Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இசைப்பிரியா பிணம் தின்னும் கழுகளால் சிதைக்கப்பட்டாள். பலநாள் தூக்கமின்றி பசியாலும், பயத்தாலும் பதைதைத்து வந்தவளை இலங்கையின் இனவெறி இராணுவம் இரத்தம் குடித்து கொலை செய்திருக்கிறது. நிற்பதற்கு கூட முடியாமல் நிலைதடுமாறி வந்தவளை கட்டி வைத்து அந்த கயவர்கள் கதை முடித்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் என எத்தனையோ ஆயிரம் தமிழ்மக்கள் புதைந்த அந்த கடற்கரை மண்ணில் கானம் பல இசைத்த அந்த பாட்டுக்குயிலின் கடைசிமூச்சை பறித்திருக்கிறார்கள்.

தம்புள்ள அம்மன் ஆலயம் மகிந்துவின் சிங்கள, பெளத்த இனவாத அரசினால் இடிக்கப்பட்டிருக்கிறது. பெளத்த புனிதபிரதேசத்திற்கு இக்கோயில் அமைந்திருக்கும் இடம் தேவை என்று காரணம் காட்டி இடித்திருக்கிறார்கள். அத்துடன் அக்கோவிலைச் சுற்றி வாழும் நாற்பது தமிழ் குடும்பங்களும் வெளியேற வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். நாட்டை கொள்ளையடித்து மக்களை வறுமைக்கு தள்ளும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மக்களை ஒருவரோடு ஒருவர் பகை கொள்ள வைப்பதற்காக இன, மதக்கலவரங்களை உண்டாக்குகிறார்கள். வெள்ளைக்காரர்களிற்கு வால்பிடித்து, மதம் மாறி தங்களது பெயரைக் கூட ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா என்று வைத்துக் கொண்டவர்கள் தான் காற்று திசை மாறிய போது மறுபடி மதம் மாறி சிங்கள மொழிக்காகவும், பெளத்த மதத்திற்காகவும் உயிரை விடப் போவதாக ஊளையிட்டார்கள்.

இனவாதத்தை தூண்டும் வெறிப்பேச்சுக்களின் வலதுசாரிய அரசியல் எம்மக்களைப் பலி கொண்டது. எம்மக்களின் வாழ்வை வறுமையில் தள்ளியது. ஆம் இனவாத அரசியல் முதலாளித்துவத்தின் கோரமுகம். சீமானினதும், அவரது நாம் தமிழர் இயக்கத்தினதும் அரசியல் அழிவு அரசியல். பாசிசத்தின் கூறுகளை, சர்வாதிகாரத்தின் கூறுகளை கொண்டிருக்கும் ஆபத்தான அரசியல். தமிழ்நாடு, ஈழம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கும் சீமான் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, பின்பு ஈழம் அமைக்க அடுக்குப் பண்ண போகிறாராம். அவரின் அடித்தொண்டையில் இருந்து வரும் அலறல்களை அம்பலப்படுத்தி வெளிவந்த கட்டுரையை தமிழ்நாட்டு தேர்தலையொட்டி மறுபிரசுரம் செய்கிறோம்.

வெற்றுக்கூச்சல்கள், வெறித்தனமான பேச்சுக்கள், நஞ்சைக் கக்கும் இனவெறி இவைகளிற்கு எவ்வளவு முகமூடிகள் போட்டாலும் அவை கழன்று விழ கனநாட்கள் எடுப்பதில்லை. செந்தமிழன், பெரியாரின் பேரன் என்று சிவப்பும், கறுப்பும் கலந்த கலவை நான் என்று எவ்வளவு அரிதாரம் பூசினாலும் சாயம் வெளுக்க வெகுநாட்கள் தேவைப்படவில்லை. பச்சையான இனவாதம் பேசி தமிழனை, தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பசப்பு வார்த்தைகள் பேசி திரிந்த செந்தமிழன் தமிழ்மண்ணை, தமிழ்மனிதர்களை கொள்ளையடிக்கும் கொள்ளைத்தமிழர்களின் காலில் விழுந்து எழுந்து அந்த தமிழ்தலைமை இது தான் என்று அடையாளம் காட்டுகிறார்.

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் முடிந்துவிட்டன. தேர்தலின் சூடு தணிந்து தேர்தல் முடிவுகள் குறித்து வாத விவாதங்களும் ஓய்ந்து விட்டுள்ளன. என்றாலும் நாங்கள் தொடர்ந்தும் தேர்தலைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 60 வீதமான வாக்குகளைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

எமது நாட்டின் வருமானத்தில் ஏகப்பெரும்பான்மையான வருவாயைப் பெற்றுத்தரும் மலையக மக்கள் இன்றும் தோட்டத் தொழிலாளர்களாகவே நாட்கூலி சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். இவர்களுக்கான கல்வி சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகள் யாவும் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட மிகவும் கீழ் மட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பாரிய கடற் பிரதேசம் இருந்தும், இலங்கைஇன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 - 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப் பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செயய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடிகூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.

ஈழமாணவர் பொதுமன்றம் டேவிட்சனை பொலிஸ்காரங்கள் பிடிச்சுக் கொண்டு போய் விட்டாங்களாம் என்று வாகை மரத்தடியில் நின்று கொண்டு இருக்கும் போது சந்திரன் ஓடி வந்து சொன்னான். அன்றிரவு ஊர் மதில் எல்லாம் "டேவிட்சனை விடுதலை செய்" என்று எழுதினார்கள். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடம் போவதற்கு பஸ்சிற்கு காத்திருக்கையில் ஆறுமுகம் மாஸ்டர் வந்தார். "தம்பிமாரே டேவிட்சனை விடுதலை செய் எண்டு என்ரை மதிலிலே எழுதியிருக்கு. ஏன் நானோ அவரை பிடிச்சு வைச்சிருக்கிறேன், விடுதலை செய்யிறதுக்கு" என்று கேட்டார். நாங்கள் தான் எழுதியிருப்போம் எண்டு தனக்கு தெரியுமென்று சொல்லாமல் சொல்லுறார், வயது போனாலும் இவங்களின்ரை நக்கல் போகாது என்றான் தயா.

இடதுசாரியத்தின் வெற்றி எப்போது?

வாக்குறுதிகள், வாய்ச்சவாடல்கள் மற்றும் வன்முறைகள் கூடிய இன்னொரு தேர்தலும் முடிந்து விட்டது. வெற்றி பெற்றது யாராக இருந்தாலும் அது நவதாராளமய முதலாளித்துவத்தின் மக்கள் மத்தியில் மேலும் திணிப்பதற்காக அதிகார வர்க்கத்திற்கு இன்னொரு தேர்தல் வெற்றி கிடைத்திருக்கிறது. தங்களை ஏமாற்றுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை மக்களே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தாலும், அது பற்றிய தேர்தல் முடிவுகளை பகுப்பாய்வு செய்பவர்களின் குரல்கள் கேட்டு இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் அலையொன்றை உருவாக்கி அரசாங்கத்திற்கு அதனை "பூமராங்" ஆக மாற்றுவோம்" என உளறிக் கொட்டியவர்கள் தேர்தல் முடிவுகளைப் பார்த்து வாய்மூடி மௌன விரதம் அனுஸ்டிக்கின்றனர்.

"டேய் கொஞ்சம் பொறு.. ஏன் இப்ப அவசரப்படுறாய்..... அவன் வந்தவுடன் எல்லாருமாச் சேர்ந்து ஒரு முடிவெடுப்போம். சும்மா கோவப்பட்டு அவசரப்படாதே."...

"இல்லை மச்சான் என்னாலே பொறுக்கேலாமல் கிடக்கு.... இப்ப அவள் என்ரை கையிலே கிடைச்சால்...... என்ன செய்வேனெண்டே தெரியாது.... அவ்வளவு கோவமாயிருக்கு"....

"எனக்கென்ன கோபமில்லையே.... இதைக் கேள்விப்பட்ட நேரத்திலேயிருந்து இன்னும் நான் நித்திரையே கொள்ளவேயில்லை".....

இப்படியே மூன்று பேரும் மாறி மாறி கோவப்பட்டுக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

உண்மை தெரிந்து கொள்வதற்காக அல்ல, உண்மையைக் கொண்டு வாழ்வதற்காகவே மனிதன் போராடுகின்றான். மனித வாழ்வை சுற்றிய நிகழ்வுகளையும், காரணங்களையும் தீர்மானிப்பது எது என்று தேடிய மனிதன், எது உண்மை என்று தேடினான்? இந்த வகையில் மார்க்ஸ் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படித் தேடிய மார்கஸ் 1837 ஆண்டு எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். இப்படி மார்க்ஸ் தேடிய உண்மையை இறுதியில் தெருவில் (மக்கள் மத்தியில்) இருந்தே கண்டெடுத்தார். இப்படி மார்க்ஸ் கண்டெடுத்தவைதான், சமூக விஞ்ஞானமான மார்க்சியமாகும். இப்படி மக்களின் வாழ்வில், அதன் போராட்டத்தில் இருந்து உருவான தத்துவமே மார்க்சியம் என்பதால், இது இறுக்கிப் போன கோட்பாடு அல்ல. மக்களில் இருந்து அன்னியமான வரட்டுவாதமுமல்ல. மார்க்சியம் மக்களின் வாழ்விலும், அதன் உணர்விலும் இருந்து அன்னியமான தத்துவமல்ல.

மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.

பிணம் தின்னும் கழுகுகள் சிரியாவை கடித்துக் குதற தருணம் பார்க்கின்றன. அப்கானிஸ்தானில் தலிபான்களாலும், ஈராக்கில் சதாம் குசைனாலும் மக்கள் கொல்லப்பட்டார்கள். சர்வாதிகார, அடக்குமுறை ஆட்சிகள் மக்களைக் கொல்கிறார்கள், உலகத்தின் மனச்சாட்சி உறங்குகிறதா? கொலைகளிற்கு எதிராக உலகம் ஒன்று பட வேண்டும் என்று அமெரிக்காவும், அதனது அடிமைகளும் கூப்பாடு போட்டன. அந்த நாடுகளை ஆக்கிரமிப்பு செய்தார்கள். தலிபானும், சதாமும் கொன்றதை விட பலமடங்கு அதிகமாக அமெரிக்காவும், அதன் அடிமைகளும் அந்த மக்களை கொல்கிறார்கள். அந்த நாடுகளின் வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள்.

உப்பினில் மீனினம்

உப்பியே காய்கின்ற

வெம்மணற் கரையோரம்..,

மரக்கலம் தனித் தனி

அலையுடன் மோதிய

வீரங்கள் பல பேசும் - ஆங்கே

பனையொடு தென்னையும்

தனித்தனி வளர்ந்ததில்

தனிமரத் தோப்பாகும் - அதில்

தனி நின்று அறுகின்ற

அடம்பன் கொடி சேர்ந்து - தம்

பலத்தினைப் பறைசாற்றும்.

மனித இனம் வாழுகின்ற நிலத்திலெங்கும்

விலங்கினங்கள் இரையாடும் வனங்களாக்கி - ஆங்கே

வீற்றிருக்கும் சிங்க ராசாக் குழுமத்தார் - தம்

காலனியப் பிணிசுமந்த கொடுமைகளால்

மனித உறவுகளை மிருகமென வதைகளிட - அதை

புகழ்ந்து போற்றியும்..இ இகழ்ந்து தூற்றிடும்..,

ஆதிக்க அரசியல் - சமூகச் சூழ்ச்சியால்

ஒடுக்கி அடங்கிய அனைத்து மக்களே..!

அள்ள அள்ள

அள்ளிக் கொண்டேயிருக்க

ஜீ... பூம்பாச் சுரங்கமல்லவா...

 

வெளிநாட்டார் பலரும்

உள்நாட்டார் சிலரும்

அள்ளி அள்ளித் தங்களைச்

சொற்கமாக்கிய மண்ணல்லவா...

பேரினவாதம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை தர மறுப்பதாக குறுந்தேசியவாதம் கூறுகின்ற போது, காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தைக் எதற்காக கோருகின்றனர் என்ற உண்மையை மூடிமறைக்கின்றனர்.

இனத்தின் பெயரில் மோசடியை அரங்கேற்றுகின்றனர். இனத்திற்காகவே, இன நன்மைக்காகவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தைக் கோருவதாக கூறுவது ஒரு பொய். ஆக எது உண்மை, எது பொய் என்பதை பகுத்தாய்வு பூர்வமாக தெரிந்து கொள்ளவேண்டும்.

இதைத் தெரிந்து கொள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்டுள்ள பேரினவாத அரசு, அதை தன் இனத்துக்கு பயன்படுத்துகின்றார்களா என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் இந்த உண்மையை புரிந்து கொள்ளமுடியும். இதைக் கோருகின்ற குறுந்தேசியவாதிகள், அவர்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றனர் என்ற கேள்வி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE