Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இனம்,மதம், நிறம், பால், சாதியம் கடந்த உலகத் தொழிலாளி வர்க்கம் என்ற உணர்வுடன் அணிதிரண்டு போராடும் ஒரு நாள் மே 1. அமெரிக்கா சிக்காக்கோ நகரில் 1886 இல், வேலை செய்யும் நேரத்தை 8 மணியாகக் குறைக்கக்கோரிப் போராடியபோது அதற்காகப் போராடியவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட தினம் மேதினம். அன்று போராடி மடிந்தவர்கள் நினைவாகவும், உலகெங்கும் எட்டு மணி வேலை நேரத்தை முன்வைத்து நடத்திய போராட்டத்தினமாகவும், மே 1 பிரகடனமாகியது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோசத்தை உழைக்கும் வர்க்கம் தனதாக்கியது.

இனம், மதம், நிறம், பால், சாதியம் கடந்த உலகத் தொழிலாளி வர்க்கம் என்ற உணர்வுடன் அணிதிரண்டு போராடும் ஒரு நாள் மே 1. அமெரிக்கா சிக்காக்கோ நகரில் 1886 இல், வேலை செய்யும் நேரத்தை 8 மணியாகக் குறைக்கக்கோரிப் போராடியபோது அதற்காகப் போராடியவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட தினம் மேதினம். அன்று போராடி மடிந்தவர்கள் நினைவாகவும், உலகெங்கும் எட்டு மணி வேலை நேரத்தை முன்வைத்து நடத்திய போராட்டத்தினமாகவும், மே 1 பிரகடனமாகியது. 8 மணி நேரம் வேலை, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோசத்தை உழைக்கும் வர்க்கம் தனதாக்கியது.

கொதிக்கும் உலையில் பிளம்பான இரும்பை

அடித்து நிமிர்த்திய தோள்கள்

உயர்த்திக் கையை

அகில உழைப்பவர் உறுதியை- உணர்த்திய தினம்!

 

ஆலைச்சங்கொலி அதிரமுதல்

துடித்தெழுந்து உழைப்பினை விற்பதே

வாழ்வல்லயென்று-செங்கொடி ஏந்தி

சிக்காக்கோ- விழிப்புறவைத்த தினம்!

தனி ஒருவர் பிறர் ஒருவரை சுரண்டுதல் எந்த அளவிற்கு ஓழிக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு ஒருதேசம் பிறிதொரு தேசத்தை சுரண்டுதலும் ஓழிக்கப்படும். தேசத்தினுள் வர்க்கப்பகைமை எந்த அளவிற்கு மறைகிறதோ, அதே அளவிற்கு தேசங்களுக்கிடையிலான பகையும் இல்லாது ஒழியும். ( கார்ல்மாக்சு . எங்கெல்சு )

1, மே யில் இந்த மாமனிதர்கள் முதன்மையாளர்கள்.. ஏனெனில் இன்று தெருவில் இறங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் எவ்வாறு சுரண்டிக் கொள்கிறார்கள்? அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, எவ்வாறு ஆள்கிறார்கள் என்பதை மிகதெளிவாக, முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் அடங்கிப்போகும் அளவிற்கு அன்றும் இன்றும் அந்த மாமனிதர்களின் அரசியல் பொருளாதார சமூக ஆய்வு பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் செழிப்பாகி வளர்ந்து வருகிறது.

news

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொறுப்பு வாய்ந்தவர்களது உதாசீன நடவடிக்கை காரணமாக ஆத்திரமடைந்து உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நுழையமுற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பகல் 11.00 மணியளவில் ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ்காவலையும் மீறி பிரதெச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றார்கள்.

ஆறு ஏக்கரில் அல்ல ஆறாயிரம் ஏக்கரில் இராணுவக் குடியேற்றமாம்!!

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான ஆறு ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் பலாத்காரமாக பறிபோயுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள அந்தந்த இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு அரசு சொல்லும் காரணம்

யாழ்.பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு பலாலி, காங்கேசன்துறை ஆகிய உயர் பாதுகாப்பு வலயப்பகுதியை முறைப்படி கையளித்து, அதை இப்போ பறித்துள்ள ஆறாயிரம் ஏக்கரில், "மகிந்த சிந்தனையிலான மிக்சரியான இனவாத-இனச் சுத்திரிப்பு" கொண்ட நடவடிக்கை நோக்கில் விசாலமான விஸ்தரிக்கப்பட்ட இராணுவக் குடியேற்றத்தை ஏற்படுத்தப்போகின்றோம் என்பதேயாகும்.

இதில் உள்ள மிக முக்கிய கேள்வி யாதெனில், இவர்களால் ஒப்படைக்கப்படவுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே எத்தனை ஆயிரம் ஏக்கரில் இருந்தது.

ஆறாயிரம் ஏக்கரிலா? இல்லையே! தற்போது இக்குறைந்த பரப்பளவில் இருந்துதானே வடபகுதியில் உள்ள சகல பரிபாலனங்களையும் செய்கின்றீர்கள்.

கடும்போக்கு பௌத்த அமைப்புகள் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டு

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்த இனவாத எதிர்ப்பு பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அண்மைக்காலமாக கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்தப் பேரணி நடந்துள்ளது.

பணப்பிரச்சினைக்குத் தீர்வு

நாம் ஏற்கெனவே வந்த நோக்கங்களில் ஒன்றான பணப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது. அதற்காக நாட்டில் ஏற்கெனவே இருந்த மற்றத் தோழர்களுடன் கதைத்தோம். நாம் எவருமே முன்பு ரெலோவில் இருந்தோம் என்பதைத் தவிர வேறு எந்தவகையான உறவுகளும் நிர்ப்பந்தங்களும் கட்டுப்படுத்தலும் இல்லாத நிலையில் இருந்தோம். ஆனால் இந்தியாவில் இருந்த பெண் தோழிகளின் நிலையினைக் கருதித்தான் அந்தப் பிரச்சனைகள் தீரும் வரை தொடர்ந்து வேலை செய்வதென முடிவெடுத்தோம். அதாவது, யார் விரும்பினாலும் அவர்கள் சொந்த வாழ்க்கைக்குச் செல்லலாம் என்ற நிலையில் இருந்தோம்.

தோழர்களே!

உலகெங்குமுள்ள தொழிலாளர்கள் தேசம், இனம் என எல்லாவற்றையும் கடந்து ஒன்றுபட்டு தமது உரிமைக்காக உலகளவில் திரண்டெழும் இம் மேநாளில் சமவுரிமை இயக்கம், உங்களை இவ் உழைப்பாளர் தினத்தில் வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு எள்ளளவும் வேறுபாடின்றிய அதேவழிகளில் இன்றைய மகிந்த அரசு நம்நாட்டு மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை நசுக்கி வருகின்றது. உண்மையாக நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து இனவெறிப் பிரச்சாரங்கள் மூலமாய் மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை இந்த அதிகாரப் பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். வடக்கு வாழ் மக்களுக்கு வசந்தம் வழங்குவோமென்ற இந்த அரசானது வடக்கு மக்களை முன்னெப்போதையும் விட மோசமான இராணுவ ஆட்சிப்பிடிக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. வடக்கு மக்கள் இராணுவ ஆதிக்கப் பிடிக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

altஅரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றையதினம் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் நல்ல முடிவெடுத்தால் அனைத்து பிரச்சனையையும் சுலபமாகத் தீர்ப்பாராம்??..!!

வடமாகாண தேர்தலில் தமிழ் மக்கள் நல்லதொரு முடிவினை எடுப்பார்களேயானால், பலாலியில் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை சுலபமாக தீர்க்கப்பட்டுவிடக் கூடியதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்!

டக்ளஸ் வடமாகாணத் தேர்தலில் தமிழ் மக்களிடம் ஏதிர்பார்க்கும் நல்ல முடிவுதான் என்னவோ? அரசையும் தன்னையும் தேர்தலில் ஆதரிக்க வேண்டும். தங்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மைப் பலத்தைத் தாருங்கள் என்பதுதானே?...

புதிய-ஐனநாயக மக்சிச-லெனினிசக் கட்சியின் மேதின அறைகூவல்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப்பொருட்களுக்கும் தொடர்ந்து விலை அதிகரிப்புக்களைச் செய்து வரும் மகிந்த ராஐபக்ச அரசாங்கம் மின்சாரப் பாவனைக்கும் போக்குவரத்துக்கும் அளவுக்கு மீறிய கட்டணங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகிறது. இவற்றின் மூலம் நாட்டு மக்கள் அனைவரினதும் தலைகளில் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளை ஏற்றி வருவது மட்டுமன்றி, வயிறுகளிலும் ஒங்கி அடித்து வருகிறது. அதே வேளை நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை மறுத்து வடக்குக் கிழக்கில் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி வருகின்றது.

altஎமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.

 

அன்பரே..!

நான் திடுக்குற்றுப் பார்த்தேன்.

என்ன அதிசயம் இது..!

 

பல்கோடி மாந்தர்

அல்லும் பகலுமாய்

தேடுதேடெனத் தேடியும்

எவருக்குமே கிடைக்காத கடவுள்

என்னெதிரே நின்றார் சற்று முன்பு.

நம்பவே முடியவில்லை என்னால்

ஆனாலும் நம்பிப் பார்த்தேன்.

குப்பி விளக்கோ

முற்றத்தில் மூட்டிய நெருப்போ

உலாவந்து தேய்ந்து வளரும் நிலவொளியோ

கும்மிருட்டிலும் கூட வாழப்பளகிய விழிகள்

ஏழையின் கருமணியில்

தணல் கொதிபிளம்பாய் பழகிப்போகுமா இருள்....

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE