனைவரும் சிந்திக்கவும், பதிலளிக்கவும் வேண்டும். தவறான கண்ணோட்டத்தையும், நடத்தைகளையும் மறுத்து, அதற்கு எதிராக வாழ்தலும் போராடுதலும், சுயவிசாரணை விமர்சனபூர்வமாக செய்வதும் தான், அடிப்படையான அரசியல் நேர்மையாகும். இந்தவகையில் சமூக விரோதம் கொண்ட இனவாதத்தை, சமூகம் சார்ந்து எப்படி எதிர்த்து நிற்கின்றோம் என்பதை நடைமுறையில் நிறுவியாகவேண்டும். இன்றுள்ள அரசியல் பணி இதுதான். இதைத்தான் இன்று சமவுரிமை இயக்கம் உங்கள் முன் நடைமுறையாகவும், நடைமுறையாக்கவும் கோருகின்றது.

குறுக்குகட்டோட விறுக்கென்று

மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு

குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்

மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்

குறுக்குகட்டோட விறுக்கென்று

மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு

குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்

மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்

altகொலான்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு அருகாமையில் சில நாட்களாக நடந்து வந்த சத்தியாக்கிரக போராட்டத்தினை முறியடிக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட ஆறுபேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE