Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

alt

தமது விவசாய நில சுவீகரிப்புக்கு எதிராக மகாஓயா பிரதேச விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மகாஓயா விவசாயிகளது நீண்டகால பயிற்செய்கை நிலங்களை மகாவலி செயற்திட்டத்திற்கு சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

எட்டு விவசாய அமைப்புக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம்

ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக்குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ என்ற கட்டுரையில் ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும்” என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு ரஷ்யாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட “உத்திரவாதம்” ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது” என்றார்.

_இந்த நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டையோ உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியையோ நோக்காக கொள்ளாத ஒரு வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டு மொத்தத்தில் ஒரு மக்கள் விரோத ஜனநாயக விரோத வரவு செலவு திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது. வழமைப் போலவே மலையக மக்களின் சமூகப் பொருளாதார நலன் சார்ந்த எந்தவொரு முன்மொழிவையும் இவ் வரவு செலவுத் திட்டம் கொண்டிருக்கவில்லை. அதேவேளை இந்த நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை தாங்கி நிற்கும் மலையக மக்கள் வரலாற்று நெடுகிலும் வேண்டி நிற்கும் வீடு, காணி உரிமை அப்பட்டமாக மறுக்கப்ட்டிருகிறது. இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ராகலை வெ.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

''லலித் - குகனை விடுதலை செய்! என்ற தொனிப்பொருளில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சுவிஸ் உறுப்பினர்களால் சூரிச் நகரை அண்டிய பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்துண்டுப் பிரசுரம் சிங்களம், தமிழ் மற்றும் ஜர்மன் மொழியில் அச்சிடப்பட்டிருந்ததோடு, அதன் தொனிப்பொருளுக்குள்,

ஆம்! நாங்கள் ஒன்று சேருவோம்! இந்த அழிவை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

லலித் மற்றும் குகனை உடனே விடுதலை செய்!

கடத்தல்களையும் கொலைகளையும் எதிர்ப்போம்!

காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை உடனடியா வௌியிடு!

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் டென்மார்க் சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான தோழர் லோகன் செல்லம் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றியிருந்தார். அவரது உரையினை இங்கு வாசகர்களுடன் பகிர்கின்றோம்.

இலங்கையின் பாசிச அரச கட்டுமானத்தாலும், வர்க்கச் சமூகப் போக்கினாலும், ஒடுக்கி அடக்கப்பட்ட அனைத்து மக்களும் இணைந்த விடுதலையில் நின்று.., குறிப்பாக கடந்த ஐந்து தசாப்தங்களாகப் போராடி, தொலைந்துபோன - உயிர்நீர்த்த அனைத்துப் போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சம உரிமை போராட்ட இயக்கத்தினால், இலங்கையில் மனித உரிமைகளைக் கோரி (14.12.2013) டென்மார்க், கொல்ஸ்ரபுறோ நகரில் இன்று இடம்பெறுகின்ற பொதுக் கூட்டத்தில் சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கை மூலம், இலங்கையின் அரச பாசிசத்தால் அல்லற்படும் அனைத்து மக்களையும், அப்பாசிச வடிவங்களை எதிர்க்கின்ற ஜனநாயகப் போராட்டத்திற்கு உங்களை அழைப்பிடுகின்றது.

நேற்றைய தினம் (15/12/2013) சம உரிமை இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மனித உரிமை தின கூட்டம் லண்டன் கரோ பகுதியில் இடம் பெற்றது. சீரற்ற காலநிலை நிலைவிய போதும், அறுபதிற்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் இலங்கையில் இடம்பெற்ற சகல அடக்கு முறைகளிற்கும் எதிராக போராடி மரணித்த போராளிகளிற்கும் பொது மக்களிற்கும் இரு நிமிட மௌன அஞ்கலியுடன் கூட்டம் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சமஉரிமை இயக்கத்தின் சார்பில் தோiர்கள் சீலனும் நுவானும் முறையே தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றினர்.

டென்மார்க்கில் கொல்ஸ்ரோபுறோ நகரில் 14.12.2013, சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இலங்கை அரசிற்கு எதிரான கண்டனக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்த கண்டன எதிர்ப்புக் கூட்டத்தில் தமிழ், சிங்கள தோழர்கள் கலந்து கொண்டார்கள். இலங்கையில் இருந்து சம உரிமை இயக்கத்தின் பரப்புரையாளர் ரவீந்திரமுதலிகே, சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளே ஸ்கைப் இல் சிங்கள மொழியில் உரையாற்ற தோழர் பாரூக் தமிழில் மொழி பெயர்த்து வழங்கி கொண்டிருந்தார். சம உரிமை இயக்கத்தின் நோக்கம் அதன் செயற்பாட்டுத் திட்டம் பற்றிய விரிவான விளக்கம் இந்த உரையின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கு பற்றிய சிலரது கேள்விகளுக்கு தமிழ், சிங்கள மொழியில் பதிலளிக்கப்பட்டது.

சிவன் மூவாயிரம் தீட்சிதர்களைக் கூட்டிக் கொண்டு சிதம்பரம் வந்தானாம். தீட்சிதர்கள் கோயில் நகைகளைக் களவெடுத்துக் கொண்டு, கோவிலிற்கு வரும் பெண்களின் கைகளை பிடித்து சேட்டை விட்டுக் கொண்டு, ஒருத்தன் மேல் ஒருத்தன் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டு சிதம்பரத்தில் பக்திப்பரவசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிவனுடன் வந்தவர்கள் என்பதால் சிதம்பரம் கோயில் தங்களது சொத்து என்று அடம் பிடிக்கிறார்கள். இவர்கள் இங்கே என்றால் அந்த சிவன் எங்கே?. பிள்ளை கொடுத்து பிரிந்த காதலன் போல் எங்கே போய் விட்டான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிலிருந்து வேறுபட்டவர்கள். அவ்வேறுபாடுகள் அப்படியே இருக்க எல்லோருக்கும் தெரிந்த பொது வார்த்தையொன்று இருக்கிறது. அதுதான் எல்லோரும் மனிதர்கள் என்பது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கேயான நிலைத்தலொன்று இருக்கிறது. அதற்கு வாழ்க்கை என்று சொல்கிறோம். அந்த வாழ்க்கையில் மனிதர்கள் பலவற்றை செய்கின்றனர். சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள், இனப்பெருக்கம் செய்கிறார்கள். மாத்திரமல்ல, அதற்காக அநேக வேலைகளை செய்கிறார்கள். எந்தவொரு மனிதனிடமும் தான் யாரென்று கேட்டால், தான் செய்யும் வேலையை பொறுத்தே அவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

 

லலித், குகனை விடுதலை செய்!

கடத்தல்களை நிறுத்து!

புதிய ஜனநாயக மா.லெ.கட்சி, நவ சமசமாசக் கட்சி உட்பட ஏனைய பல்வேறு அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்! என்ற தொனிப்பொருளில், இந்தாலிய சம உரிமை இயக்கம் நடாத்திய - கடத்தல்கள்  உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டம்  நேற்றைய தினம் இடம் பெற்றது. இதில் பல வெளிநாட்டினர் கலந்து கொண்டு இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்ளுக்கு எதிராகவும் குகன், லலித்தை விடுதலை செய்யக்கோரியும் தமது கையெழுத்துக்களை பதிந்து சென்றனர்.

சுதந்திரம் அடைந்த காலம் முதல் இலங்கையை ஆண்டு வருகின்ற அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள் தமது அரசியல் இருப்புக்காக அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களைச் சாதாரண மக்களிற்கு மறுத்து வந்துள்ளனர். மேலும் மக்களை இனம், மதம், மொழி வாரியாக பிரித்து வைத்து இனக்கலவரங்களைத் தூண்டியும், மனித உரிமைகளை மறுக்கின்ற சட்டங்களை இயற்றியும் மக்கள் ஒன்றிணைந்து தமக்கு எதிராக அணிதிரளா வண்ணம் திட்டமிட்டு இவர்கள் செயற்பட்டு வந்தனர் வருகின்றனர்.

இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். குறிப்பாக மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டமை, சிங்களச் சட்டமூலம் மற்றும் தமிழ்-முஸ்லீம் மக்களின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட பல இனக்கலவரங்கள், தொழிலாளர் போராட்டங்கள் மீதான அரச படைகளின் திட்டமிட்ட தாக்குதல்கள் என பலவற்றினைக் கூறலாம்.

லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக நாட்டு மக்களை தெளிவுடுத்தும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று(09) காலை 07.00 மணி முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டு நாடு பூராகவும் முன்னிலை சோசலிச கட்சியினால் விநியோகிக்கப்படுகின்றது.

மாவனல்ல தெவனகல மலைக்குன்றுக்கு அண்மையிலுள்ள ஹெமிமாதகம பகுதியில் வசிக்கும் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் அறிவித்துள்ளது தொடர்பாக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து விளக்கமளித்து வருவதாக கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

அரச படைகளால் கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சர்வதேச மனித உரிமைகள் தினமன்று கொழும்பில் இடதுசாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டமும், கலந்துரையாடலும் நடைபெறவுள்ளன. 

சர்வதேச மனித உரிமை தினமான எதிர்வரும் 10ம் திகதி, அரச படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட லலித், குகன் மற்றும் ஊடகவியளாலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வன்னி யுத்தத்தின் போது சரணடைந்து இன்று வரை என்ன நிகழ்ந்தது என அறிய முடியாதுள்ளவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றிற்கு சகல இடதுசாரி கட்சிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் பங்கேற்குமாறு, முன்னணி சோசலிச கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE