![](/images/July2013/Accords.jpg)
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்
டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
சந்திரிகா - புலிகள் பேச்சுவார்த்தை
புலிகள் - இலங்கை அரசு - சர்வதேசநாடுகளின் ஒப்பந்தம்
என்று எத்தனை ஒப்பந்தங்கள், கட்டுக்கட்டாய் காகிதங்களில் எத்தனை வெறும் சொற்கள். இவை எதுவும் தமிழ்மக்களின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவில்லை. தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை, வன்முறைக்கு உள்ளாகாத பெண்களின் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தை தடுத்து நிறுத்தவில்லை. உழைத்து வாழ்ந்த மக்கள் அகதிகளாக, அநாதைகளாக முகாம்களில் இலங்கையிலும், இந்தியாவிலும் கையேந்தி நிற்கும் அவலத்தை தடுத்து நிறுத்தவில்லை. காணிநிலங்களும் கட்டிய வீடுகளும் களவு போவதை தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டுக்கணக்காக இருட்டுச்சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் கைதிகளை சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்ய முடியவில்லை. காகிதங்களையும், கறுப்பு மையையும் வீணாக்கியதை தவிர வேறென்ன மசிர் புடுங்கின இந்த ஒப்பந்தங்கள்.