Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இந்தியாவின் மிகச்சிறந்த மனித உரிமைப்போராளி மறைந்த வழக்குறைஞர் திரு.ஜி.கண்ணபிரான் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் "தி அட்வோகேட் ("The Advocate") எதிர்வரும் அக்டோபர் மாதம் 23ந் திகதி (புதன் கிழமை மாலை 6.30 தொடக்கம் 9.00 வரை) லண்டனில் திரையிடப்படுகிறது. அந்த மாமனிதரின் வாழ்வை நினைவு கூறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் வேண்டி அழைக்கிறோம்.

நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும், அதன் அரசியல் செயற்பாட்டாளரும், ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் அமைப்பில் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, சகோதர மொழியில் வெளிவரும் இடதுசாரி வெகுசன வராந்த பத்திரிக்கை "ஜனரல" (மக்கள் அலை) விற்கு விரிவான நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பு .

அரசியல் தொடர்பாக கதைக்கும் முன் தங்கள் இளமைக்காலம், கல்வி நடவடிக்கை குறித்து சற்று கூறுங்கள்?

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலின் பின்பாக, வெற்றியடைந்த தமிழ்-சிங்களத் தரப்பின் தலைவர்கள் மிக அந்நி-யோந்நியமாக, மக்கள் நலன் சார்ந்து அறிக்கைகள் விட்டுள்ளார்கள். இதனடிப்படையில் சொல்வதைத் செய்வார்களா?

"வடக்கு மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் குறித்து அரசாங்கம் மீள சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன".

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒர் பொறிமுறைமையை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ""

தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைக்கும், வடக்கு கிழக்கில் தொடரப்படும் இரானுவத் தலையீட்டுக்கும், ஜனநாயக மறுப்புகளுக்கும், இயல்புவாழ்வு மீதான குறுக்கீடுகளுக்கும் எதிரான தமது உறுதிமிக்க எதிர்ப்பை வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதனூடாக தமக்கான அரசியல் தீர்வையும் அடிப்படை வாழ்வாதார உரிமைகளையும் இழக்கத்தயாரில்லை என்பதனையும் இவ்வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே மக்கள் வழங்கியுள்ள இத்தேர்தல் ஆணையை மகிந்த சிந்தனையின் கீழான ராஜபக்ச சகோதரர்களது ஆட்சியானது ஏற்று நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவதற்கு ஜனாதிபதியும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி அரசாங்கமும் முன்வராது தொடர்ந்தும் தமது பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினை முன்னெடுக்க முனைந்தால் அது மீண்டும் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதற்கே வழிவகுக்கும்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 30

லெனினுக்கு பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஸ்டாலின் மறுத்தாரா? வர்க்கப் போராட்டத்தை மறுத்தாரா?

1924 இல் லெனின் சக தலைவர்கள் பற்றி எழுதியதை, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார்.

யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க காலையில் பக்தர்கள் தலைவன், மாலையில் காடையர்கள் தலைவன் ஆகிவிடுவார்.

இவரின் மர்மக் குண்டர்களே இன்று நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தியின் வீட்டின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுழிபுரம் தொல்புரத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் 80 ற்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவருடைய புலன்கள் இருட்டில் துல்லியமாக விழிப்புடன் செயற்பட்டதால், தூரத்தில் பல பெண்கள் அலறும் குரல்களை கேட்டதாக சொன்னார். "அண்ணை எங்களைக் காப்பாற்றுங்கள், அண்ணை எங்களைக் காப்பாற்றுங்கள்!" என்ற குரல்கள். பெண் புலிப்போராளிகளை வன்புணர்ச்சி செய்த போது அலறிய குரல்கள் அவை என்று நேரியன் நிச்சயமாக சொல்கிறார். பயத்தால் உறையச் செய்த குரல்கள். அதைப்பற்றி இப்போது தான் முதல்முதலாக சொல்கிறேன்" என்றார். அந்தக் குரல்களை அவர் நினைவில் மீட்டபோது பயத்தால் விறைத்தது போலவே காணப்பட்டார்.

கல்வியை அழிக்கிறதுஅரசாங்கம்.

இந்த நாட்டின் பெற்றோர்கள் என்ற வகையில் உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கும், மாணவர்கள் இளைஞர்கள் என்ற வகையில் உங்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்படவுள்ள கதி பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நாம் நினைக்கின்றோம்.

இன்னுமொரு தேர்தல் வந்துவிட்டது. கதைகள் சொல்வதற்கும் வாக்குறுகளுக்கும் குறையும் இல்லை. அடுத்ததாக பொதுநலவாய மாநாடு, “தேசத்திற்கு மகுடம”, “பாதை எழுச்சி”, “ஐந்து சக்திகளின் கேந்திரம்” போன்ற கண்காட்சிகளில் எந்த குறையும் இல்லை. கண்காட்சிகளின் நடுவே மறைக்கப்பட்டுள்ள உண்மைகளே நாம் விளங்கிக் கொள்ள வேண்டியவையாகும். பொய்களை கடந்து கசக்கும் உண்மைகளை விளங்கிக் கொள்ளவிட்டால் எமது வாழ்வின் அனைத்து எதிர்பார்ப்புகளும் அழிவதனை தடுக்க முடியாது என நாம் கருதுகின்றோம்.

சண்டே லீடர்பத்திரிகையின் உதவி ஆசிரியரும், இலங்கை ஜனரஞ்சக ஊடகவியாளர்களின் தொழிற்சங்கத்தின் தலைவருமான மந்தனா ஸ்மாயிலின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் நாங்களல்ல கள்ளர்கள் தான் என்கின்றது அரசு. அவர்கள் களவொடுக்கத்தான் வந்தனர் என்கின்றது.

இதற்கு இரண்டு நாளுக்கு முன் பூனையொன்றைக் கொன்று வீட்டுக் கதவோரத்தில் போட்டிருந்தவர்கள் யார்? இதற்கு முதல் நாள் இரவு அவரின் கணவரின் கார் ரயரை கத்தியால் வெட்டியவர்கள் யார்? அரசு கூறுவது போல் இதுவும் திருடர்கள் வேலையா!? இதற்கும் அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

தேர்தல்கள், பாட்டாளி மக்களின் இரத்தத்தை விற்றுப்பிழைக்கும் வலதுசாரிகளுக்கு புள்ளடியிட வைக்கும் ஒரு அரசியல் ஏமாற்று வேலை. உழைப்பவன் மீது அதிகாரங்களையும் சுமைகளையும் அதிகரித்து, உழைப்பவர் கொண்டுள்ள அற்ப சொற்ப உரிமைகளை மேலும் மேலும் பிடுங்கி சுரண்டிக்கொழுக்கும் உழையா வர்க்கங்களின் கைகளில் அதிகாரத்தை குவிப்பதற்கான ஒரு "அரசியல் ஆயுத" ஒடுக்குமுறை வழி தான் அவர்கள் நடாத்துகின்ற தேர்தல்.

போராளிப் பெண்களை விடுதலைப்புலிகள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்..!

இந்திய ஜனநாயக நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நான்கு ஆண்களுக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய செய்தி அனைவரும் அறிந்ததே. இதுபற்றி 13.9.2013 அன்று புதிய தலைமுறை தொலைக் காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் நடந்த கருத்தாடலில் முன்னை நாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ஒடுக்கப்பட்ட இந்திய தலித் மக்களுக்கான சமூக சமத்துவப்படைத் தலைவியுமான சிவகாமியும் கலந்து கொண்டார்.

வட்டுக்கோட்டைக்கு போற வழி கேட்க, துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு எனச் சொன்ன பாக்கு வியாபாரி போல, அரசியல் தீர்வுபற்றி கேட்டால், அபிவிருத்தியைப் பார் என்கின்ற சராசரி வழிப்போக்கு வியாபாரி போல் ஆகிவிடுகின்றார் மகிந்தா.

நவநீதம்பிள்ளை அம்மையாரைச் சந்தித்தபோதும், நீங்கள் சென்றவிடம் எல்லாம் சுதந்திரமாகத்தானே நடத்தப்பட்டீர்கள். எங்கள் அபிவிருத்திகள் எப்படியுள்ளது எனக் கேட்டாராம்.

இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி இவர் வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் இந்த மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும்' என்றும் கூறினார். பின்பு திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார். அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது, அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.

ஈழம் முதற்கொண்டு

பிற தேசம் வரையெங்கும்

முக் குரங்காக வாழென்று...

போலிகள் சொல்வதை - நாம்

நிஜமொடு பார்த்திடும் போதினிலே

எழும் முதற் கேள்விகள் மூன்றினை

வாருங்கள் பாருங்கள் தோழர்களே..!

 

• மனிதர் தனித்தனியாய் மனமுடைந்தேன் மாள்கின்றார்..?

• குடும்பம் தனித்தனியாய் தாமுடைந்தேன் தொலைகின்றார்..?

• இனம் தனித்தனியாய் வலுப் பிரிந்தேன் உழல்கின்றார்..?

இன்னும் சில நாட்களில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக வட மாகாண சபைக்காக நடக்கும் தேர்தல் இதுவாகும். 1987ல் இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் சேர்ந்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற வகையில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், கடந்த 25 வருடங்களாக வடக்கில் மாகாண சபையை அமைக்க முடியவில்லை என்பதுதான் நகைப்புப்குறிய விடயம். எப்படியிருந்தாலும் இப்போது வடக்கில் மாகாண சபை தேர்தல் நடக்கப் போகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் பல்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அதற்காக பல காரணங்களைக் கூறுகிறார்கள்.

"சும்மா இருந்து ஏன் சிரித்துக் கொண்டிருகிறாய்.., மூளை கோளாறாகிவிட்டதா..? ஒரு முகம் கொண்டு நீ சிரிப்பதையே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆறு முகத்தாலை நீ சிரிக்கிறதை பார்க்க பயமாகவுள்ளது..!" – கணேசன்.

"என்னைப் பார்த்து யாரும் பயப்படுவதில்லை. உன்ரை முகத்தைப் பார்த்துத்தான் எல்லோரும் மிரளுகின்றார்கள்!" – கந்தன்.

"உன்னைப் போல பல வேசங்கள் போட்டு சனத்தை நான் ஏமாத்தவில்லை, யாரும் என்னைப் பார்த்து பயப்பட்டதுமில்லை.., எல்லாருக்கும் என்னை புடிச்சுமிருக்கு. விநாயகனே எங்களுக்கு அறிவைத்தா என்று என்னைத் தான் கேட்கிறார்கள்.., உன்னை யாரும் கேட்பதில்லை." – கணேசன்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE