Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஈழ போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகுமாம்!

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய இந்த தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாத அரசியல் கட்சியின் அரசியல்வாதிகள் அதன் மூலம் ஈழ போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாம் என இலங்கையின்; இனவாத அரசியலவாதகளில்; ஒன்றான  வீரவங்ச உளறுகிறார்.. 

யாழ்ப்பாணத்தில் புதிய ஜனநாயக மாக்சிய லெனினியக் கட்சியின்

புரட்சிகர மேதினக் கூட்டமும் சைக்கிள் பேரணியும்

எதிர்வரும் புதன் 01.05.2013, அன்று சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெறுகின்றது.

உழைக்கும் வர்க்க சக்திகளே ஜக்கியப்படுவீர்!

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!!

லலித்  - குகன் இருவரும், காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காய் கடத்தப்பட்டனர். உலக நாகரீகங்கள் மனிதனை நன்றாக வாழ்வதற்காகவே நாள்தோறும் மாறி வருகின்றன. மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது.

புகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல பத்தாயிரம கோடியாக குவித்துக்கொண்டு, அதை பாதுகாக்க படைகளையும் அதற்கான செலவுகளையும் பல மடங்காக அதிகரிக்கும் நாட்டின் ஐனாதிபதியிடம், இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

altமின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இன்று (23) ஹொரண பிரதேச சபை உறுப்பினர்கள் பந்தம் பிடித்துக் கொண்டு சபைக்கு சென்றுள்ளனர்.

பலாலி மற்றும் காங்கேசன்துறை இராணுவ தளங்களின் தேவைக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ்க்குடும்பங்களின் நான்கு குடிசைகள் சனிக்கிழமை நள்ளிரவு தீயிடப்பட்டிருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இரவு ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ எற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

முள்ளியவளை மத்தி என்ற கிராமப்பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்தில் முல்லைத்தீவுக்கான பிரதான வீதியோரத்தில், ராணுவத்தினர் தமக்கு முகாம் அமைப்பதற்காக காணி தேவையெனக் கூறி அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு கோரியிருந்ததாகவும், அதற்கு அந்த மக்கள் உடன்பட மறுத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

மனோ மாஸ்ரர் கொலை

நாட்டிற்குச் சென்ற மனோ மாஸ்ரர் இரு தினங்களுக்குள் கொல்லப்படவே எமது நிலைமை மோசமாகி விட்டது. ரெலோ தான் கொன்றார்கள் எனச் சென்னையில் புலிகளின் தயவில் இருந்த ரெலோவின் முன்னாள் இராணுவப் பொறுப்பாளர் ரமேஸ் குழுவினரும் பலரும் கூறினர். எமக்கு அந்தக் கொலையைச் செய்தவர் சம்பந்தமான தகவல்கள் கிடைத்திருந்தன. அதாவது அந்தக் கொலையைச் செய்தவர்கள் புலிகள் எனவும் அந்தக் கொலையைச் செய்த நபர்களின் தகவல்களும் கிடைத்திருந்தன.

மனோ மாஸ்ரர் நாட்டிற்குச் சென்றவுடன் புலிகளினால் பின்தொடரப்பட்ட அவர் பருத்தித்துறைப் பிரதேசத்திலுள்ள திக்கம் தும்பளைப் பகுதியில் சனநெருக்கடியற்ற குடியிருப்புப் பகுதியில் கிட்டு மற்றும் ரவி என்ற இரு புலிகளினால் நிறுத்தப்பட்டதாகவும் அங்கே முப்பது நிமிடம் அளவில் அவர்கள் வாக்குவாதப்பட்டதாகக் கூறப்பட்டது. அதில் பிரச்சினைப்பட்ட விடயம் என்னவென்றால் ரெலோவில் இருந்து பிரிந்த எம்மைப் புலிகளுடன் சேர்த்து விட வேண்டும் என்பதே.

ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிநீக்கத்தை எதிர்த்து சட்டத்தரணிகள் நடத்திய போராட்டம்

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படியாக இடம்பெறும் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிலையியற் குழுவொன்றை நியமித்துள்ளது.

நாடுமுழுவதிலும் நடக்கின்ற இவ்வாறான சம்பவங்கள் பற்றி அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த தமது பிரதிநிதிகள் ஊடாகவும் பொதுமக்கள் ஊடாகவும் தகவல்களைப் பெற்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்று நிலையியற் குழுவின் தலைவர் மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய (மணலாறு) பகுதியில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள், தங்களுக்குச் சொந்தமான வயல் காணிகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகோரி இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

1983-ம் ஆண்டில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட இந்தப் பிரதேசத்து மக்களின் வயற்காணிகளில் சிங்கள குடும்பங்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்துவருவதாகவும், அந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட போதிலும் அவர்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

மருதனார்மடத்து வயல்வெளிகள், தோட்டங்கள் ஊடாக சைக்கிள் மிதிக்கும் போது சில்லென்ற குளிர்காற்று எந்த நேரமும் வீசும். பின்னேரங்களில் ராமநாதன் கல்லூரியின் பெட்டைகள் பாவாடை தாவணியில் உலா வரும்போது இணுவில் தவில், நாதஸ்வர வித்துவான்கள் சாதகம் பண்ணுவது பின்னணி இசையாக காற்றிலே கசிந்து வழியும். சிங்காரவேலனே தேவாவை இசைக்கும் போது எதிரில் வரும் பெட்டைகளைப் பார்த்து "ஏன் நிறுத்தி விட்டாய் சாந்தா" என்று இளிப்பானுகள். அவளுகள் கோபத்தில் முகத்தை திருப்பினாலோ, முறைத்து பார்த்தாலோ ஜென்மசாபல்யம் அடைந்தது போல சந்தோசப்படுவானுகள். ஆனால் இதையெல்லாம் இப்ப செய்ய முடியாது. நாதன் இப்ப ஒரு இயக்கத்திலே சேர்ந்து விட்டான். குரங்குச்சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைச்சு விட வேணும் என்று சந்திரன் அண்ணன் கண்டிப்பாக சொல்லியிருந்தார்.

altபோதிய இடவசதியற்ற நிலையில் வேறு கட்டடமொன்றில் இயங்கிவரும் கிண்ணியா T.B.ஜாயா வித்யாலயத்தின் மாணவிகளும் அவர்களது பெற்றோரும் நேற்று (18) காலை ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

ஆதிகாலத்தில் முதல்முறையாக பூமித்தாயின் புறத்தோல் கீறப்பட்டது. பயிர் செய்கைக்காக மண் உழப்பட்டது. இயற்கையாக மண்ணில் முளைத்த பயிர்களிலும் பார்க்க உழுது பதப்படுத்திய மண்ணில் முளைத்த பயிர்கள் செழித்து வளர்ந்தன. இந்தத தேவையிற்கும் அப்பால் பூமியின் புறத்தோல் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டது. கிணறு வெட்டி தண்ணீர் பெற்றோம். இதனையும்விட ஆழமாக தோண்டப்பட்ட போது மென்மையான உலோகம்களும் பிற்காலத்தில் உறுதியான உலோகம்களும் கிடைத்தன.

இங்கே குறிப்பிடும் உறுதியான உலோகம்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் (பனம்கொட்டை) சிங்கள தேசியத்திற்கும் (ஈரப்பலாக்காய்) என்ன தொடர்பு? ஜரோப்பாவில் முதலில் கண்டெடுக்கப்பட்ட உறுதியான உலோகம்கள் தான் உலகத்தில் தோன்றிய கைத்தொழில் புரட்சிக்கு அத்திவாரமிட்டன. கைத்தொழிற் புரட்சிதான் “தேசியம்”, “தேசிய எல்லைகள்”, ‘தேசித்திற்கான வரைவிலக்கணங்கள்” என்பவற்றை உருவாக்கின. எங்கே? ஜரோப்பாவில். சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் எற்ப்ட்ட இந்த சடுதியான கண்டுபிடிப்புகள் பாரிய அளவில் சமூக மற்றங்களையும் வளர்ச்சிகளையும் தோன்றப்பண்ணின.

கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.

அணுகுண்டு வெடித்தால்த்தான் அழிவு...

அணுவுலை வெடிக்காமலே அழிவு...

கூடங்குள அணுமின் உலையை இழுத்து மூடு..!

போராடும் மக்களோடு கை கோரு...

இது நமது போர்.

மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.

பேரினவாத அரசு சிறுபான்மை இன மக்களை தனது இனவெறியூட்டிய படைகள் மூலமாக கொலைகள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் முதல் இனப்படுகொலை வரை தனது அடக்குமுறையினை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவற்றினை அரசு, படைகளைக் கொண்டு முன்னெடுப்பதாலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மிக நீண்ட காலமாக பேரினவாதத்திற்கு எதிரான குரல்கள் மற்றும் செயற்பாடுகள் அற்ற நிலையில் எம்முன்னால் ஒட்டுமொத்த சிங்கள இனமுமே எதிரியாக தெரிகின்றது. தமிழ் குறுந்தேசிய அரசியல்வாதிகளும் “சிங்களம் எம்மை அடக்கியாள அனுமதிக்கோம். தகுந்த பதிலடி கொடுப்போம்” என்பன போன்ற இனவெறியூட்டும் கோசங்களை முழங்கி தமது அரசியல் இருப்புக்காக முழுச் சிங்கள மக்களுமே இனவாதிகள் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ரஜனிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் ... போன்றவர்களை கதாநாயகர்களாக போட்டு அவர்களின் இமேஜ் பிரதிபலிக்கும் வகையில் பெரும் பணச்செலவுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருபொழுதும் தரமான சினிமா தரப்பில் விமர்சிக்கப்படுவதில்லை. காரணம் இப்படங்கள் கீழ்மட்ட ஜனரஞ்சகத்தை ரசிக்கும் வண்ணம் அப்பாவி பாமர ரசிகர்களின் உணர்ச்சிகளுக்கு தீனிபோட்டு முற்றுமுழுதாக பணம் பண்ணுவதையே நோக்கமாக கொண்டு எடுக்கப்படுபவை.

ஆனால் புரியாத புதிர் என்னவென்றால் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்ட விஸ்வரூபம் படத்திற்கு எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கமலை வித்தியாசமான கலைஞாகவும் புதுமைகள் செய்பவராகவும் சொல்வதற்கு என்ன இருக்கிறது. இங்கே விஸ்வரூபம் படத்தில் புரிந்தும் புரியாமலும் பல விடயம்கள் இருப்பதாக பலர் பிரமித்தார்களாம். உண்மையில் கமலஹாசனின் அரைவேக்காட்டுத்தனமான சமூகப்புரிதலின்மையே படத்தில் வெளிவந்திருக்கிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE