Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

alt தெரண தொலைக்காட்சி சேவையின் அறிவிப்பாளரான தில்கா சமன்மலீ என்பவர் பொது பல சேனை  அமைப்பினால் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக் கொழும்பு குற்ற விசாரணை பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

"பிளஸ்" என்றால் அனைத்து மக்களுக்கும் தீர்வாம்!

மைனஸ் என்றால் அனைத்து மக்களுக்கும் அழிவோ?.....

உலக அரசியலில் இலங்கையின் "மகிந்த அரசியல்" பல விசித்திரங்கள் கொண்டது. பிளஸ் என்றால் அனைத்து மக்களுக்கும் தீர்வாம். மைனஸ் என்றால் அனைத்து மக்களுக்கும் (அரசியல் - பொருளதாரம் உட்பட்ட அனைத்து சிவில் சமூக வாழ்விற்கும், கட்டமைப்பிற்கும்) அழிவோ? உண்மையில் இந்நிலை கொண்டே எம்நாட்டு அரசியலை அனுமானிக்க வேண்டியுள்ளது.

"இலங்கையின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் மிகவும் விரிவுப்படுத்தப்பட்ட பொதுவான தீர்வையே 13 - பிளஸ் என இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவித்திருந்தாக புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது".

பிறேசில் நாட்டில், பேரூந்து கட்டண உயர்வை எதிர்த்து சாவோ பவுலோ நகரில் தொடங்கிய மக்கள் எழுச்சி, நாட்டின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளது. தலைநகர் பிராசிலியாவில் இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தினை ஆக்கிரமித்துள்ளனர். இந்த எழுச்சி நாடு பூராகவும் பரவி  தற்போது ஊழல் மயமான அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமாக  மாறியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நவமணி பத்திரிகையின் ஆசிரியரும், பேராதனை பல்கலைக்கழக முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜனாப் என்.எம். அமீன் அவர்களோடு போராட்டம் பத்திரிகை நடத்திய நேர்காணலிலிருந்து…..

போராட்டம்: இன்றைய நிலையில் நாட்டில் 65வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் பற்றிய உங்களது கருத்து என்ன?

என்.எம். அமீன்: இந்தக் கேள்வியைக் கேட்கும்போது சுதந்திரம் என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஊடக சுதந்திரம் இருப்பதாக சொன்னாலும் கூட இன்று மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் கருத்தை அவரின் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடுவதுதான் சுதந்திரம் என்பது. ஆனால் பத்திரிகையாளர்களால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாதுள்ளது. அப்படி மீறிவெளியிட்டால் அவர் மாற்றுக் கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சுதந்திரம் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.

altதற்போது பெரும்பாலான குடும்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நிலையில் சுமார் 35வரையான குடும்பங்கள் தற்போது பளை பிர தேசத்திலுள்ள ரயில் பாதையில் தங்கியிருக்கின்றனர்.

altதமது தந்தையர்கள் யரொனத் தெரியாத 400க்கும் அதிகமான சிறுவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக மகளிர் அமைப்புகள் கூறுகின்றன.

யுத்தம் முடிடைந்த பின்னரும் கூட தந்தையர் யரென்பதைத் தெரியாமல் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகக் கூறும் மகளிர் அமைப்புகள், யுத்த காலத்தில் இப்படியான குழந்தைகளின் எண்ணிக்கை நூறுக்கும் கறைவாகவே காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

இன்று உலகநாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் பணவீக்கம் மக்களின் அன்றாட சாதாரண வாழ்க்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மின்சாரம், தண்ணீர்... போன்ற அன்றாடம் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் திடீர் திடீர் விலையேற்றத்தால் மக்கள் வாழ்க்கையினை ஓட்ட மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், கட்டுப்பாடற்ற தேவைக்கு மீறிய உற்பத்தி, பொருட்களின் விரயம் என்று முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் யாவும் சாதாரண அப்பாவி மக்களின் தலையில் வந்து வீழ்கின்றது.

altகடந்த காலங்களில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம் தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க தங்களை அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் முயற்சித்தார்கள். மனித வர்க்கத்திற்குள் அவன் ஆரம்பம் தொட்டே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. ஆனால் அது தனது வர்க்கத்தில் உள்ள வேறொரு மொழியை, மதத்தை, சாதியை இன்னும் பல அடையாளங்களைக் கொண்ட மனித இனத்தை அழிக்க முற்பட்டதில்லை.

சிரியாவில் நடந்துவருகின்ற உள்நாட்டு யுத்தத்தில் அந்நாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் ஆதரவு வழங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்துக்குள் இது இட்டுச்சென்றுள்ளது.

தெருவில் போகும் ஒரு மனிதனை கொன்று விட்டு அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொல்லப்படும் முஸ்லீம் மக்களிற்காக பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என வெட்டிய கத்தியை இறுக்கிப் பிடித்தபடி குருதி வழிந்தோடும் கைகளை உயர்த்தியபடி குழந்தைகள் பள்ளி விட்டு வரும் தெருவில் நின்று கொண்டு வெறியாட்டம் ஆடியவர்கள் நிச்சயமாக போராளிகளாக இருக்க முடியாது. அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள். உலகெங்கும் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களை இவர்களைப் போன்றவர்கள் இத்தகைய வெறிச்செயல்களின் மூலம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்குள் தள்ளி விடுகிறார்கள். ஒடுக்குகின்ற ஆதிக்கசக்திகளிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற எதிரியை தொடர்ந்து கட்டமைத்து கொள்ள துணை போகிறார்கள்.

altமுதலில் இடம் பெற்ற அரச சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணையின் போது, மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவையும் சாட்சியாக பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே மன்றில் கோரிக்கை விடுத்தார்.

ஓடி ஓடி கடைசியிலே கிடைத்தது ஒரு மூண்டரை மணித்தியால வேலை தான். அதுவும் விடிய மூண்டரைக்குத் தொடங்க வேண்டும். என்ன வீட்டிலே தான் ஒண்டும் கிளீன் பண்ணுறதில்லை, வெளியேயாவது போய் பண்ணுவோம் என்று நினைத்து அன்போடு அதை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சம்பளம் பொடியனுக்கு சப்பாத்து வாங்கவும் மிஞ்சிற காசுக்கு கொஞ்ச வாழைப்பழமும் வாங்கததான் காணும்.

சந்தர்ப்பம் வர மிகுதி நேர வேலை தருவேன் என உறுதியளித்தாள் மொனிக்கா.

மக்கள் ஊழியர்கள் மக்கள் விரோதி என்றால் ........ இந்த அரசு மக்களுக்கு யார் ?

1897 ல் பாலகங்காதர திலகர் மற்றும் 1922 ல் மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்திய தேசத் தலைவர்களுக்கு வாய்பூட்டு போடுவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் எச்சமான இந்திய குற்றவியல் பிரிவு 124 (பிரிவினை) ஐ பினாயக் சென்னுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது அரசு தரப்பின் மிக பிற்போக்கான குணத்தை நிரூபித்தது ...

இன்று மீண்டும் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மனுவேல் .. நேற்று சத்தியமங்கலம் காவல் துறையால் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு .. பின் கைது செய்யப்பட்டு 124 தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ...

கோத்தபாயாவின் வெள்ளைவான் கும்பல்களினால் கடத்தி செல்லப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கும் சமஉரிமை இயக்க தோழர்களான லலித, குகன் இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியத்தற்காக இவ்விரு தோழர்களும் அரச குண்டர்படைகளால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு இரகசியமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் இராணுவத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்காக நியாயம் கேட்ட மருத்துவர் சிவசங்கர் “மெண்டல” என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் கூடன்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுஉலைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கூடங்குளத்தை அண்மித்த பிரதேசங்களிலும் தென்னிந்தியாவிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான பிரச்சாரங்கள் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. இவற்றிற்கு மத்தியில் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படும் இரண்டு அணுஉலைகளில் ஒன்றின் நிர்மாணப் பணி நிறைவிற்கு வந்துள்ளமை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

மனிதனின் தேவைகளில் லலித் காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காய் கடத்தப்பட்டார். உலக நாகரீகங்கள் மனிதனை நன்றாக வாழ்வதற்காகவே நாள்தோறும் மாறி வருகின்றன. மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE