Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சிறைச்சாலையால் எங்களது உறுதியை, அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதிவெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது. இருபத்தேழு வருடங்களை தனிமைச்சிறையில் கொடும் சித்திரவதைகளை எதிர்கொண்ட மனிதனின் எழுச்சிவரிகள் இவை. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் இராணுவப்பிரிவினது தலைவராக சிறை சென்றவர், சிறை மீண்டு தென்னாபிரிக்க குடியரசின் ஜனாதிபதியானார். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட போது தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமைகள் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்பு மாறியுள்ளனவா?

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சமஉரிமை இயக்கம், ஜரோப்பாவில் கூட்டங்கள் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்துள்ளது.

டென்மார்க்கில் எதிர்வரும் 14ம் திகதி சனிக்கிழமை கோல்ஸ்ரபரோ நகரில் பொதுக்கூட்டம் கலந்துரையாடலுடன் இலங்கையர்களின் ஒன்று கூடல் நிகழவிருக்கின்றது.

சமவுரிமைக்கான போராட்டத்தை அரசின் கொள்கை என்று கூறுகின்றவர்கள், சமவுரிமையை மக்களுக்கு மறுக்கின்றவராக இருக்கின்றனர். இதுதானே எதார்த்தம்.

இன்று இனங்களுக்கும் மதங்களுக்கும் சமவுரியை மறுக்கின்றதன் விளைவு தான், இன முரண்பாடுகள் மற்றும் மத முரண்பாடுகள். அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்துப் போராடாதவர்கள், அரசின் இந்தக் கொள்கைக்கு தொடர்ந்தும் உதவுபவராக இருக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது, இனப்பிரச்சனையில் அரசின் அதே கொள்கையே என்று கூறுகின்ற அரசியல் கேலிக் கூத்துகள் மூலம், உண்மையில் சமவுரிமையை மறுக்கின்றனர். சமவுரிமையைக் கோருவது தவறு என்றும், சமவுரிமையை முன்வைக்கின்றவர்களின் கொள்கை, அதை மறுக்கின்றவர்களின் கொள்கைக்கும் வேறுபாடுகள் இல்லை என்றும் காட்டுகின்ற அரசியல் இன்று எதுவாக இருக்க முடியும்? இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சமவுரிமைக்காக போராடுவதின் அரசியல் முக்கியத்துவதை புரிந்து கொள்ள முடியும்.

தோழர் மணியம் அவர்களின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினமும்  வெகுஜன இயங்கு தளங்களில் வேலைகளை முன்னெடுத்தல் என்ற தலைப்பில் தோழர் த. பிரகாஸ் அவர்களும் உரையாற்றினர்.

கார்த்திகை இருபத்தி ஏழு. வேலையிலிருந்து அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு அறக்கப் பறக்க வீட்டிற்கு வந்து குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் மாவீரர்தின விழா நடக்கும் மண்டபத்தை நோக்கி காரில் பறந்துகொண்டிருந்தேன். என் மனத்திரையில் மாவீரர்களாகிவிட்ட உறவுகளினதும் நண்பர்களினதும் தெரிந்தவர்களினதும் முகங்களே படங்களாய் ஓடிக்கொண்டிருந்தன. என் இதயம் பாராங்கல்லாய் கனத்துக் கிடந்தது. நீண்டதொரு பெருமூச்சு என்னிடமிருந்து வெளியேறிக் கொண்ட போது நான் மண்டபத்தை அடைந்திருந்தேன்.

மாவீரர்களின் நினைவுகளால் சூடேறியிருந்த என் உடலை வெளியே அடித்துக் கொண்டிருந்த சினோவும், காற்றும், கடும் குளிரும் என்னைத் தாக்கியதாக நான் உணரவில்லை. காரை நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு மண்டப வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். மண்டப வாசலை அண்மித்துக் கொண்டிருந்தபோது கார் ஒன்று வந்து ஒரு வயோதிப தம்பதியினை இறக்கிவிட்டு குளிரில் உறைந்த காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. ஆனால், அந்த வயதான இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி, ஒரு அடி கூட நகர முடியாமல் பனியில் உறைந்த தரையை பயத்துடன் பார்த்தபடியே நின்றார்கள்.

இன்று சமவுரிமைக்கான அரசியல் இயக்கத்தின் அவசியம் என்ன? இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வுகான திறவுகோலை, சமவுரிமைகள் மூலம் தான் வந்தடைய முடியும். இனங்களுக்கு இடையிலும், தேசங்களுக்கு இடையில் சமவுரிமைக்கான போராட்டங்கள் இன்றி இலங்கையின் இன-மத முரண்பாட்டுக்கு தீர்வு காண முடியாது. மக்கள் தான் தீர்வை கண்டைய வேண்டும் என்ற நம்புகின்ற எவரும், சமவுரிமைக்கான போராட்டத்துக்கு வெளியில் வேறுபட்ட போராட்ட அரசியல் வழிமுறைகளை கொண்டு இருக்க முடியாது. இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் ஒன்றுபட்ட சமவுரிமைக்கான போராட்டம் தான், மக்கள் தங்கள் சொந்த தீர்வை வந்தடைவதற்கான அரசியல் அடிப்படையாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்றைய தினம், பல்கலைக்கழகத்தின் உள்வளாகத்தில் எதிர்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.ஏனைய பல்கலைக்கழக மாணவர்களை விட,யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரம் நீண்ட நாட்களாக விடுமுறை விடுத்தமை,மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடைமுறைப்படுத்தாமை ஆகியவற்றைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சி காமகோடி ஜெயேந்திரனை, சங்கரராமன் வழக்கில் இருந்து போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். சங்கரராமன் பெரிய, சின்ன சங்கராச்சாரிகளின் ஊழல்களையும், பாலியல் முறைகேடுகளையும் எதிர்த்து வந்தவர். அதனால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன் கூலிப்படையை வைத்து கொலை செய்ததாக அடியாட்கள், அடியாட்களை ஒழுங்கு செய்த ரவி சுப்பிரமணியம் எல்லாம் சாட்சி சொல்லியிருந்தனர். இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த ராமசாமி என்பவருடன் சங்கராச்சாரியும், ஒரு பெண்ணும் பணம் தருவதாக பேரம் பேசிய உரையாடலின் ஒலிப்பதிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ராமசாமி இந்த வழக்கிலிருந்து மாற்றப்பட்டார். அப்படி இருந்தும் ஜெயேந்திரனிற்கு விடுதலை கிடைத்திருக்கிறது.

இந்த வருடத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் மீதான தொடர்ந்த விலை உயர்வுகளாலும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளாலும் நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிகளையும் பாதிப்புக்களையும் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் ஒன்பதாவது வரவு செலவுத் திட்டமானது அன்றாடம் அவதியுற்று வரும் உழைக்கும் மக்களுக்கு எவ்வகையிலும் நிவாரணங்களையோ ஆறுதலையோ தரவில்லை. அதேவேளை பெரும் முதலாளிகள் முதலீட்டாளர்கள் அந்நிய பல்தேசிய பெருவணிக நிறுவனங்களுக்கும் சூதாடிகள் குறுக்குவழிச் சம்பாத்தியம் தேடுவோருக்கும் சாதகமான வழிகளையே இவ்வரவு செலவுத் திட்டம் திறந்து வைத்துள்ளது.

நாம் ஒவ்வொரு முடிவெடுக்கும் போதும் சுயஅறிவு எமக்குள் மேலோங்கி நிற்க வேண்டும். நாம் குறுகிய சிந்தனைக்குள் நின்று கொண்டு, எதையும் ஆழ்ந்து நோக்காமல் இன்னொருவரின் தவறான வழிகாட்டலை இனங்காண முடியாது அதை ஏற்றுப் பின் நடந்தால், அது எம்மையும் எம்மை நம்பியவர்களையும் அழிவிற்கே கொண்டு செல்லும். இன்னொருவரின் அறிவு மட்டத்தினை, தவறான கருத்துக்களையோ செயற்பாட்டினையோ நாம் வெறும் விசுவாசத்திலும் உணர்ச்சியிலும் ஏற்றுக் கொண்டால், எமது அழிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நாம் விரும்பும் மனிதர் உண்மையாவராவோ திறைமையானவராகவோ இருக்கலாம், ஆனால் அவர் எடுக்கும் முடிவும் பாதையும் தவறாகிவிட்டால் அனைத்துமே தவறாகிவிடும்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நவமணி பத்திரிகையின் ஆசிரியரும், பேராதனை பல்கலைக்கழக முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜனாப் என்.எம். அமீன் அவர்களோடு போராட்டம் பத்திரிகை நடத்திய நேர்காணலிலிருந்து…..

2009 இல் புலிகள் ஸ்தாபன ரீதியாக அழிக்கப்பட்ட பின்னான அரசியல் சூழல், பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பல மாற்றங்களை கண்டிருக்கின்றது. மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்து, தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணமல்போனவர்களை மையப்படுத்தியும் மரணித்த தங்கள் உறவுகளின் நினைவுகளை முன்னிறுத்தியும், உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அரசியல் ரீதியாக மனிதவுரிமைகள் சார்ந்தாகவும், உரிமைகள் சார்ந்தாகவும் வெளிப்படுகின்றது. அரசியல் ரீதியாக நிலவும் சமூக கண்ணோட்டத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

2009 இல் புலிகள் ஸ்தாபன ரீதியாக அழிக்கப்பட்ட பின்னான அரசியல் சூழல், பண்பு ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பல மாற்றங்களை கண்டிருக்கின்றது. மக்கள் தங்கள் வாழ்வு சார்ந்து, தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணமல்போனவர்களை மையப்படுத்தியும் மரணித்த தங்கள் உறவுகளின் நினைவுகளை முன்னிறுத்தியும், உணர்வுபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அரசியல் ரீதியாக மனிதவுரிமைகள் சார்ந்தாகவும், உரிமைகள் சார்ந்தாகவும் வெளிப்படுகின்றது. அரசியல் ரீதியாக நிலவும் சமூக கண்ணோட்டத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கைக்கு பாரிய கடற் பிரதேசம் இருந்தும், இலங்கைஇன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 - 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப் பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செயய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகு கடன்கள் மீன்பிடிகூட்டுறவுச் சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.

வடக்குக் கிழக்கில் கொடிய யுத்தத்தில் பலியாகிப்போன தமது உறவுகள் அயலவர்கள் நண்பர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தி நினைவுகூர முடியாத வண்ணம் மக்களது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. போராளிகளையும் கொடிய யுத்தத்திற்கு பலியாகிப்போன பொதுமக்களையும் நினைவுகூர்ந்து மத வழிபாட்டுத்தலங்களில் தீபாராதனை காட்ட முடியாது. மணிகளின் ஓசை எழுப்ப முடியாது. மக்கள் கூட்டமாக வழிபட முடியாது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்று கூடி தீபங்கள் ஏற்ற முடியாதவாறு வடக்கு கிழக்கில் ஒரு இராணுவ அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

பிரபல கவிஞர் ஜெயபாலன் கைது செய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த துமிந்த நாகமுவ, ''தமிழ் கவிஞர்கள் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கும் ஜெயபாலனது கவிதைகள் சிங்களத்திற்கு மொழிமாற்றம் செய்யப்படுவதால், அவர் சிங்கள கவிஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பபை பெற்ற கவிஞராகத் திகழ்கிறார். அவர் கைது செய்யப்பட்டமை மற்றும் அவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாங்கள் வன்மையாக் கண்டிக்கிறோம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE