Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மகிந்த தலைமையிலான அரசால் இன்று இலங்கையில் முன்னெடுக்கப்படும் உலக மயமாதலுக்கும், இராணுவ பாசிசமயமாதலுக்கும் தடையாக, மாகணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கின்ற 13வது திருத்தச்சட்டம் இருக்கின்றது. அரசு தனது பாசிசமாக்கல் கொள்கையை மூடிமறைத்து செயற்படுத்த, பேரினவாதத்தின் துணை கொண்டு அதிகார பகிர்வை இல்லாதாக்க முனைகின்றது. இதற்காக 13வது திருத்தச்சட்டத்தை, தமிழ் மக்களின் பிரிவினையை அடிப்படையாக கொண்டதாக இட்டுக்கட்டிக் காட்டுகின்றது.

altமுஸ்லிம் காங்கிரஸ் என்பது அதிகாரத்துக்கு எதிரான சதிகார கட்சியல்ல. அரசுக்கு விசுவாசமான ஒரு பங்காளிக் கட்சி. பிடரியில் பிடித்து வெளியே தள்ளும்வரை அரசில் இருந்து கொண்டே சமுதாய நலனுக்காக நான் போராடிக்கொண்டே இருப்பேன். இவ்வாறு தெரிவித்தார் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

இலங்கையில் அரசியலமைப்பில் இருந்து வரும் 13வது திருத்தத்ததைப் பறிப்பதற்கும் மாற்றங்களைச் செய்வதற்கும் ஜனாதிபதியும் ஜக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னனி அரசாங்கமும் முன்வந்திருப்பதானது, பேரினவாத ஆட்சியின் அப்பட்டமான ஜனநாயக விரோத சர்வாதிகார நடவடிக்கையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பௌத்தமத அடிப்படைவாதிகளையும், சிங்கள பௌத்த பேரினவாதிகளையும் திருப்திபடுத்தியவாறு உழைக்கும் சிங்கள மக்களை திசைதிருப்பி தமது பேரினவாத முதலாளித்துவ பாசிச சர்வாதிகாரத்தையும், ஊழல் நிறைந்த ஆட்சி அதிகாரத்தையும் நீடித்து நிலைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி செயல்பட்டு வருகிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஒபாமாவை எதிர்த்து, Soweto பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பகுதிகளில் தான் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அறுவைதாசன் அவனிற்கு மிகவும் விருப்பமான ராஜா-ஜானகியின் காலையும் நீயே, மாலையும் நீயே பாட்டைப் போட்டு விட்டு இசைக்கு ஏற்றபடி தலையை ஆட்டிக்கொண்டு சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் கவிதைத்தொகுப்பை எடுத்து ஒரு பிரியாவிடை என்ற கவிதையை வாசிக்கத் தொடங்கினான்.

மாணிக்கங்களை இழந்து போகிறேன்

வளநதிகளை விட்டுச் செல்கிறேன்

அது என்வரையில்தான்

உங்களிற்கு நான்,

சனக்கும்பலில் ஒரு நொடிக்குள்

உங்களைக் கடந்து போய் விட்ட

ஒரு கால் அல்லது ஒரு கை,

ஒரு பிடரி அல்லது முதுகு,

முகமற்ற ஒரு நிழல்

தெரிவுக்குழுவில் உள்ளோர் தலையாட்டும் தஞ்சாவூர்ப் பொம்மைகள் தான்!

இலங்கை அரசிலில் "புரையோடிப்போன புண்ணான தேசிய இனப்பிரச்சினைத் தீர்விற்கு தெரிவுக்குழு எனும் ஒளடதத்தை மருந்தாக தந்துள்ளார்" மகிந்த ராஜபக்ச.

பிரச்சினைத் தீர்வுகளுக்கு குழுக்கள் சபைகள் மன்றங்கள் அமைப்பதில் உலகில் எந்தநாடும் எம்நாட்டின் சாதனையை-பெருமையை நிலைநாட்டவிலைலை எனத் துணிந்து கூறலாம்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்ற ஒன்றை அமைத்து, அதனூடாக காதில் பூ வைக்கும் பல பொய்களை உண்மையாகக் காட்டி சுத்துமாத்துக் கொண்ட தன் குடும்ப ஏமாற்று அரசியலை, எம்மக்களுக்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்தியது… மகிந்த-கோத்தபாயவின் கோமாளித்தன அரசுதான் என்பதில் எவ்வித சந்தேக(?)மும் இருக்க முடியாது.

ஒடுக்கப்பட்ட இனத்தின் மேலான அனைத்துவிதமான பாசிச கெடுபிடிகளைக் கடந்து "மாணவர் குரல்" என்ற புதிய பத்திரிகை ஒன்று பல்கழகங்களில் இருந்து வெளியாகி இருக்கின்றது. இலங்கை பல்கழகங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள் சமூகம் புதிய ஒரு சமூக தேடுதலுடன், தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அது "தமிழ் பேசும் மாணவர்களின் தேசிய குரலாய்" "மாணவர் குரல்"பத்திரிகை என்று தன்னை பிரகடணம் செய்து இருக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனத்தின் மேலான அனைத்துவிதமான பாசிச கெடுபிடிகளைக் கடந்து "மாணவர் குரல்" என்ற புதிய பத்திரிகை ஒன்று பல்கழகங்களில் இருந்து வெளியாகி இருக்கின்றது. இலங்கை பல்கழகங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள் சமூகம் புதிய ஒரு சமூக தேடுதலுடன், தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அது "தமிழ் பேசும் மாணவர்களின் தேசிய குரலாய்" "மாணவர் குரல்"பத்திரிகை என்று தன்னை பிரகடணம் செய்து இருக்கின்றது.

இனிமேல் மலசலம் கழிப்பதும் இவர் "கொன்றோளில்"தானோ?

பாடசாலைகள், அரச அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அரசியல் பிரமுகர்களை அழைக்க வேண்டுமாயின் அழைக்கப்படுவோர் தொடர்பிலான விபரங்களுடன் வடமாகாண ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு பாடசாலைகள் அரச திணைக்களங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஒரு நாடு இன்னொரு நாட்டில் உளவு பார்ப்பதை அறிவோம். அவ்வாறு உளவு பார்க்கப் பகைமை மட்டும் காரணமல்ல. அரசியல், ராணுவ உளவு பார்த்தலை விட வணிக, தொழிற்துறை உளவு பார்த்தல்களும் அரசின் உதவியுடனோ இல்லாமலோ நடக்கின்றன. ஓரு வல்லரசோ ஏகபோகக் கம்பனியோ தனக்குப் பாதகமான மாற்றங்கள் எங்கு நிகழ்வதையும் விரும்பாது. எனவே, பலவேளைகளில் உளவு, தகவல் சேகரிப்புடன் நிற்பதில்லை. அது ஆட்சிக் கவிழ்ப்பு வரை போகலாம்.

தமிழரின் அரசியல் சக்திகள் என்று தம்மை கூறிக் கொள்ளும்  இந்தியாவின் அடிமை விசுவாசிகள்

வடக்கு – கிழக்கு ஆகிய இரு பகுதிகளிலும் மக்கள் இருப்பிட மற்ற அனாதைகள் ஆக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்ட நிலையில் உள்ளனர். இந்த வகையில் இயற்கை வளங்கள் தொட்டு வளமான மீன்பிடி கரையோரங்கள் வருவாய்தரும் விவசாய நிலங்களை இழந்து வடக்கு கிழக்குப் பகுதிகளில் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் வடக்கில் வலிகாம மண் இன்னும் மக்களிடம் மீள ஒப்படைக்கப்படாமல் இந்திய பெருவல்லரசும் இலங்கை இராணுவமும் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன இவ்விடயத்தில் இலங்கை பேரினவாத நிகழ்சி நிரலின் பின்னால் இந்திய முதலாளித்துவ வல்லரசின் பொருளாதார இராணுவ நலன்களே முன்னிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மலையகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்து வரும் 25000 ஆயிரம் ஏக்கர் தோட்ட நிலங்களைச் சுவீகரித்து அவற்றை இரண்டு ஏக்கர் வீதம் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு விவசாயம் செய்ய வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறான தோட்ட நிலப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வரும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் பெறும் மலையகக் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் மேற்படி நிலப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய வாழ்வுரிமை நியாயத்தை முன்னுறுத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும். இவற்றுடன் கூடவே மலையக மக்களுக்கான காணி வீடு சொந்தமாக்கப்படுவதற்கான கோரிக்கைகளும் மக்கள் இயக்கமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். இதற்குள்ள ஒரேவழி மலையகத் தொழிலாளர்கள் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று மாற்று அரசியற் கொள்கைகளை இறுகப் பற்றியவாறு பயணிக்க வேண்டும். இல்லாதுவிடில் மலையக மக்களை அமுக்கி வரும் பேரினவாத முதலாளித்துவ அடிமைத் தனங்களை எதிர்த்து வெற்றி கொள்ளமுடியாது.

களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா பிக்குமார் பொலிசாருடன் தான் வந்திருந்தார்கள். பொலிசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

88-89 காலப்பகுதயில் ஜேவிபி கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையின்போதுபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மாத்தளை பகுதியில் கொல்லப்பட்டனர்88-89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சிக்கு எதிரான அரச நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

உண்மைநிலை அம்பலமாவதைத் தடுப்பதற்காகவே மாத்தளை புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி சிறப்பு ஆணைக்குழு அமைத்துள்ளதாக அந்தப் புதைகுழி தொடர்பில் நீதிகோரும் காணாமல்போனோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தக் கதை கதையல்ல. இந்தக் கதை மனிதர்களும் கற்பனை மனிதர்கள் அல்ல. அவர்கள் யாரென்று நான் சொல்லப் போவதில்லை. அவர்களின் பெயரைக் கூட நான் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் சொல்லாமலே உங்களிற்கு அவர்களை தெரியும். அவர்கள் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வோடு பிணைந்தவர்கள். சமுதாயத்தின் போக்குகளே நிகழ்வுகளை, வரலாறுகளை போராட்டங்களை, போராட்டங்களின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறதென்றாலும் தனிமனிதர்களுக்கும் அவற்றில் ஒரு குறிப்பிட்டளவு பங்குண்டு என்பது விவாதத்திற்கு இடமில்லாத விடயம். உலகைக் குலுக்கிய ரஸ்சிய புரட்சிக்கு பிறகு லெனின் நான்கு வருடங்களே உயிர் வாழ்ந்தார். இன்னும் சில காலம் இருந்திருந்தால் என்ற நினைப்பு அடிக்கடி எழும். பொலிவிய காடுகளிற்குள் தோழன் சே குவெரா கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், ஈழவிடுதலையை நெஞ்சில் ஏந்திய எண்ணற்ற ஆண்களும், பெண்களும் அரசினாலும், இயக்கங்களினாலும் கொல்லப்படாமல் இருந்திருந்தால் வரலாறு சில வேளைகளில் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்.

2013.06.16 அன்று மாத்தளை தனியார் மண்டபத்தில், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சியின் மாத்தளைக்கிளை ஏற்பாடு செய்த "மலையக எதிர்நோக்கும் அரசியல் சமூக பிரச்சினைகளும் எதிர்காலமும்" என்னும் தொனிப்பெருளில் இடம்பெற்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE