Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மக்கள் விரோத அரசியல் நிலையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்களும் தமது அரசியல் பாதையை தெரிவு செய்ய வேண்டும்.

25 வருடங்களின் பின் வடக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது. மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2009ம் ஆண்டு இடம்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகும் முன்னமே சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல்களை முன்கூட்டியே வைப்பதன் மூலம் மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு “ஜனநாயக உரிமை” வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறிவருகிறது. எனினும் வட மாகாண சபையில் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் தேர்தலை ஈடுகட்டவே ஏனைய இரு மாகாணங்களுக்குமான தேர்தலையும் நடத்துகிறது என்பதே உண்மை. ஒட்டு மொத்தமாக தொழிலாளர்களும்; அனைத்து உழைக்கும் மக்களும் மிகவும் மோசமான பொருளாதார சுமைக்கு ஆளாக்கப்பட்ட சூழ்நிலையிலேயே இந்த மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இந்த பாதிப்பிற்கு மலையக மக்கள் வெகுவாக முகம் கொடுத்து வருகின்ற நிலையிலேயே மலையக மக்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழும் மத்திய மாகாணத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது.

சுப்பிரமணியர்-- "சுவாமியாக" வந்து சொன்ன கதைகள்

"இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” என சுப்ரமணியம் சுவாமி.

சாதாரணமாகநம்நாட்டு "அரசியல் கொடைவளத்தில்" இனவாதங்களின் பாற்படாததொன்று இல்லையென்றே சொல்லலாம். இவ்வளத்தில் தேர்தல் என வந்துவிட்டால் அது "டபுள் புறமோசன்" ஆகிவிடும்.

தற்போது தமிழர் கூட்டமைப்பினர், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தேர்தல் சந்தையில் இனவாதத்தை தாராள மயமாக்கியுள்ளார்கள். உண்மையில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ்ஈழக் கனவில் இருந்து புனையப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியைச் சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சிலநேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப்போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர்.

எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகாரத்தின் கீழ் அதிகாரப் பலம், பண பலம், ஜனநாயக விரோத வழிமுறைகளைக் கொண்டே இத்தேர்தலை அரசாங்கம் நடத்துகின்றது. அதேவேளை அபிவிருத்தி, சலுகைகள், பண நன்கொடைகள் என்பவற்றை தாராளமாக வழங்கி ஆளும் தரப்பு வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றுக்கொள்ள முன்னின்று வருகின்றனர். இத்தேர்தல்களில் அரசாங்கம் வெற்றி பெறுவதன் ஊடாக மக்கள் தமக்கு ஆணையும் அங்கீகாரமும் வழங்கியுள்ளதாகக் காட்டி இப்போது மக்கள் மீது சுமத்தி வரும் கடுமையான பொருளாதார சுமைகளையும் தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கே முன்னிற்கிறது.

டெட்ராய்ட் நகரம் இரும்பின் நகரம், தொழில் நகரம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நவீன உலகின் சொர்க்கம், உலகின் தலைவிதிகளை தீர்மானிக்கும் நகரம் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால், இன்று திவால் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த நகரம் வைத்திருக்கும் கடன் தொகையின் உத்தேச மதிப்பு 18.5 பில்லியன் டாலர்கள். திகைப்படைய வேண்டாம்.

படுகொலைகள்தான் சிறிலங்க-ஜனநாயக "சிற்ருவேசன்"

இலங்கையில் சிறைச்சாலைப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கடந்த ஆறு-ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் துயர்வாழ்வு சொல்லனா சோகங்கள் கொண்டது. இவ்வகையில் 2006ம் ஆண்டிலிருந்து களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து மரணித்த பிரான்சிஸ் நெல்சனின் மரணத்தை இயற்கை எய்தலாக கொள்ள முடியாதென அவரது மனைவி அறுதியிட்டு கூறியுள்ளார்.

அறுவைதாசன், அய்யாமுத்து வீட்டிற்கு போனபோது அய்யாமுத்து தமிழ் தொலைக்காட்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். அய்யாமுத்து தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காப்பவன். அதனால் சண் ரீ.வி, ஸ்ரார் ரீ.விக்கு காசு கட்டி தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் இனிதே வளர்த்து வந்தான். அறுவைதாசன் எட்டிப்பார்த்த போது தொலைக்காட்சியில் அரை அடி அளவிற்கு முகத்தில் பவுடர் அப்பியிருந்த ஒருவன் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். குழந்தைப்பிள்ளைகள் தாளில் கிறுக்கி விளையாடுவது போல அவனது முகத்தில் இருந்த முடியில் எல்லாம் விதம்விதமாக வெட்டியிருந்தது. ஒரு இளம் பெண்ணிடம் அரவம் என்றால் என்ன என்று அவன் ஒரு கேள்வி தொடுத்தான். சார், வன்மோர் ரைம் சொல்லுவீங்களா, பிளீஸ் என்று அவள் கெஞ்சினாள். குயஸ்ரன் ரொம்ப கஸ்டம் தான், ஆனா ட்ரை பண்ணி ஆன்ஸர் பண்ணுங்கோ என்று அவன் செந்தமிழில் செப்பினான். பாவம், அந்த பைந்தமிழ்பாவைக்கு மறுமொழி தெரியவில்லை. அரவம் என்றால் பாம்பு என்றான் அவன். அதுவும் அந்த பெண்ணிற்கு விளங்காமல் விழிகளை விரித்தபடி உதட்டை பிதுக்கினாள். பாம்பென்றால் ஸ்னேக் என்று அவன் சொல்ல ஓ, அதுவா என்று சிரித்தாள் அவள். பாவம், இந்தப்பெட்டை இவ்வளவு வயதாகியும் ஒரு பாம்பையும் பார்க்கவில்லை போலே என்று அறுவைதாசன் கவலைப்பட்டான்.

கத்தர் இயக்கம் தன்னைப்பற்றி இப்படித்தான் சொல்லிக் கொண்டது.

நமது பெயர் புரட்சி !

நமது பணி புரட்சி!

நமது வாழ்க்கை புரட்சி !

எதிலும் புரட்சி !

எங்கும் புரட்சி !

இந்திய வரலாற்றில் புரட்சிகர இயக்கங்களின் முன்னோடிகளில் ஒன்று கத்தர் இயக்கம். இந்த இயக்கம் வட அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய புரட்சியாளர்களால் முதல் உலகப் போர் கால கட்டத்தில், 1913ம் ஆண்டில் துவங்கப்பட்டது. உலகெங்கும் தொடங்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் மிக முக்கியமான இயக்கம் இது. அந்த நாட்களில் இந்திய மக்களை உலகப் புரட்சிக்கு அறை கூவி அழைத்தது. ஒழிவும் மறைவும் இன்றி கம்யுனிசம் ஒன்றே தீர்வு என்று பிரகடனம் செய்தது.

மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர் தேசிய சங்கம் என்பவற்றின் தலைமைகளுக்கிடையிலான போட்டியும் மோதலும் அவர்களது தொழிற்சங்க அரசியல் நலன்களுக்கும் ஆதிக்க இருப்பிற்கும் உரியதே அன்றி மலையக மக்களின் நலன்களுக்கோ தேவைகளுக்கோ தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கானதோ அல்ல. அண்மையில் கொட்டகலை, அட்டன், பொகவந்தலாவ போன்ற இடங்களில் இரு தரப்பினரிடையே இடம்பெற்ற மோதல்களும் வன்முறைப் பிரயோகங்களும் தோட்டங்களுக்கும் தொழிலாளர்கள் மத்திக்கும் எடுத்துச் செல்லப்பட கூடாத ஒன்றாகும்.

"ஐக்கிய நாடுகள் சபையை நாட்டு மக்கள் பக்கசார்பானதாகவே கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர்" என மகிந்த ராஜபக்ச தன்னைச் சந்தித்த நவநீதம்பிள்ளையிடம் சொல்லியுள்ளார்.

மேலும் "ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடமை தவறி செயற்பட்டு வருவதாகவும் சர்வதேச அமைப்பு ஒன்றின் உயர் அதிகாரி என்ற ரீதியில் தமது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் அரசதரப்பால் கர்ன-கடுரத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது."

யாழ்ப்பாணத்து புழுதி மண்ணிலே புரண்டு அழுகிறாள் அன்னை. மார்போடு சேர்த்தணைத்து உதிரத்தோடு தன் உயிரையும் சேர்த்துப் புகட்டியவள் தன் உடல் சோர மயங்கி விழுகிறாள். தன் கருவிலே உரு கொண்ட தன் உயிரின் உயிர் தேடி அழுகிறாள். பத்து மாதம் மணிவயிறு சுமந்தவள் என்ன நடந்திருக்குமோ என்று பலதையும் எண்ணி பதறுகிறாள். சிந்தும் முத்தங்களால் தன் சிந்தை குளிர்வித்தவர்கள் எங்கு மறைந்தனரோ என்று சித்தம் கலங்கி அழுகிறாள் அன்னை. யார், யாரிடமோ கெஞ்சி கேட்டவள், தன் கண்மணியை கண்டு தாருங்கள் என்று கண்டவன் காலில் விழுந்தாலும் பரவாயில்லை என்று விழுந்தவள் இன்று தன் கடைசி நம்பிக்கையாக நவநீதம்பிள்ளையை காண்கிறாள்.

வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சித்தம்ம தேரர், பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் இன்று சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரதேசத்தில் அந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்குவதை எதிர்த்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திரை மறைவில்

இது வரை நடந்தேறிய

அரசியல் நாடகங்கள் முதல் முறையாக

மக்கள் முன்னிலையில் காட்டப்படுகிறது.......

களைகட்டியிருந்த

ஆடித்திருவிழாவோடு ஆரம்பித்துள்ள

தேர்தல் திருவிழாக்கள் ரொம்பவும் தான்

கலஸ் புள் காட்சிகளாக காட்டப்படுகிறது........

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்பது, பாட்டாளி வர்க்க நலனில் இருந்து நோக்கப்படுகின்றது. இந்த வகையில் தேர்தல் அரசியலை பகிஸ்கரிக்காது அதில் பங்குகொள்ளும் நாம், எதிர் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதாவது தேர்தலில் பங்குகொள்வதையும் பங்கெடுப்பதையும் பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளுமாறு கோருகிறோம். இதன் மூலம் இனவாதத்தையும், ஏகாதிபத்திய நலனையும் முன்னிறுத்தி, மக்களை இனரீதியாக பிளந்து ஒடுக்கும் ஜனநாயக விரோத தேர்தலில் பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், இந்த தேர்தலில் விவகாரமாக்கப்படும் அரசியலை தேர்ந்தறிந்து முன்னெடுக்கக் கோருகின்றோம்.

இப்போது வடக்கில் பெண்களிற்கு விடுதலை கிடைத்து விட்டதா?

அந்தக் கண்ணீர்த்துளிகள் இன்னும் சூடாகவே இருக்கின்றன. அது தனக்கு நெருக்கமானவருக்காக சிந்தப்பட்ட கண்ணீர். இழக்கப்பட்டது தமது துணையை அல்லது மகனை, மகளை அல்லது தாய், தந்தை அல்லது அண்டை வீட்டாராக இருக்கலாம். யாருமே அவளுக்காக எஞ்சியிருக்கவில்லை. அவளுக்கு அவளே இல்லாமலாகியிருக்கும் தருணத்தில் அரசாங்கம் அவளுக்காக எதை வழங்கியிருக்கிறது? அபலையின் கண்ணீருக்குத் தீர்வாக அரசாங்கம் தேர்தலை தந்திருக்கிறது. இப்போது அவளுக்கு வேட்டுக்குப் பதிலாக வோட்டு கிடைத்திருக்கிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE