Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அமைச்சரே, பக்கத்து நாட்டு மன்னனிற்கு புறா மூலம் தூது அனுப்பினோமே, மறுமொழி வந்ததா? வந்தது மன்னரே, புறாக்கறி நல்லாயிருந்ததாம்.

தூதுகள், மாநாடுகள் எல்லாம் அன்றிலிருந்து இன்று வரை இப்படி பைத்தியக்காரத்தனமாகத் தான் இருக்கின்றன. வாங்குவது, விற்பது, நாட்டை அடகு வைப்பது வரை முன் கூட்டியே பேசி முடித்து விட்டு பின் பாராளுமன்றத்திலும், மாநாடுகளிலும் பகிரங்கமாக பேசி முடிவு எடுக்கிறோம் என்று படம் காட்டுவார்கள். அவர்களது சண்டையும் முன் கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டு இருக்கும். கமரோன் இலங்கை அரசை கேள்வி கேட்பதும், மகிந்து நீங்க மட்டும் ரொம்ப நல்லவங்களா என்று எதிர்த்து மீசையை முறுக்குவதும் விஜயகாந்து காற்றிலே பறந்து, பறந்து சண்டை போடும் போது புல்லரிப்பது போல புல்லரிக்க வைக்கிறது. உலகில் தருமம் குன்றி அநீதி மேலோங்கும் போது நான் வருவேன் என்று அய்யங்கார்களின் கொலைத்தெய்வம் கண்ணன் வெறுவாய் மலர்ந்தது போல இப்போது கமரோன் தமிழர்களிற்காக அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

பால் வைச்சு தண்ணியும் வாத்து பிள்ளை குளிச்சிட்டும் வந்திட்டுது. இனிமேல் பிள்ளை வெளிக்கிட்டு வெளியாலவர எப்பிடியும் குறைந்தது மூண்டுமணித்தியாலம் எண்டாலும் எடுக்கும். சொந்த பந்தங்கள் எண்டு நிண்ட சனங்களும் திருப்பி வெளிக்கிடவெண்டு வீடுகளுக்குப் போனதாலேயும், வீடீயோ அண்ணையும் கோலை ஒருக்கா படம் பிடிக்க போனதாலேயும், மேக்கப்புக்காரியும்


பிள்ளையின்றை அம்மாவும், நானும் தான் வீட்டில தனியா நிண்டோம். எனக்கு பொழுது போகாதபடியால் அங்கு மேசையில் இருந்த சில விளம்பரப் பேப்பர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிசன் மெல்லெனக் கதவைத் திறந்து அடிக்குமேல் அடிஎடுத்து.., கிட்டத்தட்ட ஒரு வெறிகாரன் போல பக்கத்திலிருந்த கதிரையையும் பிடித்து நடந்து வந்து, மூச்சையிழுத்துக் களைப்பாறுவது போல், சாடையாக என்னையும் பார்த்துப் புன்னகைத்தபடி முன்னிருந்த சோபாவில் அமர்ந்தார். என்னடா இந்த மனுசன் விடிக்காலையிலேயே வெறியுடன் வந்திருக்கிறாரே எண்டு மனம் சங்கடப்பட்டுக் கொண்டது.

கடந்த ஞாயிறு லண்டனில் வெம்பிளியில் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் கார்த்திகை வீரர் தின நிகழ்வு நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான முன்னிலை சோசலிச கட்சியின் அங்கத்தவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பலர் உரையாற்றியதுடன்  மறைந்த தமது தோழர்களின் தன்னலமற்ற மக்களின் விடுதலைக்கான அர்ப்பணிப்புக்களை நினைவு கூர்ந்தனர். இலங்கையிலிருந்து ஸ்கைப்பின் ஊடாக கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர் தோழர் அஜத் குமார நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார்.

இப்ப கொஞ்சக் காலமாக என்ரை காதிலே அடிபடுகின்ற கதைகளிலே மிக முக்கியமாக அடிபடுவது இந்தப் புலம்பெயர் நாடுகளிலே வாழும் எம் இளம் சமூகத்தினர் மத்தியியில் நடைபெறுகின்ற விவாகரத்துக்கள் பற்றியே.

தமிழர்கள் செய்யும் இன்பமான விழாக்களாய் இருந்தாலென்ன, துன்பியல் நிகழ்வுகளாய் இருந்தாலென்ன, அங்கே கூடிக்கதைக்கும் கதைகளில் இந்த விடையம் மிக முக்கியத்தவம் பெற்றிருப்பதை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் இந்த இளவயதினர் செய்கின்ற விவாகரத்துக்களின் விகிதாசாரம் மிகக்கூடியதாகவும் அதிவேகமாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

23.11.2013 சனிக்கிழமை பி.ப.05 மணிக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம் (121, ஹெம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை)

முன்னிலை சோசலிசக் கட்சியால் 16-11-2013 அன்று சுவிஸ்சில் கார்த்திகை வீரர்கள் பற்றிய நினைவுகளும், அனுபவங்களும் பகிரப்பட்டது. அதில் முன்னால் போராளிகளோடு, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எனப்பலர் பங்கேற்றனர். தோழர் பந்துல வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரு தோழர்கள் செங்கொடியை விரித்து கட்டினார்கள். தொடர்ந்து JVP யினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பற்றிய விபரணப்படம் இறந்த தோழர்களுக்கான பாடலோடு தொடங்கியது.

2013 நவம்பர் 11ம் திகதியிலிருந்து டிசம்பர் 02ம் திகதி வரை யாழ். பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பாதுகாப்புப்பிரிவுகளின் வற்புறுத்தலின் பேரில் பல்கலைக்கழக உயரதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். யுத்தத்தில் இறந்த தமது உறவுகளை நினைவு கூர்தலை தவிர்ப்பது தான் இதன் நோக்கமாக இருக்கின்றது. கடந்த வருடத்திலும் கூட இவ்வாறான சம்பவமொன்று நடந்தது. மாவீரர் தினத்திற்குச் சமமாக யாழ்.பல்கலை மாணவர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றிற்குள் திடீரென நுழைந்த பாதுகாப்பு படையினர் மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மாணவர் தலைவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இம்முறையும் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்றான் சேக்ஸ்பியர். தமிழ் இனவெறி அரசியலோ தமிழ்படம் மாதிரி. பயங்கர திருப்பங்களுடன் முழம், முழமாக உங்கள் காதில் பூ வைப்பார்கள். மன்மோகன்சிங் பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளாதது குறித்தும் இப்படியான கதைகளைத் தான் தமிழ் இனவெறி கும்பல்கள் அவிழ்த்து விடுகின்றன. மன்மோகன்சிங் போகாததால் இலங்கைக்கு பெரிய அவமானம் என்றும், இந்தியாவில் தேர்தல் வர இருப்பதால் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் போழிப்புரை எழுதுகிறார்கள்.

இலங்கைக்கும் துண்டிக்கப்பட்ட தலைகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. புதை குழிகள் காரணமாக அரசாங்கங்கள கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு. புதைகுழிகளினாலேயே ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் உண்டு. இந்த மண்ணில் இன்னும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணமுள்ளன.


இன்முறை மாத்தளைப் பிரதேசத்தில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை புதைகுழி குறித்து தகவல் கிடைப்பதற்கு முன்னரேயே 71 கிளர்ச்சியோடு சம்பந்தபட்டவர்களுடையது என்று பொறுப்பு வாய்ந்தவர்களால் கூறப்பட்டது. ஆனால் அவை 71ஐ சேர்ந்தவர்களதல்ல, 89ஐ சேர்ந்தவர்களது என்று தெரிய வருகிறது. ஆம், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் ' பொறுப்புக் கூற வேண்டியவர்களேதான்" ' பலகடுவ நீரூற்றுக்கு பக்கத்தில் கை கால்களைக் கட்டி 22 பேரை உயிரோடு பெற்றோல் ஊற்றி கொளுத்தினார்கள்.

"1972 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இராணுவம் வடக்கு அயர்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களில், 13 பொதுமக்களை சுட்டுக் கொலை செய்தனர். (Bloody Sunday) இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து ராணுவத்தில் தான் குற்றம் என அறிக்கை வெளியிட 40 வருடங்கள் எடுத்தது."

"கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்தனர். நாம் அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். 30 ஆண்டுகளுக்கு ஒரு விசாரணை வேண்டும். இதனை விசாரணை செய்ய எங்களிற்கு நிரம்ப காலமாகும்" என இற்றைய பொதுநலவாய அமைப்புக் கூட்டத்தில் பிரித்தானிய பிரதமர் கமருனுக்கு பதிலளிக்குமுககமாக மகிந்த ராஜபக்ஸ பேசியுள்ளார்.

அழுவதும் விழுவதும்

அழித்தவர் காலடி மீளத் தொழுவதும்

வேண்டாம் நம் உறவுகாள்

போருக்கு கொடுந்துணை

வியூகம் வகுத்தளி(ழி)த்தவர் தானிங்கு

முகம்போர்த்தி இனியவராமென

வருகிறார் சொரிகிறார் கண்ணீர்.

ஓலங்கள், அடிவயிற்றில் இருந்து எழுந்து தொண்டையை அடைக்கும் ஓலங்கள். அழுதழுது உடல் வற்றி, உயிர் வற்றி போனாலும் மார்பிலும், தோளிலும் போட்டு சீராட்டிய தம் கண்மணிகளை நினைத்தவுடன் விம்மி வெடித்து எழும் ஓலங்கள். மடியில் இருந்து மழலை பொழிந்த மகனை, மகளை தேடி மார்பில் அடித்து மன்றாடும் ஓலங்கள். தெருவில் இருந்து புழுதி அளைந்தவர் புகை போல மறைந்ததை எண்ணி ஏங்கும் ஓலங்கள். ஒளிநகை ஊறும் இதழ் உகந்து முத்தம் தந்த தம் குழந்தைகளை, சின்னஞ்சிறு குஞ்சுகளை கூவி அழைக்கும் ஓலங்கள்.

எனது இரண்டு அண்ணன்களை இழந்து விட்டேன், இருக்கும் ஒரு அண்ணனையாவது கண்ணில் காட்டுங்கள் என்று கதறி அழுகின்றாள் சின்னஞ்சிறு குழந்தை ஒன்று. உண்பதில்லை, உறங்குவதில்லை என் கணவனை மீட்டு தாருங்கள் என்று துயரம் தாங்காமல் தரையில் விழுகிறாள் துணைவி ஒருத்தி. தளிர்நடை போட்டு தத்தி தத்தி நடந்தவன் போன இடம் எங்கே என்று அடி எடுத்து வைக்க முடியா முதுமையிலும் அங்கு வந்து அன்புமகனை தேடுகிறார் கிழவர் ஒருவர்.

முள்ளிவாய்க்காலில் வெளியுலகில் இருந்து மூடிமறைத்து எப்படி படுகொலை செய்தனரோ, அதே பாணியில் காமென்வெல்த் மாநாட்டை மூடிமறைத்து தங்கள் பாசிசக் கூத்துக்களைக் காட்ட முனைகின்றனர். பிரிட்டிஸ் காலனிய விசுவாசிகளின் வாரிசுகளல்லவா இவர்கள் அனைவரும். யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல. உலகமயமாதலில் தமக்குள் இடம்மாறி நிற்கின்றவர்கள் நடத்துகின்ற சதுரங்க ஆட்டத்தில், மனிதவுரிமைகள் சூதாட்டப் பொருளாகியுள்ளது.

பிரிட்டிஸ் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் மகிந்த அரசு மண்டியிட்டுத்தான் போயுள்ளது. கமருன் பொதுநலவாய மாநாட்டிற்கு வந்தாரா? அல்லது தமிழ்மக்களுக்கு நீதி கேட்டு வந்தாரா? எனும் கேள்வி தேசிய-சர்வதேசத்தின்பால் பெரும் ஈர்ப்பாகியுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள பொதுநலவாயத்தின் ஏகப்பெரும்பான்மையான பன்னாட்டு பிரதிநிதிகள் வந்து சேர்ந்துள்ளார்கள். ஆனால் பிரிட்டிஸ் பிரதமர் தனது காலனிய நாடு ஒன்றுக்குள் வந்து தன் கருமங்களை ஆற்றியது போல் நடந்துகொள்ளவும், இலங்கை அரசும், அதன் அரச இயந்திரமும் கைகட்டி, வாய் பொத்தி, நின்று கொண்டு… ஆம் நான் உங்களின் நவதாராள அடிமைதான் என்பதை, தன் அடிமைத்தன செல்நெறி அரசியலால் நிரூபித்துள்ளது.

கூடங்குளம் அணுமின்னிலைய எதிர்ப்புப் போராட்டம் எமது கோடிப்புறத்திலேயே, நடந்துகொண்டிருக்கின்றது.

அணுகுண்டு வெடித்தால்த்தான் அழிவு...
அணுவுலை வெடிக்காமலே அழிவு...
கூடங்குள அணுமின் உலையை இழுத்து மூடு..!
போராடும் மக்களோடு கை கோரு...
இது நமது போர்.


மன்னார் வளைகுடா மற்றும் யாழ் தீபகற்பம் எனும் இலங்கையின் தலைமாட்டில் எப்போதும் மக்கள் தத்தம் தலையணைக்குள்ளேயே அணுக்குண்டொன்றினை வைத்து உறங்கும்படியான நிம்மதி கெட்ட இரவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றது கூடங்குளம் அணுமின்னிலைய நிர்மாணம்.

 

ஒர் நடிகர் ஒருநாள் முதல்வராக நடித்த படம் ஒன்றும் வெளிவந்தது. அதைப்பற்றி கிண்டலாக விமர்சனம் எழுதிய சஞ்சிகை ஒன்று, தமிழ்நாட்டிற்கு இபபடியொரு முதல்வர் கிடைத்தால் தமிழகமே உருப்பட்டுவிடும், மக்கள் மட்டில்லா மகிழ்வில் வாழ்வர்..என!…. அதேபோன்றுதான் கொமன்வெல்த் புரடக்சனின் "ஒருவாரகால ஜனநாயகம்" எனும் படம் இப்போ இலங்கையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கதாநாயகன் யாரென்னு சொல்லாமலே மக்கள் யாவருக்கும் புரியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE