Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

"ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக வடக்கு பிரதேசத்தைக் கருத முடியும் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு மிகவும் அதிகளவிலான இராணுவத்தினர் உள்ளனர். சரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை கொண்டுள்ள பிரதேசமாக இலங்கையின் வடக்குப் பிரதேசத்தைக் கருத முடியும்.

அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்

1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.

2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.

 கம்பஹா மாவட்டம் வலிவேறியப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒருவர் பலியாகியுள்ளார். இருபதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் நிர்வாகத்தினால் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். மாணவர் ஒன்றியம் மற்றும் ஐந்து மாணவர்கள் மீதான வகுப்பு தடையை நீக்க கோரி மூன்று மாதகாலமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் போரடி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக கடந்த வைகாசி 18 அன்று (ஜீன் 1) மாணவர்கள் நடத்திய ஆர்பாட்த்தின் மீது ஸ்ரீலங்கா பொலிசார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தி தடியடி பிரயோகம் மேற்க்கொண்டனர்.

அன்பிற்குரிய தோழர்களே, தோழியர்களே!

"சஞ்சீவ பண்டார பல்கலைக்கழகங்களினுள் பிரவேசிக்க தடையுத்தரவு". கடந்த சிலவாரங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் பிரதான செய்தியாகவிருந்தது இவ்விடயம் தான். சஞ்சீவ பண்டாரவிற்கு மாத்திரமல்ல பலருக்கு இவ்வாறு பல்கலைக்கழகங்களினுள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை பத்திரிக்கைகளில் வெளிவராத காரணத்தினால் மக்களுக்கு தெரியவரவில்லை. கடந்த மூன்று வருடங்களில் 785 மாணவர்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினை சேர்ந்த 53 மாணவர்களிற்கு மாத்திரம் 85 பிடியாணைகள் பிறபிக்கப்பட்டுள்ளன. ஜயவர்தனபுர, கொழும்பு, களனி, சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் மாணவர் ஒன்றியங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஜானக, சிசித தோழர்கள் எம்மிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டனர். எழுதி கொண்டு சென்றால் மிகபெரிய பட்டியல் ஒன்றினை வெளியிடலாம். இவையனைத்தும் வேறெதற்காகவும் அல்ல. மாணவர்களாகிய நாம் சமூக உரிமைக்காக மிக சரியான முறையில் எழுப்பிடும் எதிர்ப்பு குரலே காரணம் ஆகும். இலவச கல்வியையும் கல்வி சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்காக நாம் எழுப்பிடும் குரலை அடக்கிடவே இத்தனை அடக்குமுறைகளையும் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களை தன் கைபிள்ளைகளாக ஆக்கி கொள்ளும் முயற்சியே இதுவாகும்.

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

இன்று நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் மோசமடைந்து உச்சநிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. பிரதான பிரச்சினையான தேசிய இனப் பிரச்சினைக்குத் தொடர்ந்தும் தீர்வு மறுக்கப்பட்டு வருகின்றது. இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தி விரக்தி வெறுப்புக் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். இவற்றுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஏமாற்றவே ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியானது அதிகாரம், பணம், பேரினவாதம் என்பவற்றை முன்வைத்து தேர்தல்களை அவ்வப்போது நடாத்தி வருகின்றது. அதன் மூலம் தமது தரகு முதலாளித்துவ, பேரினவாத, சர்வாதிகார, ஃபாசிஸ ஆட்சியின் இருப்பை உறுதி செய்து வருகின்றது. அதற்கு வலுச்சேர்க்கவே மூன்று மாகாண சபைத் தேர்தல்களை ஆட்சியாளர்கள் நடாத்துகின்றனர்.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வந்து போரானது முடிவுற்ற பின்னர் நான்கு ஆண்டுகள் இன்று கடந்து விட்டன.

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது நடந்தேறிய தாக்குதல் நிகழ்வுகள் வெளிப்படுத்துவது எதுவெனில், இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவித்த வரலாற்றில் என்றுமே ஏற்பட்டிராத அழிவுகளையும், மனித அவலங்களையும், கொடூரங்களையும் இந்தச் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிலுள்ள இனவெறிச்சக்திகள் மறந்து இனவாத தீயினைத் தூண்டும் போக்கில் பயணிக்கின்றனர் என்பதேயாகும். இனியும் எந்தவொரு நீண்ட பேரழிவானது எழாமல் தடுக்கும் வகையில், சிஙகள மற்றும் தமிழ் என இருபுறமும் உள்ள இனவெறிச் சக்திகளை நாங்கள் தோற்கடித்தாக வேண்டும்.

கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது.

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 32 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.

தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

30 வருடங்கள் கடந்து விட்டன எத்தனையோ உயர்ப்பலிகளையும், உடமைகளை இழந்தும், லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றார்கள். இத்தனை ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்தும் எந்தவொரு விடிவும் கிட்டாது தமிழ் தேசம் இருக்கின்றது. தமிழ் மக்களோ அல்லது மற்றையப் பகுதி இனமக்களோ சுயநிர்ணயத்தினை இழந்து தான் வாழ்கின்றார்கள். இலங்கை மக்களை அன்னிய சக்திகளின், உள்நாட்டு ஆட்சியார்களினால் ஆட்டிவிக்கப்படுகின்றார்கள். முழு இலங்கையின் உற்பத்தியே வெளிநாட்டின் சந்தையை நோக்கியதாகவும், வெளிநாட்டவர்களின் பொருளாதார நலனும் உள்நாட்டு மாபியா அரசியல் சக்திகளின் முதலீடுகளுக்கும் உட்பட்டு இருக்கின்ற வேளையில் தான் 30 வருட சிறைக்கொலை, இனக்கலவரம் நினைவில் கொள்ளப்படுகின்றது.

நாடகத்தில், கூத்தில் கோமாளிகள் என்று ஒரு வேடத்தினை கொண்டிருக்கும். சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் என்று ஒரு முக்கிய பாத்திரமும் நகைச்சுவை நடிகரை சுற்றி ஒரு கூட்டமும் இருக்கும். இவ்வாறே அரசியல் அரங்கிலும் அரசியல் கோமாளிகள் இருக்கின்றார்கள். இந்தக் கோமாளிகள் மக்களை திசை திருப்புவதற்கு என்றே உருவாக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறான கோமாளிகளின் அறிக்கையைப் பார்ப்போம்...!!

பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்

டட்லி சேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

சந்திரிகா - புலிகள் பேச்சுவார்த்தை

புலிகள் - இலங்கை அரசு - சர்வதேசநாடுகளின் ஒப்பந்தம்

என்று எத்தனை ஒப்பந்தங்கள், கட்டுக்கட்டாய் காகிதங்களில் எத்தனை வெறும் சொற்கள். இவை எதுவும் தமிழ்மக்களின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவில்லை. தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை, வன்முறைக்கு உள்ளாகாத பெண்களின் எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தை தடுத்து நிறுத்தவில்லை. உழைத்து வாழ்ந்த மக்கள் அகதிகளாக, அநாதைகளாக முகாம்களில் இலங்கையிலும், இந்தியாவிலும் கையேந்தி நிற்கும் அவலத்தை தடுத்து நிறுத்தவில்லை. காணிநிலங்களும் கட்டிய வீடுகளும் களவு போவதை தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டுக்கணக்காக இருட்டுச்சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் கைதிகளை சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்ய முடியவில்லை. காகிதங்களையும், கறுப்பு மையையும் வீணாக்கியதை தவிர வேறென்ன மசிர் புடுங்கின இந்த ஒப்பந்தங்கள்.

தேர்தல் வரும் பின்னே… அதன் ஓசைகள் வரும் முன்னே!

நாட்டில் நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைத் தேர்தல்களில், வடக்கின் தேர்தல் இனவாதிகளின் களமாகப் போகின்றது. இதற்கு இரு இனவாதத் தரப்பபும், தாங்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதைப் பறைசாற்றுகின்றனர்.

தமிழர் கூட்டமைப்பு விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து இந்த இரு தரப்பும் "தமிழ் ஈழக் கனவில்" இருந்து சஞ்சரித்து தத்தம் கருமங்களை ஆற்றுகின்றன.

இதில் முதலில் பேரினவாதத் தரப்பின் இனவெறிச் சஞ்சாரங்களைப் கவனிப்போம்:

"தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவர் சம்பந்தன் நன்கு ஆராய்ந்த பின்னரே மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாது சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தியுள்ளார்."

 கைதுசெய்யப்பட்ட  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(18) நண்பகல் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

பறையர் எனும் சாதியை சேர்ந்த இளவரசன், வன்னிய சாதியை சேர்ந்த திவ்யா என்றப் பெண்ணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த அவமானத்தை! தாளமுடியாத திவ்யாவின் தந்தை நாகராஜன் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த சிலமணி நேரங்களில் எப்போதும் தயார்நிலையில் கட்டப்பட்ட்டுள்ள வன்னியப்படையினர்! நாயக்கன் கொட்டாய் உட்பட மூன்று பறையர் சேரிகளை முழு முற்றாக உயிர்சேதம் இன்றி தீக்கிரையாக்கினர். இது தமிழகம் எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமக தனது இழந்த செல்வாக்கை மீட்க இவ்விவகாரத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி கொண்டது.

faw-p 01இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத அடையாளங்கள் சார்ந்தநெருக்கடிகள் புதிதாக தோன்றிய ஒன்றல்ல. அப்படியானதொரு தோற்றப்பாட்டை உருவாக்கிக் கொள்வது அரசியல் பார்வை வழியில் இலகுவானதொன்றுமல்ல. காலம் காலமாய் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதமும் அடக்குமுறைகளும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தில்தான் இருந்து வந்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE