Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

யுத்தம் மக்களின் வாழ்வாதாரங்களை மட்டும் அழித்து விட்டுச் செல்லவில்லை. யுத்தம் கட்டுமானங்களை சிதைத்துச் சென்றுள்ளது. யுத்தமென்பது பண்பாட்டு, உளவியல், வாழ்வியல் சிந்தனையிலும் அழிவை ஏற்படுத்திப் போயியுள்ளது. யுத்தத்தின் மூலம் இவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதற்காக இழந்தவற்றை மீளவும் உருவாக்கித் தான் ஆகவேண்டும். யுத்தம் உளவியல் பிரச்சினையையும், புதுப் வியாதிகளையும் உருவாக்கி விட்டுச் சென்றுள்ளது.

என்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது.

அதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொடங்கி விட்டேன் என்றா. அது இது என்று கதைத்து விட்டு நானும் வந்து விட்டேன்.

கடந்த சில நாட்களாக பத்திரிகையில் தொழிலாளர்கள் வேலையிழப்பதும், களியாட்டத்திற்கான வரிவிலக்கு என்று பல்வேறு செய்திகளை வாசிக்க முடிகின்றது. அவ்வாறான செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

செய்தி1: தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படும் என மாநகர சபை முதல்வர் உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் 021013 முடிவுக்கு வந்தது.

'குரானே எமது சட்டம் ஜிகாத்தே எமது வழி கடவுளுக்காக இறப்பது உன்னதமானது, அதற்காக நாம் எவ்விலை கொடுக்கவும் ஆயுத்தமாக உள்ளோம்" இவ்வாறு தான் ஜெனரல் சிசியின் படையினரால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, ஆர்பாட்டமுகாமும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் தமது மத அடிப்படைவாதத்தின் மீது முஸ்லிம் சகோதரர்கள் சத்தியம் செய்கிறார்கள்.

கூட்டமைப்பு அப்புக்காத்து, நீதவான் பிரக்கிராசிமார்களைத் தலைமையாகக் கொண்டது. இவர்களெல்லாம் சிவில்-கிறிமினல் சட்ட-திட்டங்களை கரைத்துக் குடித்தவர்கள். இப்பேர்ப்பட்டவர்களுக்கு இலங்கையின் அரசியல் அமைப்புப் பற்றியும் தெரியும்தானே!

தெரிந்துதானே அதன் சட்ட-திட்டங்களுக்கு அமைவான மாகாணசபைத் தேர்தலிலும் பங்கு பற்றினார்கள். வெற்றி பெற்றால் சத்தியப்பிரமாணம் என்ற ஒன்றும் வருமென்பது உந்த சட்ட-வல்லுனக்-குழாமிற்கு தெரியாதோ?

நவகாலனிய சமூக அமைப்பில் சுதந்திரமான மனித வாழ்வுக்கான தோல்வியை மூடிமறைக்கவே, தேர்தல் நடத்தப்படுகின்றது. தேர்தல் முடிவுகளை மக்களின் "சுதந்திரமான" தெரிவாகவும், மக்களின் "ஜனநாயக"த்தின் தேர்வாகவும், ஆளும் வர்க்கக் கோட்பாடுகள் விளக்கம் கொடுக்கின்றது. மக்களின் அரசியல் தெரிவாகவும், மக்களின் வெற்றியாகவும் அங்கீகரிக்குமாறு கோருகின்றது. இதை பாட்டாளி வர்க்கத்திடம் கோருகின்ற, சீர்திருத்தவாத அரசியல் போக்குகளும் அரங்கில் காணப்படுகின்றது. மார்க்சிய வர்க்க நடைமுறைக் கண்ணோட்டத்தை மறுத்து, வர்க்க நடைமுறையை மறுக்கும் போலி இடதுசாரியம் கூட, தேர்தல் முடிவுகளை மக்களின் வெற்றியாக காட்ட முற்படுகின்றது. மக்களின் வெற்றியை மறுப்பது இடதுசாரியத்தின் தோல்வியே ஒழிய, மக்களின் தோல்வியல்ல என்று கூறுகின்றனர். இதன் மூலம் ஆளும் வர்க்கங்களால் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற, பாட்டாளி வர்க்க விரோத அரசியலை முன்தள்ளபடுகின்றது.

ஒரு புதிய எழுச்சி, ஒரு புதிய உத்வேகம், எதிர்காலம் குறித்த ஒரு புதுநம்பிக்கை. தமிழரசுகட்சியின் வடமாகாணசபை வெற்றிக்குப் பின்னான காட்சிகள் இவை. மகிந்த ராஜபக்ஸவின் சிங்கள பெருந்தேசிய அரசிற்கு எதிரான வெற்றி இது. தமக்கு கிடைக்கும் ஊழல் பணத்திற்காக உலக நாடுகளிற்கு தேசத்தை விற்கும் கொள்ளையர்களிற்கு எதிரான வெற்றி இது. மகிந்து நாட்டுக்கு ரெளடி என்றால் நாங்க வடக்கின் ரெளடிகள் என்ற ஈ.பி.டி.பி யின் அட்டகாசத்திற்கு எதிராக வடமாகாண மக்கள் காட்டியிருக்கும் எதிர்ப்பு இது.

"வடக்கு கிழக்கில் பெண்கள் மிக அவலமான ஒடுக்குமுறைக்கும் சீரழிவிற்கும் ஆளாகி உள்ளார்கள்."

வடக்கு-கிழக்கில் பெண்கள் போராளி குழுக்களில் இணைந்து ஆயுதமேந்தி வீரத்துடன் ஆண்களுக்கு நிகராக, ஆண்களுடனே மோதி இருந்தார்கள். இந்நிலைமை சமூகத்தில் பெண்கள் தொடர்பான முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடதக்கது. ஆனால், அவர்கள் மீதும் இன்று அதிகமான அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் யுத்தத்தின் போது கீழ்த்தரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படடதாக செய்திகள் வெளியாகின. வடக்கு-கிழக்கில் நடைபெறுபவற்றில் பெருமளவிளானவை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை என சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல தெரிவித்தார். போராட்டம் பத்திரிக்கைகாக திமுது ஆட்டிகல வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவிபரம் பின்வருகிறது.

மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

* அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை உடன் கட்டுப்படுத்து!

 * பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தை தடுத்து நிறுத்து!

 * 13வது திருத்தச் சட்டத்தை முழமையாக அமுல்படுத்து!

* சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வை!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுதல் மற்றும் கைது செய்யப்படுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச கல்வியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை நான்கு மணியளவில் ஊர்வலமாக சென்று கண்டி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேர்தல் என்றால் என்ன..? மக்களின் வாக்குக்களை வாங்கி பதவிக்கு வந்து அரசாங்கத்தினை அமைத்து அதிகாரம் செலுத்துவது. அரசியலில் ஒரு தீர்வு.., வாழ்க்கைக்கு ஒரு தீர்வு.., வேலைக்கு ஒரு தீர்வு.., பசி பட்டினி, வதிவிடத்திற்கு ஒரு தீர்வு.., என்ற பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு மக்கள் அரசியலில் வாக்களிக்கின்றார்கள். ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் எதையுமே இந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றி வைப்பதில்லை.

நடந்து முடிந்த தேர்தலுக்கு ஊடாக இயங்கப்போகும் வடக்கின் மாகாணசபை ஏதோ "தமிழ்-ஈழ அரச சபையாம்". இது தமிழ் ஈழத்திற்கு முதல்படியாம் என சிங்கள-தமிழ் இனவாதிகள் அரசியல் பகுப்பறிவற்று மூடப்போர் நிகழ்த்துகின்றனர்.

தமிழ்-சிங்களத் தரப்பின் மக்களுக்கு எதிரான இம் மூடங்கள், தாங்கள் எப்பொழுதும் இனவாத தொற்று நோய் பரப்பிகள்தான் என்பதை நிலை நிறுத்துகின்றனர்.

"பாலசிங்கத்தின் வடிவில் விக்னேஸ்வரன் வந்துள்ளார். அவர் வடமாகாண சபைக்கூடாக அரசைக் கவிழத்து, தமிழ் ஈழத்தை உருவாக்கி விடுவாராம்." இப்படி பொதுபலசேன, விமல்வீரவன்ச போன்ற பேரினவாதத்தின் எடுபிடிகள்.

யாழ். பல்கலைக்கழக போராட்டங்கள்- 02

யாழ் பல்கலைக்கழகம் அனைத்து பல்கலைக்கழகங்கள் போல், இடதுசாரிய போராட்ட மரபைக் கொண்டதல்ல. மற்றைய பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னைத்தான் தனிமைப்படுத்தி கொண்டு, வலதுசாரி தேசியவாத கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்தது. சிந்தனை செயல் அனைத்தும், யாழ் மேலாதிக்கத்தையே பிரதிபலித்தது. தமிழ் தேசிய அரசியலுடன் பின்னிப் பினைந்தாகவும், அதில் எற்பட்ட வந்த முரண் சார்ந்த பலமான சக்திகளுடனேயே தன்னை வெளிப்படுத்தி வந்தது.

மௌனம் கலையும் போராட்டம்!

நான்கு தசாப்தங்களுக்கு அதிகமான காலங்களை கடந்தும் முன் கொண்டு செல்லப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக பல போராட்டங்கள் உள் நாட்டிலும், உலக அளவிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. தொடர்ச்சியாக பல எதிர்ப்பு குரல்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி நடந்த பல போராட்டங்களை நடத்திய இயக்கங்களின் செயற்பாட்டாளர்கள் போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழுப்பியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். உண்மையில் சொல்லப் போனால் காணாமல் போக செய்யப்பட்டனர்.

அவர் ஒரு ஆசிரியர், முருகபக்தர், சிவதீட்சை பெற்றவர். காலையும், மாலையும் தவறாமல் கோயிலிற்கு போய் முருகனை கும்பிடுபவர். அந்த ஊர் கந்தசுவாமி கோயில் பரிபாலனசபையின் தலைவர், செயலாளர் என்று தொடர்ந்து இயங்கியவர். அந்த ஊர் சனசமுகநிலையத்தை தொடங்கியவர்களில் ஒருவர். அவர் இருபத்தைந்து வருடங்கள் கோயிலிற்காகவும், ஊரிற்காகவும் இயங்கியதற்காக அந்த வருட திருவிழா முடிந்த பிறகு ஒரு விழா எடுத்து கெளரவித்தார்கள். அதில் கந்தசுவாமி கோயில் அய்யரை ஆசிரியரிற்கு மாலை போட கேட்டார்கள். ஒரு பிராமணனான நான் இவரிற்கு எப்படி மாலை போட முடியும் என்று பார்ப்பனியம் சாதி வெறுப்பை கொட்டியது. ஊர்மக்கள் கொடுக்கும் உயிரற்ற சம்பளப்பணத்திற்கு சாதி இல்லை. பணம் மேலானது. ஆனால் அதைக்கொடுக்கும் மனிதர்கள் கீழானவர்கள் என்பது தான் பிராமணத்துவத்தின் மகத்தான கண்டுபிடிப்பு.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE