ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29
ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? .. என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கிறது.