Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29

ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? .. என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கிறது.

இலங்கையில் தொடருகின்ற இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் எதிராக வாக்குப்போடுவதன் மூலமும், அமெரிக்காவை நம்புவதன் மூலமும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியுமா? இப்படி செயற்படும் எமது அரசியல் சரியானதா? இதில் முள்ளிவாய்க்கால் வரை நம்பிய அரசியல் ஏன் தோற்றுப் போனது என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் நம்பும் அரசியலின் தோல்வியையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் நாம் எப்படிப் போராடவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 04

முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய, அமெரிக்க, சீன அரசுகளின் செயல்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச் சமூகமாய் விரிந்து நிற்கிற ஐ. நாவின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையில் மௌனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டும்.

altகாணாமற் போனோர் தொடர்பான உண்மையான விபரங்களை வெளிப்படுத்துமாறு கோரி, காணாமற் போனோரின் உறவினர்கள் நாடளாவியரீதியில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.  என்று காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரம்.

நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் ஏழு வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடூரத்துக்கு எதிராகவும், நீதி விசாரணகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 20-05-2013 திங்கட்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளை இப்படத்தொகுப்பில் காணலாம்.

 

இனவாதத்தை பேரினவாதிகள் மட்டும் கொண்டிருக்கவில்லை, பேரினவாதத்துக்கு எதிரானவர்களுக்குள்ளும் இனவாதமே தொடருகின்றது. இனவாதம் எங்கும் எப்போதும் மக்களுக்கு எதிரானது. முள்ளிவாய்க்கால், யூலைப் படுகொலை .. என அனைத்தையும் இனவாதம் ஊடாக அணுகி குறுக்கி விடுகின்ற இனவழிவுவாதமே, இன்று இலங்கையின் மைய அரசியலாகத் தொடருகின்றது.

இலங்கையில் தொடருகின்ற இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் எதிராக வாக்குப்போடுவதன் மூலமும், அமெரிக்காவை நம்புவதன் மூலமும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியுமா? இப்படி செயற்படும் எமது அரசியல் சரியானதா? இதில் முள்ளிவாய்க்கால் வரை நம்பிய அரசியல் ஏன் தோற்றுப் போனது என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் நம்பும் அரசியலின் தோல்வியையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் நாம் எப்படிப் போராடவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.   

கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.

மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.

நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் ஏழுவயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடூரம் நடந்தேறியுள்ளது. இதனைச் செய்தவர்கள் மனிதப் பிசாசுகளாகவே இருக்க முடியும். அதேவேளை இச்சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களாகியும் அக்கொடிய குற்றவாளிகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அச்சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபரோ அல்லது நபர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை. இது ஏன் என்றே மக்கள் மத்தியில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடல் அட்டைகளை பிடிப்பதற்காக வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமது பிரதேச மீனவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனா.

altதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று மாலை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கும் தொடர்ந்து விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் வயிறுகளில் அடித்து வரும் அரசாங்கம் இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தியதன் மூலம் மக்களின் தலைகளில் ஓங்கி அடித்துள்ளது.

பேரினவாத இன-வெறியர்களுக்கு "வெற்றிநாள்" ஆகலாம்?...

தமிழ் மக்களுக்கும், இனவாதத்தை வெறுப்போர்க்கும் துக்கநாள்!

இன்று முதல் ஒருமாத காலத்தை "முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்" வெற்றி விழாவாக கொள்ளலாம். அதற்கான கொடியேற்றத் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகி, முப்பதாவது நாளில் மகிந்தா-கோத்தபாயவின் (வைரவர்) மடை- வேள்வியுடன் முடிவடையும்.

இவ்வொரு மாதகாலம் மகிந்தாவிற்கும் அதன் பாசிஸ - இனவெறி கொண்ட ஆட்சிக்கும் வெற்றி விழாவாக இருக்கலாம். தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல, எம் நாட்டின் தேச-பக்த ஜனநாயக-முற்போக்கு மாத்திரமல்ல, இனவாதத்தை வெறுப்போர்க்கும், சகல இனவாதங்களுக்கும் எதிராக போராடும் போராட்ட சக்திகளுக்கும், மக்களுக்கும் பெரும் துக்கமும் சோகமும் கொண்ட கரிநாட்கள் ஆகும்.

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE