Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

டக்ளஸ் தேவானாந்தா கடந்தவாரம் வீரகேசரிப் பத்திரிகைக்கு பத்துப் பெரும் கேள்விகளுக்கு பதில் எழுதி "பாஸ் பண்ணின புளகாங்கித்த்தில" சில அரச அடியாட்களும், அவர்களின் ஊடகங்களும் அமளி-துமளியாக செய்திகள் எழுதி துள்ளிக் குதிக்கின்றன. பார்த்தியா அவரின் கேள்விகளுக்கான பத்திரமான பதில்களை என பரவசமடைகின்றார்கள்.

ராசையா ஒரு தோட்டத் தொழிலாளி. ஹல்வத்துர தோட்டத்தில் வேலை செய்கிறார். 28 வயது. 3 குழந்தைகள். வழமைபோல் வேலைக்குச் செல்கிறார். அவர் வேலை செய்யும் இடத்தில் காய்ந்து இற்றுப்போன மரமொன்று இருக்கின்றது. அந்த மரத்திற்கு பட்டும் படாமலும் 33000 வாட்ஸ் மின்சார கடத்திக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. வேலை பார்க்கும் சுபவைசர் வந்து அந்த மரத்தை வெட்டும்படி ராசையாவிடம் கூறுகிறார். மின்சாரக் கம்பி இருப்பதால் அதனை வெட்டுவது ஆபத்தை வலிய அழைத்துக் கொள்வதாக இருக்கும் எனவே அதை வெட்ட ராசையா மறுத்துவிடுகிறார். தொழிலாளி தனது ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான ஆக வேண்டுமென்ற இறுமாப்போடு மரத்தை வெட்டாவிட்டால் வேலை தராமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சுபவைசர் பயமுறுத்தவும் ராசையா ஒருகணம் யோசிக்கிறார், வேலையை விட்டு தூக்கிவிட்டால் தனது குடும்பம் பட்டினியால் துன்பப்படும். பிள்ளைகளின் படிப்பு நின்றுவிடும். யோசிக்கிறார். ' என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ மரத்தை வெட்டு" என்று சுபவைசர் தையிரமூட்டுகிறார். என்ன நடந்தாலும் நடக்கட்டும். மரம் என்ன தலையிலா விழப்போகிறது என்று கோடரியால் மரத்துக்கு இரண்டு வெட்டுதான் கொடுத்தார். மரம் சாய்ந்து மின்சாரக் கம்பியில் பட்டுவிட்டது. மரத்தில் கைவைத்த ராசையா ஐம்பதடி தூரத்திற்கு தூக்கி வீசப்படுகிறார். மரம் மாத்திரமல்ல அதோடு அவரது வாழ்க்கையும் சாய்ந்து விட்டது.

புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சியின் "அரசியல் கருத்தரங்கு"

இடம்:    வரவேற்பு மண்டபம், அருணலோகா உணவு விடுதி (2ம் மாடி)

காலம்:  16/6/2013 ஞாயிற்றுக்கிழமை

நேரம்:   காலை 9.30 மணி

வவுனியா வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தாம் சிற்றூழியர்களாக பணியாற்றும் போதிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது புதியவர்களுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலைச் சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியும் இதனை ஆதரித்து ஊழியர்களோடு ஆர்ப்பாட்டத்தில் முழுமையாகக் கலந்துகொண்டது.

இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அளிக்க வக்கற்ற அரசு தொடர்ந்தும் வறிய மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை படிப்படியாக குறைத்து வருகிறது. சூரியன் அஸ்திமிக்காத ராஜ்யஜியத்தை வைத்திருந்த ஏகாதிபத்தியம் இன்று மக்களின் வறுமையை போக்க முடியாமல் திண்டாடுகிறது. ரஜ்சிய மற்றும் சீன புரட்சிக்கால கட்டத்தில் தங்கள் நாட்டிலும் ஒரு புரட்சி வருவதைத் தவிர்க்கும் பொருட்டு மானியங்களை வழங்கிய ஏகாதிபத்தியங்கள் இன்று இந்த புரட்சி அபாயம் இல்லை என்று வழங்கிய மானியங்களை நிறுத்துகின்றன. கூகிள் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றன. அவ்வாறான முதலாளித்துவ கம்பெனிகளிடமிருந்து வரி அறவிடுவதை விடுத்து வறிய மக்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்துகின்றன. இதனால் வறிய மக்கள் சமாளிக்க முடியாமல் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

 

தாஜ்மகால்

செருக்கிய சிற்பிகள் வாழ்வை

யாரும் சிந்திக்கப்போவதில்லை,

காதலுக்கு நினைவுச்சின்னங்கள்

யார் எழுப்பினர்

தமிழினமே தமிழகமே !

சிங்கள வார இதழான 'ஜனரல" பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஜீ. டீ. எல். பிரியதர்ஷன அவர்களை மர்ம நபர்கள் நேற்றும் (6) பின் தொடர்ந்ததாகத் தெரிய வருகிறது. கடமை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தன்னை பின் தொடர்ந்ததாக பிரியதர்ஷன கூறினார்.

உழைக்கும் மக்களுக்கான விடுதலையை வென்று எடுப்பது என்பதுதான் இன்று எம்முன்னால் இருக்கின்ற அரசியல். அதாவது உழைக்கும் மக்களுக்கான உரிமையை உறுதி செய்யாத வலதுசாரிய சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமாக வென்றடையலாம். ஆயினும் ஒரு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நகர்வதற்கு எதிராகவும், முக்கிய பிரச்சினையாக இருப்பது எதிர்ப்புரட்சிகர சிந்தனைக் கூறுகளும் செயற்பாடுகளுமாகும். ஆகவே தான் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொள்ள வைப்பதற்கான யுத்த - அரசியல் தந்திரோபாயத்தை, சமூக மட்டத்தில் இருந்து வகுப்பது இதில் அவசியமாகின்றது. இதில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கான வரலாற்றுக் கடமையை செய்து முடிப்பதற்கு எம்மை நாம் இதில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயமும் தேவையும் இருக்கின்றது. அத்துடன் உற்பத்திச் சாதனத்தை உடைமையாக்குவதன் ஊடாக அனைத்து உற்பத்திச் சக்திகளை உயர்ந்த தளத்திற்கு மாற்றி அமைப்பதற்கு, சமூக மேற்கட்டுமானத்தின் நிறுவனங்களின் பாத்திரத்தினையும் இந்தச் சமூக அமைப்பின் தன்மையில் இருந்து ஆராயவேண்டியுள்ளது.

இன்று எமது நாடு இனவாததின் காலபோகத்தில் உள்ளது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக விதைக்கப்பட்ட இனவாத அரசியலின் விளைச்சலை இன்று எம்நாட்டு மக்கள் அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதமும், சிறுபான்மையினரிடையே உள்ள தமிழ்த்தேசிய இனவாதமும்தான் எம்நாட்டு மக்களின் "இனவாதவித்தாகும்".

சுதந்திரத்திற்கு முன்பாகவே இனவாத அரசியல் முளைவிட ஆரம்பித்தாலும், சுதந்திரத்தின்பின் மாறிமாறி வந்த இனவாத அரசுகளின் வினையாற்றல்கள்தான் சிறுபான்மையினரிடையே இனவாதமாக தோற்றம் பெற்றது. இதை மலையக மக்களின் குடியுரிமை இல்லாதாக்கப்ட்டதுடனும், தனிச் சிங்களச சட்டத்தின் வருகை கொண்டும் காணமுடியும். "சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியா பற்றிய அச்சங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன.

நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராபக்ச தலைமையில் நடத்தப்பட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் 13-வது திருத்தத்திற்கு சமாதி கட்டும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டதாம்…

 இதன் பிரகாரம் 13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பறிப்பது தொடர்பாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள மாகாணசபைகள் தாமாக இணைந்து கொள்வதற்கு வழிசெய்யும் பிரிவை நீக்குவதற்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைவை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கும் நோக்குடனேயே இம்முடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. புதை குழிகள் காரணமாக அரசாங்கங்கள கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. புதைகுழிகளினாலேயே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் உண்டு. இந்த மண்ணில் இன்னும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமுள்ளன.

இலங்கையில் நூற்றாண்டு காலமாக சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவி வந்த நல்லுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கடும்போக்கு பௌத்த குழுக்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. ஒற்றுமையாக சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ்ந்த சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டியதன் காரணமாக நாட்டை பிணக்காடாக்கிய யுத்தம் மூன்று தசாப்தங்களாக நடந்தது. அதன் காரணமாக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன, மதவேறுபாடின்றி சாகடிக்கப்பட்டார்கள்.

"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"

கேள்வி யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?

ஜுட்:வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார பேருந்தொன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளை நேற்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டhர். கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சஞ்சீவ பண்டாரவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் கோரப்பட்ட போதிலும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணைகளுக்காக எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE