Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஐ.நா ஊழியர்களை தண்டிப்பது யார்?

ஐ.நாவின் ஊழியர்கள் பொதுவாக அரசியல் நாடு பேதமில்லாது நடக்குமாறு கோருகின்றது. இவர்கள் பொதுவாக வேலை செய்ய முற்பாட்டாலும் புறநிலை இவர்களை அனுமதிப்பதில்லை. இதற்கு இவர்கள் கொண்டுள்ள சிந்தனை முக்கியமாகின்றது. இவ்வாறான தனிநபர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை கொள்கின்றனர் என்பது உண்மை. ஆனால் இதில சிறிய வித்தியாசம் இருக்கின்றது. பொதுவுடமையாளர் சிந்தனையில் பார்க்கின்ற போது இவர்கள் சுரண்டல் அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொள்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளாவிடினும் இதுவே இன்றைய சமூக நியதியாக இருக்கின்றது. ஈராக் மீது இவ்வூழியர்கள் நடந்து கொண்டார்கள் எனப்பார்ப்போம்.

பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவொன்று விசாரணைக்காக "ஜனரல" அலுவலகத்திற்கு சற்று முன் வந்தது. கடந்த வார " ஜனரல" பத்திரிகையின் முன்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்த  "தங்க வியாபாரத்தின் பின்னணியில் சீமாட்டி" என்ற செய்தி தொடர்பில் விசாரிப்பதற்காகவே தாம் வந்ததாக பொலிஸார் கூறியதோடு, பத்திரிகையின் ஆசிரியரையும், மேற்படி செய்திக்குப் பொறுப்பான ஊடகவியலாளரையும் நாளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

எனக்கு ஆருயிர்க் காதலி

ஒருத்தி இருந்தால்

ஒரு இரவின் முடிவில் - அவள்

போலீஸ்காரர்களால்

படுகொலை செய்யப்பட்டாள்.

 

ஏ! காடே ! நீ என் ஆருயிர்க் காதலியாய் இரு !

நீயே என் மணப்பெண்.

என் இதயத்தின் அன்பு

வெளிச்சமிடுகின்றது, வெள்ளமாய் ஓடுகிறது.

அந்தக் காதல் வார்த்தைகளை- நான்

எப்போழுதும் சொல்லத்துணிந்ததில்லை !

ஆனால்.... அருமைக்காடே !

உன் செவிகளில் மெதுவாக உச்சரிக்கிறேன்.

மாஸ்கோவில் ரஷ்யத் தலைவர் லெனினின் உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது.

பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்

மனித உரிமைககள் பற்றி

நீதியை நிலைநாட்டுவது பற்றி உலகின் பாகங்களிலும் உள்ளவர்கள் எல்லோராலும் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் முழுச்சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து நோக்காது, தனிமனிதனில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில் அமைந்திருக்கின்றது. மனித உரிமைகள் பற்றி 1975 இல் கெல்சிங்கியில் (பின்லாந்து) சுற்றில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், இது குறிப்பாக சோசலிச சமூக அமைப்பிற்கு நேர்மாறான கருத்தை வலியுறுதிக் கொண்ட இந்த நிலைப்பாடானது. அன்றைய காலத்தில் பிரஸ்சிநேவ் தலைமையில் இருந்த சோவியத் ஒன்றியம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பின் இடையே தொடர்ச்சியாக அமெரிக்க மனித உரிமை பற்றி இன்று வரைக்கும் வலியுறுத்தி வருகின்றது. மேற்கு தேசங்களின் மனிதவுரிமைக் கோரிக்கையானது கட்டுப்பாடற்ற உழைப்பாளிகளை கோரியதான நிலைப்பாடுகளில் இருந்து அமைந்திருக்கின்றது.

வடக்கின் மாகாணசபைத் தேர்தல் "வரும் ஆனால் வராது" எனும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இத்தேர்தல் அரசின் சிற்சில எடுபிடிகளால் கோமாளித்தனத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

"பிரிவினைவாதத்துடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இதற்காக பத்து லட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது"

இதுபோக புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரர் வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராம்…

சுவீஸ் நாட்டுத் தொழிலாளர்களோடு பல்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் நீண்ட ஊர்வலம். அதில் பலதரப்பட்ட 60 பதிற்கும் மேலான இடதுசாரி கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் கலாச்சாரக் குழுக்கள், பெண்கள் அமைப்புக்கள், சிறுவர், சிறுமிகளுக்கான அமைப்பு, தெழிற்சங்கங்கள், சமூக நலவிரும்பிகளான ஆயிரக்கணக்கான தனிநபர்கள் என 13 ஆயிரம் வரையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு அமைப்புக்களின் துண்டுப்பிரசுரம் நியாயத்தையும், நேர்மையையும் கோரி எழுதப்பட்டிருந்தது. அவற்றில் குறிப்பாக சுவீஸ் அரசால் கொண்டுவரப்படவிருக்கும் அகதிகளுக்கு எதிரான கடுமையான சட்டவாக்கம் என்ற நிலைப்பாட்டை கண்டித்தும், 9 ஜனில் அதற்கெதிரான வாக்களிப்பைச் செய்யுமாறு கோரியும், முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரிகள் என்ற அமைப்பு (AKL) துண்டு பிரசுரத்தை வினியோகித்தது.

அண்ணே, நம்பவே முடியவில்லை. சிவப்புக்கொடி சடசடத்து பறக்குது. அண்ணனும், அண்ணனின் பாசக்கார பயலுகளும் சிவப்புச்சட்டை, சிவப்பு காற்சட்டை போட்டுக்கொண்டு சின்னப்பிள்ளைத்தனமா திரியிறீங்க. மன்னிச்சுக் கொள்ளுங்கோ சிங்கம் மாதிரி போறீங்க. அண்ணே நீங்க எதையும் ஒரு குறை விடாமல் செய்யிற ஆள், அதனாலே கோவணம் கூட சிவப்பிலே தான் கட்டியிருப்பிங்க. ஆனா சில பொறாமை பிடிச்ச நாய்கள், மண்டை கழண்ட மடையனுகள் கேக்கிறானுகள் இதெல்லாம் ஒரு பிழைப்பா, தொழிலாளர் தினம் கொண்டாட ஒரு விவஸ்தை வேண்டாமா? மகிந்துவோடை கூட்டு வைச்சுக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை பற்றி கோசம் போடுறது ரொம்ப கேவலமா இருக்கு. கேக்கிறவன் கேனைப்பயலா இருந்தா கோத்தபாயாவின் மண்டையிலே சன் ரீ.வி தெரியுது எண்டு சொன்னாலும் சொல்லுவீங்க என்கிறானுகள்.

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தும் அதன் அழிவுகளும் மனித நேயத்தினை உலுப்பி விட்டுள்ளது. குறுகிய கால இடைவெளிக்குள் பல ஆயிரக்கணக்கானவாகள் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். ஒன்பது மாடிக்கட்டிட இடிபாட்டில் ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள், ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக நாளாந்த போராடும் ஏழை உழைப்பாளியின் உயிர் தீ விபத்துக்குள்ளும், கட்டிட இடிபாடுகளிலும் அர்த்தமற்று அழிந்து போகிறது. எல்லாரையும் போல நானும் வாழ வேண்டும், குடும்பம் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற நினைப்போடு தொழிலுக்கு செல்லும் மனிதன் பிணமாக மீட்கப்படுகிறான்.

இலங்கை குறைமுதலாளித்துவ வரலாற்றைக் கொண்ட தேசங்களில் முதலாளித்துவ நிறுவன அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சோல்பரி, டொணமூர் ஆணைக்குழு போன்றவற்றை அமைத்து அரசியல் சட்டங்களை சிபாரி செய்தும் உருவாக்கியும் கொண்டது. முதலாளித்துவ அரச நிறுவனத்தில் ஆணைக்குழு ஒரு முறைமை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்கள் என்பது தேசங்கள் தொடங்கி சர்வதேச மட்டத்தில் வெவ்வேறு அலகுகளில் உருவாக்கப்பட்டும் நீதியை நிலை நாட்டப்படுவதாகவும், நடுநிலையாக செயற்படுவதாகவும் காட்டப்படுகின்றது.

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த போராளியாகவும் புதிய ஜனநாயக - மாக்சிச-லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசியல் தொழிற்சங்க வெகுஜனப் போராட்டத்தளங்களில் செயல்பட்டு வந்தவருமான மறைந்த இ.கா.சூடாமணியின் முதல்மாத நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா முத்தையா மண்டபத்தில் இன்று 11-05-2013 காலை ஒன்பது மணிக்கு நடைபெறுகிறது. நினைவுரைகளும் “சூடாமணி” நினைவு நூல்வெளியீடும் இடம்பெற உள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் முன்றாண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று 8 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரையில் ஒரு மாத காலத்தை போர் வீரர்கள் மாதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப் படுத்தியுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட, இராணுவ வீரர்களின் போர் வெற்றியை கொண்டாடும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ சேவைகள் அதிகாரி சபையின் உறுப்பினர்கள் இராணுவக் கொடியினை நேற்று அலரிமாளிகையில் வைத்து அணிவித்தனர்.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்

அவ்வாறான ஒரு காலகட்டத்தில் கியூ பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்திக்க முடிந்தது. எம்மை மகேஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி எமது கஸ்டமான நிலைமைகளைச் சொல்லி ஏதாவது பணவசதி செய்ய முடியுமா என்று கேட்டோம். அவரோ தன்னிடம் இருந்த பணத்தினை இந்திய அதிகாரிகள் பறித்து விட்டனர் என்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தான் திருப்பித் தருகிறார்கள் என்றும் தாம் யோசித்து முடிவு சொல்வதாகவும் கூறினார்.

"இலங்கையின் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் 1990-ம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இனச்சுத்திகரிப்பு என்று தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் வரை, தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டக்களப்பில் தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் தெரிவித்துள்ளார்.!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் கைதானது, ஒரு தனிமனிதனுக்கு எதிரானதல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனமான அரசியல் குரலை அடக்கி நசுக்குவதற்கு இலங்கை அரசு இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஆசாத் சாலி மீது மீது பிரயோகித்துள்ளது.

ஆசாத் சாலியின் குரலை நசுக்கும் அரசின் முடிவும், இரும்புப்பிடியான ஆதிக்க அத்துமீறலும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும், விடப்படக் காத்திருக்கும் செயல்களுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து விடுதலை, சுதந்திரம், சமத்துவம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் எழுகின்ற குரல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தயங்கோம் என்கிற அடக்குமுறை சமிக்ஞையாகவும் முஸ்லிம்களை நோக்கிய எச்சரிக்கையுமாகவே அர்த்தம் காணவேண்டும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE